Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெற்றோரின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன்

Posted: 27 May 2017 12:33 PM PDT

பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்களது 13 வயது மகனுக்கு விலை உயர்ந்த மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். மொபைல் பயன்படுத்துவதில் அடிமையான அச்சிறுவன், முகநூல் கணக்கு ஒன்றினை துவங்கி, அதன் மூலம் தேஜல் படேல் என்பவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளான். இதன்போது, தேஜல் படேல் அச்சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார், மேலும் நான் அனுப்பியது போன்று நீயும் ஆபாச படங்களை அனுப்பு எனக்கூறியுள்ளார். பதிலுக்கு அச்சிறுவன், தனது பெற்றோர் நெருக்கமாக இருக்கும் காட்சியை ரகசியமாக புகைப்படம் எடுத்து அதனை ...

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்

Posted: 27 May 2017 11:05 AM PDT

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ...

அமெரிக்காவில் இந்த வாரம்

Posted: 27 May 2017 10:43 AM PDT



நன்றி-தமெரிக்கா TV

ஊதாவும் ரோமும் !

Posted: 27 May 2017 10:37 AM PDT

கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது - திரையில் எம்.ஆர்.ராதா. Blue is the warmest color - ஆண் -பெண் சேர்ந்து வாழும்போது எழும் சிக்கல்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. காதல் , கோபம் , உரிமை கொண்டாடுதல் , பூரிப்பு , கொண்டாட்டம் , பிரிவு , ஏக்கம் , கண்ணீர் போன்ற அனைத்தும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போதும் நிகழும் என்பதை இத்திரைப்படம் முன்வைத்தது. பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போவதும் நிகழ்கிறது. ஆண் -பெண் உறவோ , பெண் -பெண் உறவோ பிரிந்து ...

சவாலான வெற்றி !

Posted: 27 May 2017 09:43 AM PDT

இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது . டெஸ்ட் போட்டிகளுக்கென்று தனிப்பட்ட திறமையாளர்கள் தொடந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 90 களுக்குப் பிறகு டிராவிட் , கும்ளே , லக்ஷ்மன் , ஹர்பஜன் , புஜாரா , அஸ்வின் என டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்த திறமையாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். இவர்கள் , மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளாலேயே நினைவுகூறப்படுகிறார்கள். காரணம் , இவர்கள் , டெஸ்ட் போட்டிகளில் நீடித்த திறமையை வெளிபடுத்துவது ...

ரூ.26 கோடி மணல் குவாரி உரிமம் பெற்ற அமைச்சரின் சமையல்காரர்

Posted: 27 May 2017 09:35 AM PDT

சண்டிகர் : பஞ்சாப் மாநில மின்துறை அமைச்சராக இரப்பவர் ராணா குர்ஜித். பஞ்சாப் சட்டசபையில் பணக்கார எம்.எல்.ஏ., இவர் தான். இவரது சொத்து மதிப்ப ரூ.169 கோடி. இவருக்கு சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. குர்ஜித்திற்கு சொந்தமான கம்பெனி ஒன்றில் சமையல்காரராக இருப்பவர் அமித் பகதூர்(36). மாதம் ரூ.11,706 சம்பளம் பெறும் இவர், ஒரு மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து விலகினார். இவர் சமீபத்தில் பஞ்சாப் அரசு நடத்திய மணல் குவாரி ஏலத்தில் கலந்து கொண்டு, ரூ.26.51 கோடி மதிப்பிலான குவாரி உரிமத்தை ...

வடிகட்டின முட்டாள்...!!

Posted: 27 May 2017 08:39 AM PDT

கங்கை – ஒரு பக்க கதை

Posted: 27 May 2017 08:35 AM PDT


-

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம்

Posted: 27 May 2017 08:34 AM PDT

நமது வாழ்க்கை தேர்வுகள் நம்மை பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கு இலக்காக்கியுள்ளது. புகைபிடித்தல், உடல்ரீதியிலான செயல்பாடுகளின்மை, உணவு விருப்பங்கள் மற்றும் தூசுகள் மற்றும் மாசுபாடுகள் போன்ற சுற்றுச்சூழல் காரிணிகள் நமது நுரையீரலை மிகவும் நலிவுறச்செய்துள்ளது. அதிகப்படியாக நலிவுற்ற நுரையீரல், மேலும் தொடர்ந்து கடினமாக உழைத்து நமது உடலுக்கு காற்றை செலுத்துகிறது. பெரும்பாலும் இவைகளே, ஆஸ்துமாவைத் தூண்டும் முதன்மை காரணிகளாகத் திகழ்கின்றன. எனவே உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை அடையாளம் ...

குழந்தைகளின் படத்தை முகநூலில் போடுகிறீர்களா?

Posted: 27 May 2017 08:32 AM PDT

அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களது குழந்தையின் வளர்ச்சியையும், சுட்டித்தனத்தையும் கண்டு மகிழ முடிகிறது. உங்கள் குழந்தைகளின் அந்த அழகான புகைப்படங்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்பும் சில பயங்கரமான மிருகங்களும் இணைத்தில் உலவி வருகின்றனர்.உங்கள் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் சென்றடைவதற்கான சந்தர்பங்கள் இங்கே ஏராளம். எனவே உங்கள் குழந்தையின் புகைப்படத்தை ...

தாலத்தின்

Posted: 27 May 2017 08:29 AM PDT

மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல் ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல் தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே -கைவல்லிய நவநீதம்-18 குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய் ,முதலில் மரத்தையும் பின் சந்திரனையும் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக சோறு ஊட்டுவது போலும் , திருமணத்தின் போது நட்சத்திர கூட்டங்களை காட்டி குறிப்பாக அருந்ததியைக் காட்டி வாழ்வை துவங்குவது போல் , குரு தனது மாணவர்களுக்கு முதலில் தூல சரீரரத்தினை காட்டி , அதன் தத்துவங்களை விளக்கி ...

லென்ஸ் !

Posted: 27 May 2017 08:27 AM PDT

ஒரு சென்ஸிடிவான விசயத்தை எடுத்துக்கொண்டு அதை பிரச்சார நெடியில்லாமல் திரைப்படமாக எடுப்பது நம் சூழலில் அவ்வளவு எளிதானதில்லை. இதே திரைப்படம் பிரச்சார நெடியுடன் கருத்து சொல்வது போல எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படமும் பத்தோடு பதினொன்றாக மாறியிருக்கும். ஆனால் இத்திரைப்படம் நம்மை சுயவிசாரனைக்கு உட்படுத்துகிறது. ஆழ்மன வக்கிரங்களை , அதனால் மற்றவர்களுக்கு உருவாகும் பாதிப்புகளை மிக அழுத்தமாக பேசுகிறது. நாம் மிக எளிதாக கடந்து செல்லும் விசயத்தில் நிறைந்திருக்கும் அகச்சிக்கல்களை நுட்பமுடன் பதிவு செய்கிறது. தற்போதைய ...

தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்தல்..

Posted: 27 May 2017 08:25 AM PDT

உத்தரப் பிரதேசத்தில் 'முஷார்' என்ற தலித் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முஷார் இன மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் அந்த மக்களிடம் சோப்பு, ஷாம்புகளை கொடுத்து அவர்களை குளித்து வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் முதல்வர் யோகி, அந்த மக்களை சந்திக்கும் பகுதியில் புதிதாக தெரு விளக்கு, சாலை, கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்தனர். ...

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!

Posted: 27 May 2017 08:23 AM PDT

மாப்பிளை சம்பா : உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். கவுணி அரிசி : புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் . சிவப்பு கவுணி அரிசி : புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் . சேலம் சன்னா : கர்ப்பகாலத்தில் ...

மயிலாப்பூரில் ஒரு புது அனுபவம்

Posted: 27 May 2017 07:33 AM PDT

மயிலாப்பூரில் ஒரு புது அனுபவம் மயிலாப்பூரில் ஒரு புது அனுபவம்...பராம்பரியமான உணவு சாப்பிட பழமையான பொருட்களை பார்க்க,வாங்க,பரிசளிக்கயோகா கற்றுக் கொள்ள இதெல்லாம் ஒரே இடத்தில் அதுவும் சென்னையின் மையப்பகுதியான மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கிறது.  அந்த இடத்திற்கு பெயர் ஈஷா லைப் ஈஷா யோகா மையம் யோகா மட்டுமின்றி மரங்கள் வளர்ப்பு கிராமீய மக்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை எடுத்து செயல்படுகிறது.கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுச் சுழலுக்கு குந்தகம் ...

மலையை உயர்த்து!- சிறுவர் கதை

Posted: 27 May 2017 06:59 AM PDT


-

மாஸ்டர் வர்றாரு கம்பெடுத்து சுத்துங்கலே…!

Posted: 27 May 2017 06:25 AM PDT

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 27 May 2017 06:20 AM PDT

சென்னை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்.. அண்ணா பல்கலைக்கு 'நோ'!

Posted: 27 May 2017 04:09 AM PDT

உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டியில் சொன்னது: - "சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லத்துரையும் நியமிக்கப்பட்டுள்ளனர். - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரையும், கவர்னர் நிராகரித்து விட்டார். மூன்று அல்லது நான்கு மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவார். துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படும், விரைவில், கல்லூரிகளில் பேராசியர் ...

சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்

Posted: 26 May 2017 11:35 PM PDT

சென்னை, சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தேர்வு செய்ய கவர்னர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் நடத்தினார். தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்

Posted: 26 May 2017 11:31 PM PDT

ஹைதராபாத் : லண்டனில் வாழும் ஹைதராபாத் பெண் ராகசுதா விஞ்சாமுரி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஆடி புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனத்தில் சிறந்தவரான ராகசுதா, 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சென்றவர். அவர் தற்போது சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளார். ராகசுதா பெண்கள் மேம்பாடு, அகிம்சை, ஆயுர்வேதம், இசை சிகிச்சை உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் இந்திய பாரம்பரிய நடனத்தை ஆடியுள்ளார். ஹைதராபாத்தைச் ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 26 May 2017 09:51 PM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்

Posted: 26 May 2017 05:46 PM PDT

சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின. கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக ...

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

Posted: 26 May 2017 05:31 PM PDT

சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார். அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார். பிரமாண்ட விழா மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான அளவில் ...

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Posted: 26 May 2017 05:25 PM PDT

தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு ...

மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு

Posted: 26 May 2017 05:22 PM PDT


-
சென்னை:
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள்
ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என தலைமை
ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம்
தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என
கூறினார்.
-
----------------
தினமலர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™