ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!
- ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
- ''வலி உணர்வோம்!'' - புற்றுநோய் குழந்தைகளுக்காக சினிமா இயக்குநரின் முயற்சி
- “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை
- புதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர்
- ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை
- கோயம்புத்தூர் பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- தெரிந்துகொள்ளுங்கள்!.....டெப்லான்!
- சிரிப்புதான் வருகுதய்யா…
- குழந்தைகள் விரும்புவதை படிக்க வைப்போம்
- அசத்தல் தகவல்கள்
- ஃபிளமிங்கோ பறவைகளின் ஒற்றைக்கால் தூக்கம் ஏன்?
- இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்!
- பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!
- அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?
- இடைவெளி – கவிதை
- ஹியூமர்ல ஏது டார்க்கு? -கலாய்க்கும் விவேக்
- பிருந்தாவனம் – திரைப்பட விமர்சனம்
- தொண்டன் – திரைப்பட விமர்சனம்
- யோகாசனம்: கொஞ்சம் கவனம்!
- கண்ணா மூச்சி ரே! ரே!
- நிறத்தில் என்ன இருக்கிறது? - படக்கதை
- சு.ரா. சில குறிப்புகள்
- ‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி?
- ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்
- கங்கை – ஒரு பக்க கதை
- தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
- நிச்சயத் தாம்பூலம் - ஒரு பக்க கதை
- எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்
- அலட்சியம் : மலர்மதி
- கஷ்டம் : பர்வதவர்த்தினி
- அந்நியன் : ஒரு பக்க கதை
- தன்வினை தன்னைச்சுடும் – சிறுகதை
- பொய்மை – சிறுகதை
- சமாதியிலே ஏன் இரண்டு க்யூ..?
- ஞாயிற்றுக்கிழமையாச்சேன்னு...!
- தலைவருக்கு டபுள் ரோல்...!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம் !
- கோணங்கள் எதிரெதிராய்!
- பெற்றோருக்கான டிப்ஸ்!
| முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா! Posted: 08 Jun 2017 03:50 PM PDT - முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா! தா.ரமேஷ் பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரிலா டப்ரோஸ்கியுடன் ஜோடி சேர்ந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில் போபண்ணா - கேப்ரிலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா, ஜெர்மனியின் லினா கிரோயின்ஃபெல்ட் ஜோடியை எதிர்கொண்டது. - ரோகன் போபண்ணா முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ... |
| Posted: 08 Jun 2017 03:44 PM PDT - கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் என பரபரத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடிகை சரண்யா மோகனின் புகைப்படம். அவரின் திருமணத்துக்கு முந்தைய புகைப்படமும், குழந்தைப் பெற்றப்பிறகான அவருடைய தற்போதைய படத்தையும் இணைத்து ட்ரோல் ஆகும் விஷயம்தான். ஒரு நடிகையை பற்றி ட்ரோல் ஆகும் விஷயத்தில் சக நடிகைகள் மெளனம் காக்க, 'யாரடி நீ மோகினி' படப் புகழ் சரண்யா மோகன் சிம்பாளிக்காக தன் ஃபேஸ்புக் பக்கத்தில், Happiness is mother hood . Happiness is feeding my son . Happiness is taking ... |
| ''வலி உணர்வோம்!'' - புற்றுநோய் குழந்தைகளுக்காக சினிமா இயக்குநரின் முயற்சி Posted: 08 Jun 2017 03:30 PM PDT - சினிமா இயக்குநர் உஷா கிருஷ்ணன் "இறந்த பின்னாடி கண்தானம், உடல் உறுப்புதானம் செய்யலாம். ஆனா உயிரோடு இருக்கும்போது செய்யக்கூடிய தானங்கள்ல முடி தானத்தை உயர்வானதா நினைக்கிறேன். அத்தானத்தைச் செய்ய ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருந்தாலும் மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு தயங்கினதாலேயே இவ்வளவு காலம் காலதாமதம் ஆனது. இப்போ சந்தோஷமா முடி தானம் செய்திருக்கேன்" என உணர்வுபூர்வமாகப் பேசுகிறார், ராஜா மந்திரி பட இயக்குநர் உஷா கிருஷ்ணன். "புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது முடி உதிர்வது ... |
| “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை Posted: 08 Jun 2017 03:22 PM PDT - - பெண்களின் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான் உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள் பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி என இருக்கின்றனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள் எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குடும்பத்தின் ... |
| புதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர் Posted: 08 Jun 2017 01:21 PM PDT [b]புதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர்: அமெரிக்கா கொடுக்கும் கெளரவம்[/b] அமெரிக்காவில் லிங்கன் ஆய்வகம், புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஒன்றுக்கு பெங்களூர் மாணவி ஒருவரின் பெயரை வைத்து கெளரவம் அடைய செய்துள்ளது. அமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலி என்பவர் ... |
| ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை Posted: 08 Jun 2017 01:08 PM PDT ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை சென்னை : மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விரைவில் ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக உதான் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். Powered by உதான் திட்டத்தின் மூலம் முதலில் சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத் மற்றும் நந்தேட்-ஹைதராபாத் வழித்தடங்களில் விமான சேவை ... |
| கோயம்புத்தூர் பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..! Posted: 08 Jun 2017 12:57 PM PDT கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..! இந்திய ராணுவம் முதன் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புல்லட் பூருப் ஜாக்கெட்டினை பயன்படுத்த இருக்கின்றது.இதற்கு முக்கியக் காரணம் பெங்காலியை சேர்ந்த விஞ்ஞானி பேராசிரியர் சாந்தானு பூமிக் ஆவார். இதனை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போது வழங்கியுள்ளது. மேக் இன் இந்தியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரம் கொண்ட குழு, இந்தப் புல்லட் பூருப் ஜாக்கெட்டை அங்கீகரித்தது, இது உள்நாட்டு நவீன இலகுரகத் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 08 Jun 2017 08:13 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| தெரிந்துகொள்ளுங்கள்!.....டெப்லான்! Posted: 08 Jun 2017 07:44 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 08 Jun 2017 07:27 AM PDT ![]() |
| குழந்தைகள் விரும்புவதை படிக்க வைப்போம் Posted: 08 Jun 2017 07:24 AM PDT - ![]() |
| Posted: 08 Jun 2017 07:23 AM PDT ![]() |
| ஃபிளமிங்கோ பறவைகளின் ஒற்றைக்கால் தூக்கம் ஏன்? Posted: 08 Jun 2017 07:22 AM PDT - ஒரு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பறவையினம் ஃபிளமிங்கோ. இவை, தூங்கும்போதும் ஒற்றைக் காலில் நீண்டநேரம் நின்றுகொண்டே தூங்கும். இவற்றால், உடலை எப்படி சமன்படுத்த முடிகிறது, தூங்கும்போதும் கீழே விழாமல் எப்படி இருக்க முடிகிறது என்பன போன்ற சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக, அமெரிக்க விஞ்ஞானிகள், உயிரிழந்த ஃபிளமிங்கோ பறவைகளை ஒற்றைக் காலில் நிற்கவைத்து சோதனை செய்தனர். அப்போது, உயிரிழந்த பறவை சடலம், எந்த புற உதவியும் இன்றி, அப்படியே ஒற்றைக்கால் நிலையில் ... |
| இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்! Posted: 08 Jun 2017 07:07 AM PDT 1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். 4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் ... |
| பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி! Posted: 08 Jun 2017 07:04 AM PDT ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை ... |
| அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Posted: 08 Jun 2017 05:43 AM PDT அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...? அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு, போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு ... |
| Posted: 08 Jun 2017 02:32 AM PDT - கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன மரங்கள் உயர்ந்து நிற்கின்றன எங்கே போனாய் குளத்தைத் தேடியலைந்தது நிலா இந்த அடுக்ககங்கள் வீழ்ந்திடாமலிருக்க இரு கைகளாலும் தாங்கிப்பிடித்தபடி மூச்சுவிடவும் இடைவெளியின்றி தரையில் அமுங்கிக்கிடக்கிறேன். நிலவே, நீ பகலில் வா அந்த நீச்சல் குளத்தில் நாம் சந்திக்கலாம் என்றது குளம். கண்ணீர் விட்டு அழுதது மழை. – இன்பா குங்குமம் |
| ஹியூமர்ல ஏது டார்க்கு? -கலாய்க்கும் விவேக் Posted: 08 Jun 2017 02:31 AM PDT - தமிழ் சினிமாவில் முப்பதாவது ஆண்டை கொண்டாடுகிறார் 'சின்னக் கலைவாணர்' விவேக். - 'பிருந்தாவனம்' ஹிட் மீண்டும் அவருக்கு ரெட் கார்பெட்டை விரித்திருக்கிறது. அடுத்து தனுஷின் 'வி.ஐ.பி.2', சந்தானத்தோடு'சக்கபோடு போடுராஜா', 'ஹிப்ஹாப்' ஆதியோடு 'மீசையை முறுக்கு' என ரிலீஸுக்கு வரிசைகட்டி படங்கள் நிற்கின்றன. - 'நீங்க சினிமாவுக்கு வந்து முப்பது வருஷமாச்சு..?' என்றதுமே, ''ஏன்ன்ன்… போதும்ங்றீங்களா?'' என ஜாலியாக புன்னகைக்கிறார். கேள்வியை அங்கிருந்தே ஆரம்பித்தோம். - -------------------------- |
| பிருந்தாவனம் – திரைப்பட விமர்சனம் Posted: 08 Jun 2017 02:23 AM PDT - பேசவும், கேட்கவும் இயலாத அருள்நிதி – தான்யா இடையிலான காதலும், அந்த காதல் நிமித்தமான சம்பவங்களுமே பிருந்தாவனம். அருள்நிதி, சந்தோஷத்தை, தான் இருக்கிற இடத்தில் கொண்டு வருகிற மனிதன். தன் குறைகளை எண்ணி வருத்தம் கொள்ளாத மனது. சுகதுக்கங்களை மறைத்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கிறவர்களின் நலனுக்காக உழைக்கிற அவர், நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். சொந்த வேலைக்காக ஊட்டி வந்த விவேக், அருள்நிதியுடன் பழக நேரிடுகிறது. பரஸ்பரம் நட்பினால் இருவரின் மனக்காயங்கள் ஆற்றப்படுகின்றன. இந்த வேளையில் அருள்நிதியை ... |
| Posted: 08 Jun 2017 02:21 AM PDT - மனித நேயத்தின் ஒட்டுமொத்த உருவமான ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த அடுக்கடுக்கான சோதனைகளே 'தொண்டன்'. சமுத்திரக்கனி எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைக்கிறவர். அவரது பணியும் உயிர்களைக் காப்பாற்றுகிற முயற்சி என்பதால் பொருந்திப் போகிறது. சுமுகமாகச் சென்று கொண்டிருந்தவர், அமைச்சர் மகனின் தூண்டுதலில் வெட்டப்பட்டவரைக் காப்பாற்ற நேர்கிறது. இதனால் அவரின் கோபத்திற்கு ஆளாகிறார் கனி. கல்லூரிப் பெண்ணை வம்புக்கிழுத்து, வகுப்பிலேயே அடிவாங்குகிறார் அமைச்சரின் இன்னொரு மகன். அவரையும் கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் ... |
| Posted: 08 Jun 2017 02:20 AM PDT - யோகாசனத்தை கற்க விரும்புபவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. * காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்தது. – * மாலையிலும் செய்யலாம். ஆனால், உணவு உண்டு, மூன்று மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும். – * யோகாசனம் செய்வதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் வேண்டாம். – * யோகாசனத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், யோகாசனத்துக்கு பின்பு அரை மணி நேரம் கழித்தும் திரவ பானங்களைப் பருகலாம். – * ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக ... |
| Posted: 08 Jun 2017 02:19 AM PDT - கண்ணாமூச்சி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. வட்டாரங்களுக்கு ஏற்ப, விளையாட்டு முறைகளும், விதிகளும் மாறும். ஆனாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அதேதான். – இந்த வகை கண்ணாமூச்சி விளையாட்டுக்கு, மறைந்து கொள்வதற்கு வசதியாக கொஞ்சம் பெரிய இடம் தேவை. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றாலும், 6 முதல் 8 பேர் வரை என்றால் சுவாரசியமாக இருக்கும். – முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வது யார் என்பதை காயா, பழமா அல்லது சாட், பூ, த்ரீ போட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். – அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் ... |
| நிறத்தில் என்ன இருக்கிறது? - படக்கதை Posted: 08 Jun 2017 02:17 AM PDT - - ![]() |
| Posted: 08 Jun 2017 02:15 AM PDT - சுந்தர ராமசாமி – 30.5.1931 – 14.10.2005 நாகர்கோவில், கன்னியாகுமரி – நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும் சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். நாவல், சிறுகதை, கவிதை என, மூன்று துறைகளிலும் தன்னுடைய தடத்தை ஆழமாகப் பதித்தார். தென் மாவட்ட இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவிக்க, இலக்கிய அமைப்பை நடத்தினார். இத்தனை புகழுக்கும் சொந்தக்காரர் 'பசுவய்யா' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிய சுந்தர ராமசாமி. தாய்மொழி தமிழ். ... |
| ‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா மம்மூட்டி? Posted: 08 Jun 2017 02:13 AM PDT - ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'காலா' படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'கபாலி' படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்துக்கு 'காலா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 படங்களை இயக்கும் வாய்ப்பை அவ்வளவு எளிதாக ரஜினி யாருக்கும் கொடுப்பதில்லை. 'கபாலி' படம் தந்த திருப்தியும், மன நிறைவும்தான் 'காலா' படம் இயக்கும் வாய்ப்பை ரஜினி, ரஞ்சித்துக்கு வழங்கக் காரணமாக ... |
| ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் Posted: 08 Jun 2017 02:12 AM PDT - 'குயின்' ரீமேக் படத்தை தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழ்ப் படத்தில் காஜல் அகர்வாலும், கன்னடப் படத்தில் பருல் யாதவும் நடிக்க உள்ளனர். மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. திருமணத்துக்குப் பிறகு தேனிலவுக்காக பாரீஸ் செல்ல விரும்புகிறார் ... |
| Posted: 07 Jun 2017 11:57 PM PDT - ![]() |
| தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை Posted: 07 Jun 2017 11:55 PM PDT ![]() |
| நிச்சயத் தாம்பூலம் - ஒரு பக்க கதை Posted: 07 Jun 2017 11:54 PM PDT ![]() |
| Posted: 07 Jun 2017 11:05 PM PDT - மெல்லிய சப்தத்துடன் குறுஞ்செய்தி வந்திருப்பதை செல்போன் அறிவித்ததும் எடுத்துப் பார்த்த சங்கர் சிலிர்த்துப் போனான். அதே நம்பர். அதே செய்தி. தினமும் காலையில் ஒரு எஸ்.எம்.எஸ், இரவில் ஒரு எஸ்.எம்.எஸ் என்று வரும் அதே எண்ணிலிருந்து வந்திருந்தது. காலையில் 'குட்மார்னிங். ஹேவ் எ குட் டே' என்றும், இரவு பத்து மணிக்கு 'குட்நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்' என்றும் தினம் தினம் இந்த எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் வந்து மனதை வதைக்கிறது. நிச்சயம் இது ஒரு பெண்ணிடமிருந்துதான் வருகிறது. எந்தப் பயலும் இதுபோல ... |
| Posted: 07 Jun 2017 11:04 PM PDT - எங்களுக்கு எவ்வளவோ தலை போகிற வேலைகள் இருக்கும்மா. காணாமப் போன உங்க குழந்தையை உடனே கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்னா எப்படி? ரைட்டர்கிட்ட புகார் எழுதிக் கொடுத்துட்டு போங்க… பார்க்கலாம்!'' – எரிந்து விழுந்தார் இன்ஸ்பெக்டர் இன்பநாதன். நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் வந்த அந்த நடுத்தர வயது தம்பதியினர், 'பொசுக்'கென இடிந்து போயினர். ''என்னங்க… டியூஷனுக்குப் போன நம்ம பொண்ணைக் காணோம்ங்க.'' – இன்பநாதன் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப் பதறியடித்து ஓடி வந்தாள் அவர் மனைவி. ''டியூஷன் ... |
| Posted: 07 Jun 2017 11:03 PM PDT -- ''சிரமப்பட்ட காலத்தில் எங்கப்பா யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினார்னு உங்களுக்குத் தெரியுமா?'' - சிவராம் என்னிடம் கேட்டான். நண்பரின் மகன். பொறுப்பானவன். சின்ன வயசில் கஷ்டத்தில் தவித்து இப்போது வெற்றி நடை போடுபவன். இப்போது வந்து ஏன் இப்படிக் கேட்கிறான்? யோசித்தேன். ''உன் அம்மாவைக் கேட்டுப் பாரேன்!'' என்று தட்டிக் கழிக்கப் பார்த்தேன். அவன் விடுவதாக இல்லை. பேச்சை மாற்றி, அவனையும் கூட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். அங்கே அவனது அம்மா, சத்தமாக என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தாள். ''அந்த ... |
| Posted: 07 Jun 2017 10:56 PM PDT - 'உங்க ஊர்க்காரங்க, ஜாதிக்காரங்க எது கேட்டாலும் பணம் வாங்கிட்டு உடனே செய்து கொடுக்கறீங்க. ஆனா, இப்ப வந்துட்டுப் போன பையன், சென்னையில ஒரு வேலைக்காக இதோட பத்து தடவை உங்களை வந்து பார்த்துட்டான். ஆயிரக்கணக்கில் பணம் தர்றதா சொல்லி கெஞ்சறான். உங்க ஜாதிக்கார பையன்தான். உங்களால முடியாத வேலை இல்ல. எவ்வளவோ அரசியல் செல்வாக்குள்ள நீங்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டீங்க. 'குடும்பத் தொழிலை பண்ணிக்கிறேன்'னுட்டு அவனும் விரக்தியா கிளம்பிட்டான். ஏன் தலைவரே இப்படி பண்ணீங்க?'' - ... |
| தன்வினை தன்னைச்சுடும் – சிறுகதை Posted: 07 Jun 2017 10:54 PM PDT - ![]() |
| Posted: 07 Jun 2017 10:51 PM PDT அப்சல் - - காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ''ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற 'மயங்கினேன் சொல்லத் ... |
| Posted: 07 Jun 2017 10:46 PM PDT ![]() |
| Posted: 07 Jun 2017 10:45 PM PDT ![]() |
| Posted: 07 Jun 2017 10:42 PM PDT -- தலைவர் படதிலே நடிக்கப்போறாராமே.. என்ன வேடம்? - அதுலயும் இரட்டை வேடம்தான்! - அஜித் - ----------------------------- - நம்ம படத்துல முதல் சீனே அரசியல்வாதியோட வீட்டைக் காட்டறோம் சார்...! - அப்புறம்? - ரெய்டுதான்!! - வெ.ராம்குமார் - ---------------------- - ஹீரோ கடமை தவறாத போலீஸ் அதிகாரி, ஹீரோயினோட அப்பா ஒரு நேர்மையான அரசியல்வாதி... - நிறுத்துய்யா...கொஞ்சம் நம்புற மாதிரி கதை சொல்லு...! - எஸ்.கோபாலன் - --------------------------- கல்கி |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 07 Jun 2017 10:38 PM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம் ! Posted: 07 Jun 2017 10:35 PM PDT கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம் ! பெருங்கடல்கள்தான் மனித வாழ்வுக்கு அடித்தளம். உயிரினமே பெருங்கடல்களில் இருந்து தோன்றியவைதான். பூமிப்பந்தின் 72 சதவிகித பரப் பளவையும், 140 மில்லியன் சதுர மைல்களையும் கொண்டது கடல் நீர்ப்பரப்பு. ஆனால், கடல் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. கடல் மிகப் பெரியதாக இருப்பதும், மிக ஆழமாகஇருப்பதும், எதிர்புறம் உள்ள கரை கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதும்.. இப்படி ஏதோ ஒரு காரணத்தால், கடல்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தோ அதனால் ஏற்படும் ... |
| Posted: 07 Jun 2017 10:02 PM PDT 'வாத்தியார் உத்தியோகத்தில், 'அதை சாதிச்சேன்; இதை சாதிச்சேன்'னு தம்பட்டமடிக்க என்ன இருக்குது... 'அவன், என்கிட்ட படிச்சான்; இவன் முளைக்கும் போதே, பகாசூரனாக விளங்க போறான்னு எனக்கு தெரியும்...' இப்படி அசட்டு பெருமை வேண்டுமானால் பேசிக்கலாம்...' என்று அடிக்கடி அலுத்துக் கொள்வார், வாத்தியார், கல்யாணம். வேண்டாததை கழித்து, குப்பையில் கொட்டுவது போன்றதுதான், 'ரிடையர்மென்ட்' என்பதை, பணி ஓய்வுக்கு பின், புரிந்து கொண்ட கல்யாணம், 'பென்ஷன் போதவில்லை; பொழுதும் போகவில்லை...' என்று தான், கல்யாண தரகர் வேலையை ... |
| Posted: 07 Jun 2017 09:56 PM PDT பெற்றோருக்கான டிப்ஸ்! பதிமூன்று அல்லது 14 வயது குழந்தைகள் வெளியே சென்று, இரவு தாமதமாக வந்தால், கதவை திறக்க மாட்டோம்; நீ கோபித்து, நண்பர்கள் வீட்டுக்கு போனால், அப்படியே, மறுநாளும் அங்கேயே சென்று விடு...' என்று சொல்லுங்கள்; நீண்ட நாட்கள், நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்பது, அவர்களுக்கும் தெரியும். 'வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்...' என்று, 'சென்டிமென்ட்'டாக குழந்தைகள் மிரட்டினால், 'போனா போ...' என்று சொல்லாமல், 'நீ போனா, நாங்க ரொம்ப வருத்தப் படுவோம்...' என்று நீங்களும், அதே சென்டிமென்டால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)