ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
- நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்!
- லிங்கத்தை தேடி நெடுஞ்சாலையை தோண்டிய மக்கள்
- புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை!
- மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்
- ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி
- ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
- ஏ.ஆர். ரகுமான் சகோதரிகளின் ரம்ஜான் சிறப்புப் பாடல்
- இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம்.
- முள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை
- தென்னிந்திய அளவில் மாபெரும் கபாடி தொடர் போட்டி முதல் பரிசு 1 லட்சம்
- அனுபவங்கள் பேசுகின்றன - தொடர் பதிவு
- எங்கம்மா தீவிர விஜய் ரசிகை...!!
- ஊனம் - முரண்பாடு
கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு Posted: 06 Jun 2017 03:51 PM PDT கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' ... |
நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Posted: 06 Jun 2017 03:47 PM PDT நீதிகூறும் ஈசாப் கதைகளும், பண்பாடு காக்கும் பஞ்சதந்திரக் கதைகளும், பழம் பாட்டிமார் கதைகளும் படிப்பினை போதிக்கும் சிறுவர் சிறுமியருக்கான கதைகள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஆனால், அந்தப் பழங்கதைகளை முதலாளி தொழிலாளிகளுக்கிடையில் நல்லுறவை உருவாக்கவும் உயர்த்தவும் பல தொழில் நிறுவனங்களும் பயிற்சி வகுப்புகள் மூலம் சிறப்புறுத்துகின்றன. முயல்போல் தூங்காமல், ஆமைபோல் வேகமாக முயல் எனப் படிப்பினை தரும் ஆமை முயல் கதை. மோரில் விழுந்து விட்ட தவளை அதையே தன் கால்களினால் கலக்கி, ... |
லிங்கத்தை தேடி நெடுஞ்சாலையை தோண்டிய மக்கள் Posted: 06 Jun 2017 03:39 PM PDT ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், போலி சாமியார் ஒருவரின் பேச்சை கேட்டு, சிவலிங்கத்தை தேடி, தேசிய நெடுஞ்சாலையை தோண்டி நாசப்படுத்தி உள்ளனர். போலி சாமியார் தெலுங்கானா மாநிலம், ஜான்கான் மாவட்டத்தில் உள்து பெம்பாரதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த போலி சாமியார் லகான் மனோஜ், 30, தன்னை தீவிர சிவ பக்தனாக வெளிப்படுத்தினார். 'தினமும் என் கனவில் சிவன் வருகிறார்' என, கிராம மக்களிடம் கூறினார். கிராம மக்களும் அவரை சாமியாராக கருத தொடங்கினர்.ஒரு கட்டத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் ... |
புரட்சி பெண் செம்பியன் மாதேவிக்குச் சிலை! Posted: 06 Jun 2017 03:35 PM PDT அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியில் பிறந்தவர் வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி. இவரை அமரர் கல்கி பொன்னியின் செல்வன் காவியத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடித்துக் காட்டியதால் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அவரை நினைவு கூறும் விதமாக அவ்வூர் மக்கள் ஒன்றுகூடி நிதி திரட்டி செம்பியன் மாதேவிக்கு ஆறேமுக்கால் அடி உயர ஐம்பொன் சிலை செய்து சமீபத்தில் திறப்பு விழாவும் நடத்தியிருக்கிறார்கள். செம்பியன் மாதேவி பிறந்த நாள் விழா, செம்பியன் மாதேவி அறக்கட்டளை தொடக்க விழா, சோழர் ... |
மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர் Posted: 06 Jun 2017 03:26 PM PDT புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் அநுபம் கெர் நடிக்க உள்ளார். சஞ்சய் பாரு எழுதிய புத்தகம் கடந்த, 2004ம் ஆண்டு மன்மோகன் பிரதமரான போது அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. அவர், 2008 ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார். அவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து, ' ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - சந்தர்ப்பவாதமாக பிரதமரானவர்' என்ற புத்தகத்தை எழுதினார். 2014ம் ஆண்டு ... |
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Posted: 06 Jun 2017 03:24 PM PDT புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தன்னந்தனியாக, 33 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் உருவான போது, 1950ம் ஆண்டில், தலைமை நீதிபதி உட்பட, எட்டு நீதிபதிகள் இருந்தனர். இது, 1956ம் ஆண்டு 11; 1960ம் ஆண்டில், 14; 1978 ம் ஆண்டில், 18 நீதிபதிகள் என உயர்ந்தது. தற்போது, 31 நீதிபதிகள் வரை நியமனம் செய்ய முடியும். ஆனால், 27 நீதிபதிகளை தற்போது பணியில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை வழக்குகளை விசாரிக்க ... |
Posted: 06 Jun 2017 03:21 PM PDT சென்னை: தினகரனுக்கு எதிராக பேசியதால் அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், அவரை யாரும் சந்திக்க மாட்டோம். அவர் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த பேச்சு தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இன்று காலை முதல் பல எம்.எல்.ஏ.,க்கள் தினகரை சந்தித்து வருகின்றனர். எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் ... |
ஏ.ஆர். ரகுமான் சகோதரிகளின் ரம்ஜான் சிறப்புப் பாடல் Posted: 06 Jun 2017 12:10 PM PDT ஏ.ஆர். ரகுமான் சகோதரிகளின் ஈகைத் திருநாள் சிறப்புப் பாடல் Your browser does not support the video tag. நன்றி-புதிய தலைமுறை. ரமலான் நொன்பு இருக்கும் எனது நண்பன் சதீசுக்காக இந்தப் பாடல்……….. |
இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம். Posted: 06 Jun 2017 11:32 AM PDT இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம். |
முள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை Posted: 06 Jun 2017 11:27 AM PDT கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரேகார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியர் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தம் நடைமுறை வழக்கப்படியே கையெழுத்திடப்பட்டதாகவும், ... |
தென்னிந்திய அளவில் மாபெரும் கபாடி தொடர் போட்டி முதல் பரிசு 1 லட்சம் Posted: 06 Jun 2017 02:44 AM PDT வன்னியர் சங்கம் நடத்திய மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரானது கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த மாபெரும் கபாடி தொடருக்கு இனமான தளபதி #மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்., தலைமை வகித்தார்.. இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது.. இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன? ••••••••••••••••••••••••••••••• 1882-1924 ... |
அனுபவங்கள் பேசுகின்றன - தொடர் பதிவு Posted: 05 Jun 2017 11:28 PM PDT |
எங்கம்மா தீவிர விஜய் ரசிகை...!! Posted: 05 Jun 2017 11:26 PM PDT - தொடரும் |
Posted: 05 Jun 2017 07:11 PM PDT அன்று... காதல் செய்ய பெண்களின் ஒற்றைகண் பார்வைக்கு ஏங்கியவனே! இன்று... திருமணம் செய்ய பெண்ணிற்கு ஒற்றைகண்யென தள்ளிவைத்தது சரிதானோ? (ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்) |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |