Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


18,000 பதிவுகள் கடந்த ரமணீயன் ஐயாவை வாழ்த்துவோம் வாருங்கள் !

Posted: 11 Dec 2016 08:56 AM PST

மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா ! இன்னும் பலஆயிரங்கள் பதிவிட வாழ்த்துகள் !

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Posted: 11 Dec 2016 08:36 AM PST

கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ...

கவிதைப்பையன்

Posted: 11 Dec 2016 07:51 AM PST

பெயர்: கவிதைப்பையன் சொந்த ஊர்: மன்னார் -திருக்கேதீஸ்வரம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் தேடுதல் பொறி பொழுதுபோக்கு:கவிதை படிப்பது .கதை வாசிப்பது தொழில்: வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:நான் அவ்வளவு படித்தவன் இல்லை .கவிதை எழுத்து அறிவு இல்லை ஆனால் கவிதை வாசித்து வாசித்து இன்பம் காண்பவன்.குறிப்பாக கவிஞர் மேத்தா .தபூ சங்கர் ,போன்ற இந்திய கவிஞ்ர்களும் எனது நாட்டிடை சேர்த்த தற்போது உலகெங்க்கும் வளம் வரும் கவிப்புயல் இனியவன் போன்றோர் என்னை கவர்ந்த கவிஞர் . உண்மையில் நான் கவிதைக்காக ...

"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி

Posted: 11 Dec 2016 06:38 AM PST

- ஜெயலலிதா "தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, அரசியலில் ஈடுபடுவதில் இருக்கும் தயக்கதை உடைத்தவர் ஜெயலலிதா. எங்கு சந்திக்கும்போதும் நலம் விசாரிப்புடனே பேசத் தொடங்குவார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்தவர், அதிமுக எனும் பெரிய கட்சியை திறம்பட வழிநடத்தியவர், மாற்றுக்கருத்துகள் பல இருந்தாலும் நான் மதிக்கக்கூடியவர்" என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அமைதியாக பேசத் தொடங்கினார் திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் ...

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 11 Dec 2016 06:37 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

, ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Posted: 11 Dec 2016 05:20 AM PST

சென்னை: வங்க கடலில் உருவான, ‛வர்தா' புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறியதாவது: - 1.ரேடியா மற்றும் தொலைகாட்சியை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியை பிறருக்கும் தெரிவிக்கவும். - 2.ரேடியோ மற்றும் தொலைகாட்சியில் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும். - 3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த ...

44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி

Posted: 11 Dec 2016 01:19 AM PST

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்த மாதம் 31ம் தேதி கடைசி என்பதால் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் வங்கிகளில் குவிகின்றனர். இதில் பலர் தங்களிடமுள்ள கருப்பு பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மாட்டிகொள்வோமோ என்று எண்ணி புரோக்கர்களின் உதவியை நாடுவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து வங்கிகளில் கடுமையான சோதனையை வருமானவரி துறையினர் மேற்கொண்டனர். இந்த நிலையில் டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேனேஜர்கள் கருப்புப் பணத்தை மாற்ற உதவி செய்துவருவதாக ...

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....

Posted: 11 Dec 2016 12:44 AM PST

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராஜாஜி இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலைச் சுற்றி, 18 பேர் நின்றனர். ஜெ., உயிருடன் இருந்தபோது, இவர்கள் அனைவரையும், போயஸ் கார்டன் பக்கமே வரக் கூடது என, துரத்திவிட்டார். ஆனால், ஜெ., இறந்த பின், அவரது இறுதி யாத்திரை புறப்படும்வரை, இவர்கள் யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல், மற்றவர்களுக்கு இடம் விடாமல் நின்றிருந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்திருந்தார்; இது, கட்சி யில் உள்ள ...

இன்று பாரதியாரின் 134-வது பிறந்த தினம்!

Posted: 11 Dec 2016 12:19 AM PST

"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று முழங்கி முப்பொழுதும் தாய் நாட்டின் மீதும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தனது தாய்மொழியான தமிழின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 134-ஆவது பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவரது வாழ்வின் சில முக்கியத் தருணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். "காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் , எந்தன் காலருகே வாடா ,சற்றே உனை மிதிக்கிறேன்" என மரணத்தையும் கம்பீரமாக எதிர்கொண்டு கவிதை பாடிய மகாகவி ...

வெளிவராத தகவல்கள்

Posted: 11 Dec 2016 12:10 AM PST

வெளிவராத தகவல்கள் : போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் நடந்த முக்கிய சந்திப்பில் நிகழ்ந்த வெளிவராத தகவல்கள் :                முக்கிய அமைச்சர்கள்  மட்டுமே கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், முதல்வர் திரு ஓபி எஸ் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினாராம் " அம்மாவே போய்டாங்க, நாம உட்காந்திருக்கரது அம்மா நமக்கு போட்ட பிச்சை ,  அவங்களோட ஆசைப்படியே மக்களுக்கான ஆட்சிய  நடத்தரதுதான் நாம அவங்களுக்கு செய்யர நன்றி "                    எந்தவிதமான பிரதிபலனும்  எதிர்பார்க்காத ...

இன்றைய செய்தி சுருக்கம்...

Posted: 10 Dec 2016 11:03 PM PST

திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்

Posted: 10 Dec 2016 10:58 PM PST

சென்னை: வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் சேகர் ரெட்டி, தமிழக பொதுப்பணித்துறை பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார். மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியையும் மேற்கொண்டு வந்தார். தமிழக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் நெருக்கமானவர். இவரது சென்னை மற்றும் வேலூர் வீடுகளிலும், இவரது உறவினர் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர் வீடுகளில் ...

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Posted: 10 Dec 2016 10:51 PM PST

அனைவருக்கும் மிக்க நன்றி ! உங்கள் அனைவரின் அன்பான பிரார்ததனைகளுக்கு மிக்க நன்றி உறவுகளே!.... கண் ஆபரேஷன் நல்லபடி நடந்து முடிந்தது. . . இன்று இரண்டாவது செக் அப் செய்து வந்தோம், படிப்பதற்கு மட்டும் இனி கண்ணாடி போதும் என்று டாக்டர் சொன்னார் , கண்ணாடிக்கு எழுதியும் கொடுத்து இருக்கிறார். என்றாலும் தொடர்ந்து இங்கு இணைந்து இருக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எண்ணுகிறேன். அன்பான Guest, உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்!

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 10 Dec 2016 09:54 PM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்

Posted: 10 Dec 2016 09:07 PM PST

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள் வாழ்த்துக்கள் ram ,மைல் கல் 25000 பதிவுகள் கடந்தமைக்கு ரமணியன்

பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…

Posted: 10 Dec 2016 09:02 PM PST

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது……. மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது…….. முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது……. - முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது……. குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது ……. முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது…….. - டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது…….. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ……. ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™