Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எனது மகன் அரச பணத்தில் அமெரிக்காவில் வீடு வாங்கவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 30 Nov 2016 09:33 PM PST

“எனது மகன் அரசாங்கத்தின் பணத்தில் அமெரிக்காவில் வீடு எதனையும் வாங்கவில்லை. ஆனால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்.” என்று ...

ஜப்பானிலும் பறவைக் காய்ச்சல் இனங் காணப்பட்டதை அடுத்து 330 000 பறவைகள் அழிப்பு

Posted: 30 Nov 2016 09:10 PM PST

அண்மையில் நெதர்லாந்தில் வளர்க்கப் பட்டு வந்த இலட்சக் கணக்கான வாத்துக்களுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டு அவை அழிக்கப் பட்டிருந்தன.

பெண்கள் வாகனம் ஓட்ட மறுக்கும் சட்டம் சவுதியின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு! : சவுதி இளவரசர் கருத்து

Posted: 30 Nov 2016 09:09 PM PST

சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாகப் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடைச் சட்டம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அண்மையில் சவுதி நாட்டின் இளவரசரும் ...

பல ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற கியூபாவின் மறைந்த தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம்

Posted: 30 Nov 2016 09:06 PM PST

மறைந்த கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் நேற்று புதன் கிழமை தலைநகர் ஹவானாவில் ஆரம்பித்து தொடர்ந்து 4 நாட்களாக ...

உடல் உறுப்புகளை தானமாக வழங்குகுவதில் தமிழகம் முதல் இடம்

Posted: 30 Nov 2016 09:00 PM PST

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: வைகோ

Posted: 30 Nov 2016 08:51 PM PST

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில்தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். 

'நாடா' புயலை முன்னிட்டு தமிழக அரசின் வருவாய்த்துறை 15 அம்ச அறிவுறுத்தல்!

Posted: 30 Nov 2016 08:25 PM PST

நாடா புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

Posted: 30 Nov 2016 08:22 PM PST

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

'நாடா' புயல் தமிழகத்தை என்ன செய்யும்?: ஒரு ஆய்வு!

Posted: 30 Nov 2016 08:17 PM PST

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா? ...

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு; டீசல் விலை குறைவு!

Posted: 30 Nov 2016 08:03 PM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு, டீசல் சற்றே விலை குறைத்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted: 30 Nov 2016 07:59 PM PST

சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னையில் அமலாக்கப்பிரிவு நடத்திய சோதனையில் ரூ. 1.30 கோடி பறிமுதல்!

Posted: 30 Nov 2016 07:56 PM PST

சென்னையில் அமலாக்கப்பிரிவு நடத்திய சோதனையில் ரூ. 1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

சிவகார்த்திகேயனுக்கு தொடர் எரிச்சல்

Posted: 30 Nov 2016 07:40 PM PST

பஞ்சாயத்தில் சிக்கிய சிவகார்த்திகேயனுக்கு பலே ஷாக்.

ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு த.தே.கூ இணங்காது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 30 Nov 2016 03:41 PM PST

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி அனுமதி வழங்கினால் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்படும்: வன்னி கட்டளைத் தளபதி

Posted: 30 Nov 2016 03:34 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினால் வவுனியா ஈச்சங்குளத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தினை இராணுவம் விடுவிக்கும் என்று வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ...

ராஜபக்ஷக்கள் தமது ஊழல் மோசடிகளை மூடி மறைக்க ‘போர் வெற்றி’யை பயன்படுத்தினர்: மங்கள சமரவீர

Posted: 30 Nov 2016 03:26 PM PST

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் பெற்றுக் கொண்ட போர் வெற்றியை மஹிந்த ராஜபக்ஷவும், அவரது குடும்பத்தினரும் தமது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டனர் ...

கருணா சுதந்திரத்தின் பங்காளி; அவரை கைது செய்தது தவறு: மஹிந்த அணி

Posted: 30 Nov 2016 03:10 PM PST

இலங்கை இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளியாக கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் இருக்கின்றார். அவரைக் கைது செய்தது தவறு என்று கூட்டு எதிரணி ...

சென்னையை நோக்கி நாடா புயல்: 2ஆம் தேதி கரையைக் கடக்கும்!

Posted: 30 Nov 2016 03:44 AM PST

சென்னையை நோக்கி நாடா புயல், 2ஆம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

8 மாவட்டங்களுக்கு வெறும் 5 கோடியை அனுப்பிய ரிசர்வ் வங்கி!

Posted: 30 Nov 2016 03:33 AM PST

8 மாவட்டங்களுக்கு வெறும் 5 கோடியை மட்டுமே அனுப்பி உள்ளது  ரிசர்வ் வங்கி  என்று, வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

நாகை, கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

Posted: 30 Nov 2016 03:29 AM PST

புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை, மற்றும் கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். 

இந்தியாவில் iPhone விற்பனை உயர்ந்ததன் பின்னணி!

Posted: 30 Nov 2016 03:25 AM PST

இந்தியாவில் iPhone விற்பனை உயர்ந்ததன் பின்னனி என்ன என்று பார்த்தால்,விற்பனையாளர்கள் பழைய 500 மற்றும் 1000  வாங்கிக் குவித்ததுதான்  என்று தெரிய வந்துள்ளது. 

தமிழ் பெயர் உள்ள திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளித்ததன் மூலம் தமிழ் கலாச்சாரம் வளர்ந்துள்ளதா?: சென்னை உயர் நீதிமன்றம்

Posted: 30 Nov 2016 03:08 AM PST

தமிழ் பெயர் உள்ள திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளித்ததன் மூலம் தமிழ் கலாச்சாரம் வளர்ந்துள்ளதா, என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஃபேஸ்புக்கின் எக்ஸ்ப்ரஸ் Wi-Fi திட்டம்!

Posted: 30 Nov 2016 02:49 AM PST

ஃபேஸ்புக் நிறுவனம் எக்ஸ்ப்ரஸ் Wi-Fi என்ற புதிய திட்டத்தை கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. 

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து பேச மோடிக்கு ஐ.நா. அழைப்பு!

Posted: 30 Nov 2016 01:27 AM PST

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

திமுக தலைவர் கருணாதியை ஸ்டாலின்-அழகிரி இன்று கூட்டாய் சந்தித்தனர்

Posted: 30 Nov 2016 01:20 AM PST

திமுக தலைவர் கருணாதியை அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி இருவரும் இன்று கூட்டாய் சந்தித்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

திரையரங்குகளில் படம் ஒளிபரப்பு செய்யும் முன்னால் நமது தேசிய கீதம்:உச்ச நீதிமன்றம்

Posted: 30 Nov 2016 01:07 AM PST

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் ஒளிபரப்பு செய்யும் முன்னால் நமது தேசிய கீதம் இசைக்க  வேண்டும என்று -உச்ச நீதிமன்றம் உத்திரவுப் பிறப்பித்துள்ளது..



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™