Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தீயா வேலை செய்யணும் குமாரு-| திரை விமர்சனம்

Posted: 16 Jun 2013 12:50 PM PDT

http://123tamilcinema.com/images/2013/06/cf921e18-b340-4f2a-883b-b4afa9f7da75_S_secvpf.jpg பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்சித்தார்த். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும்இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை. - இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள்வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார். - அதே ...

பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவது ஏன்..?!

Posted: 16 Jun 2013 12:39 PM PDT

௧) கல்வி (Education) ௨) அறிவு (Intelligence/ Knowledge) ௩) ஆயுள் (Long-life) ௪) ஆற்றல் (Talent) ௫) இளமை (Youth) ௬) துணிவு (Courage) ௭) பெருமை (Greatness) ௮) பொன் (Wealth) ௯) புகழ் (Praise/ Glory/ Fame) ௰) நெல் (Food) ௰௧) நன்மைகள் (Benefits) ௰௨) நல்லொழுக்கம் (Discipline/Good behavior) ௰௩) நோயின்மை (Health) ௰௪) முயற்சி (Endeavour) ௰௫) வெற்றி (Victory/ Triumph/ Success) ௰௬) அழகு (Beauty) என்னும் பதினாறு செல்வங்களையே ! Swame Swami.

ஷெர்லாக் ஹோம்ஸ் நூல் வேண்டும்

Posted: 16 Jun 2013 12:23 PM PDT

ஹாய் ,
 எனக்கு
ஷெர்லாக் ஹோம்ஸ் தமிழில் மொழி பெயர்த்த அனைத்து கதைகளும் கிடைக்குமா ?கிடைத்தால் லிங்க் தரவும் ...
மிக்க நன்றி ..

நமது உடல்

Posted: 16 Jun 2013 12:08 PM PDT

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர். நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 16 Jun 2013 12:06 PM PDT

சூப்பருங்க மகிழ்ச்சி

உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்

Posted: 16 Jun 2013 11:45 AM PDT

அழகிய பள்ளிவாயல்கள் (MASJID WALLPAPER)

Posted: 16 Jun 2013 11:44 AM PDT

உண்மையை சொன்ன ஏஞ்சலினா ஜோலி!

Posted: 16 Jun 2013 10:50 AM PDT

தலைமுடி நரைத்தாலே, அது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் உலகப்புகழ் பெற்ற ஆங்கில நடிகை, ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில், அறிக்கையை வெளியீட்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட ஏஞ்சலினா, சமீபத்தில், இரு மார்பகங்களையும் அப்புறப்படுத்தி விட்டார். இந்த தகவலை, ரசிகர்கள் முன் கூறி, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். "உலகப்புகழ் பெற்ற நடிகையாக இருந்தும், உங்கள் நோயை பற்றி எப்படி கூறினீர்கள்?' என்று கேட்ட ...

கண்ணுக்குள்ளே நாடாப் புழு... நம்புவீர்களா?

Posted: 16 Jun 2013 10:45 AM PDT

நாடாப் புழு என்று சொல்லும் போது அது வயிற்றில் மட்டும் தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறோம்.  அதிலும் அதிகப்படியான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடாப் புழுக்கள் வயிற்றில் வரும்.  ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்றுவதற்கு பூச்சி மாத்திரைகளை போட்டு, அவ்வளவு தான் என்று நினைப்போம்.  ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இந்த நாடாப் புழு வயிற்றில் மட்டும் வருவதில்லை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும். அதைக் கூட நம்பலாம்.  ஆனால் கண்களிலும் நாடாப் புழு தொற்றும் ...

அவசரப்படுகிறார் அத்வானி!

Posted: 16 Jun 2013 10:43 AM PDT

கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரம் இந்த அளவுக்கு சர்ச்சையை எழுப்புகிறது என்பதே, நரேந்திர மோடி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட ...

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!

Posted: 16 Jun 2013 10:37 AM PDT

மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றது தான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்ட தான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக் கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ...

அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!

Posted: 16 Jun 2013 10:32 AM PDT

சென்னை மாநகரில் இருப்பவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் கேள்விகள் தக்காளியைப் பற்றியவை. ""அங்காடியில் விற்கப்படும் தக்காளிப்பழம் பெரியதாக மைசூர் போண்டாவைப்போல் உள்ளது. தோல் கடினமாக உள்ளது. ருசியும் இல்லை. இது ஏன்?'' புளிப்புள்ள சிறிய தக்காளி மிகவும் அரிதாகிவிட்டது. ""போண்டா தக்காளி'' என்றும் ""பங்களூர் தக்காளி'' என்றும் விற்கப்படும் இனிப்பற்ற தக்காளியின் தோற்றம், மாற்றம், வடிவமைப்பை ஆராய்ந்தால் நிஜமாக அந்தத் தக்காளி ""அசைவத் தக்காளி'' ஆகும். எல்லாம் விபரீத விஞ்ஞான விளைவுதான். பங்களூர் இனிப்புத் ...

ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

Posted: 16 Jun 2013 10:30 AM PDT

• முதலில் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளாலும் லேசாக பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், வலது முழங்கையை கொண்டு இடது முழங்காலை நோக்கி தொட வேண்டும். பின் அதை அப்படியே மாற்றி இடது முழங்கையால் வலது முழங்காலை தொட வேண்டும். இதே போல் 10 முதல் 15 வரை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இதை சைக்கிள் பயிற்சி என கூறுவர். • தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள ...

இயற்கை மருத்துவம்

Posted: 16 Jun 2013 10:28 AM PDT

நாம் அன்றாட வாழ்வில் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் இயற்கையான மருத்துவ குணங்களை பற்றிய ஒரு தொகுப்பு. தரவிறக்க சுட்டி- இயற்கை மருத்துவம்

எப்படி வந்தது தந்தையர் தினம் ?

Posted: 16 Jun 2013 10:24 AM PDT

அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ...

பெண்களுக்காக சில எளிய தற்காப்பு அம்சங்கள்

Posted: 16 Jun 2013 10:23 AM PDT

இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு மிகவும் அவசியமாகிவிட்டது.வன்முறை, சித்திரவதை,பாலியல் போன்ற அவல நிலைக்கு ஆளாகும் பெண்கள் தற்காப்பு கலையை கற்று வைப்பது அவசியம். இந்நிலையில், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்து கொள்ள சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். • தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள். • யாராவது உங்களை கேலி, கிண்டல் செய்தால் தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் ...

மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!

Posted: 16 Jun 2013 10:19 AM PDT

மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !! ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு ...

ஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி?

Posted: 16 Jun 2013 10:18 AM PDT

வணக்கம் நண்பர்களே, என்னதான் நாம் தினமும் பல வெப்சைட்டுகளை பார்த்தாலும் அவற்றின் முதலாளி யார் என்பதை நம்மால் அறிய முடிவதில்லை. மற்றும் அந்த வெப்சைட்டினை எங்கு ஹோஸ்ட் செய்துள்ளார்கள் என்பதனையும் அறியமுடிவதில்லை. மொத்தமாக சொன்னால் ஒரு வெப்சைட்டினை பற்றிய எந்தவொரு விவரமும் நம்மால் அறியமுடிவதில்லை. இப்பொழுது அதற்கான ஒரு ஒரு வழியினை நான் கண்டறிந்துள்ளேன். whois33.com நமக்கு அந்த தகவல்களை வழங்குகிறார்கள். whois33.com சென்று ஒரு வெப்சைட்டின் முகவரியை இட்டு சர்ச் செய்தால் அந்த வெப்சைட்பற்றிய முழு விவரங்களையும் ...

சாம்பியன் டிராபி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Posted: 16 Jun 2013 09:44 AM PDT

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் இம்ரான் பர்கத் நீக்கப்பட்டு ஆசாத் சபிக் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மந்தமான துவக்கம்: பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில்' ...

நீயோ தள்ளி போகிறாய் ....

Posted: 16 Jun 2013 09:33 AM PDT

உன்னை காதலித்து -நான்
காணப்போவது சுகமோ
காதல் சுகமோ -தெரியாது
நிச்சயம் அழுவேன்

வசதி படைத்தவன்
வசதி படைக்காதவன்
காதலுக்கு தெரிவதில்லையே

நான் இப்போ பள்ளி வருவது
உன்னை கிள்ளி செல்லவே
நீயோ தள்ளி போகிறாய்

கஸல் ;148

ஆயுள் ரேகையாக இருக்கிறது

Posted: 16 Jun 2013 09:32 AM PDT

முத்து குளிப்பது போல்
உன்னை இத்தனை பேர்
மத்தியில் தேர்ந்தெடுத்தேன்
திருடினேன் ...

நீ கையில் தந்த
முத்தம் தான் -என்
ஆயுள் ரேகையாக
இருக்கிறது

நான் எழுதுவது
காதலர் கவிதையல்ல
கண்ணீர் கவிதையும் இல்லை
காதல் கவிதை

கஸல் ;147

நவ பாஷாணம் என்பது என்ன?

Posted: 16 Jun 2013 09:29 AM PDT

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.., 1. .சாதிலிங்கம். 2 .மனோசிலை 3 .காந்தம் 4 .காரம் 5 .கந்தகம் 6 .பூரம் 7 .வெள்ளை ...

எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும்!!

Posted: 16 Jun 2013 09:22 AM PDT

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். தன்னம்பிக்கை: அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அதுஉள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ ...

சிறந்த 3D (red and Cyan - anaglyph ) அசையும் படங்கள்

Posted: 16 Jun 2013 09:13 AM PDT

மிகச்சிறந்த anaglyph 3D  வீடியோக்கள். இவற்றைப்பார்பதற்கு சிவப்பு நீலம்கொண்ட விசேட கண்ணாடி தேவை.கண்ணாடி கண்ணாடிக்கடைகளில் விற்பனைக்குண்டு. இல்லாதவிடத்து நீங்களாகவே செய்துகொள்ளும் முறை கீழே தரப்படும் http://www.wikihow.com/Make-Your-Own-3D-Glasses

தாய்மையின் சீற்றம்!

Posted: 16 Jun 2013 09:08 AM PDT

""சாரதாம்மா, நீங்க கொஞ்ச நேரம், இந்த பெஞ்சுல உட்கார்ந்திருங்க. நீதிபதி ஐயா, மதிய உணவு முடிஞ்சு வந்ததும், முதல்ல நம்ம கேசுக்கு தான் தீர்ப்பு கொடுக்க போறாரு. கண்டிப்பா, நமக்கு சாதகமாகத் தான் இருக்கும்.'' நலிந்த புன்னகையை உதிர்த்தாள் சாரதா. ஜூனியர் அட்வகேட், அந்த இடத்தை விட்டு அகன்றதும், அந்த விஸ்தாரமான ஹாலில் கண்களை ஓட்டினாள். அவளுக்கு நேர் எதிர்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அவள் பெற்ற மக்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அம்மாவின் பார்வை தங்கள் மேல் விழுவதைக் கண்டதும், அவசர அவசரமாக மூவரும் ...

இப்போ சொல் யார் குற்றவாளி ...?

Posted: 16 Jun 2013 09:08 AM PDT

நீ என்னை பார்த்தது குற்றமா ..?
நீஎன்னை பார்த்து சிரித்தது குற்றமா ..?
உன்னை கண்டபின் காதல் வந்தது குற்றமா ..?
எது குற்றம் ..?
காதல் வந்தது குற்றமென்றால்..
காதலை படைத்தவன் குற்றவாளி ..
என்னை படைத்தவன் குற்றவாளி ..
உன்னை படைத்தவன் குற்றவாளி ..
இப்போ சொல் யார் குற்றவாளி ...?

நீ என்னை வாசிக்கிறாய்

Posted: 16 Jun 2013 09:02 AM PDT

என் முகவரியை
மறந்து -உன் முகவரியை
எழுதிவிட்டேன்
தபால் உறையில்...

நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது

நான் உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு

கஸல் 149

தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

Posted: 16 Jun 2013 09:01 AM PDT

ஈகரையின் பாசக்கார தந்தையர்களுக்கு எங்களின் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
 

காதலில் பெண்களிடம்

Posted: 16 Jun 2013 08:24 AM PDT

நீ ஒன்றும் பாவியுமில்லை
நான் ஒன்றும் பாதிரியாரும்
இல்லை .உனக்கு மன்னிப்பு
தருவதற்கு ...

வேடிக்கைக்கு கூட
என்னை மறந்துவிடு
என்று சொல்லிவிடாதே
நிச்சயமாக நான் மன்னிக்க
மாட்டேன் ...!!!

காதலில் பெண்களிடம்
சொல்லி தோற்றவர்கள்
தான் அதிகம்

kasal 150

காதல் மட்டும் தான்

Posted: 16 Jun 2013 08:23 AM PDT

உன்னை கண்டேன் என்பது
பொய் உன் கண்ணைக்கண்டேன்
என்பதுதான் உண்மை ..
காதல் கொண்டேன்
காவியமானேன் ...
காதல் மட்டும் தான்
என்னை போன்றவனை ..
மனிதனாக்கும் -உன்னை
போன்றவளை தேவதையாக்கும் ..
ஒன்றின் மீது ஒன்று உரசாது ..
போனால் உருவாக்குவது ...
ஒன்றும் இல்லை ...
காதலும் கூட ...!!!

என்னை காதலித்து

Posted: 16 Jun 2013 08:22 AM PDT

எனக்குத்தான் தலைவலி
நீஏன் அழுகிறாய் ..???
எனக்கு பசித்ததை -என்
அம்மா உணர்ந்தபின் -நீ
எப்படி உணர்ந்தாய் ..?
காதல் அந்தளவுக்கு சக்தியா?
காதாலால் தான் இன்பத்தையும்
துன்பத்தையும் உணரும் மகா சக்தி
கொண்டது ..!!!
என்னையே நான் விரும்பாத போது ..
என்னை காதலித்து -எனக்கு
மதிப்பெண் கொடுத்தவள் நீ ...!!!

Thillu Mullu (2013) Full Movie Download

Posted: 16 Jun 2013 07:32 AM PDT

தில்லுமுல்லு திரைப்படம் தரவிறக்கம் செய்ய: File Name: Thillu Mullu (2013) Tamil (DVDSCR)Part-1.mp4 Click To Download File Name: Thillu Mullu (2013) Tamil (HQ DVDSCR)Part-2.mp4 Click To Download File Name: Thillu Mullu (2013) Tamil (HQ DVDSCR)Part-3.mp4 Click To Download File Name: Thillu Mullu (2013) Tamil (HQ DVDSCR)Part-4.mp4 Click To Download இத்திரைப்படத்தின் தரவிறக்க சுட்டி இணையத்திலிருந்து எடுத்து இங்கு பயன்படுத்தப்படுகிறது!

"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !

Posted: 16 Jun 2013 06:31 AM PDT

"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம்: முதன் முதலாக தாம்பரத்தில் துவக்கம் ! தாம்பரம்: "செப்டிக்டேங்' மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து, பயோ காஸ் மூலம் இயங்கும், சமுதாய சமையல் கூடம், தாம்பரத்தில் துவக்கப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம்: தாம்பரம் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 21வது வார்டு, குடிசை பகுதி அதிகம் கொண்டது. இந்த வார்டில் மட்டும், 292 குடியிருப்புகள் உள்ளன. 135 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 125 வீடுகளில், எரிவாயு சிலிண்டர் ...

கண்ணன் - என் காதலன்

Posted: 16 Jun 2013 06:24 AM PDT

ஆசை முகம் மறந்து போச்சே - இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் -எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் கண்ண னழகுமுழு தில்லை; நண்ணு முகவடிவு காணில்- அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம், ஒய்வு பொழிதலு மில்லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினை யெப் போதும். கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க லினிடத்திலிது போல ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? தேனை ...

வாழ்க்கைக்கான பொன்னான வழிமுறைகள்...

Posted: 16 Jun 2013 06:23 AM PDT

* எந்த பிரச்சனைகளை உங்களால் மாற்ற முடியாதோ அதனைப் பற்றி சிந்தித்து கவலைப்படாதீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். * இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவரது பாகத்தை சரியாக நடித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே பிறரது நடிப்பைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். * பிறரை மாற்ற வேண்டும் என்ற இச்சையின் மூலம் மானசீக மன இறுக்கம் அதிகரிக்கின்றது. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். * பொறாமைப் படுவதனால் ...

6வது எம்.பி சீட்டுக்கு கனிமொழியை எதிர்த்து டி.ராஜா போட்டி

Posted: 16 Jun 2013 06:19 AM PDT

சென்னை: ராஜ்யசபா தேர்தலி்ல தமிழகத்தில் 6வது இடத்துக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா போட்டியிடுகிறார். தமிழகத்தில் 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. 6வது இடத்துக்கு திமுக சார்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அவரது கட்சியின் ஆதரவு மட்டும்போதாது, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 6வது இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது ...

விண்டோஸ் 8: கடவுள் வழி

Posted: 16 Jun 2013 06:08 AM PDT

இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம். நம் வாழ்க்கையில் புதியதாக எது வந்தாலும், கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்துகையில் சில பிரச்னைகள், சிக்கல்களைச் சந்திக்கிறோம். பின்னர் அதுவே, நாம் விரும்பும் ஒன்றாக மாறிவிடுகிறது. விண்டோஸ் ...

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Posted: 16 Jun 2013 06:02 AM PDT

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கருங்கல்லும், சுண்ணாம்பும், நேர்மையும், உண்மையும் கலந்து 1934ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே பெரியநீர்தேக்கமாகவும் விளங்கியது. அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கும். நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படும். அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் ...

அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை

Posted: 16 Jun 2013 05:56 AM PDT

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்" ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!" அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை ...

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான்

Posted: 16 Jun 2013 05:35 AM PDT

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்
மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான்
http://www.4shared.com/document/E4_Qo0N0/Tamil_Medicines.html

கண்ணன் - என் காதலன்

Posted: 16 Jun 2013 05:13 AM PDT

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY-Kig8-WM4dKm1Mcp58okMUlRCMrCp5WTHJOACGrOqk4ODPeja7bhGZDcmUg3WyUirQBr5PlsVFSx15eyZ_hyZpdOSX6Y44vVGEgC_N_A-epbKyIAzS7iVhxL7XY5W7s6gowHuc6IFEw/s1600/pen+kulal+oviyam.jpg தூண்டிற் புழுவினைப்போல் ---வெளியே  சுடர்விளக்கினைப் போல் , நீண்ட பொழுதாக-- எனது  நெஞ்சந் துடித்த தடீ! கூண்டுக் கிளியினைப் போல் --தனிமை  கொண்டு மிகவும் நொந்தேன் ; வேண்டும் பொருளை யெல்லாம்--மனது  வெறுத்து விட்ட தடீ! பாயின் மிசை நானும் --தனியே  படுத் திருக்கையிலே, தாயினைக் கண்டாலும்,--சகியே!  சலிப்பு வந்த தடீ ! வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!  வளர்த்துப் பேசிடுவீர்; நோயினைப் ...

குழந்தைகளை நினையுங்கள்!

Posted: 16 Jun 2013 05:01 AM PDT

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுகிறார், அவர் ஒரு சங்கிலிப் புகைப்பாளர், அவருக்கு வாயிலிருந்து பொய் வராத நேரங்களில் எல்லாம் புகை வரும் என்பதாகப் பல்வேறு கதைகளை விளையாட்டாய் நம்மத்தியில் புகைப்பிடிப்பவர்களைப் பார்த்துச் சொல்லிக்கொள்கிறோம். புகைப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு விளையாட்டாய் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷய மல்ல. புகைப்பிடித்தல் என்பது பிடிக்கின்றவர்களை மட்டுமே பாதிக்கின்ற விஷயமும் அல்ல. அது காற்றாலும் பரவி நம்மைத் தாக்குகிற நஞ்சு. தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகள் எந்த சப்தமும் இல்லாமல் ...

முதியோருக்கும் வந்துவிட்டது தடுப்பூசி

Posted: 16 Jun 2013 04:25 AM PDT

http://img.dinamalar.com/data/uploads/E_1371360444.jpeg பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், மஞ்சள் காமாலை, நிமோனியா, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ், தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் போன்ற, பல்வேறு நோய்களுக்கு, தடுப்பூசி போடப்படுகிறது. - இந்நிலையில், தான் துவக்கிஉள்ள, முதியோருக்கான தடுப்பூசி மையம் குறித்து விளக்குகிறார், சென்னை மருத்துவக் கல்லூரி, முதியோர் மருத்துவ துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் நடராஜன். - மனிதர்களுக்கு வயது ஆக ஆக, நோய்களை ...

"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள்

Posted: 16 Jun 2013 04:19 AM PDT

இருபதாம் நூற்றாண்டு தமிழர்தம் வரலாற்றில் தனியொரு இடம் பிடித்தவர் கே.பி. சுந்தராம்பாள். நடிகையாக, பாடகியாக, நாட்டுப்பற்றுடைய தியாகியாக எல்லாவற்றுக்கும் மேலாக அமர காதலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் கே.பி.எஸ். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் தொகுத்து, அவர் பாடிய பாடல்கள், ஆடிய நாடகங்கள், நடித்த படங்கள் என்று அனைத்தையும் பட்டியலிட்டுக் "கொடுமுடி கோகிலம்' என்கிற அற்புதமான புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ப. சோழநாடன். கே.பி. சுந்தராம்பாளின் நூற்றாண்டை ஒட்டி 2007-ஆம் ஆண்டில் ...

வாழையடி வாழை!

Posted: 16 Jun 2013 03:55 AM PDT

சுள்ளென்ற வெயிலுமில்லாமல், மேக மூட்டமுமில்லாமல் ஊமை வெயிலாய் இருந்த வானிலை, சற்று அசவுகரியமாக இருந்தது. தன் மனதைப் போலவே வானமும், வெகுவாக குழம்பிக் கிடப்பதாய் தோன்றியது சங்கரனுக்கு. ""அம்மா... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேம்மா,'' என்ற பிரியாவின் குரலும், ""இந்த வெயில்ல எங்கேடி?'' என்ற கவுரியின் குரலும் கேட்க, திரும்பிப் பார்த்தார் சங்கரன். அறையிலிருந்து, அழகு தேவதையாய் வெளிப்பட்டாள் பிரியா. மெரூன் நிற சுடிதாரில், அவளுடைய கோதுமை நிறம் இன்னும் பிரகாசமாகத் தெரிந்தது. அடர்த்தியான, நீளமான ஒற்றைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™