Tamil Star |
- கனேடியப் பிரதமர் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்
- எதிர்வுகூறப்பட்டதை விட கனடாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் மெதுவடைந்துள்ளது
- வாய் துர்நாற்றத்தால் அவதியா? தடுப்பதற்கான எளிய வழிகள்
- கொழுப்பை கரைக்கும் அவகோடா
- தலிபான்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர் விடுதலை
கனேடியப் பிரதமர் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் Posted: 12 Jan 2016 10:26 AM PST
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றார். டாவோசில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் லிபரல் அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு திட்டங்கள், வரி மாற்றங்கள் தொடர்பில் பிரதமர் அங்கு விளக்கமளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கூடவுள்ள அனைத்துலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலகின் செல்வந்தர்கள் மத்தியில் தனது பொருளாதார கொள்கைகள் குறித்தும் கனேடியப் பிரதமர் விளக்கமளிக்கவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவும் இந்த மாநாடு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் ஆரம்ப நாளில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ முக்கிய உரையாற்றுவார் என்ற எதிர்பாப்புக்களும் வெளியிடப்பட்டுள்ளன. The post கனேடியப் பிரதமர் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
எதிர்வுகூறப்பட்டதை விட கனடாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் மெதுவடைந்துள்ளது Posted: 12 Jan 2016 10:16 AM PST
ஹலிஃபக்சில் இடம்பெற்ற வர்த்தகர் சங்க மாநாட்டில் கூடியிருந்த நூற்றுக்கணக்காணவர்கள் முன்னிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கம் எதிர்வுகூறியிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம், இந்த எண்ணெய் விலைச் சரிவினால் மெதுவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தல் பரப்புரைகளின் போது லிபரல் கட்சியினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை தொகையில், தற்போதய பொருளாதார தாக்கம் எவ்வாறான மாற்றங்களை உண்டுபண்டும் என்ற விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. மேம்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட புதிய பொருளாதார முனைப்புகள் காரணமாக, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்க வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்படாத பற்றாக்குறை காணப்படும் என பிரதமர் ஜஸ்டின் ரூடோ முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது The post எதிர்வுகூறப்பட்டதை விட கனடாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் மெதுவடைந்துள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
வாய் துர்நாற்றத்தால் அவதியா? தடுப்பதற்கான எளிய வழிகள் Posted: 12 Jan 2016 06:57 AM PST நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றம் காரணமாக முக்கிய நேரங்களில் அவதி பட்டிருப்போம். இதன் காரணமாக அதிக நபர்கள் நிறைந்த இடங்களில் பேசுவதை கூட தவிர்த்திருப்போம். இனி வாய் துர்நாற்றத்தை கண்டுஅஞ்ச தேவையில்லை. அவற்றை தவிர்ப்பதற்காக சில எளிதான வழிகள் உள்ளன. * முதலில், ஒரு நாளைக்கு காலை இரவு என இரு முறை பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ளுங்கள். இதனால் பற்களில் கிருமிகள் சேர்வது தடுக்கப்படுகிறது. * வாரத்தில் ஒரு நாள் பேக்கின் சோடா பயன்படுத்தி பல்லை […] The post வாய் துர்நாற்றத்தால் அவதியா? தடுப்பதற்கான எளிய வழிகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 12 Jan 2016 06:52 AM PST
இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன. மேலும் சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும். The post கொழுப்பை கரைக்கும் அவகோடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
தலிபான்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர் விடுதலை Posted: 12 Jan 2016 06:42 AM PST
ரொரன்ரோவைச் சேர்நத் கொலின் றூத்ஃபோர்ட் எனப்படும் குறித்த நபர் தனது தனிப்பட்ட விடுமுறைப் பயணமாக 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்த வேளை அவர் தலிபான்களால் பிடித்துச் செல்லப்பட்டிருந்தார்.அப்போது கொலின் றூத்ஃபோர்டிற்கு 26 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2011ஆம் ஆண்டு வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் காட்சிகள் இடம்பெற்றதனை அடுத்து, அவர் உயிருடன் உள்ளதனை அவரின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். அப்போது இந்த நபரை தலிபான்கள் உளவாளி என குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும் தான் உளவாளி அல்ல எனவும், வரலாற்று கற்கை நிமித்தம் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் தூபிகளையும் பார்வையிடுவதற்கே ஆப்கானிஸ்தானுக்கு வந்திருந்ததாகவும், அவர் அந்த ஒளிப்பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் என கனேடிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இவரின் விடுதலையில் கட்டார் அரசாங்கமும் தொடர்பு பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் டியோன் தெரிவித்துள்ளார் கனேடியரின் இந்த விடுதலை தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அவர் மீண்டும் கனடாவுக்கு திரும்பி தனது குடும்பத்தாருடன் இணைவதை தாம் ஆர்வமுடம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கனேடியர் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பிலான தகவல்கள் எதனையையும் அமைச்சர் வெளியிடவில்லை. The post தலிபான்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர் விடுதலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |