Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்… என்ன சொல்கிறார் முதலிடம் பெற்ற நந்தினி?

Posted: 31 May 2017 04:11 PM PDT

- யூ.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி 'சமுதாயமும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். நந்தினி யூ.பி.எஸ்.சி, 2016-ம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் நேற்று வெளியானது. இதில் 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி இம்முறை முதலிடத்தைப் பிடித்தார். – தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் தேசியளவில் 21-வது இடத்திற்கு வந்தார். தனது முதல்முயற்சியிலேயே இந்தியளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி ...

சிரிப்பு மருந்து - தொடர் பதிவு

Posted: 31 May 2017 04:07 PM PDT

புத்தகம் வாங்கியவுடன் ஏன் தேதி எழுதி வைக்கிறே?

Posted: 31 May 2017 04:02 PM PDT


-
இது மாதிரி மாபிள்ளை எங்கே தேடினாலும்
கிடைக்க மாட்டார்!
-
ஆமாம், போலீஸே இவரை ஒரு கேஸ் விஷயமா
மூணு வருஷமா தேடிட்டு இருக்காங்கன்னா
பார்த்துக்கோயேன்..!!
-
-சரவணகுமார்
ஓவியம்- அபிநந்து
-
---------------------------------

‘‘எனக்கு கிருஷ்ணர் வேடம் தாங்க ராஜமௌலி!’’ - அமீர்கான்

Posted: 31 May 2017 03:54 PM PDT

-- தமிழில் கமல் எப்படியோ... அதேபோல இந்தியில் அமீர்கானைச் சொல்லலாம். 'பாகுபலி'யை 'டங்கல்' படத்தோட கம்பேர் பண்ணாதீங்க! ஏன்னா, நான் இன்னும் 'பாகுபலி' பார்க்கலை' என மீடியாக்களுக்குக் கோபமாகச் சொல்லிவந்த அமீர்கான், இப்போது 'பாகுபலி' பார்த்துவிட்டார். 'பாகுபலி'யின் மேக்கிங்கையும் கலை நுணுக்கத்தையும் பார்த்து வியந்துவிட்டாராம் அமீர்கான். 'இந்தியப் படங்களை உலகத் தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார் ராஜமௌலி' என்று புகழ்ந்து தள்ளிக்கொண்டே இருக்கிறாராம். 'பாகுபலி'க்குப் பிறகு, இந்திய ...

வாக்காளர் பட்டியல் ஜூலையில் திருத்தம்

Posted: 31 May 2017 03:46 PM PDT

சென்னை: விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், தவறுகளை நீக்கவும், ஜூலை, 1 முதல், 31 வரை, சிறப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, 18 - 19 வயது வாக்காளர்களை சேர்க்க, இவ்வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பணியின் போது, வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில், படிவங்களை சமர்ப்பிக்கலாம். தபால் மூலமாகவும், ...

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Posted: 31 May 2017 03:43 PM PDT

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு ...

தேசிய விருது வாங்கிட்டேன் அரிசி வாங்க காசு இல்ல!

Posted: 31 May 2017 03:41 PM PDT

லவ்யூ லவ்யூ லவ்யூ ஜாஸ்மீனே.. என் ஜாஸ்மீனே.. - ஜோக்கர் படத்தில் வரும் இந்தப் பாடலைப் பாடிய சுந்தர் ஐயர் கடந்த ஆண்டின் சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கி வந்தவரை அவரது சொந்த ஊரான தர்மபுரியில் சந்தித்தோம். என் பேரு சுந்தர் ஐயனார். எல்லாரும் கூப்பிட்டு கூப்பிட்டு நாளடைவில் னா காணாமப் போயி சுந்தர் ஐயரா மாறிப் போச்சு. அரசு இசைப்பள்ளியில பாட்டு டீச்சரா ஒப்பந்த ஊதிய அடிப்படையில் மாசம் 7 ஆயிரம் ரூபா ...

பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள்

Posted: 31 May 2017 03:33 PM PDT

புகையிலை வியாபாரிகள் என்று சொல்வது புகையிலை பொருட்களை குடிசைத் தொழிலாக செய்து லட்சங்களை சம்பாதிப்பவர்களை மட்டுமல்ல கோடிகளை குவிக்கும் பெரு நிறுவனங்களையும் சேர்த்துதான். இவர்கள் ஒற்றை இலக்கு 'யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு வருவாய் குவிய வேண்டும்' என்பதுதான். அதனால் இவர்கள் இலக்காக வைத்து செயல்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களைதான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களைதான். காரணம் மாணவர்களை புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக்குவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெருக்குவதுடன், நீண்ட ...

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

Posted: 31 May 2017 01:28 PM PDT

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் என்று தெரிந்ததும் , எனது நினைவுகள் புகையிலையுடன் கழித்த எனது இளமை நாட்களைபற்றி எண்ணத் தோன்றியது . எனது 20 வயது வரை எந்தவித தீய பழக்கங்களிலும் சிக்காமல் தான் படித்து முடித்தேன் . சிதம்பரத்தில் முத்தையா தொழில் நுட்ப கல்லூரியில் 1965 முதல் 1968 வரை படித்தேன் பிறகு 1968 இல் தமிழ் நாடு மின் வாரியத்தில் பணியில் சேர்ந்தேன் .1970 வரை கூட எந்த தீய பழக்கமும் கிடையாது . ஆனால் 1970 வருட மத்தியில் இருந்து கிராமப்புறங்களுக்கு மின்தொடர்புத்தரும் களப்பணியில்ஈடுபடத்தொடங்கினேன் ...

வெஃகாமை வேண்டும் பிறன்கைப்பொருள்.

Posted: 31 May 2017 01:09 PM PDT

இது இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது . காரப்பாக்கம் OMR சாலையை ஒட்டியுள்ள Service Lane - ல் மாலை 6 மணிக்குமேல் Walking போவது என் வழக்கம் . சென்ற 29 தேதி Walking முடித்துவிட்டு Service lane ஐ ஒட்டியுள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து என்னுடைய செல்போனில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன் . அப்போது சுமார் 7 மணி இருக்கும் . இரண்டுபேர் மோட்டார் சைக்கிளில் மிகவும் வேகமாக வந்தார்கள் . அதை நான் கவனிக்கவில்லை .பின்னால் அமர்ந்திருந்தவன் சரேலென என் கையிலிருந்த செல்போனைப் பிடுங்கினான் . பிடுங்கிய வேகத்தில் ...

யானைகள் பற்றி சில தகவல்கள்.

Posted: 31 May 2017 12:48 PM PDT

* 1. ஒரு யானையின் சராசரி ஆயுள் 60 – 70 ஆண்டுகள். 2. யானைகள் சுமார் 60% சதவீதம் அளவுக்கு புல்லை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. 3. ஒரு யானைக்கு தினமும் 250 – 300 கிலோ உணவு தேவைப்படுகிறது இதை உண்டு முடிக்க 16 மணிநேரம் எடுத்துக்கொள்கின்றன. 4. ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு அதிகபட்சம் 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். 5. தமிழகத்தி்ல் யானைகளின் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதே சமயம் ஆண் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. 6. கர்நாடகத்தில் நாகர்ஹோலே சரணாலயம், ...

வேலன்:-செட்டிங்ஸ் பேனல் ஒரே இடத்தில்

Posted: 31 May 2017 12:41 PM PDT

கணிணியில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் டூல்கள் அனைத்தையும் ஒருசேர நாம் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் 13 வகையான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். மொத்தம் 250 அப்ளிகேஷன்களை நாம் திறக்கலாம்.அப்ளிகேஷனில்  எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். ஒவ்வொரு டேப்புக்கும் எற்றவாறு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நிறைய டேப்புகள் கொடுத:துள்ளார்கள். நமக்கு ...

உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பும் புதிய அறிவியல் விளக்கமும்.

Posted: 31 May 2017 12:39 PM PDT

உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பும் புதிய அறிவியல் விளக்கமும். ''பசுமாடு தொடர்பாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் அரசியல் ரீதியானது, ஆனால், எனது உத்தரவு நீதித்துறை தொடர்புடையது. எனது ஆன்மாவின்படியும், நாட்டில் உள்ள இந்து சமூகத்தினரின் மன உணர்வுனையும் மதித்து வழங்கியது நான் வழங்கிய தீர்ப்பு'' என்று நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேசிய விலங்கினமாக, புலிக்கு பதிலாக பசுமாட்டை அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு இன்று (புதன்கிழமை) தான் பரிந்துரைத்த உத்தரவு ...

ஆண்ட்ராய்டின் தந்தை உருவாக்கிய புதிய ஸ்மார்ட் போன்

Posted: 31 May 2017 10:23 AM PDT

ஆண்ட்ராய்டு மென்பொருளை உருவாக்கிய ஆண்ட்ராய்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஆன்டி ருபின்,Essential Smart Phone  ஐ உருவாக்கியுள்ளார்.


மோதியின் மூன்று ஆண்டுகால ஆட்சி - பலன் தந்ததா மேக் இன் இந்தியா?

Posted: 31 May 2017 10:16 AM PDT

மோதியின் மூன்று ஆண்டுகால ஆட்சி - பலன் தந்ததா மேக் இன் இந்தியா? "இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக `மேக் இன் இந்தியா` (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவை "உற்பத்தி மையமாக்கும்" முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்", என்று முழங்கினார் பிரதமர் நரேந்திர மோதி. 'இந்திய தொழிற்துறை உற்பத்தியை அதிகரிப்பதுதான் `மேக் இன் இந்தியா` திட்டத்தின் நோக்கம். ஆனால், 2014 மே மாதம், மோதி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு 4.6 ...

அன்பே சிவம்

Posted: 31 May 2017 09:45 AM PDT

அன்பே சிவம் 'தஞ்சைப் பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா.... எல்லோரும் யோசிக்காமல் "ராஜா ராஜா சோழனு..." பதில் சொல்லிடுவாங்க. ஆனா, ராஜா ராஜா சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே! =========================================== தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் ...

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?

Posted: 31 May 2017 09:05 AM PDT

இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன? அவசரப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளாகும்  பிரபலங்கள் பலர். நேற்றைய தினம் பிரியங்கா பிரதமர் மோடி முன் உட்கார்ந்த படம் சர்சசைக்கு உள்ளான நிலையில்..................... இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டுவீட் கண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்குப் (covfefe) பொருள் என்ன? எங்கு தேடியும் காணவில்லை என்கிறார்கள்.அதிபருக்கு கேட்ட பழக்கங்கள் இல்லாத நிலையில் தவறாக எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ரிலையன்ஸ் ஜியோ பிராட் பேண்ட் ரூ.500க்கு 100ஜிபி டேட்டா புதிய சலுகை

Posted: 31 May 2017 06:24 AM PDT

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜிபி சேவையை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை வாடிக்கையாளர்களை தன் கை வசம் வைத்துக்கொண்டது. ஜியோ 4 ஜிபி அறிமுகப்படுத்தப்படும் போது இலவச சேவையை அறிமுகம் செய்து பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் சர்வ சாதாரணமாக ஜியோவுக்கு மாறினார்கள். அதேபோல தற்போது வீடுகளுக்கான பிராட் பேண்ட் சேவையிலும் ஜியோ கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகையில் வாடிக்கையாளர்களுக்கு பிராட் பேண்ட் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. முதலில் 100 முக்கிய ...

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிக்க முடிவு: டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

Posted: 31 May 2017 06:19 AM PDT

சென்னை அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியத்தில் இயக்குநரை நியமிப்பதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி திறக்கப்பட்டது. இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் ...

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 31 May 2017 05:29 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்

Posted: 31 May 2017 04:48 AM PDT

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்  ஈகரை உறவுகளுக்காக  mediafire.com file/r390lywt06euw98/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.பிடிஎ நன்றி

கயறு அசையும் பாம்பாக

Posted: 30 May 2017 10:46 PM PDT

ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம் ஓரோர் வந்துவினில் வேறே ஓரோர் வந்துவினை ஓர்தல் நாரூடு பணியாத் தோன்றல் நரனாகி தறியில் தோன்றல் நீரூடுகானல் றோன்றல் நிறம் தலம் வெளியில் தோன்றல் -- கைவல்ய நவநீதம் - 20 ஆரோபம் எனும் மயக்கம் கற்பனை ஆகியவை எல்லாம் ஒரு பொருளின் உண்மைத் தத்துவத்தை உணராமல் , மயக்கத்தில் தோன்றும் பொய்யான தத்துவத்தை உண்மை என நம்பி ,இன்ப துன்ப உணர்வுகளுக்கு ஆளாகும் மாயத் தோற்றத்தின் விளைவு ஆகும் . நார் ...

எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம்

Posted: 30 May 2017 09:08 PM PDT

திருவொற்றியூர்: சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதல், எண்ணூர் அனல் மின் நிலையம் அருகே, புதிய அனல்மின் நிலையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையொட்டி மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, பழைய அனல்மின் நிலையத்துக்கு மாற்றாக, புதிய அனல்மின் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. ...

நிலத்தடி நீரை எடுத்து விற்பதை கண்டித்து 12 டேங்கர் லாரிகள் சிறைபிடிப்பு

Posted: 30 May 2017 09:06 PM PDT

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் விவசாய கிணறுகள் அதிகம் உள்ளதால் தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் பல நாட்களாக தண்ணீரை எடுத்துச்சென்று பிற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை அப்பகுதி ...

மாணிக்கம் அய்யா அவர்களே

Posted: 30 May 2017 08:53 PM PDT

மாணிக்கம் அய்யா அவர்களே மாணிக்கம் அய்யா அவர்களே , நலம் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து ,நீங்கள் தேறி வருகிறீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் ஈகரை பக்கம் வந்ததும் அறிகிறேன்.சந்தோஷமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் கூடிய சீக்கிரம் எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என நம்புகிறேன். ரமணியன்

கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

Posted: 30 May 2017 04:48 PM PDT

கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

mediafire.com download/6jujx6799ajfr96/paisasam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™