ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு
- சைலண்ட் ஜோக்ஸ்
- அழகே வா.. அருகே வா..
- அகிலனின் பாவை விளக்கு
- வருவான் வடிவேலன்…
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
- சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல்
- செல்லாக் காசு
- தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்தது ஐகோர்ட்
- பரிமளா ராஜேந்திரன் எழுதிய இருவர் வாழும் ஆலயம் தெளிவான மின்னூல்
- மோடி கி நோட்
- ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை தரையிறக்கியது விமானப்படை
- மித்ரன் முதலாம் ஆண்டு பிறந்தநாள்விழா
- கருத்து சித்திரம் - கார்ட்டூன்
- மனைவியைத் திட்டினால்….!!
- Enakku vanha kanavu
- தற்போதைய சினிமினி செய்திகள்...
- மாதா பிதா குரு தெய்வம் …
- அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு)
- செல்லாக் காசு: முத்துலிங்கம்
- செல்லாக் காசு: கவிஞர் “இளவல் ” ஹரிஹரன்
- ரயில்வே ஸ்டேஷன்களில் ‛செல்பி' எடுக்க தடை
- ஐஎன்எஸ் - சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம்
- மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்!
- திருப்பதியில் விரைவாக தரிசனம் செய்ய 3 வரிசை
- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சர்வதேச சமாதான விருது
- பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி!
- திரையுலகிலும் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு
- கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது
- அரசியல் கார்ட்டூன்
- சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்
- தேன்சிட்டுக்குருவி லேகியம்
திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு Posted: 21 Nov 2016 08:29 AM PST புதுடில்லி: திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும் ரூ.2.5 லட்சம் வரை ஒரே தடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்: நவ.,8 ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும். டிச.,30 க்குள் ... |
Posted: 21 Nov 2016 07:11 AM PST |
Posted: 21 Nov 2016 07:00 AM PST பாடல்: அழகே வா.. அருகே வா.. படம்: ஆண்டவன் கட்டளை பாடியவர்: P. சுசீலா கவிஞர்: கண்ணதாசன் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண்டு: 1964 – ———————————– – அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா.. – அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. – ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா..வா..வா..அழகே வா.. – ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் ... |
Posted: 21 Nov 2016 06:50 AM PST - திரைப்படமாக வெளிவந்த அகிலனின் பாவை விளக்கு கதை பற்றி காரசார விவாதம் தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். - தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின. - புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் ... |
Posted: 21 Nov 2016 06:36 AM PST - குரல்: வாணி ஜெயராம் வரி: கண்ணதாசன் இசை: MSV படம் : வருவான் வடிவேலன் – —————————– – வருவான் வடிவேலன் – தணிகை வள்ளல் அவன் – அழகு மன்னன் அவன் – நினைத்தால் வருவான் வடிவேலன்! – சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன் இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (வருவான் வடிவேலன்) – முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா – அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் – என்றும் அவர் கண்ணில் நேராகத் ... |
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் Posted: 21 Nov 2016 06:24 AM PST சென்னை : மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக, ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.10,000 ஐ முன்பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி, கடந்த 8 ம் தேதி ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி, மத்திய அரசின் குருப்-சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10, 000 ஐ அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் ... |
சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல் Posted: 21 Nov 2016 06:20 AM PST சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல் ஒரு தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக mediafire.com download/1so36624m5d70bo/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf |
Posted: 21 Nov 2016 05:48 AM PST பெற்ற பிள்ளைகள் அவனை சட்டை செய்வதில்லை ! கட்டிய மனைவி , அவன் வார்த்தையைக் காதில் போட்டுக் கொள்வதில்லை ! வேலைக்காரர்களுக்கோ அவன் ஒரு வெத்து வேட்டு ! மொத்தத்தில் அவன் ஒரு செல்லாக் காசு ! நான்கு மாதங்களுக்கு முன்பு அவன் நல்ல காசாகத்தான் இருந்தான் ! நாலுபேர் மதிக்கின்ற தங்கக் காசாகத்தான் இருந்தான் ! திடீரென்று ஒருநாள் காமப் பிசாசின் கைகளில் சிக்கி வேலிதாண்டிய வெள்ளாடாக மாறினான் ! உற்றார் உறவினரின் உபதேசங்கள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று ! அரண்மனை வாசம் வேண்டாம் ; சின்னவீடே ... |
தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்தது ஐகோர்ட் Posted: 21 Nov 2016 05:22 AM PST மதுரை: தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 'தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்பான நிறுவனங்கள் 1000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 மட்டுமே கொடுக்கின்றன. இவ்வாறு குறைந்த விலைக்கு தாமிரபரணி தண்ணீரை எடுக்கும் நிறுவனங்கள், குளிர்பானம் மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. எனவே, அந்த ... |
பரிமளா ராஜேந்திரன் எழுதிய இருவர் வாழும் ஆலயம் தெளிவான மின்னூல் Posted: 21 Nov 2016 05:22 AM PST பரிமளா ராஜேந்திரன் எழுதிய இருவர் வாழும் ஆலயம் தெளிவான மின்னூல் mediafire.com file/jskbf4if5cdd268/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.pdf நன்றி கி.ஸ்ரீனிவாசன் |
Posted: 21 Nov 2016 05:19 AM PST மோடி கி நோட் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் .modi ki note என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள் . புதிய 2000 நோட்டின் மங்கள்யான் படத்தின் மீது கேமெரா மூலம் பாருங்கள் மங்கள்யான் மறைந்து மோடி பேசுவது போன்ற வீடியோ தெரியும் .ரூபாயை தள்ளி வைத்தால் , மோடி விடியோவும் மறைகிறது . எனது நண்பர் போன் கொண்டுவந்தார் . என்னிடம் இருந்த 2000 இல் மோடி பேசுவதை பார்த்தேன் ,கேட்டேன் . இங்குதான் மங்கள்யான் இடத்தில chip வைக்கப்பட்டு உள்ளதாம் . எனது போனில் space இல்லாததால் , சில apps ஐ நீக்கிவருகிறேன் . ரமணியன் ... |
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 8 போர் விமானங்களை தரையிறக்கியது விமானப்படை Posted: 21 Nov 2016 05:09 AM PST ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரோ-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு ரூ.13200 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் கனவுத்திட்டமான இத்திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையான இந்த சாலையை உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திறந்துவைத்தார். அப்போது அந்த சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 8 போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்தனர். போர் போன்ற ... |
மித்ரன் முதலாம் ஆண்டு பிறந்தநாள்விழா Posted: 21 Nov 2016 04:50 AM PST மித்ரன் முதலாம் ஆண்டுவிழா உமா நிர்வாக குழுவினரின் அன்பு மகன் மித்ரன் அவர்களின் முதல் ஆண்டு பிறந்தநாள் . வாழ்த்துவோம் . இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மித்ரன் . ரமணியன் |
கருத்து சித்திரம் - கார்ட்டூன் Posted: 21 Nov 2016 04:48 AM PST - |
Posted: 21 Nov 2016 04:47 AM PST - மனைவி கணவனைத் திட்டுறது 'குளத்தில் கல் எறிவது போல' – கணவன் மனைவியைத் திட்டுவது 'தேன்கூட்டில் கல் எறிவது போல! – (புரிந்தால் சரி…) – யாரோ – —————————————– நன்றி- குமுதம் |
Posted: 21 Nov 2016 04:35 AM PST என்னுடைய அலுவலக உயர் அதிகாரி( மருத்துவ விடுப்பில் இருப்பவர்) என் கனவில் வருகிறார். இதனால் என்ன பலன்? நன்மையா அல்லது தீமையா? |
தற்போதைய சினிமினி செய்திகள்... Posted: 21 Nov 2016 04:33 AM PST சைத்தான் படம் நவம்பர் 17ல் திரைக்கு வருகிறது… - - * "நான்', "சலீம்', "இந்தியா பாகிஸ்தான்', "பிச்சைக்காரன்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த படம் "சைத்தான்.' தலைப்பு தொடங்கி திரைக்கதை வரை அனைத்திலும் வித்தியாசம் காட்டுவது இவரது தனி பாணி. இவர் நடித்து, தயாரித்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் தனி ரகம். இப்போது "சைத்தான்' படத்தின் டிரெய்லரும், டீசர் மற்றும் பாடல்களும் இந்த படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் ... |
Posted: 21 Nov 2016 04:31 AM PST திரைப்படம்: நான் பெற்ற செல்வம் பாடியவர்: ஏ.பி. கோமளா இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப் இசை: ஜி. ராமநாதன் – ———————————– – மாதா பிதா குரு தெய்வம் மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மாதா பிதா குரு தெய்வம் – ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம் ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது ஓதி உணர்ந்தது போலே ஓதி உணர்ந்தது ... |
அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 21 Nov 2016 04:16 AM PST - |
Posted: 21 Nov 2016 04:15 AM PST காசு பணம் துட்டு என பல பெயர்கள் உண்டு அதற்கு அது இருக்கும் பலரின் பையில் அதன் அதிகாரமோ! மத்திய அரசின் கையில் – பாட்டி காலத்து அரையணா காலணா அஞ்சி பைசா பத்துப் பைசா காசு சுறுக்குப் பையில் இருக்கும்போதே ஆனது செல்லாக் காசு – தாத்தா காதுமடலில் இருந்தது இருபது பைசா காசு சுருட்டுக்காக.. பெட்டிக்கடைக்குப் போவதற்குள் ஆனது செல்லாக்காசாக.. – அப்பா கொடுத்தார் ஐந்து ரூபாய் நோட்டு பள்ளிக்கூட பரிட்சைக்காக.. இன்றோ! அதுவும் ஆனது செல்லாக் காசாக.. – ஆறு நாள் வேலை பார்த்து கையில் வாங்கினேன் ஒரு ... |
செல்லாக் காசு: கவிஞர் “இளவல் ” ஹரிஹரன் Posted: 21 Nov 2016 04:14 AM PST நாணயமில்லாச் சொற்களெல்லாம் நடப்பினிலே என்றென்றும் செல்லாக்காசுகளே…… – உயிரில்லா உடம்பும் ஒருபோதும் செல்லுபடியாவதில்லை…. – இன்றைக்குச் செல்லுபடியாவது என்றைக்கும் செல்லுபடியாகும் என்னும் நிலைமை இருப்பதில்லை என்றும்…… – காலம் மட்டும் செல்லுபடியாகிக் கொண்டிருப்பதால் செல்லாக்காசு செலாவணியாவதில்லை…… – சில்லறைகளின் மதிப்பாவது தேறிவிட வாய்ப்புண்டு…. செல்லாக்காசுகளின்தாட்களோ சிறிதும் தேறுவதேயில்லை……. அழிந்துபோகும் – எல்லாவற்றின் நிலைமையும் இப்படித்தான்…..ஒரு நாள் செல்லாததாகிவிடும்…. உயிர் ... |
ரயில்வே ஸ்டேஷன்களில் ‛செல்பி' எடுக்க தடை Posted: 21 Nov 2016 04:01 AM PST சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பாதைகளில், பொது மக்கள் ‛செல்பி' எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது. - சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், ரயில் பாதையில் நின்று ‛செல்பி' எடுக்க முயன்றார். அப்போது ரயில் மோதி படுகாயம் அடைந்தார். - அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பாதைகளில், பொதுமக்கள் ‛செல்பி' எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது. ... |
ஐஎன்எஸ் - சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு Posted: 21 Nov 2016 03:53 AM PST மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலை இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைத்தது. போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச் சென்று நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம் மற்றும் 7500 டன் எடையுடையது. சென்னைக்கு பெருமை : மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் ... |
கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம் Posted: 21 Nov 2016 03:51 AM PST மும்பை: கார், வீடு, விவசாய மற்றும் சில கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த 60 நாள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செலுத்த வேண்டிய கடன் தவணை தொகைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.1 கோடி மற்றும் அதற்கு குறைவாக கடன் வாங்கியவர்களுக்கு தான் இந்த சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. .அதிக பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அதனால் ஏற்பட்ட பணிகள் காரணமாக ... |
மலேசியாவில் தமிழ்க் கல்வி – 200 ஆண்டுகள்! Posted: 20 Nov 2016 09:00 PM PST - "மலேசியாவில் தமிழ் மொழி என்றும் வாழும்" இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதைச் சொல்பவர் சொன்னால் நாம் கண்டிப்பாக நம்பலாம். அதை சொல்பவர் சாதாரண மலேசியர் அல்ல, அவர், மலேசிய கல்வி அமைச்சகத்தின் துணை அமைச்சர் என்றால் நம்பாமல் இருக்க முடியுமா? மலேசியாவின் கல்வித் துறையின் துணை அமைச்சர் பி.கமலநாதன், 18 வயதில் அரசியலுக்கு வந்தவர். தற்போது 51 வயதாகிறது. மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வி பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும் தெளிவாகத் தெரிந்தவர். தன்னைப் பற்றியும் தன் அமைச்சகத்தின் ... |
திருப்பதியில் விரைவாக தரிசனம் செய்ய 3 வரிசை Posted: 20 Nov 2016 08:58 PM PST - திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய 3 சிறப்பு வரிசைகள் அமல்படுத்தப்படும் என்று செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார். - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெயபேரி, விஜயபேரி, துவாரபாலகர்கள் அருகே பக்தர்கள் வரும்போது, சுவாமியை ஒரு நிமிடம் கூட தரிசனம் செய்ய விடாமல், அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் இழுத்து தள்ளிவிடுகிறார்கள் ... |
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சர்வதேச சமாதான விருது Posted: 20 Nov 2016 08:57 PM PST - புதுடெல்லி: சர்வதேச சமாதானத்திற்கான விருதை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கினார். – உலக நாடுகளின் அமைதிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். – இதனால் அவரை கவுரவிக்கும் விதமாக டெல்லி விக்யான்பவனில் நேற்று நடந்த விழாவில் டாக்டர் நாகேந்திர சிங் சர்வதேச அமைதி விருதினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவருக்கு வழங்கினார். – சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டாக்டர் நாகேந்திர ... |
பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி! Posted: 20 Nov 2016 07:29 PM PST ஜார்க்கண்ட் மாநிலத்தில் பான் மசாலா விற்கும் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கருப்புப் பணம் வைத்திருக்கும் யாராவது அவருடைய வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டத்தைச் சேரந்த பப்பு குமார் திவாரி என்ற இளைஞர், பான் மசாலா விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவர், தனது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,000 எடுப்பதற்காக, ... |
திரையுலகிலும் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு Posted: 20 Nov 2016 07:28 PM PST திரையுலகிலும் கருப்புப் பணம் புழங்குவதை நாம் தடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: எல்லா இடங்களிலும் கருப்புப் பணம் புழங்குகிறது. இந்த சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அரசியலிலும், பொது வாழ்விலும், சினிமாவிலும் கருப்புப் பணம் புழங்குகிறது. நாம் அமைதியான வாழ்க்கை வாழ ... |
கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது Posted: 20 Nov 2016 06:22 PM PST பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் , 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி உள்ள ஒடிசாவின் பர்ஹாம்புரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார் திலிப் குமார் ஆச்சாரியா. புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், அவர், பல்வேறு வீடுகள், நிலம், தங்கம் என, 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது ... |
Posted: 20 Nov 2016 06:07 PM PST |
சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம் Posted: 20 Nov 2016 06:07 PM PST தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார். பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் வங்கிகளில் ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய அறிவிப்பு ... |
Posted: 20 Nov 2016 05:51 PM PST – நடுவுலே ஒரு இலை காலியா இருக்கே, பேசாம உட்கார வேண்டியதுதானே? எதுக்காக எங்க இரண்டு பேருக்கும் சர்க்கரை வியாதி இருக்கான்னு கேக்கறீங்க? – ஸ் வீட், பாயாசம் பரிமாறும்போது எனக்குக் கிடைக்காமப் போயிடுமே…!! – பி.என்.நரசிம்மமூர்த்தி – —————————————– – முதலிரவுல நான் தூங்கியது உங்களுக்கு எப்பிடித் தெரியும்? – உன் பெண்டாட்டி ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போட்டாளே…! – அ.ரியாஸ் – —————————————— – நீங்க குடுத்த குருவி லேகியம் ரொம்ப இனிப்பா இருக்குதே…! – அது தேன்சிட்டுக்குருவி லேகியம் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |