ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)
- அஃறிணை நன்றிகள்
- ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழ்கள் 2016
- பாமரர் தேவாரம்
- இது அப்பா, இது அம்மா...!
- தேர்தலும் கடந்து போகும்...!
- 234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன்
- அப்பா - ஒரு பக்க கதை
- வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்
- 'ஆசை வெட்கமறியும்' நாவல்
- மனிதன் – திரை விமர்சனம் !
- தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...
- இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா
- புரட்சியாளர் பிறப்பதில்லை
- ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)
- மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
- வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை
- தங்க முதலீட்டு திட்டத்தில் திருப்பதியின் 7.5 டன் தங்கம்?
- குஜராத்-டெல்லி இன்று மோதல்
- பெங்களூரை பந்தாடினார் பதான்
- ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள்
- பித்தப் பூக்கள்...!!
ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்) Posted: 03 May 2016 11:02 AM PDT |
Posted: 03 May 2016 10:51 AM PDT அஃறிணை நன்றிகள் எந்தன் வாயில் நுழைந்து பற்கள் இடுக்கில் இழைந்து பல்லின் சொத்தை குறைத்து போவாய் நீயும் விரிந்து எனக்கு காப்பாய் இருக்கும் பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே. எந்தன் உடலில் உராய்ந்து எந்தன் அழுக்கை தேய்த்து நன்றாய் நீயும் நுரைத்து போவாய் நீயும் கரைந்து எனக்கு காப்பாய் இருக்கும் சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே. எனக்கு அழகை சேர்த்து எந்தன் மானம் காத்து என்னால் நீயும் கிழிந்து போவாய் நீயும் அழிந்து எனக்கு காப்பாய் இருக்கும் உடையே !!! உனக்கு ... |
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழ்கள் 2016 Posted: 03 May 2016 07:47 AM PDT ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழ்கள் 2016 மே mediafire.com download/3amj98zv3w4s1yw/RKV_May2016.pdf ஏப்ரல் mediafire.com download/8zly9stony8upfb/RKV_April2016.pdf மார்ச் mediafire.com download/j93g6pw7n8y8a9v/RKV_March2016.pdf பெப்ரவரி mediafire.com download/1x0yyd3tq0k2a60/RKV_Feb2016.pdf ஜனவரி mediafire.com download/p31cjpe5qrpfz5p/RKV_Jan2016.pdf |
Posted: 03 May 2016 06:54 AM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
Posted: 03 May 2016 06:28 AM PDT - * விளையாட்டுப் பொருட்களைப் போலவே மனதிற்குள் அடுக்கி வைத்துக்கொள்கிறார்கள் குழந்தைகள் நம்மை இது அப்பா, இது அம்மாவென்று! * தந்தையும் மகனுமானாலென்ன தந்தையும் மகளுமானாலென்ன வயிறும் வாயும் வேறு வேறுதானே என்கிறார்கள் ஆம், அதெல்லாம் வேறு வேறுதான். ஆனால் எங்களுக்கு உயிர் மட்டும் ஒன்றேயொன்று, அது அவர்களுக்கான ஒன்று! * தூங்கும்போது எனது குழந்தைகளின் முகத்தையே பார்க்கிறேன் எனைப் போலவேதானே வாழ்க்கை இவர்களுக்கும் வலிக்குமென்று துடிக்கிறேன். – |
Posted: 03 May 2016 05:54 AM PDT - தலைவர் கூட்டணி அமைக்கறதுக்குள்ள...'' ''வழக்கம் போல 'தேர்தலும் கடந்து போகும்'னு சொல்லுங்க!'' - பெ.பாண்டியன், - ---------------------------------------------------------------- - தலைவரை வாக்கிங் போகக் கூடாதுன்னு ஏன் மேலிடத்துல சொல்லியிருக்காங்க..?'' - ''மறந்து போய் தொகுதிக்குப் போயிடறாராம் - வி.சாரதி டேச்சு, - ---------------------------------------------------------------------- ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...'' - ''வர்ற தேர்தல்ல, ஓட்டு போட்ட பிறகு கைவிரல்ல மை வைப்பாங்களா? இல்ல... ... |
234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன் Posted: 03 May 2016 05:51 AM PDT - 'தலைவர் தினமும் மாடியில ஒவ்வொரு படிக்கட்டுல உட்கார்ந்து குடிக்கறாரே... ஏன்?'' ''படிப்படியா குடியை விடறாராம்!'' - அஜித், - ----------------------------------------------------------- - ''ஓட்டுக்கு பணம் குடுக்கும்போது தலைவரைக் கையும் களவுமா பிடிச்சிட்டாங்களா... அப்புறம்?'' ''ஓட்டு வங்கியில பணத்தை டெபாசிட் பண்றோம்னு சொல்லிட்டாரு!'' - - எஸ்.எலிசபெத் ராணி, - ------------------------------------------------------------------- - தலைவர் வீட்டுக்கு பொண்ணு கேட்கப் போனீங்களே... என்ன ... |
Posted: 03 May 2016 02:59 AM PDT - சரவணன் அலுவலகம் முடித்துவிட்டு வழக்கம் போல தன் நண்பர்களுடன் டாஸ்மாக் பாரை நோக்கி நடந்தான். தினமும் இரவு ஒன்பது மணி வரை நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிடுவது அவன் வழக்கம். அன்றும் அப்படி குடித்துவிட்டு அரை போதையில் அவன் வீடு வந்து சேரும்போது மணி பத்தாகிவிட்டது. அம்மா பார்வதி பதற்றத்துடன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். ''டேய் சரவணா... அப்பாவை இன்னும் காணலைடா!'' - அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. தினமும் வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கே வந்துவிடுபவராச்சே... ... |
வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Posted: 03 May 2016 02:36 AM PDT வாரணாசி: - - புகை மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் கங்கையில் இயக்கப்படும் அனைத்து படகுகளையும் இ–படகுகளாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். கங்கையில் தற்போது டீசலால் இயங்கும் இயந்திரம் பொருத்திய படகுகள் பயன்படுத்தப் படுகின்றன. அதிக டீசல் புகை காரணமாக கங்கையில் மாசு ஏற்படுகிறது. அதனால், அங்கு சூரிய சக்தியால் இயங்கும் படகுகளை போக்குவரத்துக்கு தொடங்கி வைத்தார். மாதந்தோறும் மோடி தமது தொகுதியான வாரணாசிக்குச் செல்வதை ... |
Posted: 03 May 2016 02:24 AM PDT 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களின் 'ஆசை வெட்கமறியும்' நாவலை டவுன்லோட் செய்ய mediafire.com download/3r94h6stdov7a8s/Manian_AasaiVetkamariyum.pdf |
Posted: 03 May 2016 01:31 AM PDT கோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை. இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார். இதனால் ... |
தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது... Posted: 03 May 2016 01:26 AM PDT -- 'தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...'' - ''எப்படிச் சொல்றே..?'' - ''அவர் பேசறதுதான் யாருக்கும் புரியாதே!'' - - தீ.அசோகன், - ------------------------------------------------- - கூட்டணி பேசப் போன தலைவர் ஏன் சோகமா இருக்கிறார்?'' ''தொகுதிகள்தான் தருவோம்... வேட்பாளர்கள் எல்லாம் தரமாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்!'' - - கி.ரவிக்குமார், - -------------------------------------------- - முதல் அமைச்சர் கனவு கலைந்து போய்விடக் கூடாது என்பதால்தான் எங்கள் தலைவர் பிரசார ... |
இதயங்களைத் ‘துடிக்க’ வைத்த சமந்தா Posted: 03 May 2016 01:05 AM PDT - இளவட்ட ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அதுவும் தமிழ் பேசத் தெரிந்த சென்னைவாசியான சமந்தா, இதயநோய் சம்பந்தமாக ஓர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் 70 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இதயத்தை துடிக்க வைத்திருக்கிறார். இன்றைய நடிகைகளில் சிலர் உண்மையாகவே சிரமப்படுவோரைக் கண்டறிந்து, மனப்பூர்வமாக உதவி செய்வது வியப்பாக உள்ளது. ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போது சமந்தாவும் தன் ... |
Posted: 02 May 2016 08:51 PM PDT - புரட்சியாளன் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறான்! சர்வாதிகாரம் தலை தூக்கும் போது, ஜன சமுத்திரம் பொங்கி எழுவது அவசியம்! உழைப்பை சுரண்டி குருதி குடிக்கும் குள்ள நரி யார்? காயப்படும் எறும்பும் கடிக்க முற்படும் அடிபடும் நாமும் துடிப்பது தவறல்லவே! ஓட்டுக்காக நோட்டு வாங்கி ஜனநாயக உரிமையை அடகு வைப்பதா? பாட்டாளிக்கும் பாட்டுக்கும் உயிர் கொடுத்த பட்டுக்கோட்டை பாடகரை மறக்கலாமா? குண்டுக்கு இரையான தேச பிதாவின் தேசத்தை மறக்கலாமா? ஜாதி, மதம் பேசி குருதி ஆறு ஓடுவது ... |
ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்) Posted: 02 May 2016 08:32 PM PDT |
மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு! Posted: 02 May 2016 08:20 PM PDT - பாரிஸ் : பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் வாழ தகுந்த கிரகங்கள் குறித்து பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவில் அப்பல்கலையின் விண்வெளித் துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறியதாவது: உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சிறு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்துள்ளோம். நம் சூரிய குடும்பத்தை போலவே இதிலும் வேதியியல் படிமங்கள் நிறைந்துள்ளது. புதிதாக கண்டுபிடித்த இக் கிரகங்கள் ... |
வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை Posted: 02 May 2016 08:11 PM PDT - அலகாபாத்: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்,கங்கை நதி வற்றி வருகிறது. யமுனா, சரஸ்வதி நதிகள் கங்கையுடன் இணையும் பிரயாகை என்ற இடத்தில் நதி வற்றியுள்ளது, அப்பகுதி உள்ளூர் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், இன்று நிலைமை மிகவும்மோசமாக உள்ளது. நதியில் தண்ணீர் இல்லை. மக்கள் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நடந்தே செல்கின்றனர். கங்கை நதியில் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. ... |
தங்க முதலீட்டு திட்டத்தில் திருப்பதியின் 7.5 டன் தங்கம்? Posted: 02 May 2016 08:09 PM PDT - ஐதராபாத்: உலகின் பணக்கார ஹிந்து கோவிலை நிர்வகித்து வரும், திருமலை - திருப்பதி தேவஸ்தானம், பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய, தங்க சேமிப்பு திட்டத்தில், தன் வசமுள்ள, 7.5 டன் தங்கத்தை முதலீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் நிர்வாக அலுவலர் சாம்பசிவ ராவ், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத்திய, தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், 1.3 டன் தங்கத்தை, ... |
Posted: 02 May 2016 08:02 PM PDT - ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத் அணி, உள்ளூர் மைதானமான ராஜ்கோட்டில் விளையாடவுள்ள கடைசி ஆட்டம் இதுவாகும். எனவே இந்த ஆட்டத்தை வெற்றியோடு முடிப்பதில் அந்த அணி தீவிரமாக உள்ளது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி, தில்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத்திடம் கண்ட ... |
Posted: 02 May 2016 07:40 PM PDT - ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தபோது, யூசுப் பதான் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கொல்கத்தா 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. பெங்களூர் 5-ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு ... |
ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள் Posted: 02 May 2016 07:25 PM PDT தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டதற்கு ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தோடு சேர்த்து ரூ.5 தொகையையும் அனுப்பி வைத்துள்ளனர். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.162 நாள் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்தத் தொகையை மத்திய அரசு ரூ.167 ஆக உயர்த்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், ... |
Posted: 02 May 2016 05:34 PM PDT அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். * |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |