Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதலர் விடும் மூச்சு ....

Posted: 15 Jun 2013 12:49 PM PDT

அழகு என்பது
அழுக்காகவும் இருக்கலாம்
அருவருப்பாகவும் இருக்கலாம்
யார் என்ன சொன்னாலும்
நீதான் என் உயிர்
நீதான் என் உலக ராணி
என் கண்ணில் நீ
பட்ட நாள்முதல்
கனவுலகில் மிதக்கிறேன்
காதலர் விடும் மூச்சு
காற்றில்லை உயிர் ...!!!

வலியின் பாதையில் ....

Posted: 15 Jun 2013 12:46 PM PDT

உன்னை காதலித்து
முற்பற்றைக்குள்
விழுந்துவிட்டேன்

காதல்
உனக்கு காற்று
எனக்கு மூச்சு

வலியின் பாதையில்
சென்றால் தான்
உன்னை சந்திக்க முடியும்

kasal 05

காதல் தலையெழுத்து

Posted: 15 Jun 2013 12:40 PM PDT

ஆர்முடுகல் வேகத்தில்
உன் இதயத்தில்
என்னை தேடுகிறேன்

என் மூச்சுகாற்றில்
நீ ஊஞ்சலாடுகிறாய்

நான் விடுவது
கண்ணீர் அல்ல
காதல் தலையெழுத்து

kasal 04

இன்று பிறந்தநாள் கொண்டாடுமDr.s் ் சௌந்திரப்பாண்டியன் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க

Posted: 15 Jun 2013 12:36 PM PDT

இன்று பிறந்தநாள் கொண்டாடும் Dr.s. சௌந்திரப்பாண்டியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்

காதலர் சின்னம்

Posted: 15 Jun 2013 12:17 PM PDT

பாலுக்குள் வெண்மை
இருப்பதுபோல்
நீ என்னுள் இருக்கிறாய்

கண்ணீருக்குள்
இருக்கும் காதல் கதை
சுகமானது

நீரும் நெருப்பும்
காதலர் சின்னம்


கஸல் - தொடர்

கடி ஜோக்ஸ் -சில..

Posted: 15 Jun 2013 12:15 PM PDT

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா? அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு... சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்... டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா? நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..! ""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?'' ...

நீ வெறுத்தாலும் வாசி

Posted: 15 Jun 2013 11:29 AM PDT

என் காதலுக்கு
நான் தான் தீவிரவாதி


சந்திக்க துடிக்கும்
காதலருக்கு
கனவுதான் பொது இடம்

நான் எழுதும் கவிதையை
நீ வெறுத்தாலும் வாசி
வரிகள் -நீ

kasal 06

சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!

Posted: 15 Jun 2013 11:18 AM PDT

சாத்தனூர் - முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். சாத்தனூரில் உள்ள கல் மரம்தான் (நஹஹற்ட்ஹய்ர்ர்ழ் ஊர்ள்ள்ண்ப் பழ்ங்ங்) 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம். வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் ...

வீட்டு நாயும் வீதிநாயும்...

Posted: 15 Jun 2013 11:15 AM PDT

வீதிகளில் உலவும் நாய் ஒன்றும் , வீட்டில் சகல மரியாதைகளுடன் வளர்க்க பட்ட நாய் ஒன்றும் சந்தித்தன . வீதி நாய் : ஏண்டா ! நீ இப்படி சும்மா தின்னுட்டு, குடிச்சுட்டு சும்மாவே இருக்கியே. இதெல்லாம் ஒரு பொழப்பா?.ஏண்டா இப்படி இருக்க? வீட்டு நாய் : நான் ஒன்றும் உன்னை போல் அல்ல . ஒரு உயரிய லட்சியத்திற்காக தான் இங்க இருக்கேன் வீதி நாய் : என்னடா அது ? வீட்டு நாய் : இந்த வீடு பொண்ணு ஒரு பையனை விரும்புரா. வீதி நாய் : அதனால் உனக்கு என்னடா ? வீட்டு நாய் : அந்த விஷயம் அவ அப்பாக்கு ...

படிக்க சிரிக்க சிந்திக்க ....

Posted: 15 Jun 2013 11:08 AM PDT

தம்பி;ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்ன ஒற்றுமை? அண்ணன்; தெரியலியே தம்பி ; ரேஷனில் எடை குறையும் ..பேஷனில் உடை குறையும் ********************************************************************* அண்ணன்; சீப்புக்கும் வாழைப் பழத் தோலுக்கும் என்ன வித்தியாசம் தம்பி;தெரியலப்பா அண்ணன்; சீப்பு தலையை வாரும்.. வாழைப் பழத் தோல் காலை வாரும் ******************************************************************** மகன்; அப்பா! உங்களால இருட்டில் எழுத முடியுமா ? அப்பா; ஏன் கேக்குற?எழுத முடியுமே ...? ...

சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்

Posted: 15 Jun 2013 10:56 AM PDT

சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் ...

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?

Posted: 15 Jun 2013 10:52 AM PDT

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், 'டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்' அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு ...

ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!

Posted: 15 Jun 2013 10:33 AM PDT

ஹாலிவுட் படமான சூப்பர் மேன் 3டி, வெளியான முதல் நாளிலேயே ரூ 300 கோடிக்கு மேல் குவித்துள்ளது. சூப்பர் மேன் வரிசைப் படங்களில் லேட்டஸ்டாக வெளியாகியுள்ள படம் 'மேன் ஆப் ஸ்டீல்'. நேற்று உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்குமேல் திரையிடப்பட்டது. இந்தப்படம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், அடுத்த மூன்று நாட்களில் ரூ 1000 கோடி வரை வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கிரார்கள். இதில் ஹென்றி கேவில், எமி ஆடம்ஸ் உள்ளிட்டோர் ...

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Posted: 15 Jun 2013 10:31 AM PDT

முதலிரவில் உனக்கு என்ன வேண்டும் என்று கணவன் கேட்டபோது மனைவி "எனக்கு நீங்கள் தமிழ்சொல்லித்தர வேண்டும்"என்று கோரினாள். "பொன்னையும் புடவையையும்தானே பெண்கள் கேட்பார்கள்?"என்று வியந்தார் கணவன். "எனக்குப் பொன்னும் புடவையும் வேண்டுமளவுக்கு இருக்கிறது. மேலும் வேண்டுமென்றால் கேட்டதுமே வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். என் விதிப்பயனால் தமிழறிஞராக நீங்கள் எனக்கு வாய்த்தீர்கள். எனக்குத் தமிழ்ஞானமே போதும்"என்றாள் மனைவி. கணவன் அவருக்குத் தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது அன்னைக்கு அது பிடிக்கவில்லை. ...

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்

Posted: 15 Jun 2013 10:29 AM PDT

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். மணிவண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மணிவண்ணன் 400 படங்களுக்கு ...

தமிழில் நர்சரி ரைம்ஸ் - கானொளி பகுதி 2

Posted: 15 Jun 2013 10:24 AM PDT

மெத்தை வீடு



நன்றி: அம்முபாப்பா

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Posted: 15 Jun 2013 10:23 AM PDT

தேசிய முன்னணி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தொடர்ந்து சந்திப்பு நடத்தி வருவது அடுத்த பிரதமராக வருவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார் என்பதைக் காட்டுவதாக மலேசியன் இன்சைடர் இணைய செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர், அம்பாங் பகுதியிலுள்ள தனது மாளிகை வீட்டில் அவர் தொடர்ந்து சந்திப்புக்களை நடத்தி, ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் உண்டா என்பது ...

இதயம் சொன்னது ...!

Posted: 15 Jun 2013 10:20 AM PDT

உன்னை
நினைக்கச் சொல்லி
இதயத்தில் கைவைத்தேன்
ஆனால் ..

இதயம் சொன்னது
நினைக்க மட்டுமே முடியும்
மணக்க முடியாது என்று ...!

ஓர் இந்தியரின் ஆங்கில நாவல்!

Posted: 15 Jun 2013 10:10 AM PDT

இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த கிரஹாம் க்ரீன் என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர். பூர்ணா என்ற இந்தியர் இவருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் டைப் செய்யப்பட்ட ஒரு பெரிய காகிதக் கட்டுடன் கிரஹாம் வீட்டிற்கு வந்த பூர்ணா, அந்த காகிதக் கட்டை அவரிடம் தந்து, ""மிஸ்டர் கிரஹாம், என் நண்பர் ஒருவர் எழுதிய நாவல் இது. படித்துப் பாருங்கள். நன்றாயில்லையென்றால், ஒரு கல்லைக் கட்டித் தேம்ஸ் நதியில் எறிந்துவிடுங்கள்..'' என்று கூறிவிட்டுச் சென்றார். கிரஹாம் க்ரீனின் மேஜை மேல் பல நாள்கள் தூசு படிந்து கிடந்தது அந்த ...

ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு - ஆசீட் ஊற்றவில்லை என கோர்ட்டில் மறுப்பு. சாட்சிகள் பல்டி

Posted: 15 Jun 2013 10:07 AM PDT

ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு: இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை வெள்ளி, 14 ஜூன் 2013 23:34 செய்தி - தமிழக செய்திகள் E-MAIL | PRINT | காரைக்கால்: ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு தொடர்பாக, காரைக்கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது, சென்னை நீதிபதி, சென்னை மருத்துவர்கள் 3 பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவேண்டும் ...

பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி

Posted: 15 Jun 2013 09:54 AM PDT

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ...

புதிய பயோ-டீசல்!

Posted: 15 Jun 2013 09:36 AM PDT

புங்கன் பழத்தின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயிலிருந்து புதிய பயோடீசல் உருவாக்கலாம் என மதுரை காரியாபட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் செüந்திரபாண்டியன் கண்டு பிடித்துள்ளார். புங்கன் மர எண்ணெயை அந்த மர விதையிலிருந்து தயாரித்து அதில் சோடியம் ஹைட்ராக்ûஸடு, மீத்தைல் ஆல்கஹால் சேர்த்து வெப்ப முறையில் இயந்திரம் மூலம் கலக்கினால் இந்த பயோ-டீசல் கிடைக் கிறதாம். இந்த பயோ டீசல் சிவப்பு நிறத்தில் இருக்கும். பெட்ரோலிய டீசலின் திறனை இந்த பயோ டீஸல் முழுமையாகப் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. ...

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 15 Jun 2013 09:20 AM PDT

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி ! கோவை அருகே உள்ள சூளுரில் பிறந்தவர் ! கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுழன்றவர் ! அய்ம்பது திரைப்படங்கள் இயக்கியவர் ! நாணூறு திரைப்படங்கள் நடித்தவர் ! வெண்தாடி வேந்தரின் பகுத்தறிவுக்கருத்துக்களை ! கருந்தாடி வைத்து திரையில் உரைத்தவர் ! மனிதநேயம் மிக்க மாமனிதர் மணிவண்ணன் ! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர் ! கதையாசிரியர் வசனகர்த்தா உதவி இயக்குனர் கதையின் நடிகர் இயக்குனர் என்று வளர்த்தவர் ! உதவி இயக்குனர்கள பலரை உருவாக்கியவர் ...

காங்கேயம் காளையும்... சிந்து சமவெளிக்காளையும்!

Posted: 15 Jun 2013 07:56 AM PDT

நன்றி- முகநூல் காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 15 Jun 2013 07:25 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)                                                                 - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                                                                                எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி                                                                  சென்னை-33                                                                          தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                       ...

ஆன்மீகக் கவிதை

Posted: 15 Jun 2013 06:36 AM PDT

எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. மனமே முதன்மையானது. மனமே அவைகளை வழி நடத்துகிறது. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடரும். (யோகியின் ;கூற்று ) என் கவிதை ... ஆட்டிப்படைக்கும் மனம் .. யாருக்கும் அடங்காத மனம் ... ஒருவனால் மட்டும் அடக்கி வைக்க .. மனம் என்ற மந்திரிதான் அவன் ... மனதை நீயே மனத்தால் அடக்கு மனமே கோயில் மனமே குப்பை மனமே தாமரை மனமே சேறு எண்ணமே இதை வழிநடத்தும் ...!!!

ம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / பீட்ஸ்வுக்கு பின் ஜிகர்தண்டா

Posted: 15 Jun 2013 06:35 AM PDT

தினம்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்துகின்றன என்பதுடன் அது மிகப்பெரிய தொழிலாகவும் மாறியிருக்கிறது. - உதாரணமாக முன்பு இளையராஜா மேஜையில் மியூஸிக் போட்டு காண்பித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்று ஒரு நபர் சினிமாவில் இசையமைக்க விரும்பினால் பல லட்ச ரூபாய்க்கு இசை சார்ந்த உபனரணங்கள் - கணினி உள்பட வாங்கிய பின்தான் யாரையும் சந்திக்கவே முடியும். - தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அமைக்கப்படும் இசையை ...

காதலுடன் பேசுகிறேன்

Posted: 15 Jun 2013 06:33 AM PDT

அனேக ரசிகர்களின் கேள்வி கஸல் கவிதை என்றால் என்ன ...? கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் பொருள் கடினமாக உள்ளது ..கஸல் கவிதையை விளக்கும் படி கேட்டகிறார்கள் ....கஸல் என்பது இதுதான் ... முதல் பந்திக்கும் ... இரண்டாம் பந்திக்கும் மூன்றாம் பந்திக்கும் தொடர்பு வரத்தேவையில்லை ...ஆனால் கவிதையின் கருப்பொருள் காதல் வலிதான் இங்கு சந்தோசத்துக்கு இடமில்லை .... நான் செய்த குற்றம் உன்னை கண்டது காதலித்தது என்னிடம் ஒரு உறவும் இல்லை உன் இதயம் மட்டும் இருக்கிறது நீ திரும்பிப்பார்க்கும் ...

உள் மூச்சு நீ ..!!!

Posted: 15 Jun 2013 06:30 AM PDT

என் முகத்தில் நீ
என்று வந்தாயோ
அன்றே என் முகத்தை
காணவில்லை

நீ
நெருப்பைவிட
அன்பானவள்
நினைவுகளைவிட
மென்மையானவள்

என் சுவாசத்தில் ..
உள் மூச்சு நீ ..........

kasal 03

கற்றுக்கொள்ளுகிறேன்..

Posted: 15 Jun 2013 06:29 AM PDT

என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ

என்னை மறந்துவிடு
சொல்லியபடி அழுகிறாய்
உன்னை மறந்து

ஒவ்வொரு காதல்
வலியும் உன்னிடமிருந்தே
கற்றுக்கொள்ளுகிறேன்..............

kasal 02

காதலும் அப்படித்தான் ..!!!

Posted: 15 Jun 2013 06:25 AM PDT

தண்டவாளம்
சமாந்தரமாகத்தான்
செல்லும் ஆனால்
பயணம் நடைபெறவில்லையா ..?
காதலும் அப்படித்தான் ..!!!

நீ என்னை சிரிக்க வைத்தபோது ..
நான் எழுதிய கவிதையை விட
என்னை அழவைத்த போது
எழுதிய கவிதை
இனிமையாக இருக்கிறது
அதுதான் கஸல் என்கிறாயா ...?

பட்டுப்போன மரமும்
செத்துப்போன மனசும்

ஒன்றுதான்

கஸல் 146

காதலிக்காமல் இருக்கிறேன்

Posted: 15 Jun 2013 06:24 AM PDT

என் காதல்
தூண்டிலில் நீதான்
திரும்ப திரும்ப
தூண்டிலிடப்படுகிறாய்
உன் கண்ணை தூண்டில்
மீனாக நினைக்கிறதோ ...?

உன் பேச்சு
உனக்கு வார்த்தை ..
எனக்கு வாழ்க்கை
உன் அழகு உனக்கு
திமிர் -எனக்கு
துடிப்பு

காதல் மரணத்தில்
முடிந்துவிட கூடாது
என்பதால் தான் -நான்
காதலிக்காமல் இருக்கிறேன்

கஸல் 145

காதல் உடல் உளம் .....

Posted: 15 Jun 2013 06:22 AM PDT

தமிழில் எந்த எழுத்தை
எடுத்தாலும் -அது
உன்னையே நினைவு
படுத்துகிறது ...!!!

நீ என்மீது வைத்திருப்பது
காதல் இல்லை -காதல்
பைத்தியம்

காதல் உடல் உளம்
சார்ந்தது மட்டுமல்ல
இறையுணர்வும்
உடையது ....

கஸல் 144

IDM download vendum

Posted: 15 Jun 2013 05:20 AM PDT

உறவுகளுக்கு வணக்கம், நான் பல வருடமாக IDM (இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ) உபயோகித்தேன், நேற்று லேப்டாப் போர்மட் செய்து விட்டு மீண்டும் IDM இன்ஸ்டால் செய்தால் அது crack என்று சொல்லி காரி துப்பி விட்டது . IDM இல் உள்ள விசேசம் என்ன என்றால் ஒரு வெப்சைட் இல் வீடியோ எதாவது ஓடுகிறது என்றால் தானாகவே அதை டவுன்லோட் செய்ய வேண்டுமா என்று கேட்கும், ஓகே கொடுத்து விட்டால் அந்த வீடியோ முழுவதுமாக டவுன்லோட் செய்து விடும் . இந்த சாப்ட்வேர் வைதிருபவர்கள் என்னுடன் பகிர முடியுமா? அல்லது இது போல் வேறு இருந்தாலும் ...

இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்

Posted: 15 Jun 2013 05:18 AM PDT

மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்

Posted: 15 Jun 2013 04:51 AM PDT

மும்பை போலீசாரின் சம்பள பணம் முழுவதும் ஆன்லைனில் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண மக்களின் வங்கி கணக்குகளில் ஆன்லைன் மூலமாக ஊடுருவி பணத்தை சுருட்டும் மோசடி இப்போது அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். இதில், ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் சம்பள பணம் ஆன்லைனில் சுருட்டப்பட்ட பரபரப்பான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.உயரதிகாரிகள் உட்பட மும்பை போலீசார் பெரும்பாலானோர் சம்பள கணக்கு (சேலரி ...

EEGARAI FLASH NEWS

Posted: 15 Jun 2013 04:03 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



உப்புமா வகைகள்

Posted: 15 Jun 2013 03:39 AM PDT

மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே ! ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.

“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம்

Posted: 15 Jun 2013 03:38 AM PDT

http://www.tamilula.com/uploads/images/cineula/2013/06/Tillumullu.jpg கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்குமுன் 1981-ம் வருடம் வெளிவந்த ''தில்லுமுல்லு'' திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக பத்ரி இயக்கத்தில் 'மிர்சி' சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! 'கோல்மால்' என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' சூப்பர் என்றால் 'மிர்சி' சிவாவின் 'தில்லுமுல்லு' சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்! - முருக பக்தரான பிரகாஷ்ராஜின் ...

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Posted: 15 Jun 2013 03:23 AM PDT

பறித்துப் போவேன் ...!

Posted: 15 Jun 2013 03:16 AM PDT


அவளின் கண்கள்

இன்னொரு நிலாக் காலம்

விடியலைத் தேடி

விதையிடுகிறேன்

காதல் பூ பூக்க

காலம் தாழ்த்தாமல்

பறித்துவிடு இல்லையேன்

பறித்துப் போவேன் ...!

உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!

Posted: 15 Jun 2013 03:06 AM PDT

Angel falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் மிக உயரமானதாகும். இதன் உயரம் 979 மீட்டர்கள் அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரம். இந்த நீர்வீழ்ச்சி 1912 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்க பட்டது. ஆனால் இதை கண்டுபித்தவர் இத்தனை வெளியே தெரியப்படுத்தவில்லை ஆகையால் மீண்டும் இன்னொரு விமானியால் 1933 ஆண்டுதான் வெளி உலகிற்கு தெரியபடுத்தபட்டது.

தாமதமாக துவங்கும் சுப்ரீம்கோர்ட் பணி

Posted: 15 Jun 2013 03:03 AM PDT

ஐகோர்ட்கள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளுக்கு முன்உதாரணமாக விளங்க வேண்டிய சுப்ரீம் கோர்டின் பணி நேரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறை நாட்களில் செயல்படும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்களின் பணிகள் ஒரு மணிநேரம் தாமதமாகவே துவங்குகின்றன. வழக்கறிஞர்களும், வழக்குதாரர்களும் உரிய நேரத்திற்கு வந்தாலும், நீதிபதிகள் தாமதமாகவே வருகின்றனர். இது வழக்குகளையும், வாதிகளையும் பெரிதும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மே 30 தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தினமும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் ...

உணர்ந்தேன் காதலை உன்னாலே .....

Posted: 15 Jun 2013 02:23 AM PDT

உணர்ந்தேன் காதலை உன்னாலே   மறந்தேன் கனவை  உன்னாலே  .... உறவுகளுக்கு  உயிர் தந்தது   உணர்வுகளுக்கு உயிர்  தந்தது  உள்ளதிருக்கும்  உயிர் தந்தது   உன்னை  என்னுயிராக தந்தது   ஊரெல்லாம் கொண்டாடினேன்  உன்  அன்பை  மட்டும்  நாடினேன்  உள்ளமெலாம் திண்டாடிடவே  உன்னை  மட்டும்  தேடினேன்   (உணர்ந்தேன் காதலை உன்னாலே   மறந்தேன் கனவை  உன்னாலே  ....) மொழிகளும் முழித்திடுதே உன்   விழிகள்  கண்டால்  வியப்பில்   மெல்லடி பதிக்கும் நீயோ  புற்களின் புன்னகைக்கு பாடும்  மெல்லிசை  ராகமோ  சொல்லிடும் ...

மாநிலங்களவை தேர்தல் ;திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டி

Posted: 15 Jun 2013 02:07 AM PDT

மாநிலங்களவை தேர்தல் வருகிற 27 -ந்தேதி நடைபெறுகிறது.இதில் அ.தி.மு.க சார்பில் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் 5 பேரும் ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் தலைமை செயலகம் செல்லும் அவர் காலை 11.30 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

-- dina thanthi

சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 15 Jun 2013 02:02 AM PDT

ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, மற்ற, 20 எம்.எல்.ஏ.,க்களின் மீது, சந்தேக பார்வை விழத் துவங்கியுள்ளது. இது குறித்து, அவர்களிடம் கேட்ட போது, பெரும்பாலானோர், "கட்சிக்கு விசுவாசமாகவே இருப்போம்' என்று தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகிய, ஏழு பேர், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™