Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Posted: 18 Aug 2016 03:16 AM PDT

try

tryதினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

மஞ்சள்காமாலை நோய்

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.

கல்லீரல் பிரச்சனை

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.
மூலநோய்

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

நோயெதிர்ப்புச் சக்தி

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.try

பருக்கள்

பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்லசெரிமானத்தை உண்டாக்குகிறது.

இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

குறிப்பு

பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

The post தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தரிக்காய் எதற்காக சாப்பிட வேண்டும்?

Posted: 18 Aug 2016 03:09 AM PDT

uiu

uiuமனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.

நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது.

நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் – A,C,B1,B2 போன்ற சத்துகள் கத்தரிக்காயில் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் தக்காளியை போலவே எடை, புரதம் கலோரி அளவு தாது உப்புகள் போன்றவை உள்ளன.

மருத்துவ பயன்கள்

நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் மற்றும் உடல்பருமன் போன்ற நோய்களை குணமாக்குகிறது.uiu

கண் பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது,ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

குறிப்பு

கத்திரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறி வகையை சார்ந்தது, எனவே உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது.

The post கத்தரிக்காய் எதற்காக சாப்பிட வேண்டும்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™