ஈகரை தமிழ் களஞ்சியம் |
- துளிப்பாக்கள் - தொடர் பதிவு
- பொது அறிவு தகவல்
- சிரிப்புத் தோரணங்கள் - தொடர் பதிவு
- ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
- கைபேசி தந்த சோகம் .
- வாழ்த்த வசதியில்லை…!!
- காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,
- காத்திருப்பு
- அப்பா – ஒரு பக்க கதை
- அவநம்பிக்கை – ஒரு பக்க கதை
- இரவல் – ஒரு பக்க கதை
- ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்
- உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னை
- ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்
- குறுக்கும், நெடுக்கும் - வார்த்தை புதிர்
- #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
- வண்ணத்துப் பூச்சிகள்
- ஐந்தும் நம் விரல்களே - சிறுவர் பாடல்
- பளீரென்று சிரிக்கிறாள் வெள்ளையம்மா....(விடுகதைகள்)
- இப்படிக்கு இ.பு.ஞானப்பிரகாசன்
- செழிக்கும் கொழிக்கும் - கவிதை
- அனுபவங்கள் பேசுகின்றன
- கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
- சரியான தாம்பூலம் – பொ.அ.தகவல்
- சுசீந்திரனின் ‘அறம் செய்து பழகு’ படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம்
- ஜனவரி 2018 வரையிலான படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்
- குறும்படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு
- அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி
- வெள்ளித்திரையில் பிரியா
- அடையாளம் தந்த தேசிய சேவை
- கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன
- திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது ரஷ்யாவின் ஜனாதிபதி புதின்
Posted: 09 Jun 2017 03:19 PM PDT |
Posted: 09 Jun 2017 03:15 PM PDT |
சிரிப்புத் தோரணங்கள் - தொடர் பதிவு Posted: 09 Jun 2017 03:11 PM PDT |
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Posted: 09 Jun 2017 01:02 PM PDT ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 1.விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன? 2.தக்காளி காய் வகையை சேர்ந்ததா பழ வகையை சேர்ந்ததா? 3.சொரசொரப்பான பனிமலை வழுக்குவது ஏன்? 4.ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா? 5.நாம் கனவு காண்பதைப் போல் விலங்குகள் கனவு காணுமா? |
Posted: 09 Jun 2017 11:34 AM PDT |
Posted: 09 Jun 2017 11:26 AM PDT முள்வேலியில் முள் இருக்கும்; கம்பிவேலியில் கம்பி இருக்கும்; நெய்வேலியில் நெய் இருக்குமா? – நெய்வேலி கரன்ட்டை எதிர்பார்த்து பவர்கட்டில் தவிப்போர் சங்கம் — – சக்தி இளங்கோ, – ——————————– ''மன்னர் ஏன் கடுப்பா இருக்கார்..?'' ''டூர் போகலாம்னு சொல்லி போருக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்களாம்..!'' – – அ.ரியாஸ், – ——————————— – ''நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் ரொம்ப வறுமையில இருக்காங்கன்னு நினைக்கிறேன் தலைவரே…'' ''எப்படிய்யா சொல்றே..?'' ''உங்க பிறந்த நாள் பேனர்ல 'வாழ்த்த வசதியில்லை'ன்னு போட்டு ... |
காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல, Posted: 09 Jun 2017 11:24 AM PDT பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் சண்டை போடுறதையெல்லாம் யாரும் 'தர்ம யுத்தம்'னு சொல்லவே முடியாது. – கோயில் வாசலில் தர்ம சிந்தனையோடு தத்துவம் எழுதுவோர் சங்கம் – அ.பேச்சியப்பன், - ------------------------------------------------------------ காதல் என்பது 'சிக்ஸ்பேக்' போல, ஒழுங்கா மெயின்டெயின் பண்ணலைன்னா போயிடும்; நட்பு என்பது தொப்பை மாதிரி, ஒரு தடவை வந்துடுச்சுன்னா போகவே போகாது! - – ஜோ.ஜெயக்குமார், - --------------------------------------------------------- எவனோ கட்டிக்கப் போற ... |
Posted: 09 Jun 2017 11:22 AM PDT மழை தூறத் தொடங்கியதும் சைக்கிள் சிறுமி வீட்டுக்குள் ஓடிவிட மழைத்துளிகள் கொஞ்சிக் கொண்டிருந்தன சைக்கிளை. மழை ஓயட்டும் என சிறுமி காத்திருக்க சிறுமிக்காக காத்திருக்கிறது மழை. – —————————- – ஜெயக்குமார் குங்குமம் |
Posted: 09 Jun 2017 11:18 AM PDT நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். கொல்லைப்புறத்தில் நண்பன், மனைவி, குழந்தைகள் என குடும்பமே சேர்ந்து கன்றுக்குட்டி சைசில் இருந்த வெளிநாட்டு நாயைக் குளிப்பாட்டியபடி குதூகலமாக இருந்தார்கள். ''வாடா'' என்றபடி கைகுலுக்க வந்தான் நண்பன். 'ஹி… ஹி…' என்று இளித்து கையை இழுத்துக் கொண்டேன். உபசரிப்பின்போது கூட நண்பனின் பேச்சு முழுக்க அவன் புதிதாக வாங்கியிருந்த வெளிநாட்டு நாயைப் பற்றித்தான் இருந்தது. அதன் உணவு முறை, பழக்க வழக்கம், அதன் சேட்டைகள், வீரதீர பராக்கிரமங்கள் ... |
Posted: 09 Jun 2017 11:17 AM PDT ''ஏங்க இப்பல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்தாலே டல்லா இருக்கீங்க?'' – ஹரியிடம் கேட்டாள் அற்புதா. ''ப்ச்… இந்த ஆபீஸே எனக்குப் பிடிக்கல. நான் வேலைக்கு சேர்ந்து மூணு மாசமாகியும், எம்.டி என் மேல் அவநம்பிக்கையாகவே இருக்கார். நான் செய்யற வேலையை எல்லாம் இன்னொரு தடவை செக் பண்றார். நான் கரெக்ட் டைமுக்குஆபீஸுக்கு வந்தேனா, லன்ச் பிரேக் முடிஞ்சு ஒழுங்கா வந்தேனான்னு கூட பியூன்கிட்ட கேக்கறாராம்!'' அற்புதாவுக்கு கோபம் வந்தது. ''அவநம்பிக்கை பேர்வழிகள்கிட்ட இருக்க வேணாங்க. இந்த மாசத்தோட ரிசைன் பண்ணிடுங்க. ... |
Posted: 09 Jun 2017 11:16 AM PDT ''கௌரி, அந்தப் பேப்பரை எடு. பாங்க் கொள்ளை பத்தின நியூஸ் பாக்கணும்'' – சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் பாலாஜி. ''காலையில பக்கத்து வீட்டு பார்வதி அக்கா வாங்கிட்டுப் போச்சுங்க. அப்புறமா வாங்கித் தர்றேன்'' – காபி கலந்தபடியே பதில் தந்தாள் கௌரி. ''எப்ப பார் எதையாவது இரவல் கொடுத்துக்கிட்டு… இந்தப் பழக்கத்தை மாத்தவே மாட்டியா?'' – பாலாஜி சிடுசிடுத்தபோதே, கோடி வீட்டு கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள். ''அக்கா! நம்ம பவானியக்கா ரோட்டுல நடந்து போகும்போது அவ கழுத்து செயினை திருடன் அறுத்துட்டுப் போயிட்டானாம்…'' ''ஐய்யயோ! ... |
‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட் Posted: 09 Jun 2017 11:14 AM PDT புதுடெல்லி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் சுஷ்மா சுவராஜ் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு உடனடியாக டுவிட்டரில் பதில் உரைத்து வருகிறார். மேலும் வெளிநாடுகளில் இந்தியர் ஏதேனும் பிரச்சனையில் சிக்கியிருப்பதாக தெரியவந்தால் அதற்கான நடவடிக்கையிலும் உடனடியாக சமூக வலைதளங்களிலே தொடங்குபவர். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு உதவிசெய்வதில் அவருடைய நடவடிக்கையானது அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி இந்தியாவிற்கு ... |
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னை Posted: 09 Jun 2017 10:39 AM PDT 9 ஜூன் முதல் 11 ஜூன் வரை உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னையில்-டி.என்.இராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. சென்னையில் உள்ளவர்கள் யாரேனும் சென்றனரா? தினமணியின் பங்களிப்பு பெரும்பான்மையாக நடைபெற்றது. விழாவில் பல தமிழறிஞர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.வெளிநாடுகளிலிலிருந்து(சிங்கப்பூர்,மலேசியா) பலர் கலந்து கொண்டனர். |
Posted: 09 Jun 2017 09:16 AM PDT கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை சோழர் வரலாறு'என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், 'பிற்காலச் சோழர் வரலாறு' என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் மார்கழி மாதத்து திருவாதிரை எனக் கூறியிருந்தனர் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரமாகசாஸ்திரியாரும் பண்டாரத்தாரும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழித் திருவாதிரையாக இருக்கலாம் எனக் கணிக்க, அவர்கள் கண்ட சான்று திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டுதான் . ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டான கி.பி.1043-ல் சதுரானன ... |
குறுக்கும், நெடுக்கும் - வார்த்தை புதிர் Posted: 09 Jun 2017 06:55 AM PDT - - |
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? Posted: 09 Jun 2017 06:46 AM PDT ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், "கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்" என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. "அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!" பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் ... |
Posted: 09 Jun 2017 03:33 AM PDT - |
ஐந்தும் நம் விரல்களே - சிறுவர் பாடல் Posted: 09 Jun 2017 03:27 AM PDT |
பளீரென்று சிரிக்கிறாள் வெள்ளையம்மா....(விடுகதைகள்) Posted: 09 Jun 2017 03:24 AM PDT |
Posted: 09 Jun 2017 03:23 AM PDT பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன் சொந்த ஊர்: சொந்த ஊர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. வாழ்வது சென்னை. ஆண்/பெண்: சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை என்றாலும் கேட்பதால் சொல்கிறேன் - ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலமாகத்தான். பல ஆண்டுகளாகவே தெரியும். ஆனால், இப்பொழுதுதான் இணைந்தேன். பொழுதுபோக்கு: அஞ்சல் தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு, படிப்பது, எழுதுவது, திரைப்படம் பார்ப்பது என நிறைய. தொழில்: மொழிபெயர்ப்பு, தமிழ் பிழைதிருத்தம். மேலும் என்னைப் பற்றி: தீவிரமான தமிழ்ப் பற்றாளன். ... |
Posted: 09 Jun 2017 03:19 AM PDT |
Posted: 09 Jun 2017 03:16 AM PDT - - |
கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி Posted: 09 Jun 2017 03:07 AM PDT மின்சார தடை என்பது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சனை. அதிலும் கோடை வெயில் நேரத்டில் கரண்ட் கட் ஆனால் பொதுமக்கள் கொலைவெறியை அடைகின்றனர். இந்த நிலையில் டெல்லி அருகே கரண்ட் கட் ஆனதால் கடுப்பான நீதிபதி ஒருவர் துப்பாக்கியை எடுத்து மின்சார ஊழியர்களை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது டெல்லியில் உள்ள குர்கான் என்ற பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி ... |
Posted: 09 Jun 2017 02:57 AM PDT |
சுசீந்திரனின் ‘அறம் செய்து பழகு’ படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம் Posted: 09 Jun 2017 02:52 AM PDT - படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் சுசீந்திரன் 'மாவீரன் கிட்டு'வைத் தொடர்ந்து இயக்கும் படத்துக்கு 'அறம் செய்து பழகு' என தலைப்பு வைத்தார். சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். சுசீந்திரன், இப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்நிலையில் ... |
ஜனவரி 2018 வரையிலான படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல் Posted: 09 Jun 2017 02:51 AM PDT ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு தேதியை உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனைப் பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இயங்கி வருவதாகவும் தொடர்ந்து சங்க நிர்வாகிகளால் சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ... |
குறும்படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு Posted: 09 Jun 2017 02:50 AM PDT - - திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு தற்போது ஒரு குறும்படத்தை இயக்க உள்ளார். இதை அதிகாரபூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'சென்னை 28' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெங்கட் பிரபு. இவர் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாக படப்பிடிப்பை நடத்தி படம் எடுப்பதையே வழக்கமாகக் கொண்டவர். 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா', 'பிரியாணி', 'மாஸ் என்கிற மாசிலாமணி', 'சென்னை 28- 2' ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது குறும்படம் இயக்குவதாக அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் ... |
அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி Posted: 09 Jun 2017 02:49 AM PDT சிங்கப்பூர் - - சாங்கி விமான நிலையத்தில் புதி தாக அமையவுள்ள பொழுது போக்கு, கடைத்தொகுதியான 'ஜுவலி'ல் 40 மீட்டர் உள்ளரங்கு நீர்வீழ்ச்சி, தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள தொங்கு பாலம், என பல சிறப்புப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஜுவல் கட்டத்தின் உயர் மாடியில், கிட்டத்தட்ட 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதாவது 11 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவில் உருவாகும் கனோபி பூங்காவில் இவை இடம் பெறுகின் றன. கண்ணாடித் தரையுடன் 50 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் தொங்கு பாலம் இதன் ... |
Posted: 09 Jun 2017 02:47 AM PDT - சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ்த் திரையுலகில் நல்லதொரு இடம் பிடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொலைக் காட்சித் தொடர் புகழ் பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி ஒன்றில் செய்தித் தொகுப்பாளராக அறிமுகமான பிரியா, சின்னத்திரை நாடகத் தொடரில் நடித்து வந்தார். அவருக்கு வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். திருமணம் ... |
Posted: 09 Jun 2017 02:45 AM PDT - தலைமைத்துவப் பண்பு, போலிஸ் படைப் பயிற்சியில் சிறந்து விளங்கியது ஆகியவற்றுக்காக 'சோர்ட் ஆஃப் மெரிட்' எனப்படும் 'தகுதி வாள்' விருது பெற்ற பிரித்திவி வெங்கடேஷ் தம் பெற்றோருடன். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை - --------------------------- சென்னையில் பிறந்து ரஷ்யா, போலந்து, பிரட்டன் என்று வெளிநாடுகளில் வளர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார் 19 வயது பிரித்திவி வெங்கடேஷ். அனைத்துலகப் பள்ளிகளில் பயின்று வந்ததால் சிங்கப்பூர் கலாசாரத்தைப் பற்றி முழுதாகக் கற்றுக்கொண்டு மற்ற ... |
கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன Posted: 08 Jun 2017 06:42 PM PDT திருவனந்தபுரம், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது 5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு மூடப்பட்ட மதுபான 'பார்'களை மீண்டும் திறக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, அரசுக்கு சிபாரிசு செய்தது. மீண்டும் திறக்கப்படுகிறது அதன்படி புதிய மதுபான கொள்கையை ... |
திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது ரஷ்யாவின் ஜனாதிபதி புதின் Posted: 08 Jun 2017 04:01 PM PDT பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஓலிவர் ஸ்டோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சமீபத்தில் பேட்டி எடுத்தார். இந்த பேட்டி டாக்குமெண்டரி படம் போல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் புதின் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நான் ஒன்றும் பெண் கிடையாது, அதனால் எனக்கு கெட்ட நாட்கள் என்பதே கிடையாது என கூறியுள்ளார். இதை சொல்வதன் மூலம் நான் யாரையும் அவமதிக்க முயற்சிக்கவில்லை. இதெல்லாம் இயற்கையின் விஷயங்கள் தான் என புதின் தெரிவித்துள்ளார். திடீரென ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |