Tamil News | Online Tamil News |
- புதுக்கட்சி துவக்குகிறார் ரஜினி:டில்லியில் சட்ட விதிகள் தயார்
- முரசொலி பவள விழா:'மெகா'கூட்டணிக்கு அச்சாரம்
- தேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது? பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு
- நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு...வியூகம்! சீனாவை சமாளிக்க 6 நீர்மூழ்கி கப்பல் வாங்க திட்டம்
- டில்லியில் செல்வாக்கு காட்டும் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை...ஒதுக்கிவைப்பு? தினகரனுடன் பேசுவதால் பழனிசாமி அணியினர் ஆலோசனை
- பிரச்னைக்கு தீர்வு பேச்சு மட்டுமே! பிரதமர் நரேந்திர மோடி உறுதி
- ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை..அதிகரிப்பு! மசோதா நிறைவேற்றுவதில் அரசுக்கு இனி சிக்கல் இல்லை
- தினகரன் தந்த கட்சி பதவி வேண்டாம்: 4 எம்.எல்.ஏ.,க்கள் நிராகரிப்பு
- வெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது!
- கருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
- இன்றைய(ஆக.,6) விலை: பெட்ரோல் ரூ.68.88: டீசல் ரூ.59.51
- பான் மசாலா, குட்கா: உ.பி.,யிலும் தடை வருகிறது
- உலக தடகள சாம்பியன்ஷிப்: உசேன் போல்டை வீழ்த்திய காட்லின்
புதுக்கட்சி துவக்குகிறார் ரஜினி:டில்லியில் சட்ட விதிகள் தயார் Posted: 05 Aug 2017 07:50 AM PDT நடிகர் ரஜினி துவக்கவுள்ள புதுக்கட்சியின் சட்டவிதிகள், கொள்கை, கோட்பாடுகளை தயாரிக்கும் பணி, பா.ஜ., மேலிட ஆலோசனை படி, டில்லியில் துவக்கப்பட்டு உள்ளது. வரும், 22ல், சென்னை வரும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த, ரஜினியும் திட்டமிட்டுள்ளார்.அரசியல் பிரவேசம்சில மாதங்களுக்கு முன், ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினி, 'தமிழகத் தில் சிஸ்டம் கெட்டுவிட்டது; சிஸ்டத்தை மாற் றினால் தான் தமிழகம் உருப்படும். போருக்கு தயாராகுங்கள்' என, தன் ரசிகர்களிடம் தெரி வித்தார். அரசியல் பிரவேசம் குறித்த, அவரது இந்த சூசக அறிவிப்பு, பரபரப்பை ... |
முரசொலி பவள விழா:'மெகா'கூட்டணிக்கு அச்சாரம் Posted: 05 Aug 2017 07:51 AM PDT சென்னையில், ஆக., 11ல் நடக்கவுள்ள, தி.மு.க., வின் நாளேடான, முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தை, 'மெகா' கூட்ட ணிக்கு அச்சாரமிடும் மாநாடாக மாற்ற, மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதிருப்தி தி.மு.க., தலைவர் கருணா நிதியின், 94வது பிறந்தநாள் விழா, சட்டசபையில், அவர் பணிக் கான வைர விழாவும், ஜூன் 3ல், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கொண்டாடப் பட்டது. அதில், தேசிய தலைவர் களை பங்கேற்க வைத்து, கருணாநிதிக்கு புக ழாரம் சூட்டப் பட்டது. அந்த விழா மேடையில், தமிழ கத்தைச் சேர்ந்த எதிர்கட்சிகளின் தலை வர்களுக்கு ... |
தேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது? பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு Posted: 05 Aug 2017 07:53 AM PDT அ.தி.மு.க., பன்னீர் அணியினரும், முதல்வர் பழனிசாமி அணியினரும், தேர்தல் கமிஷனின் முடிவு எப்போது வரும் என, ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை, கட்சி தொண்டர்கள் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். எனவே, அவர் தேர்வு செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனி டம் மனு கொடுத்தனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, இரு அணிகளும், தேர்தல் கமி ஷனில் மனு கொடுத்தன.உடனடியாக முடிவு ... |
Posted: 05 Aug 2017 08:01 AM PDT புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதை அடுத்து, நம் நாடும், ஆயுத பலத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எவ்வித போர் சூழலையும் எதிர் கொள்ளும் வகையில், புதிதாக ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரான்சிட மிருந்து, ஐ.என்.எஸ்., கலாவரி என்ற நீர்மூழ்கி கப்பல், 23 ஆயிரத்து, 6௦௦ கோடி ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளது. இந்திய பெருங்கடலில், ஊடுருவ, சீனா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கப்பற்படை ... |
Posted: 05 Aug 2017 08:10 AM PDT டில்லியில் செல்வாக்கு காட்டி வரும், அ.தி.மு.க., - எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, தினகரனுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அவருடன் அடிக்கடி பேசி வருவதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. இதனால், சந்தேகம் அடைந் துள்ள, முதல்வர் பழனிசாமி அணியினர், தம்பிதுரையை ஒதுக்கி வைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் டில்லி சென்றால், அங்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தான், அவர்களுக்கு தலைவர். அமைச்சர்கள், டில்லி யில் கால் வைத்தவுடன் முதல் வேலையாக, தம்பிதுரையின் வீட்டிற்கு அல்லது அலுவலகத் திற்கு செல்வர். அழைப்பு ... |
பிரச்னைக்கு தீர்வு பேச்சு மட்டுமே! பிரதமர் நரேந்திர மோடி உறுதி Posted: 05 Aug 2017 08:40 AM PDT புதுடில்லி ''சமூகத்தில் புரையோடிப் போன, சில மத அடிப்படை வாதங்கள், பிளவுகளை ஏற்படுத்தும்; தேசங்களுக்கு இடையே மோதலை விதைக்கும் பிரச்னைகளுக்கு, பேச்சு மூலமே தீர்வு காண முடியும்'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மர் தலை நகர், யாங்கூனில் நடக்கும், சர்வதேச சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில், பிரதமர், நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன் சிங்' மூலம் பேசியதாவது: எப்படிப்பட்ட சிக்கலான பிரச் னைக்கும், பேச்சு மூலம் தீர்வு காணலாம் என்பது, இந்திய பாரம்பரியத்தின் உறுதியான நம்பிக்கை. இந்தபாரம்பரியத்தில் வந்தவன் ... |
Posted: 05 Aug 2017 08:42 AM PDT புதுடில்லி, லோக்சபாவில், பெரும்பான்மை பலத்துடன் செயல்படும், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, ராஜ்யசபாவிலும் பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளத்தின் வருகை உள்ளிட்ட காரணங்களால், ராஜ்ய சபாவில், தே.ஜ., கூட்டணி மற்றும் அதன் ஆதரவு கட்சி, எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 121 ஆக உயர்ந்துள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவ தும் வீசிய மோடி அலையால், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, லோக்சபாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள, 545 தொகுதிகளில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 281 ... |
தினகரன் தந்த கட்சி பதவி வேண்டாம்: 4 எம்.எல்.ஏ.,க்கள் நிராகரிப்பு Posted: 05 Aug 2017 10:37 AM PDT 'தினகரன் வழங்கிய கட்சி பதவி, எங்களுக்கு வேண்டாம்' என, எம்.எல்.ஏ.,க்கள் ௪ பேர் நிராகரித்துள்ளது, அ.தி.மு.க.,வில், தினகரன் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினரை, கட்சி யில் இருந்து ஒதுக்கி வைக்க, பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்ந்தால், அ.தி.மு.க., தன் கட்டுப் பாட்டை விட்டு போய்விடும் என்பதை உணர்ந்த தினகரன், கட்சி பணிகளில் தீவிரம் காட்டும் வகையில், வரும், 14 முதல், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் அறிவித்துள்ளார். அத்துடன், தன் ஆதரவாளர்கள், ... |
வெங்கையா நாயுடு வெற்றி: பா.ஜ., ஜெயித்தது! Posted: 05 Aug 2017 11:01 AM PDT புதுடில்லி:நாட்டின், 13வது துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு, 68, தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட, கோபால கிருஷ்ண காந்தியை விட, 244 ஓட்டுகள் அதிகம் பெற்று, அமோக வெற்றி பெற்றார். நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல், கடந்த மாதம், 17ல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி யிட்ட, ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த 25ல், அவர், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.தொடர்ந்து, 10 ஆண்டுகள், 12வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும், ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், ... |
கருவாடு, வறுகடலை, கடலை மிட்டாய்க்கு வரி விலக்கு: ஜி. எஸ். டி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல் Posted: 05 Aug 2017 11:35 AM PDT புதுடில்லி: ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் வரி விலக்கு கோரி வலியுறுத்தப்பட்ட பொருட்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:கருவாடு, வறுகடலை, 20 லிட்டர் வாட்டர் கேன், அரிசி, தவிடு, மீன்பிடிவலை, இட்லி, தோசை மாவு, கைத்தறி, விசைத்தறி, நெசவு, குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் வழங்கப்படும் சத்துமாவு கோரைப்பாய், வெள்ளி கொலுசு, மெட்டி தாலி, கயிறு அரைஞாண் கயிறு, பட்டு நூல் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு அளிக்க ... |
இன்றைய(ஆக.,6) விலை: பெட்ரோல் ரூ.68.88: டீசல் ரூ.59.51 Posted: 05 Aug 2017 12:07 PM PDT சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.88காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.51காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 24 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.68.88 காசுகளாகவும், டீசல் விலை 23 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.51 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு ... |
பான் மசாலா, குட்கா: உ.பி.,யிலும் தடை வருகிறது Posted: 05 Aug 2017 01:52 PM PDT லக்னோ:பான் மசாலா, குட்காவின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உ.பியிலும் தடை விதிக்கப்படவுள்ளது.புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அரசு ஏற்கனவே அரசு அலுவலகங்களில் பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தற்போதைய அரசு இப்பொருட்கள் உடல் நலத்திற்கு கடும் தீங்கை கொடுப்பதால் தடை விதிக்கும் முடிவினை எட்டியுள்ளதாக கூறினார்.விரைவில் அரசு இவற்றை தயாரிக்கும் தொழிலகங்களை மூடவும் ஆணையிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் பதவியேற்றவுடன் தலைமைச் செயலகத்திற்கு ... |
உலக தடகள சாம்பியன்ஷிப்: உசேன் போல்டை வீழ்த்திய காட்லின் Posted: 05 Aug 2017 02:28 PM PDT லண்டன்: லண்டன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு தங்கபதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.பிரி்ட்டன் தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். இவர் வெற்றி இலக்கை 9.92 வினாடிகளில் எட்டினார். அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மென் இரண்டாம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்காவின் உசேன் போல்ட் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 06,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |