Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மேகி நூடுல்சை ஆய்வு செய்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மைசூர் ஆய்வகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 12 Jan 2016 11:06 PM PST

கடந்த ஜூன் மாதம் நெஸ்லேயின் தயாரிப்பான மேகிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்சின் விற்பனை முடங்கியது. மேகி நூடுல்ஸ்-க்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில்

குடியரசு தின பேரணி ஒத்திகையின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி பலி

Posted: 12 Jan 2016 10:18 PM PST

கொல்கத்தாவில் குடியரசு தின பேரணிக்காக ஒத்திகை பயிற்சியின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்ரல் அபிமன்யு கௌட்(30) என்ற அதிகாரி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா பேரணிக்கான ஒத்திகையை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆடி கார்

கேரளாவில் சுற்றுப்பயணம்: நாராயணகுரு ஆசிரமத்திற்கு சென்ற துணை ஜனாதிபதி

Posted: 12 Jan 2016 09:28 PM PST

கேரளாவில் சுற்றுப்பயணம்: நாராயணகுரு ஆசிரமத்திற்கு சென்ற துணை ஜனாதிபதி

திருப்பதி கோவிலில் கட்டண சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி

Posted: 12 Jan 2016 09:16 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் தரிசனம் செய்யும் வசதி உள்ளது. சுப்ரபாத சேவை உள்ளிட்ட கட்டண சேவை டிக்கெட்டுகள் இதுவரை நேரில் சென்றே புகைப்படம், அடையாள அட்டை விவரங்களை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டி இருந்தது.

அமித்ஷா மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற பின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: பா.ஜ.க. திட்டம்

Posted: 12 Jan 2016 09:16 PM PST

பா.ஜ.க.,வின் தலைவராக மீண்டும் அமித் ஷா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவர் பொறுப்பேற்ற உடன் மத்திய அமைச்சரவையில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வர அந்த கட்சி முடிவு செய்துள்ளது. பா.ஜ., தேசிய தலைவரின் பதவி காலம், மூன்று ஆண்டுகள். 2013 ஜனவரியில், ராஜ்நாத் சிங், தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர், மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றதால், கட்சி தலைவர்

சோலார் பேனல் மோசடி வழக்கு: விசாரணை கமிஷன் முன்பு உம்மன்சாண்டி 25–ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 12 Jan 2016 09:05 PM PST

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகார் தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர். மேலும் சரிதா நாயரின் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம்

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சித் திட்டம்-2030: வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்தியா வலியுறுத்தல்

Posted: 12 Jan 2016 08:46 PM PST

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சித் திட்டம் 2030-ல் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஜி-77 நாடுகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரான சையது அக்பருதீன் பேசினார். அப்போது அக்பருதீன் கூறுகையில், "இந்தியா ஜி-77 நாடுகளுடன்

ஜார்கண்ட் மாநிலத்தில் பேய், பிசாசு, மூடநம்பிக்கை தொடர்பான தாக்குதல் வழக்குகள் விசாரிக்க தனிகோர்ட்டுகள் அமைப்பு

Posted: 12 Jan 2016 07:44 PM PST

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைக்கு விடைகொடுக்க மறுக்கும் மக்கள் அதிகமாக வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாகவும், பேயை விரட்டுவதாகவும் இன்றளவும் மாதந்தோறும் நான்கைந்து கொலைகளாவது நடந்தவண்ணம் உள்ளன.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடுகிறார்

Posted: 12 Jan 2016 07:33 PM PST

சித்தூர் மாவட்டம் கலெக்டர் சித்தார்த்ஜெயின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 3 நாட்கள் பயணமாக நாளை (வியாழக்கிழமை), சித்தூர் மாவட்டத்துக்கு வந்து, தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். அவர்,

ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு, அதற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வற்புறுத்தல்

Posted: 12 Jan 2016 07:06 PM PST

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகளும், 9 தனி நபர்களும் சுப்ரீம் கோர்ட்டில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பெண்கள் சபரிமலை செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கவேண்டும்: தேவசம் போர்டு தலைவர் பேட்டி

Posted: 12 Jan 2016 05:48 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கவேண்டும் என்று தேவசம் போர்டு தலைவர் கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு (மாதவிலக்கு காரணமாக)

ஜல்லிக்கட்டு மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பீட்டா விலங்குகள் நல வாரியம் வரவேற்பு

Posted: 12 Jan 2016 05:25 PM PST

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு கடந்த 7-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்புகள் மேல்-முறையீடு செய்தன. அவர்களின் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு நடத்த

திக் திக் வீடியோ: 56 ரெயில்பெட்டிகள் கடந்து சென்ற போதும் தண்டவாளத்திலிருந்து உயிரோடு எழுந்த பெண்

Posted: 12 Jan 2016 04:13 PM PST

எச்சரிக்கை: இந்த வீடியோ குழந்தைகள் பார்வைக்கு ஏற்புடையது அல்ல மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரூலியா நகரில் நேற்று முன்தினம் (ஜனவரி-11) ஹிமானி மாஞ்சி(45) என்ற பெண், தீதாநகர் செல்லும் ரெயிலைப் பிடிப்பதற்காக புரூலியா ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அயோத்தி வழக்கை முன் கூட்டியே விசாரிக்க கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய சுப்ரமணிய சுவாமி

Posted: 12 Jan 2016 03:37 PM PST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவதற்கு ஏதுவாக, இது தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் விரைந்து நடத்த பிரதமர் மோடி தலையிட்டு வலியுறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் இந்தியா திரும்ப மாட்டார்

Posted: 12 Jan 2016 03:05 PM PST

இந்திய மீனவர்கள் இருவர் கேரளக் கடற்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் லத்தோர் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted: 12 Jan 2016 02:08 PM PST

மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

பதான்கோட் தாக்குதல் சம்பவம்: போலீஸ் சூப்பிரண்டிடம் தொடர்ந்து தீவிர விசாரணை

Posted: 12 Jan 2016 01:30 PM PST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த 2-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக முரண்பட்ட தகவல்களை தெரிவித்த போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங்கை டெல்லிக்கு வரவழைத்த தேசிய விசாரணை முகமை

டெல்லியை தகர்க்க திட்டமிட்ட வழக்கு: 3 தீவிரவாதிகளுக்கு 7 ஆண்டு வரை ஜெயில்

Posted: 12 Jan 2016 12:28 PM PST

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தும் நோக்கத்துடன், லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அதிஷம் பரூக் மாலிக், டெல்லியில் ஊடுருவி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் தேடுதல் வேட்டையில்,

வரலாறு காணாத அளவில் ஹிராகுட் நீர்தேக்கத்தில் குவிந்த 95 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்

Posted: 12 Jan 2016 10:46 AM PST

ஒடீசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பெரிய அணைகளுள் ஒன்றான ஹிராகுட் அணையின் ஏரிப்பகுதியில் வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.

பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும்: ஏர் இந்தியா

Posted: 12 Jan 2016 08:23 AM PST

விமானம் கிளம்புவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பாகவே பயணிகள் விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™