Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜல்லிக்கட்டு தடைக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது: மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வர முடியும்

Posted: 13 Jan 2016 10:23 AM PST

ஜல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், 'மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வர முடியும்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசுக்கு புது யோசனை தெரிவித்துள்ளார்; அது சாத்தியமில்லை என, சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து, மதுரை மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, நேற்றும், போராட்டங்கள் தொடர்ந்தன. மதுரை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர், 50 பேர், சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கினர். போலீசார் பேச்சு நடத்திய பின், ...

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்துக்கு வாய்ப்பில்லை!

Posted: 13 Jan 2016 10:32 AM PST

'ஜல்லிக்கட்டு நடத்த, தமிழக அரசு சட்டம் இயற்றினால், அது ஏற்கனவே இருக்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக இருக்கும். எனவே, மாநில அரசால் அவசர சட்டம் இயற்ற முடியாது' என, சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு:விலங்குகள் நல சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் கீழ் உள்ள பட்டியலில், காளையைச் சேர்த்து, கொடுமைப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை தடை செய்தது. இந்தச் சட்டம் மூலம் தான், தமிழக அரசு, 2009ல் கொண்டு வந்த, ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இந்நிலையில், ...

பா.ஜ., நிலைப்பாடு: கருணாநிதி ஆதரவு

Posted: 13 Jan 2016 10:33 AM PST

சென்னை: ''ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பா.ஜ., இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். அவரது பேட்டி:தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளி வரும். சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பா.ஜ., இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக நினைக்கவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அடுத்தது என்ன?
தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்ததற்கு, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம்.ஜல்லிக்கட்டு ...

மகத்தான வெற்றி: ஜெ., சூளுரை

Posted: 13 Jan 2016 10:36 AM PST

சென்னை:'சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற, முழு ஈடுபாட்டோடு பணியாற்றுங்கள்' என, கட்சியினருக்கு, முதல்வர் ஜெயலலிதா கட்டளையிட்டார்.அ.தி.மு.க.,வில், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், புதிதாக கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது; எம்.ஜி.ஆர்., சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் திறப்பு விழா, நேற்று நடந்தது.சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கட்சி அலுவலகம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலையை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., உருவாக்கிய ...

பணி நியமன ஆணைக்கு பதிலாக ஜெ., படம்

Posted: 13 Jan 2016 10:38 AM PST

சேலம்: வெள்ள நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, புதிதாக துவங்கும் எந்த திட்டமானாலும், முதல்வர் படத்தை இடம்பெற செய்தனர்.சேலம் அரசு மருத்துவமனையில், நீரழிவு நோய்க்கு பயன்படுத்தும், 'வென்டிலேட்டர்'இயந்திரத்திலும் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது.சேலம் மாநகராட்சி மேயர் அறையில், நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டராகநியமிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கு, பணி நியமன உத்தரவு கடிதத்தை மேயர் சவுண்டப்பன் வழங்கும் ...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்துமா?

Posted: 13 Jan 2016 10:41 AM PST

புதுடில்லி:''பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவம் எத்தகைய தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளது,'' என, ராணுவ தலைமை தளபதி, தல்பீர் சிங் சுஹாக் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், 'பதன்கோட் தாக்குலில், நம்மை வேதனைப் படுத்தியோருக்கு, உரிய நேரத்தில், உரிய இடத்தில், அதே மாதிரியான வலியை, இந்தியா பரிசாக தரும்' என, தெரிவித்திருந்த நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சுஹாக்கின் பேச்சு, முக்கியத்துவம் பெற்றுள்ளது.பஞ்சாபின் பதன்கோட் நகரில் உள்ள விமானப்படை தளத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஸ் - இ - ...

விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு: புதிய பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

Posted: 13 Jan 2016 10:44 AM PST

புதுடில்லி: விவசாயிகளுக்கு, பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி பரிசாக, புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகள், குறைந்த பிரீமியத்தில் அதிக பலன் பெற முடியும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற சில பகுதிகளில், பருவம் தவறி பெய்த மழையால், விவசாயம் கடும் பாதிப்பிற்கு ஆளானது. இதையடுத்து, ஏற்கனவே அமலில் உள்ள, தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் ...

பதன்கோட் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி சிக்கினான்

Posted: 13 Jan 2016 10:46 AM PST

புதுடில்லி:பதன்கோட் தாக்குதலுக்கு காரணமான, ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, பாகிஸ்தான் போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப் படை தளம் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்; ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காலம் தாழ்த்திய பாக்.,:
இந்த தாக்குதலை, மசூத் அசார் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதாரங்களை, இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், 'போதிய ஆதாரம் இல்லை' என, மசூத் அசாரை கைது செய்யாமல், ...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: அமித் ஷா தலைவரானதும் அதிரடி

Posted: 13 Jan 2016 10:47 AM PST

புதுடில்லி: பா.ஜ., தலைவராக, அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பின், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைவராக, ஓட்டெடுப்பின்றி, ஒருமித்தகருத்து அடிப்படையில், அமித் ஷா, விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அந்தப் பதவியில், மூன்றாண்டுகளுக்கு, 2019 லோக்சபா தேர்தல் வரை, பா.ஜ.,வின் தலைவராக அவர் தொடர்வார் என, கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆண்டில் நடைபெற உள்ள, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களும், அமித் ...

குடியரசு தின விழா: ஹோலண்டேவுக்கு பலத்த பாதுகாப்பு

Posted: 13 Jan 2016 12:28 PM PST

புதுடில்லி:குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும், பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டேவுக்கு, டில்லியில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.ஐ.எஸ்., பயங்கரவாதிகள்பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 2015ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து, சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீது, பிரான்ஸ் நாடு விமான தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலை உள்ளது.இதனால், இம்மாதம், 26ல், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™