ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).
- செய்திகள் என்ன சொல்லுது?
- அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…
- காதலும் கடனும் ஒண்ணு…!!
- ஏற்கனவே படித்ததோ !!
- மாணவரும் ஓர் ஆசிரியரே !
- நிகழ்வுகள் - கவிதை
- படித்ததில் பிடித்தது - பல்சுவை (தொடர்பதிவு)
- பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்……
- இலக்கணமும் இனிக்கும்
- சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.25 லட்சம்; இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது
- தலையில் பந்து தாக்கி இந்திய கிரிக்கெட் வீரர் காயம்
- பழமையினைப் பகரும் கோலங்கள்
- மனதில் நின்றவை…! - அனுபவ மொழிகள் (:தொடர் பதிவு)
- லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு
- டோக்கன் ஏழு, சாவு நாலு…!!
- வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- தாம்பரத்தில் புதிய ரயில் முனையம்
- இந்த வார சினிமா செய்திகள்
- விசித்திரமான சமூகம்! –
- பொண்டாட்டி கைக்கு சிக்காத அளவுக்கு…!!
- தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம்
- ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர் விருது
- பாஸ்மதி அரிசி
- இந்தியாவுக்கு வரும் டொயோடா `அல்பார்ட்
- பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்
- காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
- அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை.
- iஹைபுன்
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Posted: 08 Sep 2016 12:02 PM PDT லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான ... |
Posted: 08 Sep 2016 11:56 AM PDT 1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ... |
அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு… Posted: 08 Sep 2016 11:53 AM PDT முதுகெலும்பு உடைந்து இத்துப் போய், துர்நாற்றம் வீசுகின்ற அரசு இயந்திரத்தை அம்பலப்படுத்தும் விதமாக நிகழ்கின்றன தினசரி அவலங்கள்! – – சக்திவேல் — ————————————— – ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு முன்ன கால் பண்ணா ''ஆபீஸ்ல மீட்டிங்ல இருக்கேன், வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன்''னு சொல்லுவான்; கல்யாணத்துக்கு அப்பறம் இப்ப கால் பண்ணா, ''வீட்ல துணி துவைச்சுட்டு இருக்கேன், ஆபீஸ் வந்துட்டு பேசுறேன்''னு சொல்றான். – – பூபதி முருகேஷ் – ————————————— தூர்தர்ஷனில் மட்டுமே வந்த காணாமல் போனவர்கள் பற்றிய ... |
Posted: 08 Sep 2016 11:49 AM PDT @kumarfaculty 'தடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்' என்கிறபோது சண்டைகள் உக்கிரமடைகின்றன! – ————————————— @Amar_twitts வீட்டின் முகமாய் வாசல்கள் இருந்த காலம் போய், ஜன்னல்கள் முகமாய் மாறிவிட்ட அபார்ட்மென்ட் காலம் இது! – ————————————— @pesubavan ஹாஸ்டல் இட்லியும் பொண்ணுங்க மனசும் என்னிக்குமே கல்லுதான்… மாத்தவே முடியாது! – —————————————– @MonaPrabhu மனைவி ஊருக்குப் போனவுடனே கிடைக்கிற தனிமையை சந்தோஷமா கொண்டாடுற நாம, இதே தனிமைக்குப் பயந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'ங்கறத மறந்துடக்கூடாது. – ——————————————— |
Posted: 08 Sep 2016 11:48 AM PDT ஏற்கனவே படித்ததோ !! ]ஏற்கனவே படித்து இருந்தால் மன்னிக்க , இல்லையெனில் படித்து மகிழவும் .] --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ... |
Posted: 08 Sep 2016 11:47 AM PDT " அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா " என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் . " சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு . ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. ... |
Posted: 08 Sep 2016 11:44 AM PDT பட்டுப் புடவை பட்டுப்புடவையுடன் பேச வைர அட்டிகை வைர அட்டிகையுடன் கைகுலுக்க வெறும் மஞ்சள் கயிறுகள் தனித்தனியே புலம்பிக் கொண்டிருக்கின்றன திருமணமண்டபங்களில்..! – ————————- தஞ்சை கமருதின் |
படித்ததில் பிடித்தது - பல்சுவை (தொடர்பதிவு) Posted: 08 Sep 2016 05:52 AM PDT - |
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்…… Posted: 08 Sep 2016 05:42 AM PDT படம்: ஆயிரத்தில் ஒருவன் இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடியவர்: P சுசீலா வரிகள்: வாலி – ———————- – பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் – இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் மான்கள் எனது உறவாகும் மானம் எனது உயிராகும் மான்கள் உனது உறவாகும் மானம் உனது உயிராகும் தென்றல் என்னைத் தொடலாம் – குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம் மலர்கள் முத்தம் தரலாம் – அதில்மயக்கம் கூட வரலாம் (பருவம்) – சின்னஞ்சிறிய கிளி பேசும் கன்னங்கரிய ... |
Posted: 08 Sep 2016 05:41 AM PDT -– முனைவர் நிர்மலா மோகன் தகைசால் பேராசிரியர்,காந்தி கிராம பல்கலைக்கழகம் --------------------------------------------------------------------- எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை இது: மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும் வரவேற்பு, இலக்கணத்திற்கு கிடைப்பதில்லை. இலக்கணம் என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக் காயாய் நினைப்பதும் மாணவர்களின் பொதுவான இயல்பு. என்றாலும், ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும் இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும். எளிய, ... |
சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.25 லட்சம்; இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது Posted: 08 Sep 2016 02:45 AM PDT - சென்னை, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர், அவரது பயிற்சியாளர் கோபிசந்த். இவர் 1993-ம் ஆண்டு முதல் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரியோ ஒலிம்பிக்கில் கோபிசந்தின் மகத்தான பயிற்சி பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தியன் ஆயிலின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநில அலுவலகத்தின் மார்க்கெட்டிங் டிவிசன் தலைமை மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ... |
தலையில் பந்து தாக்கி இந்திய கிரிக்கெட் வீரர் காயம் Posted: 08 Sep 2016 02:42 AM PDT - துலிப் டிராபியில் இந்தியா புளூ- இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா பீல்டிங்கில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பந்து அவரது தலையில் தாக்கியது. எதிர்பாராத விதமாக பந்து தலையில் தாக்கியதால் நிலை தடுமாறிய ஒஜா மைதானத்திலே மயக்கமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை ... |
Posted: 08 Sep 2016 01:16 AM PDT - நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம். புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி இணைத்தல், புள்ளிகளை இணைத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. புள்ளி வைத்து போடும் கோலங்களுக்கு தென்னிந்தியா பிரபலம் என்றால், புள்ளிகள் இல்லாமல் வளைவுகளை மட்டுமே ஒன்று சேர்க்கும் ரங்கோலி வகை கோலங்கள் வட இந்தியாவில் பிரபலம். நம் கலாசாரத்தின் பழமையினைப் பகரும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம். புள்ளி வைத்து போடும் கோலத்தில் புள்ளிகளைச் சுற்றி ... |
மனதில் நின்றவை…! - அனுபவ மொழிகள் (:தொடர் பதிவு) Posted: 08 Sep 2016 01:00 AM PDT - - |
லங்காவியின் அடையாளமான கழுகு சிலையை உடைக்க எதிர்ப்பு Posted: 08 Sep 2016 12:56 AM PDT - லங்காவி: மலேசியாவின் லங் காவியில் உள்ள புகழ்பெற்ற கழுகு சிலை 'ஹராம்' என்று கூறப்படு வதற்கு அங்குள்ள சுற்றுலாத் துறையினர் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். அது, இஸ்லாமுக்கு எதிரானது, அதை உடைக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் சமூக ஊடகங் களில் இந்த விவகாரம் பரவி கழுகு சிலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. லங்காவி சுற்றுலா சங்கத்தின் தலைவர் சைனூடின் காதிர், "கெடா மாநிலத்தில் லாங் சதுக்கத் தில் உள்ள 12 மீட்டர் உயர கழுகு சிலை கடந்த இருபது ... |
Posted: 08 Sep 2016 12:52 AM PDT எதுக்கு மன்னா, வைத்தியரை சிறையில் அடைத்தீர்கள…? – நோயில் இருந்த அரசியைப் பிழைக்க வெச்சுட்டார்…! – —————————— – தலைவர் டாக்டர் பட்டம் வாங்கிட்டாரா? – அட, எப்படி கண்டுபிடிச்சசே? – அவர் எழுதித்தரும் அறிக்கை புரியவே மாட்டேங்குதே…! – ——————————— – என் மாமியாருக்கு என்ன வியாதியா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க, டாக்டர்! – மனசைத் திடப்படுத்திக்கோங்க, அவங்களுக்கு எந்த வியாதியும் இல்லை..!! – —————————————- |
Posted: 08 Sep 2016 12:29 AM PDT - - |
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 07 Sep 2016 09:21 PM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் Posted: 07 Sep 2016 08:38 PM PDT - சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும், தமிழக பகுதிகளுக்கு அதிகளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்படுகிறது. கூடுதல் நெரிசலை சமாளிக்க, ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக தென் மாவட்டங்களுக்கு 3-வது முனையத்தை, தாம்பரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாம்பரத்தில் 3-வது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் துவங்கி அதிவேகமாக நடைபெற்று வருகின்றது. – ——————————– தினமணி |
Posted: 07 Sep 2016 08:26 PM PDT கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்: சஞ்சிதா படுகோனே --- - விஜய் நடித்த வேட்டைக்காரன், ஜித்தன் ரமேஷ் நடித்த பிள்ளையார் கோவில் கடைசி தெரு ஆகிய படங்களிலும் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த சஞ்சிதா படுகோனே. - கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி. ராவணா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஷால், நட்டி மற்றும் முன்னணி ஹீரோக்களுடனும் மணிரத்னம், கௌதம் மேனன், சுந்தர் சி, சுசீந்திரன், ... |
Posted: 07 Sep 2016 08:10 PM PDT @Kannan_Twitz கிராமத்துப் பொண்ணுங்க துப்பட்டா விலகுனாலே மானம் போறதா நினைப்பாங்க, சிட்டி பொண்ணுங்க துப்பட்டா போடறதையே அவமானமா நினைக்குறாங்கனு ஆய்வு சொல்லுது… – —————————————– @SmmSelva தூக்கத்தை மட்டும் யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள், பின் நீங்களே தியானம் செய்து அழைத்தாலும் உங்களிடம் வராது. – —————————————— @sudhansts தமிழில் எழுதினேன்; 'இங்கிலீஷ் தெரியாதா' என்று ஏளனம் செய்தார்கள். இங்கிலீஷில் எழுதினேன்; 'தமிழன்தானே' என்று விமர்சித்தார்கள்… விசித்திரமான சமூகம்! – ——————————————— @sudhansts ஞாயிற்றுக்கிழமை ... |
பொண்டாட்டி கைக்கு சிக்காத அளவுக்கு…!! Posted: 07 Sep 2016 08:02 PM PDT பெங்களூருவில் மனிதர்கள் ஹூண்டாய், மாருதி, ஆடி கால்களால் நடக்கிறார்கள் # Trafficjameverywhere – – சமயவேல் கருப்புசாமி – ————————————— – ''வரதட்சணையாக என்னென்ன கொண்டு வந்தே?'' என புதுப்பெண்ணிடம் கேட்கும் இந்த சமூகம், 'எதையெல்லாம் நீ இழந்து விட்டு வந்தாய்' எனக் கேட்க மறந்து விடுகிறது! – – முஹம்மது அலிம – —————————————- – கஸ்டமர்: முடி நல்லா ஷார்ட்டா வெட்டுப்பா! – கடைக்காரர்: எவ்ளோ ஷார்ட்டா சார்? – கஸ்டமர்: என் பொண்டாட்டி கைக்கு சிக்காத அளவுக்கு வெட்டு..! – – பரணி ஹைபி – —————————————— – எப்பவும் ... |
Posted: 07 Sep 2016 07:47 PM PDT - மண்டியாவில், நேற்று பல்வேறு உருவ பொம்மைகள், டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர். காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மைசூரு, மண்டியாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், காவிரியில் தமிழகத்துக்கு 15 ஆயிரம் ... |
ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர் விருது Posted: 07 Sep 2016 07:36 PM PDT - இந்திரா சிவசைலம் நினைவு விருது பெறவுள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள். ———————————- சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் கர்நாடக வாய்ப்பாட்டு இசைக்கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பாட்டு கலைஞர்கள் திறன் வெளிப்படுத்தலில் நேர்த்தி, பார்வையாளர்களை ஈர்க்கும் திறன், பாரம்பரிய சங்கீதத்தில் புதுமைகளைப் புகுத்துதல், இசை மீதான அறிவின் ஆழம், அதை பரவலாக்குவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள், ... |
Posted: 07 Sep 2016 07:34 PM PDT - அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி ... |
இந்தியாவுக்கு வரும் டொயோடா `அல்பார்ட் Posted: 07 Sep 2016 07:28 PM PDT - ஜப்பானைச் சேர்ந்த டொயோடா நிறுவனம் தனது பிரபல மாடலான அல்பார்ட் ரகக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் இனோவா கிரைஸ்டா மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் புதிய மாடலை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 2002-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த வாகனம் தொடக்கத்தில் ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குறிப்பாக ரஷியா, சிங்கப்பூரில் ... |
பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 07 Sep 2016 07:25 PM PDT எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் அதுகுறித்த தகவல்களை பதிவேற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் தகவல்களை பதிவேற்ற வேண்டும். அதேவேளையில் இணைய இணைப்பு குறைபாடுள்ள பகுதிகளில் ... |
ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் Posted: 07 Sep 2016 06:48 PM PDT நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது. – இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. – அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249′ எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, ... |
காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி Posted: 07 Sep 2016 06:48 PM PDT காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை ராஜிநாமா செய்தார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார். முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில், "1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த ... |
நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 07 Sep 2016 05:55 PM PDT |
அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு Posted: 07 Sep 2016 05:50 PM PDT புதுடில்லி: சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கட்டண உயர்வு விமான கட்டண முறைகளை போன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு 10 சதவித டிக்கெட்கள் விற்பனையானதும் மீதமுள்ள டிக்கெட்களின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில் புதிய கட்டண முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், முதலில் ... |
அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை. Posted: 07 Sep 2016 05:49 PM PDT * தனக்கென ஒரு பழத்தைக் கூட மரம் வைத்துக் கொள்வதில்லை. அது போல பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். * பொருள் இல்லாதவனை உலகம் ஏழை என்று சொல்கிறது. அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை. * குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழப் போகிறோம். அதற்குள் நாலு பேருக்காவது நன்மை செய்து விட வேண்டும். * மனம் ஒரு தாவரம். அதைக் கட்டுப்பாடு என்னும் வேலியிட்டுக் காவல் புரிய வேண்டும். * பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும். * ... |
Posted: 07 Sep 2016 05:37 PM PDT நொடியில்..!! * மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது. பூமியின் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |