Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வோன் பகுதியில் வாகன விபத்து: ரொரன்ரோ ஆடவர் பலி –

Posted: 13 Jan 2016 08:09 PM PST

jk

jkவேன் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்க கொண்ட விபத்தில் சிக்குண்ட ரொரன்ரோவைச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதனை யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரூதர்ஃபோர்ட் வீதியின் வடக்கே நெடுஞ்சாலை 27இல் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

"கார் ஒன்று கனரக வாகனத்துடன் மோதுண்டதாகவும், காருக்குள் அதன் சாரதி சிக்குண்டிருந்த நிலையில், பலத்த பிராயத்தனங்களின் மத்தியில் அவர் மீட்கப்பட்ட போதிலும், காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.jk

கனரக வாகனத்தின் சாதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்ல எனவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் உடனடியாக கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், சம்பவத்தினை நேரில் பார்த்தோர் அல்லது மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வோன் பகுதியில் வாகன விபத்து: ரொரன்ரோ ஆடவர் பலி – appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வியட்னாமில் கனேடியர் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை

Posted: 13 Jan 2016 05:46 PM PST

hj

hjவியட்னாமில் கனேடியர் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

பாலியல் துஸ்பிரயோக குற்றச் செயலுக்காகவே ஸ்கொட் பென்டர்மென் எனப்படும் 45 வயது கனேடியருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்னாநில் வீடுகளற்ற நான்கு பதின்மவயது சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த தலைநகர் ஹனோயில் உள்ள ஒரு நீதிமன்றம் இன்றைய தினம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.

தற்போது தண்டனை வழங்கப்பட்ட குறித்த அந்த கனேடியர் கடந்த 2014ஆம் ஆண்டில் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அவர் அங்கு ஒரு மொழிப் பயிற்சி நிலையத்தில் ஆங்கில பயிற்றுவிப்பாளராக பணியாற்றியதுடன், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் இசைக் கருவி வாசிப்பவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் யூன் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் நான்கு பதின்மவயது சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தம்மீதான குற்றச்சாட்டை குறித்த கனேடியர் நேர்மையான முறையில் ஒப்புக்கொண்டிருந்தார்.

அதனால் அவருக்கான தண்டடை குறைக்க்பபட்டு குறைந்த காலத் தண்டனையாக நான்கு வருடங்களை சிறையில் கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வியட்னாமில் இவ்வாறான குற்றச்செயல்கள் மிகவும் பாரதூரமாக கருதப்படுவதுடன், அதற்கு அந்த நாட்டில் மூன்றிலிருந்து ஏழு வருடங்கள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறித்த கனேடியர் தமக்கான தண்டனைக் காலத்தை முடித்துக்கொண்டதும், வியட்னாமில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் இன்றைய தீர்ப்பில் வாசிக்கப்பட்டுள்ளது.

The post வியட்னாமில் கனேடியர் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய டொலரின் பெறுமதியும் சரிவை சந்தித்துள்ளது

Posted: 13 Jan 2016 07:50 AM PST

Canadian_dollar_-_20160113

Canadian_dollar_-_20160113கனேடிய டொலரின் பெறுமதியும் சரிவை சந்தித்துள்ளது.

அனைத்துலக ரீதியில் மசகு எண்ணெயின் விலை 30 அமெரிக்க டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதனை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.

நேற்றைய நாள் சந்தை நிலவரம் மசகு எண்ணெய் பரலுக்கு 30 அமெரிக்க டொலருக்கும் குறைவான பதிவைக் கொண்டிருந்தது.

அதன் விளைவாக அமெரிக்க டொலருக்கு நிகரான ஒரு கனேடிய டொலரின் பெறுமதியும் 70 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று நாள் முழுவதும் கனேடிய டொலரின் பெறுமதி 70 சதத்துக்கு மேலும் கீழுமான தளம்பலைக் காட்டியது.

எனினும் ஒரு கட்டத்தில் 69.85 சதமாக பதிவான கனேடிய டொலரின் பெறுமதி, நேற்றைய நாள் முடிவில் 70.14 சதமாக நிலைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.Canadian_dollar_-_20160113

2003ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான கனேடிய டொலரின் பெறுமானம் இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளமை இதுவே முதல் தடவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனேடிய டொலரின் பெறுமதியும் 70 சதமாக வீழ்ச்சியடைந்துள்ள தற்போதைய நிலையில் பழங்கள், மரக்கறி வகைகள், உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கனடாவிற்கு தேவைப்படும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் என்பன இறக்குமதி செய்யப்பட்டே கனடாவில் விற்பனையாகும் நிலையில், இவற்றின் விலைகளிலேயே அதிக தாக்கம் ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.

பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளின் விலை 9.1 சதவீதத்திலிருந்து 10.1 சதவீதத்தினால் கடந்த ஆண்டே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அது மேலும் 4.5 சதவீதத்தினால் அதிகரிக்க கூடும் என நுகர்வோர் அஞ்சுகின்றனர்.

The post கனேடிய டொலரின் பெறுமதியும் சரிவை சந்தித்துள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எதற்காக இடது விரலில் திருமண மோதிரம் அணிகிறோம்?

Posted: 13 Jan 2016 07:42 AM PST

jhu

jhuதிருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர்.

இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான்.

ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால், இரத்தஓட்ட அமைப்பு(Circulatory System) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து Tudor times ஆராய்ச்சி நடத்தியது.

இதில், இரது விரலுக்கும், இதயத்திற்கும் ஒருவித தொடர்புள்ளது, அதாவது, இடது கையில் நான்காவது விரலில் உள்ள நரம்பு நேரடியாக இதயத்துடன் இணைகிறது.

இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, இதனை "காதல் நரம்பு" என்று மக்கள் அழைக்கின்றனர், அதாவது இந்த மோதிரத்தின் மூலம் பரிமாறப்படும் அன்பு நேரடியாக இதயத்திற்கு சென்று சேர்கிறது என்று மக்கள் நம்பி வருகின்றனர்.jhu

ஆனால், திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிய வேண்டும் என்று எவ்வித சட்டமும் இல்லை, உங்களுக்கு எந்த விரலில் மோதிரம் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அந்த விரலில் அணியுங்கள்.

ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன, பொதுவாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில், திருமண ஜோடிகள், வலது கையில் மோதிரம் அணிகின்றனர்.

ஆஸ்திரியா, டென்மார்க், போலந்து, ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த வலது கை கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர்.

ஜேர்மனிய ஜோடிகள், திருமணத்திற்கு முன்னர் இடது கையிலும், திருமணம் முடிந்த பின்னர் வலதுகையிலும் மோதிரத்தை மாற்றிக்கொள்கின்றனர்.

இவ்வாறு மோதிரத்தை திருமணத்திற்கு பின்னர் வேறு விரலில் மாற்றிக்கொள்வது, ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது.

ஆரோக்கிய பிரச்சனைகள்

நீண்ட காலமாக மோதிரத்தை அணிந்திருந்தால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முடக்குவாதம், விரல்களின் வீக்கம் ஏற்படுமேயானால், நீங்கள் கண்டிப்பாக இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.

The post எதற்காக இடது விரலில் திருமண மோதிரம் அணிகிறோம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

18 வருடங்களின் பினன்ர் கனேடியப் பிரதமர் ஒருவர் ரொரன்ரோ நகரபிதாவை சந்திக்கிறார்

Posted: 13 Jan 2016 07:29 AM PST

Trudeau_to_meet_with_Tory_-01132016

Trudeau_to_meet_with_Tory_-01132016ரொரன்ரோ நகர மண்டபத்தில் இன்று பிற்கல் அளவில் இருவருக்கும் இடையேயான இந்த நட்பு முறைச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதை ரொரன்ரோ நகரபிதாவின் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.

இன்று பிற்பகல் 12.15ற்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பை அடுத்து, பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமரும் ரொரன்ரோ நகரபிதாவும் ஊடகவியலாளர்களைச் சந்திப்பார்கள் என எதிர்பார்ப்புக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மையில் பிரதமராக பதவி ஏற்றுள்ள ஜஸ்டின் ரூடோ தமது தேர்தல் பரப்புரையின் போது ரொரன்ரோ நபரபிதா ஜோன் ரொறியின் தொடரூந்து போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்திற்கு 2.6 பில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்திருந்தார்.Trudeau_to_meet_with_Tory_-01132016

அதனால் இன்று இடம்பெரும் இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு முக்கியமானதாக அவதானிக்கப்படுகிறது.

The post 18 வருடங்களின் பினன்ர் கனேடியப் பிரதமர் ஒருவர் ரொரன்ரோ நகரபிதாவை சந்திக்கிறார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது?

Posted: 13 Jan 2016 07:11 AM PST

oho

ohoநாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் புட் பாய்சன் ஆகிவிடும்.

தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.1

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.2

முட்டை மற்றும் பால்

இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.3

பால் கலந்த ஓட்ஸ்

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும். நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும்.

மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.iou

வாழைப்பம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.5

மீன் மற்றும் பால்

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.oho

 

 

The post எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™