மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குஜராத் பா.ஜ.க. தலைவராக அமித்ஷா தேர்வாகிறார்
- மெகபூபா பிடிவாதத்தால் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம்
- ஆந்திராவில் செய்வினை செய்வதாக கணவன்– மனைவியை எரித்து கொன்ற கிராம மக்கள்
- திருச்சூர் அருகே மகள் திருமணம் நின்றதால் கோழி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை
- கண்ணனூர் அருகே மனைவி, மகனுடன் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை
- தையல்காரர் ஓய்வு பெற்றதால் திருப்பதி கோவிலில் உண்டியலை சுற்றி கட்டும் துணி தட்டுப்பாடு
- திருப்பதி அருகே திருட்டு பணத்தில் சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது
- பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
- கோழிக்கோடு விமான நிலையத்தில் 2¼ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 2 பயணிகள் கைது
- ஐகோர்ட்டு தடையை மீறி ஆந்திராவில் சேவல் சண்டை
- முன்னாள் உலக அழகி டயானா ஹைடனுக்கு பெண் குழந்தை
- குளச்சல் உள்பட 3 துறைமுக பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்: நிதின் கட்காரி தகவல்
- சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் சரண கோஷம் முழங்க புறப்பட்டது
- சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய டி.வி சீரியல்
- மும்பை தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது
- ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்காதீர்கள்: ஜனாதிபதிக்கு பீட்டா அமைப்பு கடிதம்
- மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- மாயாவதியின் காலை தொடுவது போன்ற படத்தால் சர்ச்சை: பெண் வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பு பறிப்பு
- சீனாவில் தயாரிக்கப்பட்ட வயர்லெஸ் போன்: பதான்கோட் தீவிரவாதிகள் கடத்திய காரில் இருந்து பறிமுதல்
- பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் கெஜ்ரிவால் சந்திப்பு
குஜராத் பா.ஜ.க. தலைவராக அமித்ஷா தேர்வாகிறார் Posted: 13 Jan 2016 11:08 PM PST குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க.வுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகள் |
மெகபூபா பிடிவாதத்தால் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைவதில் தாமதம் Posted: 13 Jan 2016 11:07 PM PST காஷ்மீர் முதல் – மந்திரி முப்தி முகமது சயித் சமீபத்தில் உடல் நல குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவி ஏற்காததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. முப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபா புதிய முதல்வர் பதவியை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பா.ஜ.வுக்கு பல நிபந்தனைகளை விதித்ததால் ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்தப்படி |
ஆந்திராவில் செய்வினை செய்வதாக கணவன்– மனைவியை எரித்து கொன்ற கிராம மக்கள் Posted: 13 Jan 2016 10:02 PM PST ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் பெத்த வலசா கிராமத்தில் ஆதி வாசிகள் குடியிருக்கிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த கொல்லூரி பண்டு (40), சீத்தம்மா (35) தம்பதிகள் தங்களது வீட்டில் பூஜைகள் நடத்துவது உண்டு. இந்த தம்பதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னிசீனு என்பவருக்கும் இடையே கடந்த 7–ந்தேதி தகராறு ஏற்பட்டது. மறுநாள் பன்னிசீனு |
திருச்சூர் அருகே மகள் திருமணம் நின்றதால் கோழி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை Posted: 13 Jan 2016 09:44 PM PST கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வரைகரையை சேர்ந்தவர் பாபு (வயது 54). கோழி வியாபாரி. இவரது மனைவி கவிதா (42). இவர்களுக்கு சில்பா (22) என்ற மகள் உள்ளார். சில்பாவுக்கும் இளநாளகொடையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 18–ந்தேதி (திங்கட்கிழமை) திருமணம் செய்வது என நிச்சயம் செய்யப்பட்டது. அதன் படி சில்பாவின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு |
கண்ணனூர் அருகே மனைவி, மகனுடன் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை Posted: 13 Jan 2016 09:05 PM PST கேரள மாநிலம் கண்ணனூர் அருகே உள்ள சாவச்சேரியை சேர்ந்தவர் ராஜூவன் (வயது 45). காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி சந்திரலேகா (35). இவர்களுக்கு அமல்ராஜ் (12) என்ற மகனும், அமிதா (11) என்ற மகளும் உள்ளனர். ராஜூவன் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். கடன் |
தையல்காரர் ஓய்வு பெற்றதால் திருப்பதி கோவிலில் உண்டியலை சுற்றி கட்டும் துணி தட்டுப்பாடு Posted: 13 Jan 2016 08:59 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய பெரிய கொப்பறையை உண்டியலாக வடிவமைத்து இருப்பார்கள். கொப்பரையை உள்ளே வைத்து அதனை சுற்றி திரு நாமம், சங்கு, சக்கரம் கொண்ட துணி சுற்றி தைக்கப்படும் நாலாபுறமும் இருந்து பக்தர்கள் விரைவில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக இவ்வாறு உண்டியல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. |
திருப்பதி அருகே திருட்டு பணத்தில் சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது Posted: 13 Jan 2016 08:51 PM PST திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருச்சானூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சப்– இன்ஸ்பெக்டர் மல்லேஷ் யாதவ் தலைமையில் |
பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து Posted: 13 Jan 2016 08:50 PM PST தமிழ்நாட்டில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தனது டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ''தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான |
கோழிக்கோடு விமான நிலையத்தில் 2¼ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 2 பயணிகள் கைது Posted: 13 Jan 2016 08:42 PM PST வளைகுடா நாடான தோகாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். |
ஐகோர்ட்டு தடையை மீறி ஆந்திராவில் சேவல் சண்டை Posted: 13 Jan 2016 08:41 PM PST தமிழ்நாட்டில் 'ஜல்லிக்கட்டு' போல் ஆந்திராவில் சேவல் சண்டை மிகவும் பிரபலம். ஆந்திராவின் கிழக்கு, கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை பந்தயம் நடத்தப்படும். சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயம் நடத்தப்படுவதால் விலங்குகள் வதை தடை சட்டத்தின் படி சேவல் சண்டைக்கு ஐகோர்ட்டு |
முன்னாள் உலக அழகி டயானா ஹைடனுக்கு பெண் குழந்தை Posted: 13 Jan 2016 08:39 PM PST முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையும் ஆன 42 வயது டயானா ஹைடன், தன்னுடைய கணவர் கொலின் டிக்குடன் மும்பையில் வசிக்கிறார். இவர்களது திருமணம் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்தது. மும்பையில் உள்ள பிரபல தனியார் தொண்டு நிறுவனத்தில் நிர்வாகியாக கொலின் டிக் பணிபுரிகிறார். நடிகை டயானா ஹைடன் சினிமாவில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால், குழந்தை பிறப்பை தள்ளி போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து இருந்தார். அதன்படி, திருமணம் ஆவதற்கு முன்னரே, அதாவது தன்னுடைய 34-வது வயதில், இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக டாக்டர்களின் ஆலோசனைப்படி, 'கருமுட்டையை உறைய வைக்கும் |
குளச்சல் உள்பட 3 துறைமுக பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்: நிதின் கட்காரி தகவல் Posted: 13 Jan 2016 07:19 PM PST மும்பையில், தொழில்துறை கூட்டம் ஒன்றில், மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் குளச்சல், மராட்டிய மாநிலத்தில் வாத்வான், மேற்கு |
சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் சரண கோஷம் முழங்க புறப்பட்டது Posted: 13 Jan 2016 06:30 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். பின்னர் டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம், கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷே |
சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய டி.வி சீரியல் Posted: 13 Jan 2016 04:29 PM PST குழந்தைகள் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் ஏதுமின்றி, தனது குப்பையான காட்சிகளால் பலரது உளவியலையும் அன்றாடம் சிதைத்து வரும் டி.வி சீரியலைப் பார்த்து 11 வயது சிறுவன் ஒருவன் தூக்கி மாட்டிக் கொண்டு பலியாகியுள்ள சம்பவம் பெற்றோர்களை உலுக்கி எடுத்துள்ளது. மும்பையின் மராத்வாடா பகுதியில் உள்ள ப்ளவர்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பே இந்தக் கொடூர சம்பவத்தால் வெறுமையாக காணப்படுகிறது. |
மும்பை தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது Posted: 13 Jan 2016 04:22 PM PST மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தகவல் உரிமை சட்ட ஆர்வலரும் கள செயற்பாட்டாளருமான பிரேம்காந்த் ஜா கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு பேரைக் கைது செய்துள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் பிரேம்காந்த் ஜா. மும்பையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான சில தகவல்களைக் |
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்காதீர்கள்: ஜனாதிபதிக்கு பீட்டா அமைப்பு கடிதம் Posted: 13 Jan 2016 03:51 PM PST ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா', ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியது. |
Posted: 13 Jan 2016 03:08 PM PST மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த |
மாயாவதியின் காலை தொடுவது போன்ற படத்தால் சர்ச்சை: பெண் வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பு பறிப்பு Posted: 13 Jan 2016 02:59 PM PST உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அங்குள்ள அட்ராலி தொகுதியில் போட்டியிட தர்மேந்திர சவுத்ரி என்பவருக்கு பகுஜன் சமாஜ் கட்சி சீட் வழங்கியது. இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டதால் அந்த சீட், அவரது மனைவி சங்கீதா சவுத்ரிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கட்சி தலைவர் மாயாவதியின் காலை சங்கீதாவும், அவரது குழந்தைகளும் தொடுவது போன்ற படம் ஒன்றை, சமீபத்தில் |
சீனாவில் தயாரிக்கப்பட்ட வயர்லெஸ் போன்: பதான்கோட் தீவிரவாதிகள் கடத்திய காரில் இருந்து பறிமுதல் Posted: 13 Jan 2016 02:12 PM PST பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காரிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட வயர்லெஸ் கருவி கைப்பற்றப்பட்டதாக தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஷகர்கர் பகுதியிலிருந்து இந்திய எல்லையான பமியால் கிராமத்துக்கு கடந்த 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி வந்தன |
பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் கெஜ்ரிவால் சந்திப்பு Posted: 13 Jan 2016 01:17 PM PST பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்தினரை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த 2-ந்தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 6 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் குல்வந்த் சிங், பதேஹ் சிங் உள்பட 7 பேர் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தின் பதிலடியில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பதன்கோட்டில் தாக்குதல் நடத்துவதற்கு முதல்நாள் இகார் சிங் என்ற டாக்சி டிரைவரையும் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். |
You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |