Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாடங்கள் பல உண்டு; கற்பார்களா?

Posted: 23 May 2016 12:55 PM PDT

வாக்குப் பதிவு நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம் வரை, வானம் பொழிந்து கொண்டிருந்தது. கதிரவன் கண்ணில் அகப்படவில்லை.

முடிவுகள் உணர்த்தும் செய்தி!

Posted: 23 May 2016 12:54 PM PDT

இந்தச் சுற்று சட்டப் பேரவைத் தேர்தல்கள் பல திருப்பங்களையும், வியப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியத் (உலக?) தேர்தல் வரலாற்றில் 90 வயதைக் கடந்த முதியவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக வலம் வந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்,

உள்நாட்டில் தயாரான விண்வெளி ஓடம்: இஸ்ரோ சோதனை வெற்றி

Posted: 23 May 2016 12:53 PM PDT

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, மறுபயன்பாடு கொண்ட விண்வெளி ஓடம் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.

பதவியேற்பு விழா நிகழ்ச்சி...வரவேற்பு பதாகைகள், ஆடம்பரம் இல்லாத விழா

Posted: 23 May 2016 12:51 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வரை வரவேற்கும் வகையில்

தேசிய ஹாக்கி: சண்டீகர், பெங்களூரு அணிகள் வெற்றி

Posted: 23 May 2016 12:41 PM PDT

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் சண்டீகர், பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன.

தூத்துக்குடியில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

Posted: 23 May 2016 12:41 PM PDT

தூத்துக்குடியில் கல்வி நிறுவன வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: தூத்துக்குடியில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பு

Posted: 23 May 2016 12:40 PM PDT

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியை, தூத்துக்குடியில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

பராமரிப்பு பணிக்காக ரெனோ-நிஸான் ஆலை ஒருவாரம் மூடல்

Posted: 23 May 2016 12:40 PM PDT

பராமரிப்புப் பணிகளுக்காக சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ரெனோ-நிஸான் கார் ஆலை ஒருவார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரியில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்

Posted: 23 May 2016 12:39 PM PDT

ஆறுமுகனேரியில் லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதமானது. இதனால் சங்கிலி அமைத்து ரயில்கள் இயக்கப்பட்டன.

சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 23 May 2016 12:38 PM PDT

சாத்தான்குளத்தில் வழக்குரைஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதிதாக 500 கிளைகள்: எச்.டி.எஃப்.சி. வங்கி திட்டம்

Posted: 23 May 2016 12:38 PM PDT

தனியார் துறையைச் சேர்ந்த எச்.டி.எஃப்.சி. வங்கி நடப்பு நிதி ஆண்டில் புதிதாக 500 கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடி

Posted: 23 May 2016 12:38 PM PDT

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற ஏப்ரல் மாதத்தில் ரூ.3.57 லட்சம் கோடியாக அதிகரித்தது.

தொழிலதிபர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு

Posted: 23 May 2016 12:38 PM PDT

தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

Posted: 23 May 2016 12:37 PM PDT

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜோதி லேபரட்டரீஸ் லாபம் 31% அதிகரிப்பு

Posted: 23 May 2016 12:37 PM PDT

வேகமாக விற்பனையாகும் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜோதி லேபரட்டரீஸின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 31.58 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவித்தது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 23 May 2016 12:37 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 444 கோடி

Posted: 23 May 2016 12:36 PM PDT

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ. 444.69 கோடியாக உள்ளது என்று அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி கூறினார்.

சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி: 4 பேர் கைது

Posted: 23 May 2016 12:36 PM PDT

திருச்செந்தூர் அருகே சொத்துக்கு ஆசைப்பட்டு, தங்கையின் காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 4பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாலுமாவடியில் கோடைக்கால இலவச கபடி பயிற்சி முகாம் நிறைவு

Posted: 23 May 2016 12:35 PM PDT

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடைபெற்று வந்த கோடைக்கால இலவச கபடி பயிற்சி திங்கள்கிழமை நிறைவடைந்ததையொட்டி பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காயல்பட்டினத்தில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு

Posted: 23 May 2016 12:34 PM PDT

காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரா அத் இரவு கடைபிடிக்கப்பட்டடது. இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

சித்த மருத்துவ கழக நிர்வாகிகள் தேர்வு

Posted: 23 May 2016 12:33 PM PDT

அகில இந்திய சித்த மருத்துவக் கழகத்தின் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் வைத்தியநாதபுரத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளருக்கு விருது

Posted: 23 May 2016 12:33 PM PDT

நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் மங்காவிளை டி. ராஜேந்திரனுக்கு, குமரி அறிவியல் பேரவை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மனிதநேயத்தை வலியுறுத்தி பேராசிரியரின் சைக்கிள் பயணம் தொடக்கம்

Posted: 23 May 2016 12:33 PM PDT

மனிதநேயத்தை வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியர், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து இந்தியா முழுவதுமான தனது சைக்கிள் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை

Posted: 23 May 2016 12:33 PM PDT

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அதிபர் ஒபாமா கூறினார்.

சவூதியில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 23 May 2016 12:32 PM PDT

சவூதி அரேபியாவில் இறந்த குமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 23 May 2016 12:32 PM PDT

சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரசு காப்பகத்தில் குழந்தைகளை சேர்க்கலாம்: ஆட்சியர்

Posted: 23 May 2016 12:31 PM PDT

அரசு குழந்தைகள் காப்பகத்தில் தகுதியுள்ள குழந்தைகளை சேர்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து பள்ளி விடுதி தீ விபத்தில் 18 மாணவிகள் பலி

Posted: 23 May 2016 12:31 PM PDT

தாய்லாந்திலுள்ள பள்ளி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 மாணவிகள் உயிரிழந்தனர்.

மார்த்தாண்டத்தில் 230 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 40 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

Posted: 23 May 2016 12:30 PM PDT

மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தற்கொலைத் தாக்குதல்: யேமனில் 45 பேர் பலி

Posted: 23 May 2016 12:30 PM PDT

அங்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான இளைஞர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

கருங்கல் - புதுக்கடை அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க கோரிக்கை

Posted: 23 May 2016 12:30 PM PDT

கருங்கல்லிலிருந்து புதுக்கடைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பாகிஸ்தானிடம் பொறுமையிழந்து வருகிறது அமெரிக்கா'

Posted: 23 May 2016 12:30 PM PDT

தலிபான் பயங்கரவாத இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பாகிஸ்தானிடம் அமெரிக்கா பொறுமையிழந்து வருகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

கன்னியாகுமரி

Posted: 23 May 2016 12:29 PM PDT

சிரியா குண்டுவெடிப்புகளில் 120 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted: 23 May 2016 12:29 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

நெடுவான்விளை ஆசிரமத்தில் நலஉதவி வழங்கல்

Posted: 23 May 2016 12:29 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள நெடுவான்விளை சுபானந்த தர்ம துவாரக ஆசிரமத்தில் ஏழை குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள் உள்பட நல உதவிகள் வழங்கப்பட்டன.

ஜார்க்கண்ட் ஆளுநர் குமரி வருகை

Posted: 23 May 2016 12:28 PM PDT

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை வருகை தந்தார்.

வள்ளவிளையில் கடலரிப்பு தடுப்புச் சுவர் கட்ட ஆட்சியரிடம் மனு

Posted: 23 May 2016 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டக் கோரி, கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஐஎஸ்எல்: அனாஸ், கோஷை தக்கவைத்தது டெல்லி

Posted: 23 May 2016 12:24 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் டெல்லி டைனமோஸ் அணி வரும் சீசனுக்கு பின்கள வீரர் அனாஸ் இடதோடிகா,

ஆசிய ஸ்நூக்கர்: அத்வானி சாம்பியன்

Posted: 23 May 2016 12:23 PM PDT

ஆசிய 6-ரெட் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தடகளம்: நீரஜுக்கு வெள்ளி

Posted: 23 May 2016 12:22 PM PDT

போலந்தின் வர்ஷாவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

"பிளடி சைனா மேன்'

Posted: 23 May 2016 12:21 PM PDT

இடது கையால் தலையைச் சுற்றி, உடலை வளைத்து, கால் தடுக்கி விழுந்து விடுவாரோ என பார்ப்பவர்களைப் பதற வைக்கும் அளவிற்கு பந்துவீசுகிறார்

பிரெஞ்சு ஓபன்: தப்பிப் பிழைத்தார் வாவ்ரிங்கா

Posted: 23 May 2016 12:20 PM PDT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்டார்.

இலங்கை டெஸ்ட் தொடர்: பென் ஸ்டோக்ஸ் விலகல்

Posted: 23 May 2016 12:18 PM PDT

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கலை இலக்கிய பெருமன்ற முகாம்

Posted: 23 May 2016 12:18 PM PDT

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நா. வானமாமலை நினைவு கலை இலக்கிய முகாம் திற்பரப்பில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.

உலக குத்துச்சண்டை: காலிறுதியில் சர்ஜுபாலா, சீமா

Posted: 23 May 2016 12:18 PM PDT

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சர்ஜுபாலா தேவி, சீமா பூனியா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? குஜராத்-பெங்களூர் இன்று பலப்பரீட்சை

Posted: 23 May 2016 12:17 PM PDT

இதில் லீக் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் லயன்ஸும், 2-ஆவது இடத்தைப் பிடித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.

நாகர்கோவிலில் துணிக்கடையில் புகுந்த வேன்

Posted: 23 May 2016 12:17 PM PDT

நாகர்கோவிலில் திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் துணிக்கடை மீது வேன் மோதியது. இதில் வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இடம்பிடித்தார் ஷர்துல் தாக்குர்

Posted: 23 May 2016 12:15 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளரான

தாஜ் மஹாலில் நிறம் மங்கும் பளிங்குக் கற்கள்: காரணம் கண்டறிய உ.பி. முதல்வர் உத்தரவு

Posted: 23 May 2016 12:13 PM PDT

தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை

Posted: 23 May 2016 12:12 PM PDT

நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

கேரள அமைச்சர்கள் பட்டியல்: சிபிஎம், சிபிஐ வெளியீடு

Posted: 23 May 2016 12:11 PM PDT

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இடதுசாரி முன்னணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சிகளான

தாயகம் திரும்ப அனுமதி கோரிய இத்தாலி வீரரின் மனு ஏற்பு

Posted: 23 May 2016 12:10 PM PDT

கேரள கடல் எல்லையில் இரண்டு மீனவர்களை கடந்த 2012-ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றது தொடர்பாக

கேரளத்தின் 6 நகரங்களில் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

Posted: 23 May 2016 12:10 PM PDT

கேரள தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 நகரங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

Posted: 23 May 2016 12:09 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற விஜயதரணி தில்லியில் முகாம்

Posted: 23 May 2016 12:07 PM PDT

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை பெறுவதற்காக அக்கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி தில்லியில் முகாமிட்டுள்ளார்.

திருவிழா அமைதிப் பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லைகோயிலை மூட ஆர்டிஓ உத்தரவு

Posted: 23 May 2016 12:07 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே திருவிழா தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கோயிலை மூட வேலூர் கோட்டாட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

சரக்கு ரயிலில் திடீர் தீ விபத்து

Posted: 23 May 2016 12:07 PM PDT

வாலாஜாபேட்டை அருகே உள்ள தலங்கை ரயில் நிலையத்தில், சரக்கு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

முதல்வர் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பு

Posted: 23 May 2016 12:07 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில் வேலூரில் எல்.இ.டி. திரையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முதல்வர் பதவியேற்பு: ராமேசுவரத்தில் கொண்டாட்டம்

Posted: 23 May 2016 12:07 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதை ராமேசுவரத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 23 May 2016 12:07 PM PDT

வேலூரில் என்சிசி பட்டாலியன் மாணவர்கள் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வனச்சரக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

Posted: 23 May 2016 12:06 PM PDT

பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 23 May 2016 12:06 PM PDT

கடலாடி அருகே சிறுகுடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கலாராணி(35). இவர் கடலாடி நாடார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டிக்கு சென்று விட்டார்.

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்டம்

Posted: 23 May 2016 12:06 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குறைதீர் முகாமில் 166 மனுக்கள் அளிப்பு

Posted: 23 May 2016 12:06 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 166 மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted: 23 May 2016 12:06 PM PDT

மீண்டும் அதே பணி: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன்,

முதியவர் அடித்துக் கொலை

Posted: 23 May 2016 12:06 PM PDT

அரக்கோணம் அருகே குடும்பத் தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கையில் குறைதீர்க்கும் கூட்டம்: 75 பேர் மனு

Posted: 23 May 2016 12:05 PM PDT

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 பேர் மனு அளித்துள்ளனர். 

ஸ்ரீநகரில் 2 இடங்களில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 3 போலீஸார் பலி

Posted: 23 May 2016 12:05 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் 2 இடங்களில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய திடீர் தாக்குதல்களில் காவல்துறை அதிகாரி உள்பட 3 போலீஸார் பலியாகினர்.

பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் "ஆன் லைனில்' விண்ணப்பம்

Posted: 23 May 2016 12:05 PM PDT

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் செவ்வாய்க்கிழமை (மே 24) முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாநில கலந்தாய்வு மையச் செயலர் அ. மாலா தெரிவித்தார்.

இலவச தடகளப் பயிற்சி முகாம் நிறைவு விழா

Posted: 23 May 2016 12:04 PM PDT

ராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹாக்ஸ் தடகளச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இலவச தடகளப் பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக நிறைவு விழா

Posted: 23 May 2016 12:04 PM PDT

திருவாடானை ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் சனிக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.

பேரவை தாற்காலிக தலைவராக செம்மலை பொறுப்பேற்பு

Posted: 23 May 2016 12:04 PM PDT

சட்டப் பேரவை தாற்காலிக தலைவராக எஸ்.செம்மலை திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாண உறுதிமொழி செய்து வைத்தார்.

விசைப்படகுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு

Posted: 23 May 2016 12:04 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளை மீன்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை  ஆய்வு செய்தனர்.

குறைதீர் கூட்டம் மீண்டும் தொடக்கம்

Posted: 23 May 2016 12:03 PM PDT

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இரண்டாவது திருமணம் செய்த கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

Posted: 23 May 2016 12:03 PM PDT

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது திருவாடானை மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரத்த தான முகாம்

Posted: 23 May 2016 12:02 PM PDT

ராமேசுவரம் அரசு மருத்துமனையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1341-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முத்தரையர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பாக ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை முதல்வர் பதவிக்கு காங்கிரஸில் மும்முனைப் போட்டி

Posted: 23 May 2016 12:02 PM PDT

காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர்

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

Posted: 23 May 2016 12:01 PM PDT

தேவகோட்டை பகுதியில் பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கிளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்ணை மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு

Posted: 23 May 2016 12:01 PM PDT

தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

பிரணாப் முகர்ஜி இன்று சீனா பயணம்

Posted: 23 May 2016 12:01 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 4 நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (மே 24) சீனா செல்கிறார்.

ராமநாதபுரத்தில்  மே 26-இல் அசோலா வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

Posted: 23 May 2016 12:00 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 26-ஆம் தேதி அசோலா வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பாவாலி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 23 May 2016 12:00 PM PDT

விருதுநகரில் சேதமடைந்த பாவாலி சாலையை சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம்: மோடி - ரெளஹானி முன்னிலையில் கையெழுத்து

Posted: 23 May 2016 11:59 AM PDT

இந்தியா - ஈரான் இடையே சிறப்புமிக்க சாப்ஹார் துறைமுக மேம்பாடு, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி

முதல்வருக்கு தொழில்முனைவோர்,வணிகர் சங்கப் பேரமைப்பு வாழ்த்து

Posted: 23 May 2016 11:59 AM PDT

தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தொழில் முனைவோர், வணிகர் சங்கப் பேரமைப்பு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

குதிரை வாகனத்தில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் வீதி உலா

Posted: 23 May 2016 11:59 AM PDT

விருதுநகர் ஸ்ரீபராசக்தி வெயிலுகந்தம்மன், மாரியம்மன் சுவாமிகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு திங்கள்கிழமை காட்சியளித்தனர்.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 23 May 2016 11:59 AM PDT

அரக்கோணம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து சங்கிலி பறிக்கப்பட்டது.

ஐ.ஜி.சி.எஸ்.இ. தேர்வில் ஜி.கே.உலகப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 23 May 2016 11:59 AM PDT

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளி மாணவர்கள், கேம்பிரிட்ஜ் ஐ.ஜி.சி.எஸ்.இ. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

சுமை வாகனம் மோதி இளைஞர் காயம்

Posted: 23 May 2016 11:59 AM PDT

விளாத்திகுளம் தாலுகா, பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த அ.அந்தோணி பாக்கிய இருதயராஜ்(25) மற்றும் உறவினர்கள் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோஷ்டி மோதல்: 4 பேர் கைது

Posted: 23 May 2016 11:58 AM PDT

குடியாத்தம் அருகே தேர்தலின்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 23 May 2016 11:58 AM PDT

தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில், ஆற்காடு பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர்.

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Posted: 23 May 2016 11:58 AM PDT

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா.ஹரிபாஸ்கர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மணல் குவாரியை மூட வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

Posted: 23 May 2016 11:58 AM PDT

பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் அமைந்துள்ள மணல் குவாரியை மூட வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

Posted: 23 May 2016 11:57 AM PDT

ராஜபாளையம் அருகே சிலம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்(47). விவசாயி. இவர் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். பின்னர் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என எட்டி பார்த்தார். அப்போது கைப்பிடிச்சுவர் இடிந்ததில் கிணற்றில் விழுந்தவர் பாறையில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் முனியசாமி தளவாய்புரம் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகாசி

Posted: 23 May 2016 11:57 AM PDT

ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து

Posted: 23 May 2016 11:57 AM PDT

காஞ்சிபுரத்தில் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டி தீப்பிடித்தது.

திருத்தணியில் 106 டிகிரி வெயில்

Posted: 23 May 2016 11:57 AM PDT

அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், திருத்தணியில் கடந்த மூன்று நாள்களாக 104-106 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.

கேரள பழங்கள் வரத்து அதிகரிப்பு

Posted: 23 May 2016 11:57 AM PDT

ராஜபாளையத்தில் கேரளாவில் விளையும் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன.

கல்பாக்கம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

Posted: 23 May 2016 11:56 AM PDT

கல்பாக்கம் அருகே சுமார் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கூமாப்பட்டி பகுதியில் நெல்பயிர்கள் அறுவடைக்கு தயார்

Posted: 23 May 2016 11:56 AM PDT

வத்திராயிருப்பு, கூமாப்பட்டி பகுதியில் நெல்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

தில்லியில் புழுதிக் காற்றுடன் திடீர் மழை!

Posted: 23 May 2016 11:55 AM PDT

தலைநகர் தில்லியில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென புழுதிக் காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால், சில நாள்களாக கடும் வெயில் காரணமாக புழுக்கத்தில் தவித்து வந்த தில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™