Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குழந்தை

Posted: 24 Jul 2015 02:21 PM PDT

உனக்கும் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பையன் உன்னை ரொம்ப காதல் செய்து உன்னை இறுக்கி அனைத்துகக்கொண்டு-சொல்வான் அம்மா ஐ லவ் யு என்று      

பாகுபலி: இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டமா?

Posted: 24 Jul 2015 02:15 PM PDT

'இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்', 'ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி', 'கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்' என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் 'பாஹுபலி பாஹுபலி' என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். 'ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்' என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா? 'ஒரு திரைப்படம்' என்ற அளவில் பாஹுபலி (தெலுங்கில் பாஹுபலி. தமிழில் பாகுபலி. பாஹுபலி என்பதே சரியான வார்த்தை. ...

தண்டோரா கதைகள் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார் - சிறுகதைகள் .

Posted: 24 Jul 2015 01:53 PM PDT

விஜயலக்ஷ்மி சுஷில்குமார் - தண்டோரா கதைகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல், குடும்பம் என்று எல்லாம் வகையான கருவையும் கதைகளாக சொல்ல முயன்றதே இந்த தண்டோரா கதைகள். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/gokxm6738unbalw/thandora-stories-A4.pdf

இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .

Posted: 24 Jul 2015 01:52 PM PDT

இரா. சிவராமன் - இணையில்லா இந்திய அறிவியல் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . உருவாக்கம்: ஆசிரியர் – இரா. சிவராமன் மின்னஞ்சல்: piemathematicians@yahoo.com & rsivaraman1729@yahoo.co.in மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை –Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/o333npg84f6krkv/indianscience_A4.pdf

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !

Posted: 24 Jul 2015 01:45 PM PDT

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !........... அராப் நியூஸ் ! HOUSTON: A woman from Texas who gave birth to a baby boy in the front seat of a car while her husband recorded the birth in a video that went viral, speaks out about her experience. The 22-year-old mother, Lesia Pettijohn, had told her husband, Jonathan Pettijohn, to record her in the car once she started going into labor as she realized that there was a possibility that she was going to give birth to her baby ...

தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.

Posted: 24 Jul 2015 01:43 PM PDT

சர்வதேச சந்தையில், தங்கமும், உள்நாட்டில் வெள்ளியும், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று கடும் விலை சரிவைச் சந்தித்தன. இப்படி தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது. அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று, வேலையில்லா திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், வங்கிகளின் வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கி உயர்த்த உள்ளது. எனவே, ஆசியா உள்ளிட்ட பிற நாடுகளில், நிதி ...

குழந்தைகளே

Posted: 24 Jul 2015 01:35 PM PDT

செல்ல குழந்தைகளே எந்தன் நல்ல குழந்தைகளே கள்ளம் ஏதுமின்றி உள்ளம் கொண்டவரே பள்ளம் நிறைந்ததடா உலகம் கள்ளம் நிறைந்ததடா செல்லும் பாதையிலே நம்மை கொல்லும் உலகமடா காசை குறிவைக்கும் பேராசை உலகமடா நேசம் தொலைத்துவிட்டு பெரும் வேஷம் போடுமடா வா நீ என்று சொல்லி உன் சாதி கூறுமடா பச்சை மண் உன்னை அது கொச்சையாக்குமடா மதங்கள் என்று சொல்லி மனதை பறிக்குமடா அதிலே விழுந்துவிட்டால் உன்னை மடையனாக்குமடா பலரின் ஆசையைத்தான் சமூகம் உன் மேல் திணிக்குமடா அதுவாய் மாறிடவே ...

வாழ்வாங்கு வாழவைக்கும் வாய்மை!

Posted: 24 Jul 2015 01:23 PM PDT

- வாய்மை என்பது ஓர் உயர்ந்த அறநெறி. அதைப் பற்றி வள்ளுவம் மிக உயர்வாகப் பேசுகிறது. (அதிகாரம் 30). வள்ளுவரை லட்சியவாதி என நாம் நினைக்கிறோம். அவர் லட்சியவாதி மட்டுமல்ல. யதார்த்தவாதியும் கூட. அதற்குச் சான்றாகப் பல குறள்களை வள்ளுவத்தில் காட்ட இயலும். உண்மை பேச வேண்டியது முக்கியம்தான். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மை பேசினால் சரிவருமா? சில நேரங்களில் சில உண்மைகளைப் பேசாமலும் இருக்கவேண்டி நேர்கிறது. - நாம் வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்கிறோம். ஆனால், வந்து தொலைத்துவிட்டானே என மனத்தில் ...

பிறந்தநாள் மாயச்சதுரம் .

Posted: 24 Jul 2015 01:15 PM PDT

கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள் மாயச்சதுரம் . ====================================================== இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்  : 22-12-1887 ====================================== தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டு அவரே அமைத்த மாயச்சதுரம் : ================================================ 22.....12.....18.....87 21.....84.....32......2 92.....16......7.....24 .4.....27.....82.....26 இந்த மாயச் சதுரத்தின் முதல் நிரலில் அவருடைய பிறந்தநாள் கொடுக்கப்பட்டுள்ளது ...

சித்திரக்காரி

Posted: 24 Jul 2015 01:13 PM PDT

மகள் நல்ல சித்திரக்காரி கோடுகளையும் வண்ணங்களையும் நுட்பமாக இணைத்து சித்திரம் வரைய கற்றுத்தேர்ந்திருக்கிறாள் – அவள் பறவைகளை வரையும்போது அகண்ட வானத்தையும் அவை அமர்வதற்கேற்ற கனி மரங்களையும் வரைந்து விடுகிறாள் – அவள் வரையும் ஆறுகளிலும் குளங்களிலும் நீர் வற்றுவதே இல்லை நீர்ப் பறவைகளை வரையும்போது நீருக்குள் மீன்களையும் வரைந்து நீந்த விடுகிறாள் – நிலக்காட்சிகளை வரைய திட்டமிடும்போது பசும்புல்வெளிகளை தீட்டிய பின் கால்நடைகளை வரைந்து மேய விடுகிறாள் – அவள் வரைந்த கார்மேகங்கள் பெரும் மழையாகி பெய்யும்போது ...

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Posted: 24 Jul 2015 01:03 PM PDT

நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி.

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Posted: 24 Jul 2015 01:00 PM PDT

ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா

அறிமுகம்--குமார்

Posted: 24 Jul 2015 12:55 PM PDT

@kumaravel2011 wrote:ஈகரை சொந்தங்களுக்கு எனது வனக்கம்! எனது பெயர்: பொன். குமரவேல். எனது சொந்த ஊர்: புதுக்கோட்டை மாவட்டம் முடுக்குபிஞ்ஜை என்னும் குக்கிராமம்.. ஈகரை சொந்தங்களுக்கு ஆரம்பத்திலையே ஒரு விஷயத்தை கூரிக்கொள்ல விரும்புகிரேன்.. அதாவது நேற்று ஈகரையில் அரிமுகமான பொன். சக்திவேலிந் தம்பிதான் நான்.. எனக்கும் சிரு வயதில் இருந்தே பார்வை கிடையாது! பெற்றோர்கள் நல்லா படிக்கவைத்து இருக்கிரார்கள் அதனாலயே நான்ிவ்வலவு முன்னேரி இருக்கிரேன் என்பதை கூரிக்கொள்ல விரும்புகிரேன்! எனது தொடக்க பள்ளி ...

மூளைக்குணவு

Posted: 24 Jul 2015 08:21 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

உலகின் டாப் 5 சுற்றுலா தலங்கள்

Posted: 24 Jul 2015 08:11 AM PDT

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லக்கூடிய இடத்தில் முதலாவதாக இருக்கிறது தாஜ்மஹால். உலக அளவில் இது 50வது இடத்தில் இருக்கிறது. அப்படியானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக் கூடிய  முதல் ஐந்து இடங்கள் எவை? அதைத்தான் இங்கே தொகுப்பாய் காணப் போகிறோம். - - கிராண்ட் பஜார் துருக்கியில் உள்ள இதுதான் உலகிலேயே அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. Faith மாவட்டத்தில் பண்டைய காலத்தில் கான்ஸ்டான்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல்லில் கிராண்ட் பஜார் உள்ளது. இது ...

கேமரா ஷாட்

Posted: 24 Jul 2015 08:04 AM PDT





கேரளா மூணாறு ராஜமலையில் எடுத்தது

அறிமுகம் --சங்கர்.ப

Posted: 24 Jul 2015 08:03 AM PDT

:வணக்கம்:
பெயர்:சங்கர்.ப
சொந்த ஊர்:தேனி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:உலாவியில்
பொழுதுபோக்கு:கவிதை மற்றும் புகைப்படம் எடுப்பது
தொழில்:மென்பொருள் பயிற்சியாளர்
மேலும் என்னைப் பற்றி: மனதை ரிலாக்ஸ் செய்ய நேரம் கிடைப்பதில்லை, இதில் இணைந்ததிலிருந்து உற்சாகமாக இருக்கிறது...

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

Posted: 24 Jul 2015 07:12 AM PDT

முன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ...

எழுத்தாளர்கள் சங்கத்தில் - ஆதிரா

Posted: 24 Jul 2015 07:09 AM PDT

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில்19/07/15 ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற கவியரங்கில் கவி கா. மு. ஷெரிப் அவர்களைப் பற்றிய என் கவிதை இலக்கிய வள்ளல் மாம்பலம் சந்திர சேகர் அவர்கள் வழங்கும் பரிசினைப் பெற்றது. கலைமாமணி எர்வாடியார் திருக்கரங்களால் வழங்கப் பெற்ற் பரிசுக்கு நன்றி நன்றி எழுத்தாளர் சங்கம், இலக்கிய வள்ளல், மற்றும் ஏர்வாடியார்.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (126)

Posted: 24 Jul 2015 06:50 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சாமி கும்பிட்டுப் படுங்க...கெட்ட கனவெல்லாம் வராது..!!

Posted: 24 Jul 2015 06:45 AM PDT


--

-


-

தொடரும்...

கங்கை எங்கே போகிறாள் - ஜெயகாந்தன் - சாஹித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் .

Posted: 24 Jul 2015 06:09 AM PDT

சில நேரங்களில் சில மனிதர்களின் இரண்டாம் பாகமே �கங்கை எங்கே போகிறாள்?�. சில நேரங்களில் சில மனிதர்கள் அந்த நாவலில் வருகிற கங்கா எனக்கே ஒரு கதாபாத்திரம் என்ற எல்லையை மீறி வாழ்க்கையில் பிரவேசிக்க முயல்கிற மாதிரி உயிர் பெற்றெழுகின்ற பாத்திரமாய்த் தோன்றுகிறது. http://www.mediafire.com/download/h44nai0t3plad2w/Jeyakanthan-Gangai+enge+pogiraal+.60MB.படப் (அல்லது ) http://www.mediafire.com/view/plgw7jkq908d11p/Jeyakanthan-Gangai+enge+pogiraal.39MB.pdf

திருப்பம்

Posted: 24 Jul 2015 06:00 AM PDT


-
மாணவர்களுக்கிடையே ஒரு சிறுகதைப்போட்டி
நடைபெற்றது.

கதையின் முடிவில் சிறந்த எதிர்பாராத திருப்பம்
இருந்தால் அதற்குத்தான் முதல் மா
பரிசு கிடைத்த முடிவு:
-
என்னைக் கல்யாணம் பண்ணிக்இகொள்வாயா
என்று அவன் கேட்டான்.
-
முடியாது, என்றாள் அவள்
-
அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
-
------------------------------------

அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் - ஆதிரா

Posted: 24 Jul 2015 05:58 AM PDT

ஞாயிற்றுக் கிழமை 19.07.15 அன்று சென்னை அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் (கந்தசாமி நாயுடு கல்லூரியில்) "வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றியபோது. ஒளிப்படம் கொடுத்த எழுத்தாளர் கல்வியாளர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி (முதல் முறையாக ஒலிப்பதிவு செய்துள்ளேன். பல இடையூறுகள் உள்ளன. சிவாவிடம் கொடுத்து அவர் கட் பேஸ்ட் எல்லாம் செய்த பின் பதிவேற்றுகிறேன்.)

முகப்பரு வரக்காரணம் என்ன?

Posted: 24 Jul 2015 05:53 AM PDT

பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. (எல்லாம் வயசுக் கோளாறு என்று சிலர் நக்கல் செய்வதை கவனத்தில் கொள்ளவும்!) சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் உள்ளது, அவை சீபம் என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க் கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. ...

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்

Posted: 24 Jul 2015 05:53 AM PDT

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (23) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இத்தீர்ப்பில், ''சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை பெற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்'' என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு ...

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Posted: 24 Jul 2015 05:50 AM PDT

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ...

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர்

Posted: 24 Jul 2015 05:49 AM PDT

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"! இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு ...

பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?

Posted: 24 Jul 2015 05:39 AM PDT

பூமியை விட 60 மடங்கு பெரிய கிரகத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவது குறித்த ஆராய்ச்சியில் உலகின் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து பல்வேறு ஆராச்சியில் ஈடுபட்டு வருகிறது.

பார்வைகள்!

Posted: 24 Jul 2015 05:35 AM PDT

- நானும் என் எட்டு வயது மகனும் சலூன் கடைக்குச் சென்றோம்.இன்னொரு தலையில் பிஸியாக இருந்த கடைக்காரர், ''வாங்க சார்… ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க, இதோ முடிஞ்சிரும்!'' என்றார். – டீப்பாய் மீது கிடந்த அன்றைய தினசரியை நான் எடுத்தேன். என் பையன் ''ஹைய்யா…'' என்ற குதூகலத்துடன் அங்கேயிருந்த காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். – பேப்பர் படிப்பதில் என் கவனம் பதியவில்லை. காரணம், அந்த சலூன் சுவரெங்கும் பெரிய பெரிய சைஸில் சில அரை நிர்வாணப் பெண்கள் படங்கள். – இடம் கிடைத்து முடி ...

அழகிய தவறு - இயக்குனர் மகேந்திரன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 24 Jul 2015 04:52 AM PDT

மகேந்திரன் புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ.அலெக்ஸாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு ...

தாமரை இலை ஆசைகள்...!! -Mano Red

Posted: 24 Jul 2015 04:25 AM PDT

ஆசை போட்ட சாலையில் ஆரம்பித்த மனிதப் பயணம் அவர்களின் பையிலில்லை ஆசையின் கையிலிருக்கிறது..!! ஆசையின் மையப்புள்ளியை ஓசையின்றி சுற்றியே பாழாய்ப்போன மனிதனின் வாழ்க்கை ஓடுகிறது..!! வேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் விரிவடைகிறதே தவிர, சாகும் வரை இதுவே போதுமென மனம் சொல்வதில்லை..!! ஒரு ரூபாய் கிடைத்தால் நூறு கிடைக்கும் வரை ஆசை சும்மா விடுவதில்லை தரையைப் பார்த்து நடக்க வைக்கிறது.!! மண்ணாசைக்கு கொலையும், பொன்னாசைக்கு பழியும், பெண்ணாசைக்கு பாபமும், சுமப்பது தான் மிச்சம்...!! சகலமும் ...

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 24 Jul 2015 02:32 AM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

12-7-2015- நாணயம் விகடன் + 14-7-2015- சினிக்கூத்து + 27-7-2015-புதிய தலைமுறை கல்வி + 11-7-2015- டைம் பாஸ் விகடன்

Posted: 24 Jul 2015 12:16 AM PDT

http://www.mediafire.com/download/8lt3wt1n9lziyom/Nanayam+vikatan+12-7-2015.படப் http://www.mediafire.com/download/ylalemxu1wxc70c/Cinikoothu+14-07-2015.படப் http://www.mediafire.com/download/sjyjrvczg3zzqpc/Puthiya+Thalaimurai+Kalvi+27-07-2015+.படப் http://www.mediafire.com/download/w4hlhozb9wj7h2c/Time+pass+11-07-2015.pdf


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™