ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 13 வகையான சாபங்கள்
- சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும்
- சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை
- NEWS ----CMS
- விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு
- மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல்
- செம்மலை - தாற்காலிக சபாநாயகர்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)
- புத்த பூர்ணிமா
- அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு
- காஞ்சி பெரியவர் 10
- டேபிளுக்கு அடியிலதான் கையை நீட்டுவாரு…!!
- மருது - திரைப்பட விமர்சனம்
- கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!
- சரவண பொய்கையில் நீராடி - திரைப்பட பாடல் காணொளி
- அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு
- இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
- கண்ணானால் நான் இமையாவேன்
- சரவண பொய்கையில் நீராடி
- மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
- சுவாமி விவேகானந்தர்
Posted: 21 May 2016 10:16 AM PDT சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!.. 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. ... |
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Posted: 21 May 2016 10:07 AM PDT 1. திருமுடி: திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் ( யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம். 2. திருமுகம்: உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே ( உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம். 3. இருதயம்: முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை ( உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும். 4. திருவடி: யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் ... |
சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Posted: 21 May 2016 10:03 AM PDT கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும் கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன? பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் ... |
Posted: 21 May 2016 09:35 AM PDT NEWS ----CMS N --North தில் மஹபூபா-----------பெண் முதலமைச்சர் E ---East இல் மம்தா பனேர்ஜி---பெண் முதலமைச்சர் W --West இல் ஆனந்தி பென்----பெண் முதலமைச்சர் S ---South இல் ஜெயலலிதா ----பெண் முதலமைச்சர் நான்கு திசைகளிலும் பெண் முதலமைச்சர்கள் ----கணவன் இல்லா பெண் முதலமைச்சர்கள் மத்தியில் நரேந்திர மோடி --பிரதமர் --மனைவியுடன் வாழா பிரதமர் . பிக்கள் பிடுங்கல் இல்லாமல் சேவை செய்யவோ ? மின்னஞ்சல் ரமணியன் . |
விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு Posted: 21 May 2016 08:19 AM PDT சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டது. இந்த கூட்டணியின் தேமுதிக விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும், இக்கூட்டணியினர் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வைப்புத் தொகையை இழந்தார். கூட்டணி ... |
மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல் Posted: 21 May 2016 08:16 AM PDT சென்னை: முதல்வர் ஜெயலலிதா வருகிற திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். - அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். - அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம் - முதல்வர் ஜெயலலிதா - பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறை ஓ.பன்னீர் செல்வம் - நிதி திண்டுக்கல் சி.சீனிவாசன் - வனம் எடப்பாடி கே.பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை ... |
Posted: 21 May 2016 08:13 AM PDT - சென்னை: தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக மேட்டூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். செம்மலை வருகிற திங்கள்கிழமை (23 ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா முன்பு தாற்காலிக சபாநாயகராகப் பதவியேற்று கொள்வார் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். -- |
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 21 May 2016 07:07 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :) Posted: 21 May 2016 06:56 AM PDT 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance அன்புடன், கிருஷ்ணாம்மா |
Posted: 21 May 2016 06:44 AM PDT -- வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அந்த நாளில்தான் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. - அதே வைகாசி பவுர்ணமியன்றுதான் உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார். இதேநாளின்தான் நம்மாழ்வாரும் பிறந்துள்ளார். - மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. ... |
அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு Posted: 21 May 2016 06:28 AM PDT அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஜூன் 13 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதிகளுக்கு வரும் 25 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்கு வாக்குப் பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில், வாக்குப் ... |
Posted: 21 May 2016 06:25 AM PDT - காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும், காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: - # விழுப்புரத்தில் (1894) பிறந்தார். இயற்பெயர் சுவாமிநாதன். மாவட்ட கல்வி அதிகாரியான தந்தையிடம் 8 வயது வரை கல்வி பயின்றார். திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ந்தார். பள்ளியில் நடந்த ... |
டேபிளுக்கு அடியிலதான் கையை நீட்டுவாரு…!! Posted: 21 May 2016 06:15 AM PDT டாக்டர்கிட்ட உண்மையைத்தான் பேசணும்..! - சத்தியமா உங்களுக்கு பீஸ் கொடுத்துத்தான் என் சொத்து பூராவும் அழிஞ்சுது டாக்டர்...! - அ.ராஜா ரஹ்மான் - --------------------------------- - ஓட்டுக்கு 500 கேட்கலாம், 1000 கூட கேட்கலாம், ஐம்பதாயிரம் கேட்கறியே, நியாயமாய்யா..? - பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்,தலைவரே...! - பா.சுபானு - -------------------------- |
Posted: 21 May 2016 05:49 AM PDT - லோடுமேன் வேலை பார்க்கும் விஷாலுக்கு, அப்பத்தா என்றால் அவ்வளவு பாசம். 'நீயெல்லாம் மனுஷியே கிடையாது, தெய்வம்!' என்று தன்னிடம் நெகிழ்ந்து உருகும் பேரன் விஷாலிடம் ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கச் சொல்கிறார் அப்பத்தா. - காதல் கடந்துபோக, கலவரம் துரத்த, அப்பாத்தாவை வில்லன் கடத்த... அப்புறமென்ன... வழக்கம்போல வில்லனுக்கும் விஷாலுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்தான்! - பட விளம்பரங்களில் 'விஷால் நடிக்கும்..' என்று இருக்கிறது. அதை, 'விஷால் அடிக்கும்...' என்று கூட மாற்றலாம். அந்தளவுக்கு அடிக்கு ... |
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Posted: 21 May 2016 05:35 AM PDT கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள். - தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் தொழிலாளர்கள். - ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன் பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலக நாடுகளுக்கு ... |
சரவண பொய்கையில் நீராடி - திரைப்பட பாடல் காணொளி Posted: 20 May 2016 09:20 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு Posted: 20 May 2016 08:36 PM PDT -- திஸ்பூர்,: அசாம் மாநிலத்தில், அமோக வெற்றி பெற்றுள்ள பா.ஜ., கூட்டணி, மே, 24ல், ஆட்சி பொறுப்பேற்கிறது; முதல்வராக, பா.ஜ.,வின் சர்பானந்தா சோனவால், பதவியேற்கிறார். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றது. அங்கு, அசைக்க முடியாத வலிமையுடன் இருந்து வந்த முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள, 126 தொகுதி களில், பா.ஜ., கூட்டணி, 86 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., தனியாக, 60 இடங்களிலும், ... |
இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல் Posted: 20 May 2016 08:06 PM PDT புதுடில்லி: இந்தியாவில் வாழும் குடும்பங்கள் குறித்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமை பதிவாளர் டில்லியில் நேற்று வெளியிட்டார். - அதன்படி இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 24 கோடியே 88 லட்சம் ஆகும். இதில் இந்து குடும்பங்கள் மட்டும் 20 கோடியே 24 லட்சம். முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சம். 63 லட்சம் குடும்பங்கள் கிறிஸ்தவர்களைச் சேர்ந்தவை. - இது தவிர நாட்டில் 41 லட்சம் சீக்கிய குடும்பங்களும், ... |
Posted: 20 May 2016 07:51 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 20 May 2016 07:46 PM PDT - திரைப்படம் : இது சத்தியம் இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடியவர் : பி.சுசீலா பாடல் : கண்ணதாசன் - --------------------------- - சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் - அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் ... |
மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி! Posted: 20 May 2016 06:41 PM PDT தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் ... |
Posted: 20 May 2016 04:08 PM PDT சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........ சுவாமி விவேகானந்தர். |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |