Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருப்பாவை 24

Posted: 12 Aug 2015 10:21 AM PDT

திருப்பாவை என்பது ஆண்டாள் என்ற ஒரு வசதியான தமிழ்ப்பெண் வேலை வெட்டி இல்லாததால் எழுத்தாக்கம் என்ற சுய திருப்திக்காக பாடியதல்ல ; கவிதாயிணி என்ற பட்டத்தை போட்டுக்கொண்டு தத்து பித்து கண்டேன் காதல்கொண்டேன் தவித்தேன் தடுமாறி தடுமாறி விழுகிறேன் என கணவர் காசில் புத்தகம் போட்டு புகழ் தேடுகிற  ரகமும் அல்ல முன்பே சொல்லியிருக்கிறேன் ; ராமாவாதாரத்தில் சீதையாக அவதரித்த பூமியின் வியாபகம் ஒரு ஆத்மாவாக பூமியில் வந்து விட்டதால் நிறைவடைய வேண்டி அந்த பரந்தாமனை பாடி துதித்து பக்தி ரசத்தை மானுடர்களுக்கும் கொடுத்து ...

இதயத்தின் வலி

Posted: 12 Aug 2015 10:07 AM PDT

களவாடிபோன இதயத்தை
காதலோடு திருப்பி தருவாயா??

காதலால் கண்ணீரை
வரவைத்த இதயத்தை
திருப்பி தருவாயா??

காலங்கள் மாறினாலும்
காதலால் நீ தைத்த
இதயம் இன்னும்
ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது!


மண் உள்ள அளவும்
மனசு உள்ள அளவும்
மாறாத என் நேசம்
மாற்றமுடியாத நேசம்!!!

காதலனே நான் கொண்ட
இதயத்தை திருப்பி தருவாயா?!?

சிறப்பு கவிஞர் திரு ரமணி அவர்களின் 1000 பதிவிற்கு வாழ்த்துவோம்

Posted: 12 Aug 2015 09:21 AM PDT

சிறப்பு கவிஞர் திரு ரமணி அவர்களின் 1000 பதிவிற்கு வாழ்த்துவோம்  சமம்  திரு ரமணி அவர்கள் சிறப்பான 1000 பதிவுகளை , ஒரு மாதத்திற்கு முன் நிறைவு செய்து இருக்கிறார் . நம் கவனம் சிறிதே சிதற , அவரை வாழ்த்த மறந்து விட்டோம் . தவறுக்கு மன்னிப்புக் கோருகிறோம் . தங்களது பதிவுகள்  இலக்கண /இலக்கிய மரபுக்குட்பட்ட கவிதைகள் . தெய்வீக சம்பந்தமானது / மஹா பெரியவா அவர்களை பற்றியது . இந்த ஆயிரம் பதிவுகள் -எங்களை பொருத்தவரையில்  10000 பதிவுகளுக்கு சமம் என்றே கூறுவேன் . அய்யா தொடருங்கள் பணியை . பின்னூட்டம் ...

நாணயம் விகடன் இந்த வாரம்

Posted: 12 Aug 2015 09:18 AM PDT

நாணயம் விகடன் இந்த வாரம் (16-Aug)வெளியிடப்பட்ட mid cap பங்குகள் பற்றி தகவல் கிடைக்குமா ?

2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

Posted: 12 Aug 2015 09:16 AM PDT

இந்த நூற்றாண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது. 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உலக மக்கள் தொகை இருக் கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்கு நர் ஜான் ஆர் வில்மோத், சியாட்டிலில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற மக்கள் தொகையியல் முன்னறிவிப்பு தொடர்பான 2015- கூட்டுப் புள்ளிவிவர கூட்டத்தில் பேசியதாவது: தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ...

கும்பிட்ட விஜய்… உருகிய டி.ஆர்.,!

Posted: 12 Aug 2015 09:13 AM PDT

தீபாவளிக்கு சீறிப்பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது "புலி'. ரசிகர்களின் பல்ஸ் அறிய ரெண்டுவரிப் பாடலை மட்டும் இணையத்தில் உலவவிட்டதில், அது எக்குத் தப்பாய் ஹிட்ஸ் அடிக்க, டோட்டல் டீமே செம ஹேப்பி. – அதே குஷி மூடோடு மொத்த இசையையும் வெளியிட்டுள்ளனர். இப்போது யூத்களின் செல்ஃபோனில் ரிங்டோனாய் ஒலித்துக் கொண்டிருப்பது டி.எஸ்.பி.யின் பீட்ஸ் தான். "புலி' இசை வெளியீட்டு விழாவில், இருந்து சில துளிகள்… – * சினிமா நிகழ்ச்சிகள் வழக்கமாக நடக்கும் அரங்கங்களைத் தவிர்த்துவிட்டு மகாபாலிபுரம் அருகே உள்ள ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 12 Aug 2015 09:03 AM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை

Posted: 12 Aug 2015 08:53 AM PDT

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி-- சுந்தர் பிச்சை  தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.   இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பிறந்து அதிக போட்டிகள் நிறைந்த  துறையில் தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் சுந்தர் பிச்சை நிரூபித்து, தமிழக இளைஞர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.  தமிழர் ...

மாற்றங்கள் - எம்.எம்.மேனோன் நூல் தமிழில் .

Posted: 12 Aug 2015 08:25 AM PDT

எம்.எம்.மேனோன் - மாற்றங்கள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . தமிழில் : சிவன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7ouhj43jzczq42j/Matrangal+Menon+novel.pdf

பூந்தளிர் காமிக்ஸ் ,அமர் சித்ரா கதா காமிக்ஸ்,ராணி காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதை,கஸ்தூரி சித்திரக்கதை,இந்திராஜால் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,மலர் காமிக்ஸ்,ரேகா காமிக்ஸ்,

Posted: 12 Aug 2015 08:24 AM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 12 Aug 2015 06:32 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

மறுபடியும் பிறந்தேன்

Posted: 12 Aug 2015 05:25 AM PDT

உன் கண்களை பார்த்தேன்
காதல் பிறந்தது!!

உன் வார்த்தைக்கு செவிமடுத்தேன்
இனிமை பிறந்தது!!

உன் இதழால் எனை தீண்டினாய்
இன்பம் பிறந்தது!!

உன் இருகைகளால் எனை தழுவினாய்
நெருக்கம் பிறந்தது!!

மொத்தத்தில்   நான் மறுபடியும்
உன்னில் பிறந்தேன்!!

தமிழில் சரித்திர நாவல்கள்

Posted: 12 Aug 2015 04:55 AM PDT

சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல்  கிடைக்குமா
கணேஷ்

நடு ராத்திரியில லெக்சர் கேக்கப் போறேன்..!!

Posted: 12 Aug 2015 04:32 AM PDT


-

தொடரும்

மூல நோய் எப்படி வருகிறது?

Posted: 12 Aug 2015 04:28 AM PDT

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிறையபேர் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உயிர் போகும் வலியால் துடிதுடித்தும் போவதுண்டு. பொதுவாக மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு. மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு ...

டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!

Posted: 12 Aug 2015 03:46 AM PDT

வாழ்க்கைல கஷ்டங்கள் உங்களைத் துரத்துனா பயந்து ஓடாம நில்லுங்கள். அது கிட்ட வந்து, நான் உன் காத தொட்டுட்டேன், எங்க நீ என் காத தொடு பாக்காலம்-னு சொல்லும்..! - s.kurumbukaran - ----------------------------------------------- - ஒரு ஆண்டில் அடானியின் சொத்து மதிப்பு ரூ 56000 கோடி அதிகரித்துள்ளது. மோடியின் வெளிநாட்டுப் பயணம் வீண்செவுன்னு இன்னுமா உலகம் நினைக்குது..!? - jothims - ------------------------------------------- - மரங்களை வெட்டும்போது வெளிப்படும் வாசனை, கொலையுண்ட மனிதனின் ...

99 ரூபாய்.

Posted: 12 Aug 2015 01:08 AM PDT

- அதைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கையில் வைத்துக் கொண்டு நடந்தவன் சற்று தூரத்தில் ஒரு 5 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்தேன். என்னவோ தோன்ற மேலும் பார்த்துக் கொண்டே நடந்ததில் இரண்டு, இரண்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கவும், என் எண்ணம் சரிதான் என்று புன்னகைத்தபடி மேலும் சுற்றுமுற்றும் பார்த்தபடி சுற்றி வந்தேன். நிச்சயம் 100 ரூபாய் இருக்க வேண்டும். அந்த ஒரு ரூபாய் இங்குதான் எங்கோ கிடக்க வேண்டும். புற்களுக்கு நடுவே பார்த்த படி நடந்தேன். ஒரு யு டர்ன் அடித்து அடுத்த லேனில் பார்த்தபடி ...

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு

Posted: 11 Aug 2015 09:39 PM PDT

- தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.19,312-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.2,364 ஆகவும், ஒரு சவரன் ரூ.18,912 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் 22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.2,386 ஆகவும், ஒரு சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.19,088 ஆகவும் விற்பனையானது. மாலையில் மீண்டும் கிராமுக்கு ...

பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது

Posted: 11 Aug 2015 08:27 PM PDT

- ஸ்ரீநகர்: பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், கடந்த 5ம் தேதி, எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கிய, பாக்.பயங்கரவாதி முகமது நவீத், உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பில் கைது செய்யப்பட்டான். மும்பை தாக்குதல் போன்று மீண்டும் ஒருபயங்கர சதி திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிற்குள் ஊடுருவிய அவனை கசாப்-2 என்றே ஊடகங்கள் வர்ணித்தன. நவீத்திடம் நடத்திய விசாரணையில், 'இந்தியாவில் நுழைவதற்கு, 45 நாட்களுக்கு முன், பாகிஸ்தானில், ...

எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி

Posted: 11 Aug 2015 08:18 PM PDT

ரொமான்டிக் ஹீரோவாக "ரோமியோ ஜூலியட்' படத்தில் ஹன்சிகாவோடு அலம்பல் செய்த ஜெயம்ரவி தற்போது "சகலகலாவல்லவனி'ல் காமெடி சரவெடியாக த்ரிஷா, அஞ்சலியோடு கலகலக்க வைக்கிறார். படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்குத் தயாராக இருந்தவரிடம் பேசினோம். – "ரோமியோ ஜூலியட்'டில் ரெண்டு ஜோடி போல "சகலகலாவல்லவனி'லும் த்ரிஷா, அஞ்சலி. ரெண்டு ஜோடி சென்டிமென்டா? த்ரிஷாவை நீங்கதான் செலக்ட் பண்ணிங்களாமே? இதுக்குக்கூட சென்டிமென்ட் பார்த்தா அப்புறம் எல்லாப் படத்திலேயும் ரெண்டு ஹீரோயின் போர் அடிச்சுடும். அது காரணமில்லை. த்ரிஷா, ...

எனது கதைகள் --

Posted: 11 Aug 2015 08:02 PM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

தாய் மனசு – ராமலக்ஷ்மி .

Posted: 11 Aug 2015 07:47 PM PDT

- "அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க." "எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனதுஇ நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?" கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் 'பளிச்' என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று. "என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்லஇ அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் ...

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்

Posted: 11 Aug 2015 07:45 PM PDT

- சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்' வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில் முழு கோபத்தையும் தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்.. புதுத்துணி வாங்கிவந்தால் படுக்குமுன் உடுத்திப்பார்ப்பாய் கொடுக்காமல் எடுத்துவைத்தால் ...

ஈச்சங்குலை...!!

Posted: 11 Aug 2015 07:44 PM PDT

சேலை…!!
*
ஆடிவெள்ளிக்கு அழகாய் கட்டினாள்
வேப்பிலைச் சேலை.
*
பிரார்த்தனைச் செய்து ஊற்றி கூழ்
பள்ளத்தில் நிறைந்திருந்தது.
*
அன்னியன் மகள் அன்பானவள்
அத்தை மகள் சொத்துள்ளவள்.
*

முகம் மாற்று அறுவை!

Posted: 11 Aug 2015 07:41 PM PDT

அமெரிக்கா – வெர்ஜினியாவில் ரிச்சர்டு நோரிஸ் என்பவருக்கு 1997ல் 22 வயது. தற்கொலை முயற்சியாகத் தனக்குத்தானே தலையில் சுட்டுக் கொண்டார். ஆனால் சாகவில்லை. எனினும் அவரது முகம் சிதைந்து சின்னாபின்னப்பட்டுவிட்டது. ஓரளவுக்கு உடல்நலம் தேறிய பிறகு, தொடர்ந்து அவ்வப் போது பல தடவைகள் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் முழுமையான சீரமைப்பு கிட்டவில்லை. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற 21 வயது வாலிபர் உடல் நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். உடனே, மேரிலாந்து ...

இந்தியாவுக்குப் பாதிப்பில்லை

Posted: 11 Aug 2015 07:39 PM PDT

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என இந்தியப் பொருளாதார மேதைகள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவில் கிரீஸ் நாட்டின் முதலீடு மிகக் குறைவாகத்தான் உள்ளது. கிரீஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களும் குறைவானதுதான். எனவே இதனால் பெரிய சிக்கல் நமக்கு வந்துவிடாது! ஆனால் அதே சமயம் சர்வதேச அளவில் உள்ள பொருளாதார தேக்க நிலை அப்படியே இருப்பதால், நமது ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஒரு ஆறுதலான ...

ராஜ குரு!

Posted: 11 Aug 2015 07:39 PM PDT

பிரதமர் நரேந்திரமோடியின் அவசரமான சென்னை விசிட்டுக்கு இடையில் தமிழக முதல்வரைச் சந்தித்தவுடன் வீட்டுக்குச் சென்று நட்புணர்வுடன் மோடி சந்தித்த பிரமுகர் துக்ளக் ஆசிரியரான சோ. கூடவே இருந்தவரான கண் டாக்டரும், நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான விஜய் சங்கர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "மோடி சென்னைக்க வந்தபோதே நண்பரான சோவைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறார். அன்று மதியம் 12 மணிக்கு மேல் தான் அவருடைய வீட்டுக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது. உடனே என்னை போனில் தொடர்பு கொண்டு வரச் சொன்னார் ஜோ அங்கிள். நான் ...

கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது

Posted: 11 Aug 2015 07:28 PM PDT

- கடந்த ஆண்டுக்கான கேரள அரசின் 45-வது சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. - சிறந்த நடிகர் விருதை 'பெங்களூர் டேஸ்', '1983' ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும், 'மை லைப் பார்ட்னர்' படத்தில் நடித்ததற்காக சுதேவ் நாயரும் பகிர்ந்துகொள்கின்றனர். நிவின் பாலி, தமிழில் 'நேரம்' என்ற படத்தில் நடித்தவர் ஆவார். 'பெங்களூர் டேஸ்', 'ஓம் சாந்தி ஓஷானா' ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதை பெறுகிறார். - தேசிய விருது பெற்ற 'ஒட்டாள்' படம், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ...

புதுப்படங்கள் தயாரித்த நடிகை பூமிகா

Posted: 11 Aug 2015 07:23 PM PDT

- தமிழில் 'பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். - நல்ல மார்க்கெட் இருந்தபோது திடீரென யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்தார். ஆனால், முன்புபோல் நிறைய படவாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து, படதயாரிப்பில் ஈடுபட்டார். தெலுங்கில் ஓரிரு படங்கள் தயாரித்தார். கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் அந்த படங்களில் முதலீடு செய்தார். ஆனால், ...

அசின்–தொழில் அதிபர் ராகுல் சர்மா காதல் மலர்ந்தது எப்படி?

Posted: 11 Aug 2015 06:24 PM PDT

நடிகை அசின்–மைக்ரோ மேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. - மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 2000–ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ராகுல் சர்மா. - அசினை கைப்பிடிக்கப் போகும் ராகுல் சர்மாவுக்கு வயது 36. இவரது நெருங்கிய நண்பர் இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் 2012–ல் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார். - இந்த கால கட்டத்தில் அக்ஷய் குமார் நடித்த 'கிலாடி 786' என்ற பட சூட்டிங்கை பார்ப்பதற்காக ராகுல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™