Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மழை

Posted: 01 Dec 2016 08:32 AM PST

மழையின் ஈரம் அதன் சிறகுகளில் சிலிர்த்து கொண்டு எழுகிறது அதன் உச்சத்தை தேடி பறவைகள்! எட்டிப் பார்க்கிறது அந்த குறு குறு கண்களால் தவளை மழையின் நீர் திவலையை முதுகில் சுமந்து கொண்டே! வயல்வெளிகள் எல்லாம் உயிர் கொண்டு உற்சாகத்தில் அசைந்தாடுகிறது உந்தன் வரவால்! மழலைகள் எல்லாம் மழையினில் மனம் பறிகொடுத்து தரைதட்டும் காகித கப்பலில் நீந்திகொண்டிருக்கின்றனர்! இளம் இணைகள் இதமாய் போர்வைக்குள்! வானவில்லே நீ அடிக்கடி வசந்தமாய் வந்து வர்ணஜாலம் புரிந்துவிட்டு போ! சுகமாய்த்தான் இருக்கிறது சுமாராகவே ...

மொழி

Posted: 01 Dec 2016 08:26 AM PST

மொழிகளற்ற அவள் பாஷை அவளுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை! அவள் கண்களாலேயே பேசிவிடுவாள்! கைகளாலே மொழிகளை விடவும் அழகாய் சொல்லி விடுவாள்! கண்கள் பேசும் அழகை ரசித்தவன் கட்டிக் கொண்டான்! அழகாய்த்தானிருந்தது அவள் வாழ்க்கை பெண் பிள்ளைகள் பிறக்கும் வரை! அவள் அடி வயிறு கனத்தது மது மயக்கத்தில் மதகஜயானைப்போல் மிதித்தான்! யோனியின் வழியே வழிந்தோடும் குருதியை கண்ணீரால் கழுவினால்! மொழிகள் ஏதும் இல்லை அவளிடம்! ஆம் அவள் ஊமை!! சசி . க

வாட்ஸ அப் பெறப்பட்டவை - பல்சுவை

Posted: 01 Dec 2016 06:26 AM PST

- நகை எவ்வளவு வைத்துக்கொள்ளலாம் என்று மோடி சொல்லிவிட்டார். இந்தியாவில் உள்ள அத்தனை ஆண்களின் ஓட்டும் மோடிக்குத்தான். ஆண்களின் வயிற்றில் பாலை வார்த்தாய் தலைவா.. உண்மையிலேயே உங்களுக்கு ஒரு O போடணும்... - ------------------------------------------- - நபர் 1: மச்சி போன் வாங்கிருக்கேன்டா நபர் 2 ; சூப்பர் மச்சான் என்ன mobile நபர்1; மச்சி திருச்சி போன் மச்சி Rs.5000 நபர் 2; என்ன திருச்சி போனா திருச்சியில வாங்கினியா நபர் 1; இல்லை மச்சி on line la வாங்கினேன்டா நபர் ...

தன்ணுணர்வின் கதை

Posted: 01 Dec 2016 06:21 AM PST

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு ...

கோடியில் இருவர்

Posted: 01 Dec 2016 06:14 AM PST

கோடியில் இருவர்



ரமணியன்

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்

Posted: 01 Dec 2016 06:04 AM PST

- ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள் மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்படும் என நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சார்ந்த மேலும் சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு மும்பை: டிசம்பர் 4, 2016 துவங்கி அனைத்து ரிலையன்ஸ் ஜியோ புதிய பயனாளிகளும் டேட்டா, வாய்ஸ் மற்றும் அனைத்து ஜியோ ஆப்ஸ்களுக்கான சேவையினை மார்ச் 31, 2017 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ...

MARANAM

Posted: 01 Dec 2016 05:12 AM PST

நடா புயல் வலுவிழக்கிறது...

Posted: 01 Dec 2016 04:17 AM PST

நடா புயல் வலுவிழந்தாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. - சென்னை: வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. அந்த புயலுக்கு ''நடா'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக இந்த புயல் ஏற்பட்டது. ...

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்

Posted: 01 Dec 2016 04:10 AM PST

- திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரையிலும், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையிலும் தங்கம் வைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம் புதுடெல்லி: - பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. இதற்கு மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. தனி நபர்கள் அதிகபட்சமாக ...

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு

Posted: 01 Dec 2016 02:46 AM PST

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- | தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு ...

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!

Posted: 01 Dec 2016 02:15 AM PST

சீனாவில் ஹை பீம் விளக்குகளால் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன. அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. ஆனாலும் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை. விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களே, தங்கள் கார்களின் பின்பக்கக் கண்ணாடியில் அச்சம் தரும் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் பாய்ச்சும்போது, காரில் உள்ள போஸ்டர் உருவங்கள் பளீரென்று ஒளிர்கின்றன. அச்சமூட்டும் உருவங்கள் ...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Posted: 01 Dec 2016 01:53 AM PST

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது உள்ளதாகவும் மேலும் அவருக்கு  நீர்சத்து மற்றும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி இருப்பார் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு ...

அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.

Posted: 30 Nov 2016 10:09 PM PST

* கடவுள் அன்புமலையாக இருக்கிறார். அன்பு மனம் படைத்த அனைவரும் அவரின் அருளைப் பெறலாம். – * கடவுளின் கருணையும், வாழ்க்கை மீதான பற்றும் தேனும், உப்பும் போல ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. – * மனதில் நம்பிக்கையிருந்தால் அன்பு வெளிப்படும். அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது. – *பெற்றோரின் பெருங்கொடை நம் உடல். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை. – * ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பினால் முதலில் நாக்கை அடக்கப் பழகுங்கள். எப்போதும் அமைதியுடன் பணியாற்றுங்கள். – ———————————————— -சாய்பாபா

திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?

Posted: 30 Nov 2016 10:07 PM PST

– நம்முடைய பண்டைய வழக்கங்களில் ஒன்று பூஷணிக்காய்க் கொண்டு திருஷ்டி கழிப்பது. – ஒரு புது வீடு அல்லது வியாபாரஸ்தலம் உயரே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். அந்தக் காயில் மனிதனின் உருவம் போல் கண்கள், மூக்கு, செவி, வாய் முதலியவைகளை வரைந்து வைத்திருப்பார்கள். – ஒரு திருஷ்டி பொம்மையையும் கூடத் தொங்க விட்டிருப்பார்கள். மனிதர்களின் கண் திருஷ்டி படக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் இப்படிச் செய்கிறார்கள். இது பற்றி ஆன்மிக ரீதியாக ஒரு தகவல் உள்ளது. – முன்னொரு காலத்தில் 'கூஷ்மாண்டன்' என்ற பெயருடைய ஒரு ...

பொன்மொழிகள்…

Posted: 30 Nov 2016 10:06 PM PST

- நோக்கம் ஒருவன் தன் உடலில் சரிகைத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான். மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக் கொள்கிறான். இரண்டின் பலனும் உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை. அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது. -ஷீரடி சாய்பாபா

பரணி தீப வழிபாடு

Posted: 30 Nov 2016 10:04 PM PST

- மனதால் கூட பாவம் செய்யக் கூடாது, பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய, ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்றைய ...

வெற்றி மொழி: ஸ்டீவ் ஜாப்ஸ்

Posted: 30 Nov 2016 10:03 PM PST

- 1955ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை வடிவமைப்பாளர். சிறுவயதில் படிப்பின் மீது அதிக ஈடுபாடு இல்லாதவராகவும் அதேசமயம், எலெக்ட்ரானிக் சாதனங்களின் மீது அதீத பற்றுடையவராக காணப்பட்டார். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான இவர், அந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். இவரின் வழிகாட்டுதல் ஐபோன், ஐபாட் போன்ற நவீன தொழில் நுட்பங்களுக்கு வழிவகுத்தது. கணினித் துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ...

NAAM VAAZHUM BOOMI IN PERUMAI

Posted: 30 Nov 2016 09:20 PM PST

BOOMI IN MARANAM

Posted: 30 Nov 2016 09:18 PM PST

ORU MANITHANIN KUDI PAZHAKKAM

Posted: 30 Nov 2016 09:12 PM PST

எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!

Posted: 30 Nov 2016 09:04 PM PST

- ஜப்பானில் உள்ள ஸ்பேஸ் வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா, உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இங்குள்ள உறைபனி அருங்காட்சியகத்தில், புதிதாக ஐஸ் ஸ்கேட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்களால் ஆர்வமானவர்கள், அரங்கத்துக்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனார்கள். மீன்கள், நண்டுகள், திருக்கைகள், சுறாக்கள் போன்ற 5 ஆயிரம் உயிரினங்கள் பனிக்குள் புதைக்கப்பட்டிருந்தன. 'நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துதான் வந்தோம். இவை நிஜமான உயிரினங்கள் என்று அறிந்த பின்னர், பனிக்கு ...

அரசு சித்தா மருத்துவமனையில் நோய் தீர்க்கும் கூழாங்கற்களால் அமைக்கப்பட்ட வர்ம நடைபாதை

Posted: 30 Nov 2016 08:57 PM PST

- வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில், கூழாங்கற்களால் 'வர்ம நடை பாதை' அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக அமைக் கப்பட்டுள்ள இந்த வர்ம பாதையில், வெறும் காலில் தினமும் சிறிது நேரம் நடந்தால், உயர் ரத்த அழுத்தம், தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி உள் ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்து வதாக சில ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன. கூழாங்கற்கள் பரவப்பட்ட நடைபாதையில் தினமும் நடப் பதன் மூலம், முதியோரின் ரத்த அழுத்தம் சிறிதளவு குறை வதாக ஆய்வறிக்கைகள் தெரி விக்கின்றன. ...

கவிதாபூர் ஆனது கானாபூர்: முதல்வரின் மகளை கவுரவிக்க ஊர் பெயரை மாற்றிய கிராம மக்கள்

Posted: 30 Nov 2016 08:55 PM PST

- தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.பி.யுமான கவிதாவை கவுரவிக்கும் வகையில், கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊர் பெயரை கவிதாபூர் என மாற்றி அமைத்துள்ளனர். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த தொகுதிக்கு உட்பட்ட கிராமம் கானாபூர். இக்கிராமத்தில் 274 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கானாபூர் கிராமம் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால், மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ள நீர் ...

MANITHANIN VAAIKKAI

Posted: 30 Nov 2016 08:53 PM PST

திருச்சி அருகே வெடி ஆலையில் பயங்கர விபத்து: தீயில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலி

Posted: 30 Nov 2016 08:52 PM PST

திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடி ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மாவட்டம் - துறையூர் பகுதியின் தி.முருங்கப்பட்டி என்ற இடத்தில் தனியார் வெடி தொழிற்சாலை உள்ளது. பாறைகளைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலைக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் வழக்கம்போல் சுமார் 60 தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் ...

நான் இரசித்த பாடல் - 10

Posted: 30 Nov 2016 08:11 PM PST

மணிரத்தினத்தின் இயக்கத்தில் வந்த ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை............என்ற பாடலை மின்மினி பாடியிருந்தார்.வைரமுத்துவின் வரிகளுக்கு  இசை A.R.ரஹுமான். இந்தப் பாடலை சீன நாட்டு பெண் ஒருவர் சென்னையில் ரகுமான் முன்னிலையில் பாடி இருக்கிறார். அவரின் இயலாமையை எண்ணிப் பாடியிருப்பது போல் இருக்கிறது.

iஹைபுன்

Posted: 30 Nov 2016 07:41 PM PST

நொடியில்..!! * மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது. பூமியின் ...

விழுப்புரம் அருகே கோர விபத்து : பஸ்கள் நேருக்குநேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி -

Posted: 30 Nov 2016 06:52 PM PST

- விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியிலிருந்து நேற்று காலை 11.30க்கு அரசு பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை எலியாத்தூரை சேர்ந்த மாரியாபிள்ளை என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை எதிரே உள்ள மேம்பாலத்தை பஸ் கடந்தபோது, முன்னே சென்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக திடீரென இடதுபுறமாக திரும்பி நின்றது. அந்த பஸ்மீது மோதாமல் இருக்க, பின்னால் அதிவேகமாக வந்த அரசு பஸ்சை, டிரைவர் வலதுபுறமாக திருப்பினார். இதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™