Tamil Star |
- மஹிந்த அரசின் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், இலஞ்ச, ஊழல்களை அம்பலப்படுத்துவோம்! – ராஜித
- விம்மி றிட்ஜ்” போர்க்களப்பகுதியில் மரியாதை செலுத்திய கனேடியப் பிரதமர்
- கார் கடத்தல் முயற்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரி்க்கை
- மஹிந்த அரசின் படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்
- நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்! மைத்திரியை விட்டு விலகும் 25 அமைச்சர்கள்?
- தேர்தல் பிரசாரத்துக்கான ஒத்திகையாக அமையப்போகும் மேதினக் கூட்டங்கள்!
- பிரதமர் டோக்கியோ சென்றடைந்தார்
- மீளக்குடியேறும் மக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடப்பாடு! – விக்னேஸ்வரன்
- தமிழ் மக்களை ஏமாற்றினால் இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும்! – சம்பந்தன்
- இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் நேரடிப் பேச்சுக்கு தமிழர் தரப்பு வரவேண்டும்! – சம்பிக்க
மஹிந்த அரசின் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், இலஞ்ச, ஊழல்களை அம்பலப்படுத்துவோம்! – ராஜித Posted: 11 Apr 2017 06:52 AM PDT மஹிந்த ராஜபக்ஷ அரசின் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினத்தில் கொழும்பு கோல்பீசில் கூடும் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை பொது எதிரணி வீழ்த்திவிடும் என்று கூறியுள்ளமை அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது. பொது எதிரணியின் கூட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் […] The post மஹிந்த அரசின் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், இலஞ்ச, ஊழல்களை அம்பலப்படுத்துவோம்! – ராஜித appeared first on TamilStar.com. |
விம்மி றிட்ஜ்” போர்க்களப்பகுதியில் மரியாதை செலுத்திய கனேடியப் பிரதமர் Posted: 10 Apr 2017 12:57 PM PDT "விம்மி றிட்ஜ்" போர் இடம்பெற்றதன் நூறாண்டு நினைவுநாள் நிகழ்வுகள் பிரான்சில் அந்த போர் இடம்பெற்ற "விம்மி றிட்ஜ்" பகுதியில் நேற்று ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் சுமார் 20,000இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான கனேடியர்கள் கலந்துகொண்டு வீரர்களை நினைவு கூர்ந்தனர். இதில் கலந்துகொள்வதற்கு பிரான்ஸ் சென்றிருந்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும், பிரான்ஸ் அதிபர் ஃபிராங்கொய்ஸ் ஹொலன்டே, இளவரசர் சார்ள்ஸ், இளவரசர் ஹரி ஆகியோருடன் சேர்ந்து இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அவர்கள் அனைவரும் பூங்கொத்துகளை வைத்து […] The post விம்மி றிட்ஜ்" போர்க்களப்பகுதியில் மரியாதை செலுத்திய கனேடியப் பிரதமர் appeared first on TamilStar.com. |
கார் கடத்தல் முயற்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரி்க்கை Posted: 10 Apr 2017 12:55 PM PDT கார் கடத்தல் முயற்சிகள் தொடர்பில் ரொரன்ரோ காவல்த்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இரண்டு நபர்களால் இரண்டு கார் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து காவல்த்துறையினர் இந்த எச்சரிக்கையை பிறப்பித்துள்ளனர். முதல் முயற்சி வில்சன் அவனியூ மற்றும் அலன் வீதியில் இடம்பெற்றதாகவும், பெண் சாரதி ஒருவரை இரண்டு சந்தேக நபர்களும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், எனினும் அவர்களின் அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து ஒரு வெள்ளை நிற சிற்றூர்தியில் தப்பிச் […] The post கார் கடத்தல் முயற்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரி்க்கை appeared first on TamilStar.com. |
மஹிந்த அரசின் படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் Posted: 10 Apr 2017 12:52 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை வீழ்த்துவோம் என்று மஹிந்த அணியினர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பதில் கருத்தினை இன்றைய தினம் கொழும்பு […] The post மஹிந்த அரசின் படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் appeared first on TamilStar.com. |
நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்! மைத்திரியை விட்டு விலகும் 25 அமைச்சர்கள்? Posted: 10 Apr 2017 12:50 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சியை நிறுவப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசு தடம்புரண்டு செல்கின்றது. தேசிய அரசு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. எம்மைத் திருடர்கள் என்றனர். எம்மைக் கைதுசெய்யப்போவதாகவும் அவர்கள் […] The post நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்! மைத்திரியை விட்டு விலகும் 25 அமைச்சர்கள்? appeared first on TamilStar.com. |
தேர்தல் பிரசாரத்துக்கான ஒத்திகையாக அமையப்போகும் மேதினக் கூட்டங்கள்! Posted: 10 Apr 2017 12:45 PM PDT உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என அரச அறிவித்துள்ளதால், தேர்தலை எதிர்கொள்வதற்குரிய தயார்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதிகளைப் பலப்படுத்தல், அமைப்பாளர் தேர்வு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில் மே தினம் நடைபெறுவதால், பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்டுவதற்கும், தேர்தல் பிரசாரத்துக்கான ஒத்திகையாகவுமே மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான […] The post தேர்தல் பிரசாரத்துக்கான ஒத்திகையாக அமையப்போகும் மேதினக் கூட்டங்கள்! appeared first on TamilStar.com. |
பிரதமர் டோக்கியோ சென்றடைந்தார் Posted: 10 Apr 2017 12:40 PM PDT பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் ஜப்பானின் டோக்கியோ நரிட்டா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். ஜப்பான் நேரப்படி பிரதமர் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 5.30 அளவில் விமான நிலையத்தை சென்றடைந்ததாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய பிரதமரின் விசேட ஆலோசகர் ஹிரோதோ இசூமி, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திஸாநாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கோனிச் சுகனுமா ஆகியோர் நரிட்டா விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளை […] The post பிரதமர் டோக்கியோ சென்றடைந்தார் appeared first on TamilStar.com. |
மீளக்குடியேறும் மக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடப்பாடு! – விக்னேஸ்வரன் Posted: 10 Apr 2017 12:24 PM PDT “மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்ற கோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் விளைவாக மார்ச் மாதம் 01ஆம் திகதி, விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட்ட நிலையில், 84 குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறினர். இந்நிலையில் […] The post மீளக்குடியேறும் மக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடப்பாடு! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com. |
தமிழ் மக்களை ஏமாற்றினால் இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும்! – சம்பந்தன் Posted: 10 Apr 2017 08:30 AM PDT தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா ஞானம் கிராமத்தை மக்களிடம் கைளிக்கும் நிகழ்வு, இன்று வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் உரையாற்றிய அவர், நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – […] The post தமிழ் மக்களை ஏமாற்றினால் இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும்! – சம்பந்தன் appeared first on TamilStar.com. |
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் நேரடிப் பேச்சுக்கு தமிழர் தரப்பு வரவேண்டும்! – சம்பிக்க Posted: 10 Apr 2017 08:26 AM PDT நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு, நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டும். சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ‘குறித்த பிரதேசங்களுக்கு மாத்திரம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் அரசியல் செய்யும் யுகம் கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசாங்கம் நாட்டின் சகல பகுதியிலும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சுகாதார […] The post இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் நேரடிப் பேச்சுக்கு தமிழர் தரப்பு வரவேண்டும்! – சம்பிக்க appeared first on TamilStar.com. |
You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |