Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தெனாலிராமன் வளர்த்த பூனை

Posted: 13 Jun 2013 11:01 AM PDT

ஒரு நாள் விஜயநகரில் வாழ்ந்த மக்கள் கிருஷ்ணதேவராயர் அரசவைக்குச் சென்று அவரிடம்"மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள் நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்" என்று கூறினார்கள். கிருஷ்ணதேவராயரும் அவரது சேவர்களும் விவாதித்த பின் ஒரு முடிவிற்கு வந்தார் மன்னர்.அவர் வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்.மாதத்தின் இறுதியில் பூனை ஆரோக்கியத்துடன் வளர்கிறதா?என்று பார்வையிடப்படும் ...

ஜூலை 15 முதல் தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை

Posted: 13 Jun 2013 10:30 AM PDT

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் ...

தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்

Posted: 13 Jun 2013 10:24 AM PDT

ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.அவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான்.இப்பொழுது என்ன செய்வது?என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள்.தெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் "அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது.ஆதலால் நமது பொற்காசுகளை ...

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!

Posted: 13 Jun 2013 10:14 AM PDT

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணை மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன் மேல் "அப்பாவுக்கு" என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த ...

வேலன்:-மொழியை அறிந்து கொள்ள

Posted: 13 Jun 2013 10:01 AM PDT

தமிழ்.ஆங்கிலம்,உருது.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.இந்தி ஆகிய மொழிகளை நாம் ஒரளவு தெரிந்துவைத்திருப்போம். எழுத்துருக்களை பார்க்கும் சமயம் நாம் இந்த மொழி என எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஆனால் சில மொழிகளை பார்க்கும் சமயம் நமக்கு அது எந்த மொழி என்றே தெரியாது.இவ்வாறு மொழிகளை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 470 மொழிகளை இனம் கண்டுகொள்ள இந்த சாப்ட்வேர் வழிவகை செய்கின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ...

துப்பட்டா இல்லாததால் ஆதார் அட்டைக்கு டாட்டா – சென்னை பெண் திருப்பி அனுப்பபட்டார்

Posted: 13 Jun 2013 09:54 AM PDT

சென்னையில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க துப்பட்டா போடாமல் வந்த பெண் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஆதார் அட்டைகள் வழங்கும் மையத்திற்கு லாவண்யா மோகன் என்ற பெண் மே-31 அன்று சென்றுள்ளார். அவர் துப்பட்டா போடாமல் சென்றதால் அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து லாவண்யா மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க 1 மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் நான் துப்பட்டா போடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். உள்ளூர் ...

நான் ரசித்தவை - மது

Posted: 13 Jun 2013 09:50 AM PDT

நட்பை இதயமாக ... பார்த்துக்கொள் ....!!!

Posted: 13 Jun 2013 09:37 AM PDT

ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!

காதலை சுவாசமாக ..
எடுத்துக்கொள்
நட்பை இதயமாக ...
பார்த்துக்கொள் ....!!!

சாடும் தனிவேல் முருகன் சரணம்!

Posted: 13 Jun 2013 09:31 AM PDT

ஒருவர் மிகவும் துன்பத்திலிருந்தார். பெரும் பசி. வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. வீட்டிலும் அனைவருக்கும் துன்பம். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் புரியவில்லை. தெய்வாதீனமாக ஒருவர் உதவினார். முதலில் எல்லாரும் சாப்பாடு போட்டு....துணிமணி கொடுத்து.....பிறகு ஒரு வேலையும் கொடுத்தார். தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் ஒரு நிலைக்கு வந்தது. உதவி பெற்றவர் நல்லவர். செய்நன்றி மறவாத உத்தமர். என்ன செய்வார்? உதவி செய்தவரைப் புகழ்ந்து பேசுவார். அவரால்தான் ...

கலைஞரின் சொத்தும் குடும்பமும்.!!

Posted: 13 Jun 2013 09:13 AM PDT

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். பொருள் : நெறி கடந்து நடப்பவரின் வாயில் வரும் தீய சொற்களை பொறுத்துக்கொள்பவர் துறவியரை விட தூய்மையுடையவர் ஆவார். இந்த குறள் இன்றைய தமிழகத்தில் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் சிறப்பாக பொருந்தாது.தன்னை ஏசுபவர், தன் மேல் வீன் பழி சுமத்துபவர், அவர்கள் பிழைப்புக்காக தன்னை பழிப்பவர் என அனைவரையும் அவர்தம் தீய,வன்ம பேச்சுக்களையும் 90 வயதிலும் பொறுத்துக்கொண்டும்,தேவையானவற்றுக்கு விளக்கமளித்தும் பதில் ...

காதல் இல்லையென்றால் ..

Posted: 13 Jun 2013 09:01 AM PDT

என் ஒவ்வொரு இதய துடிப்பும் உன்னையும் என்னையும் வானமும் நிலாவும் போல் அழகாக காட்டுகிறது ... காதல் இல்லையென்றால் .. வாழ்வதை விட .. பிறந்திருக்காமல் .. இருந்திருக்கலாம் .. காதலுக்கு நிகர் .. காதல் தான் ...!!! உன் கண்ணில் என் காதல் .. தெரிகிறது என் கண்ணில் .. உன் காதல் தெரிகிறது ... உண்மை காதல் யாரில் .. யாரிருக்கிறார்கள் .. எப்படி இருக்கிறார்கள் .. என்றெல்லாம் கண்டுகொள்ள முடியாது ...!!!

மொத்தத்தில் நீ நல்ல‌ நடிகன்

Posted: 13 Jun 2013 09:00 AM PDT

உன்னிடம் உள்ள‌ மனித‌ நேயத்தை ..
நீயே கண்டுகொள்ளாத‌ போது..
எப்படி மற்றவர்க்ளை புரிந்து ..
கொள்ளப்போகிறாய்,,,?

இவன் நல்லவன்
இவன் கெட்டவன்
என்பதன் உன் அளவுதான்
என்ன‌..? எது..?

அப்படியென்றால்..
நீ நல்லவன் என்றவனுக்கு..
நல்லவனாக‌ வேசமிடிகிறாய்..
கெட்டவனுக்கும் அதைத்தான்..
செய்கிறாய் ....
மொத்தத்தில் நீ நல்ல‌ நடிகன்

கஸல் -கண்ணீரால் ...

Posted: 13 Jun 2013 08:57 AM PDT

காதல் கவிதையை ...
கண்ணீரால் ..
எழுதாமல் இருக்க ..
முயற்சிக்கிறேன் ..
முடியவில்லை
கஸல் -கண்ணீரால்
எழுதும் கவிதை தான் ...

நீ எனக்கு வலியாக
மாறிவிடு -அப்போதுதான்
நான் உன்னை விட்டு
பிரியமாட்டேன்

காதல் உன்மீது
எய்யப்பட்ட அம்பு
எய்தவன் யாரோ இருக்க ..
என்னை ஏன் நோகிறாய் ..??

கஸல் ;கவிதை 01

விவசாயியாக பிறந்தது .. என் குற்றமா ...??

Posted: 13 Jun 2013 08:53 AM PDT

நல்ல மழை
வரும் என்று கூறி
வானிலை நிலைய ..
அதிகாரி ஏமாற்றினார் ...!!!

நதிநீர் கிடைக்கும்
என்று ஏமாற்றிய
நதிநீர் ஆணைக்குழு ...!!!

நல்ல விலை...
தருவதாய்ச் சொல்லி
ஏமாற்றும் அரசியல்
வாதிகள்..!

எல்லாவற்றையும் ..
நம்பி ஏமார்ந்த என் ..
குடும்பம் மரணத்தின் ..
விழிம்பில் ..
விவசாயியாக பிறந்தது ..
என் குற்றமா ...??

சுண்டியிழுக்கும் மதுரை சுங்குடி சேலைகள்!

Posted: 13 Jun 2013 08:33 AM PDT

மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் கைத்தறி தொழில் நலிவுற்றிருந்த போது, கஞ்சி தொட்டிகளை திறந்து நெசவாளர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து கைத்தறிக்கு முன்னுரிமை கொடுப்போம் என, அனைத்து தரப்பினரும் அப்போது முன்வந்து, கைத்தறி சேலைகள், வேட்டிகளை அணிய துவங்கினர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் போட்டி போட்டு கைத்தறி வேட்டி, சேலைகளை அணிய, கைத் தறி விற்பனை உயர்ந்தது. சமீபத்தில் பிப்ரவரியில், "மாமதுரை போற்றுவோம்' என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான சுங்குடி சேலைகளை ...

ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது

Posted: 13 Jun 2013 08:17 AM PDT

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. நில பேர ஊழல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து ...

பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு

Posted: 13 Jun 2013 08:13 AM PDT

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி சித்ரா பவுர்ணமி முழு நிலவு நாள் விழா மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடு வெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள். விழா முடிந்து பா.ம.க. வினர் திரும்பியபோது மரக்காணத்தில் பா.ம.க.வினருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது மிகப்பெரும் கலவரமாக மாறியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஏராளமான ...

சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்

Posted: 13 Jun 2013 07:59 AM PDT

ஈரோடு: தமிழகத்தில் முதன் முறையாக, ஈரோடு வாழ் குடிமகன்கள், "பார் டே' கொண்டாடினர்.ஈரோடு, மூலப்பட்டறை ரோட்டில், டாஸ்மாக் மதுபான கடையும் , அதை ஒட்டி பாரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒருபுறம் வாகன உதிரி பாக கடைகளும், மறுபுறம் வசதி படைத்தவர்களின் வீடுகளும் உள்ளது. கடந்த சில ஆண்டாக இந்த பாருக்கு, மது குடிக்க வந்த ரெகுலர் வாடிக்கையாளர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, பர்த் டே, பஸ் டேவைப்போல, "பார் டே' கொண்டாட முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, பாருக்கு திடீரென வந்தவர்கள், பிரிண்ட் செய்த, ...

சில பதிவுகளில் block என்று வருகிறது

Posted: 13 Jun 2013 07:54 AM PDT

http://www.eegarai.net/t18649-டொபிக் இந்த பதிவில் வருகிறது 2 நாள் முன்னால் இப்படித் தான் வந்தது அதை கிளிக் செய்தேன் ஒரு பேஜ் ஓப்பன் ஆச்சு...அதில் ஆட் ஃபில்டர் என்பதை கிளிக் செய்தேன் என் சிக்னேச்ச்ர் தெரியவில்லை .... சுய விவரத்தில் அந்த எழுத்து இருக்கிறத் ஆனால் எனக்குத் தெரிய வில்லை என்ன செய்யனும்னு சொல்லுங்க

கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை: நாராயணசாமி

Posted: 13 Jun 2013 07:44 AM PDT

கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி உறுதி கூறியுள்ளார். சென்னை திருநின்றவூரில் கல்லூரி விழாவில் பங்கேற்ற அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக- இலங்கை எல்லையில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் தமிழக- இலங்கை எல்லையில் இந்திய ராணுவக் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடும்" என்றும் குறிப்பிட்டார். மேலும், "கச்சத்தீவை மீட்பது குறித்து பரிசீலனை ...

தமிழில் எழுத மைக்ரோசாப்ட் வழங்கும் எளிமையான மென்பொருள்

Posted: 13 Jun 2013 07:35 AM PDT

http://specials.msn.co.in/ilit/Tamil.aspx இந்த தளத்தில் கிடைக்கும் tamil.exe என்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி , பின்பு கீழே கொடுத்துள்ள காணொளியின் படி , கணினியை சரி செய்து கொள்ளவும். நன்றி ராஜா

ஜூலை 15 முதல் தந்திக்கு "தடா'

Posted: 13 Jun 2013 07:32 AM PDT

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இணையதளம்: தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் ...

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!

Posted: 13 Jun 2013 07:25 AM PDT

http://img577.imageshack.us/img577/8094/forcingsomeone.png நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின், கடைக்காரர்: தஸ்! வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?" கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார் வடநாட்டு ...

கோபமெனும் கொடிய நோய்

Posted: 13 Jun 2013 06:41 AM PDT

தொள்ளாயிரம் முறை முயன்றும் தோல்வியே அடைகிறேன்! ஆயிரம் முறை அடக்கியும் அடங்க மறுக்கிறது! கவிதை வரை என்றனர் சிலர்! காரம் குறை என்றனர் பலர்! கவிதை வரைந்தும், காரம் குறைத்தும் கடைசிவரை கட்டுப்படவில்லை! இசையோடு இணை என்றனர் சிலர்! இறைவனை நினை என்றனர் பலர்! இரண்டையும் முயற்சித்தும் இதுவரையில் பலனில்லை! நூறு வரை எண்ணச் சொன்னார்கள்! எண்ணி முடிப்பதற்குள் என்பது முறை எட்டிப் பார்த்தது! தியானம் பயில், வானம் வசப்படும் என்றார்கள்! வசப்படவில்லை வானம், மாறாக வசைபட்டது ...

ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம்

Posted: 13 Jun 2013 06:20 AM PDT

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது மாவோ.,க்கள் 100 பேர் திரண்டு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் நக்சல்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில் டிரைவர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ...

சரியாகத் தொடர்புகொள்ள என்ன செய்ய வேண்டும்?

Posted: 13 Jun 2013 04:50 AM PDT

வணக்கம்,
நான் ஈகரை கவிதை போட்டி-6 இல் கலந்துகொண்டேன்.

கவிதைகளை என்னுடைய rediffmail மூலம் அனுப்பி வைத்தேன்.
அவற்றிற்கு பதில் mail வந்தது. ஆனால் அது coding format இல் வந்தது.
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வரும் அனைத்து mail-களும்
இவ்வாறு உள்ளது.

சரியாகத் தொடர்புகொள்ள என்ன செய்ய வேண்டும்?

---இப்படிக்கு
SKR

மணமகன் கறுப்பாக இருந்ததால் எதிர்ப்பு

Posted: 13 Jun 2013 04:01 AM PDT

மணமகன் கறுப்பாக இருந்ததால் திருமணத் துக்கு எதிர்ப்பு தெரி வித்து மணக்கோலத்தில் இருந்த மணமகளை பெற்றோர் வேனில் கடத்தி சென்றனர். புதுப்பெண்ணை போலீசார் மீட்டனர். கோவையில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரே கல்லூரியில் படித்தனர் சென்னை கீழ் கட்டளை அம்மாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் குமார் (வயது24). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து வந்தார். இதேபோல் உடுமலையை சேர்ந்த இந்துமதி (24) என்பவரும் அதே கல்லூரியில் ...

அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு

Posted: 13 Jun 2013 03:38 AM PDT

2012ல் உலக அழிவும் மாயா இன மக்களும்,இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகிறன? என்ற கட்டுரைகளை எழுதிய திரு.ராஜ்சிவா அவர்கள் உயிர்மை இதழில் துவங்கியிருக்கும் புதிய தொடர்... "அன்று வந்ததும் அதே நிலா" இக்கட்டுரையை பற்றி ராஜ்சிவா அவர்கள் முகநூலில் குறிப்பிட்டவை... உலகில், இதுவரை நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களுக்கு சொல்லப்பட்ட காரணங்கள் நம்ப முடியாததாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் காரணங்களை மறுத்து, 'இப்படியும் இருக்கலாம்' என்னும் வேறு முக்கிய காரணங்களை முன்வைத்து, நடைபெற்ற சம்பவத்தை ...

தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!

Posted: 13 Jun 2013 03:02 AM PDT

(டவுன்லோடு இணைப்பு கீழே) இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய 'ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி ...

ஒவ்வொ ஆண்டும் 1500 பேர் வேற்று கிரகவாசிகளால் கடத்தப்படுவதாக தகவல்

Posted: 13 Jun 2013 01:48 AM PDT

வேற்று கிரக வாசிகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஆண்டுக்கு 1,500 பேர் வேற்று கிரக வாசிகளால் கடத்தப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த 'அம்மாச் ஆர்கனைசேசன்' என்ற அமைப்பு கூறியுள்ளது. வேற்று கிரக வாசிகளுடனான அனுபவத்தை பொதுமக்கள் பகிர்ந்துகொள்வதற்காக கடந்த 2011–ம் ஆண்டு அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பை தொடர்பு கொண்ட பலர், வேற்று கிரக வாசிகளால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்தனர். ஒரு பெண், தான் ஆயிரம் தடவைக்கு மேல் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர்களுக்கு 'அம்மாச்' ...

மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

Posted: 13 Jun 2013 12:33 AM PDT

ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் ...

ரசித்த காணொளி - ராஜா

Posted: 13 Jun 2013 12:22 AM PDT



பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Posted: 12 Jun 2013 11:42 PM PDT

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், தங்களின் பணிகளில் உள்ள பிரச்னைகளை விளக்கியும், உயர் அதிகாரிகளை போட்டு கொடுத்தும், நேரடியாக, பிரதமர் அலுவலகத்துக்கு, புகார் கடிதங்களை அனுப்புவதால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். "இனிமேல், பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக புகார் கடிதம் எழுதினால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. பிரச்னை : மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:மத்திய அரசின் பல்வேறு ...

அந்தமானில் அதிநவீன சுனாமி எச்சரிக்கை கருவி 3 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கும்

Posted: 12 Jun 2013 11:33 PM PDT

அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரங்கசாங் என்ற இடத்தில் அதிநவீன சுனாமி எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன தலைமை விஞ்ஞானி வினித்குமார் கூறுகையில், ''நவீன சுனாமி எச்சரிக்கை கருவி, நிலநடுக்கம் ஏற்பட்ட தொடக்க நிலையிலேயே 3 நிமிடத்தில் சுனாமி எச்சரிக்கை செய்து உஷார்படுத்தும். கடலில் ஏற்படும் அலையின் வேகத்தை கணக்கிட்டு சுனாமியை கண்டறியும். பின்னர் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் மைய நிறுவனம் சுனாமி ஆபத்து மண்டலங்களுக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்'' ...

ஒரு சின்ன உதவி சிவா :)

Posted: 12 Jun 2013 11:29 PM PDT

சிவா, இன்னும் எனக்கு அட்டச்மெண்ட் buttons தெரியவிலையே சிவா , ககீழே மறு மொழி எழுதும் இடத்தில் அடித்தால் தமிழில் வரலை, முன்னோட்டம் போட்டு இங்கு அடித்தால் தமிழ் வரூகிறது ஆனால் பக்கத்தில் buttons இல்லை, என்ன ஆச்சு? எல்லோருக்கும் இப்படி ஆகிறதா நண்பர்களே ! எனக்கு நேற்று மாலையும் இப்படி இருந்தது உதவுங்கள் !

சொந்தக்கதை - மரிச்டெல்லா

Posted: 12 Jun 2013 10:54 PM PDT

சொந்தக்கதை எங்கள் அழகான தாய்நாட்டை.. நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம் ....என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் .. விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™