ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சம்மர் டிப்ஸ்...
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- பூதம் காட்டிய புண்ணியவழி !
- பிராயச்சித்தம்!
- மனைவிகளுக்கு உள்ள மனக்குமுறல்கள்!
- படித்ததில் பிடித்தது :) -..விடுதி காப்பாளரின் சாட்டையடி வார்த்தை!
- நினைத்தாலே இனிக்கும் - மின்னூல்
- பென்சில் பட விமர்சனம்
- டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம்
- எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
- வாவ்!!! -வாய்பிளக்க வைத்த ஐஸ்
- தலைவன் ஒரு சிந்தனை - எம்.எஸ். உதயமூர்த்தி
- எண்ணங்கள் - எம்.எஸ். உதயமூர்த்தி (தெளிவான pdf)
- ‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்
- - நடிகை பேசுனப்ப ஓவர் கூட்டம்...!
- அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12 மாநிலங்களுக்கு இலவச உணவு: உச்ச நீதிமன்றம் அறிவுரை
- ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த பெண் பணிநீக்கம்:
- நாளை 20 மே - நரசிம்ஹ ஜெயந்தி !
- பஞ்சாப் அணி தோல்வி
- அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- கூட்டிச் செல், காட்டிச் சொல்
- ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
- ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !
- கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..!
- ஆக் ஷன் வேடத்தில் நிக்கி கல்ராணி!
- மீண்டும் பல்ராம் நாயுடுவாக கமல்!
- புதுச்சேரியில் மதுவிலக்கு இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
- பூதம் காட்டிய புண்ணியவழி
- சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர்
- கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
- வங்கதேசம்: மின்னல் தாக்கி 56 பேர் பலி
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
Posted: 15 May 2016 12:53 PM PDT வேனல் கட்டிகள்! வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும். பொதுவாக வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும். ஆண்களுக்கு சட்டை காலர், கழுத்தில் உராய்ந்து கொண்டேயிருப்பதால் அந்தப் பகுதியில் கட்டிகள் அதிகம் வருகின்றன. வேனல்கட்டிகள் வந்தால், அவற்றை பிதுக்கி சீழை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்யும்போது நோய்க் கிருமிகள் பக்கத்து ... |
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 15 May 2016 12:51 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
Posted: 15 May 2016 12:48 PM PDT இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, 'பச்... சாமியாவது ஒண்ணாவது...' என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, 'ஜோசியமே பொய்...' என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...' என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு. சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம். கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை ... |
Posted: 15 May 2016 12:45 PM PDT 'அடிமை, பொண்டாட்டிதாசன், பொம்பளை, மதுரை' என்று, கீர்த்திவாசனுக்கு பல பெயர்கள் உண்டு. ஆனாலும், அதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்பட்டதோ, கோபப்பட்டதோ இல்லை. மாறாக, புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வார். ஐம்பது வயதை நெருங்கும் கீர்த்திவாசனுக்கு ஒரே மகன் ரகு; இப்போது தான் பி.இ., முடித்து, வேலையில் சேர்ந்திருக்கிறான். அதற்குள் பெண்ணை பெற்றோர் பலர், அவரையும், அவர் மனைவி மீனாட்சியையும் மொய்க்கத் துவங்கி விட்டனர். நகரில் பெரிய வீடு, பிக்கல் இல்லாத குடும்பம், படிப்பு, வேலை, நல்ல தோற்றம் என்று எந்தக் ... |
மனைவிகளுக்கு உள்ள மனக்குமுறல்கள்! Posted: 15 May 2016 12:43 PM PDT வெளியில் கூறப்படாத சட்டமாக உள்ள இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதங்களும், பண்பாடு என்ற பெயரால் சமுதாய கட்டுப்பாடுகளும் மிக, மென்மையான வடிவத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு, கடுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் கூறுகிறாள்... 'அம்மா உன் மாப்பிள்ளை ரொம்ப அநியாயம் செய்றாரு...' அம்மா சொல்கிறாள்... 'என்ன செய்யச் சொல்ற... ஆம்பிளைங்களே இப்படித்தான்; ... |
படித்ததில் பிடித்தது :) -..விடுதி காப்பாளரின் சாட்டையடி வார்த்தை! Posted: 15 May 2016 12:02 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
நினைத்தாலே இனிக்கும் - மின்னூல் Posted: 15 May 2016 11:58 AM PDT நினைத்தாலே இனிக்கும் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி நம் ஈகரையில் கடந்த மாதம், தொடர் பதிவாக வந்து நிறைவடைந்த 'வேளுக்குடி உ. வே. கிருஷ்ணன் சுவாமி' அவர்களின் நினைத்தாலே இனிக்கும் பதிவை மின்னூலாக கொடுத்துள்ளேன். உறவுகள் தரவிறக்கம் செய்து மீண்டும் படித்து மகிழுங்கள். DOWNLOAD |
Posted: 15 May 2016 11:49 AM PDT - ஊருக்குள்ளேயே மிகப்பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டு படிக்கிற குட்பாய்' ஜி.வி.பிரகாஷுக்கும், 'சூப்பர் ஸ்டார்' விஜித்காந்த் மகன் ஷாரிக் ஹாசனுக்கும் ஆரம்பத்திலிருந்தே 'கா'. நம்பர் ஒன் ஸ்டூடண்டான ஜி.வி. பிரகாஷை, ஆரம்பத்தில் ஒதுக்கி, பின்னர் ஓரப்பார்வை பார்க்கிறார் அதே க்ளாஸில் படிக்கும் கமிஷனர் மகள் ஸ்ரீதிவ்யா. இடைவேளை ப்ளாக்கில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தில், ஜி.வி.பிரகாஷ் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவருடன் சேர்ந்து ஸ்ரீதிவ்யாவும் அந்த அசம்பாவிதத்தின் முடிச்சை அவிழ்ப்பதை இடைவேளைக்குப் ... |
டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம் Posted: 15 May 2016 11:16 AM PDT டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம் காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... ... |
எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!! Posted: 15 May 2016 11:15 AM PDT - உன் மாமியார் சரியான சீரியல் பைத்தியம் போல இருக்கு...! - எப்படி சொல்றே? - பொண்ணு ஊருக்குப் போறீங்களே, அங்கே எத்தனை நாள் தங்கி இருப்பீங்கன்னு கேட்டா, திங்கள் முதல் வெள்ளி' வரைன்னு சொல்றாஙகளே...! - எஸ்.ஸ்ரீதர் - --------------------------------- - கூட்டத்துல பேசும்போது எண்ணிப் பாருங்கள்... எண்ணிப் பாருங்கள்-னு அடிக்கடி சொல்லாதீங்க தலைவரே! - ஏன்ய்யா..? - அம்பது ரூபா குறைவா இருக்குன்னு ஒருத்தன் கம்பிளைண்டோட வந்துட்டான்..! - அஜித் - ---------------------------- குமுதம் - தொடரும்... |
Posted: 15 May 2016 10:54 AM PDT - 69வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் அசத்தலாக வந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். – குவைத் ஆடை வடிவமைப்பாளர் அலி யூன்ஸ் வடிவமைத்திருந்த மது நிற உடையில் வந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் சிவப்பு கம்பள வரவேற்பில் தலைசுற்ற வைத்தார். – முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், பிரஞ்சு ரிவெய்ராவுடனான 15வது ஆண்டு கொண்டாட்டத்தை பகிரும் வகையில் கலந்துக் கொண்டார். – தற்போது, 'மா லாட்' (ஸ்லேக் லேடி) ... |
தலைவன் ஒரு சிந்தனை - எம்.எஸ். உதயமூர்த்தி Posted: 15 May 2016 10:54 AM PDT |
எண்ணங்கள் - எம்.எஸ். உதயமூர்த்தி (தெளிவான pdf) Posted: 15 May 2016 10:53 AM PDT |
‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள் Posted: 15 May 2016 10:47 AM PDT - ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான 'பென்சில்' திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. – தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. – இப்படி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் 'பென்சில்'. இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் ... |
- நடிகை பேசுனப்ப ஓவர் கூட்டம்...! Posted: 15 May 2016 10:37 AM PDT - - நடிகை பேசுனப்ப ஓவர் கூட்டம்...! - தலைவர் பேசுனப்ப..? - கூட்டமே ஓவர்...!! - தஞ்சை தாமு - ------------------------------ - தலைவர் அவரோட குடும்ப ஜோசியரை ஏன் வீட்டை விட்டு துரத்தறாரு..? - 2056 லேதான் தலைவருக்கு வலுவான கூட்டணி அமைய வாய்ப்பிருக்குன்னாராம்..! - கே.அருள்சாமி - - எலக்சன் தேதியை மாத்துவாங்களான்னு தலைவர் கேட்கிறாரே, ஏன்? - மே 16-ம் தேதி தினபலன்ல அவருக்கு ஏமாற்றம்- னு போட்டிருக்காம்..! - சரஸ்வதி செந்தில் - ------------------------------ - எங்க ... |
அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை அறிவிக்கப்பட்டுள்ளது. Posted: 15 May 2016 10:36 AM PDT - அமெரிக்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அருகி வரும் இனமாக காட்டெருமை ஆகி விட்டது. இந்நிலையில், காட்டெருமையின் முக்கியத்தை எடுத்துக் கூறும் வகையில் அதனை அமெரிக்காவின் தேசிய விலங்காக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. காட்டெருமை இனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் ... |
12 மாநிலங்களுக்கு இலவச உணவு: உச்ச நீதிமன்றம் அறிவுரை Posted: 15 May 2016 10:35 AM PDT புதுதில்லி: வறட்சி பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. - வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசுகள் நிவாரணம் அளிக்க வேண்டும். அதில் உச்ச நீதிமன்ற தலையீடு அவசியம் என கோரி சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் அளித்திருந்தார். - அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டமோ ... |
ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த பெண் பணிநீக்கம்: Posted: 15 May 2016 10:31 AM PDT - லண்டன்: ஹை ஹீல்ஸ் அணிய மறுத்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிர்சிகரமான சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. - நிக்கோலா தோர்ப் (27) என்ற பெண், நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் மேற்பார்வையாளர், நிக்கோலா தோர்ப்பை 2 முதல் 4 இன்ச்கள் கொண்ட ஹை ஹீல்ஸ் செருப்பு தான் அணிந்து பணிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், தனக்கு ஹை ஹீல்ஸ் அணிந்து அவ்வளவு நேரம் பணிபுரிய முடியாது என்று கூறி இதனை மறுத்த நிக்கோலா, ... |
நாளை 20 மே - நரசிம்ஹ ஜெயந்தி ! Posted: 15 May 2016 10:24 AM PDT வலது காலை மடித்து அமர்ந்துள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்; சில அம்மன் கோவில்களில், இந்த தரிசனத்தைக் காண முடியும். நரசிம்ம விக்ரகங்கள் பெரும்பாலும் இடது காலை மடித்து, அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில், வலது காலை மடித்து அமர்ந்து அருள்பாலிக்கிறார், நரசிம்மர். நரசிம்மர் என்ற சொல்லிலுள்ள, நரன் என்பது மனிதனையும், சிம்மம் என்பது சிங்கத்தையும் குறிக்கும். இவர் மனித உடலும், சிங்க முகமும் கொண்டவர். அசுர குணங்களுடன் நடப்பவர்களை ... |
Posted: 15 May 2016 07:32 AM PDT மொகாலி: – ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. – இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடந்த போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் 'பேட்டிங்' தேர்வு செய்தார். – ஆம்லா அரை சதம்: பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (6) ஏமாற்றினார். சகா, குர்கீரத் சிங் தலா 27 ரன்கள் எடுத்தனர். ஹென்ரிக்ஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசிய ஆம்லா ... |
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்: 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 15 May 2016 07:30 AM PDT கரூர்: அரவக்குறிச்சி தொகுதிககான தேர்தல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. – இதில் அன்புநாதன மற்றும் கே.சி. பழனிச்சாமி ஆகியோரின் வீட்டில் சோதனை நடந்ததை மேற்கோள் காட்டிய தேர்தல் ஆணையம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகளவில் வந்துள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. – இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் வரும் 25ம் தேதி நடக்கும் என தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பரபரப்பான அறிவிப்பால் கட்சியினர் கலக்கத்தில் ... |
Posted: 15 May 2016 07:17 AM PDT கூட்டிச் செல், காட்டிச் சொல் குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார். வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள். இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? " "என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன். கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை ... |
ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு ! Posted: 15 May 2016 07:17 AM PDT ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம் ! என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் #விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், "நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ... |
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! Posted: 15 May 2016 06:31 AM PDT கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் ... |
கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..! Posted: 15 May 2016 04:39 AM PDT - போர் பற்றி துளியாவது கவலை இருக்கா பார், மன்னருக்கு..? - என்ன பண்ணார்? - முரசு சப்தம் கேக்குதுன்னு சொன்னா.. கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..! - பர்வீன் யூனூஸ் - ---------------------------- - வந்தவர் வடசென்னை ஜோதிடர்னு கரெக்டா சொல்றீங்களே..? - பின்ன...மாஞ்சா நூல் இழை வித்தியாசத்துல வெற்றி பறிபோகும்னு சொல்றாரே..! - எல்.சேவுகபாண்டியன் - ----------------------------------- - ஊழலுக்கு எதிரா கொளுத்தப்பட்ட உருவப் பொம்மை விஷயத்துல என்ன பிரச்சினை? - வெறும் ... |
ஆக் ஷன் வேடத்தில் நிக்கி கல்ராணி! Posted: 14 May 2016 10:55 PM PDT - - டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். - இவ்வேடத்திற்காக, சில பிரபல பெண் போலீஸ் அதிகாரிகளை முன் மாதிரியாக வைத்து நடித்திருப்பதாக சொல்பவர், இப்படத்திற்காக, 15 நாட்கள் சண்டை பயிற்சி எடுத்துள்ளார். - ஆக் ஷனுக்கு இது ஒரு சின்ன ஆரம்பம் தான்; எதிர்காலத்தில் இன்னும் அதிரடியான ஆக் ஷன் கதைகளில் நடிப்பேன்...' என்கிறார். - போகாத ஊருக்கு வழியும், காரமணிக்கு களையும்! - ------------------------------------ — ... |
மீண்டும் பல்ராம் நாயுடுவாக கமல்! Posted: 14 May 2016 10:51 PM PDT - - – சமீபத்தில், நடிகர் சங்க வளாகத்தில், தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான பூஜை போட்டார் கமல். – அதில் ஒன்று, சபாஷ் நாயுடு என்ற காமெடி படம். ஏற்கனவே, தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடு வேடத்தில் நடித்தவர், மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். – இதுகுறித்து, 'படம் முழுக்க இக்கதாபாத்திரமே இடம் பெறுவதால், சிரிப்புக்கு, நூறு சதவீதம் கியாரண்டி…' என்றும் கூறுகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். – அவர் தான், சபாஷ் நாயுடு என்ற தலைப்பை வைக்குமாறு சொன்னதாக ... |
புதுச்சேரியில் மதுவிலக்கு இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம் Posted: 14 May 2016 10:09 PM PDT புதுச்சேரி: புதுச்சேரியில் மதுவிலக்கை கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என காங்.,மூத்த தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். - புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்.,மூத்த தலைவர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரி மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். - புதுச்சேரி காங்.தேர்தல் அறிக்கையில், ஏழை மாணவர்களின் கல்வி கடன் ரத்து, விவசாயிகளுக்கு தனி பயிர் காப்பீட்டு திட்டம், தியாகிகளுக்கு ரூ.10,000 வரை ஓய்வூதியம் உயர்வு, ... |
Posted: 14 May 2016 08:37 PM PDT - இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, 'பச்… சாமியாவது ஒண்ணாவது…' என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, 'ஜோசியமே பொய்…' என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது…' என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு. – சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம். – கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல், மகான்களின் ... |
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Posted: 14 May 2016 08:35 PM PDT - லண்டன்: லண்டன் வரலாற்றில் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லீமான சாதிக் கான், அங்குள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்றது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. - பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்த பஸ் டிரைவரின் மகன் சாதிக் கான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரிட்டிஷ் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்டு லண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். - 45 வயதான சாதிக் பாட்சா வடக்கு லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்தி வந்தவர். - மேயராக ... |
கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி Posted: 14 May 2016 08:00 PM PDT - ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்களூரு அணி, 144 ரன்கள் வித்தியாசத்தில், குஜராத் லயன்ஸை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளது. – பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. – இதையடுத்து, பேட் செய்ய தொடங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். – எனினும், முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் அனல் பறக்கும் ஆட்டத்தை ... |
வங்கதேசம்: மின்னல் தாக்கி 56 பேர் பலி Posted: 14 May 2016 07:49 PM PDT வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 56 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில், தொடர்ச்சியாக இடி, மின்னல் தாக்குவதால், கடந்த 2 நாட்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும், இடி, மின்னல் தாக்குவது வழக்கமான ஒன்றே. மேலும், பருவமழை, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 300 பேர் வரை உயிரிழப்பு ஏற்படும். ஆனால், ... |
Posted: 14 May 2016 04:50 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |