ஈகரை தமிழ் களஞ்சியம் |
- லதீபா - புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த ஒரு பக்க சிறுகதை!
- தன்னம்பிக்கை என்றால் என்ன?
- பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்)
- ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
- உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்)
- நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா
- எனது 20 வருடக் கனவு நிஜமாகியிருக்கிறது” – நீலிமா ராணி
- ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
- ஒண்ணும் பண்ணாது!
- விதித் தேவதை! (கேட்டலான் மொழிப் பாடல்)
- அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா என்கிறார் ராமதாஸ்
- " பருமனும் அழகே "
- ருத்ராட்சம் அணியும் முறை !
- பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்
- ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
- கண்ணதாசன் எழுதிய "ஸ்ரீ கிருஷ்ண கவசம் " தமிழில்
- பொக்கிஷம் - ஜோக்ஸ்
- ஆஸி.க்கு எதிரான முதல் டி20: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?
- 'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்
- வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு
- ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
- புதிய தளம் மின்னூல்களுக்காக ..
லதீபா - புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த ஒரு பக்க சிறுகதை! Posted: 07 Oct 2017 03:33 PM PDT புதுமைப்பித்தனின் 'பிறமொழி சிறுகதைகள்' என்ற புத்தகத்தில் இருந்து. 'மோஷி ஸ்மிலான் ஸ்கி' எழுதிய "லதீபா" என்னும் சிறுகதை. உங்கள் பார்வைக்காக.... ********************************************************** இந்தக் கதையின் தலைப்பை பார்க்கும் போதும், கதையை படித்து முடிக்கும் போதும் 'என்னைத் தாலாட்ட வருவாளா?' என்ற தொடர்கதை உங்கள் நினைவுக்கு வருமேயானால் அதற்கு நான் பொறுப்பில்லை.!! ********************************************************** லதீபா! "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு ... |
Posted: 07 Oct 2017 11:56 AM PDT பல காலங்களாக நமது மக்கள் பலர் எதற்கெடுத்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்... முயற்சி வேண்டும்... தன்னம்பிக்கையோடு போராட வேண்டும்... என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் திறமையோடு முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக்கட்டையும் போடுகிறார்கள்! அப்படியானால் தன்னம்பிக்கை என்பதை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? இல்லை முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? என்பது புரியவில்லை. சரி, தன்னம்பிக்கை என்றால் என்ன? ஒரு சிலர், ஏதாவது ஒன்று நடந்த பிறகுதான் அதைப் பற்றியும், அதன் விளைவுகள் ... |
பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்) Posted: 07 Oct 2017 09:49 AM PDT பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்) நான் ஒரு – பெலரூசியன் ! நான் பெலரூசியாவைக்- காதலிக்கிறேன் ! எனக்கு நம்பிக்கையும் பற்றும் உள்ளது ! எனது மனச் சாட்சியில்- நம்பிக்கை உள்ளவன் ! நான் ஒரு – பெலரூசியன் – அவன் இப்படித்தான் இருக்கிறான் – காலங்காலமாக! டினீபர் ஆற்றின் முகப்பகுதியிலிருந்து பக் ஆறுவரை நாங்கள் வாழ்கிறோம் ! வாழ்கிறோம் – மன அழுத்தம் ஏதும் இல்லாதவர்களாக! எங்களோடு அண்டை அயலார் இருக்கிறார்கள்!- அவர்களோடு நாங்கள் ஒத்துப்போகிறோம் ! வாழ்க பெலரூசியர்கள்! ... |
ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்! Posted: 07 Oct 2017 08:22 AM PDT சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதால், 'தூய்மையான காற்றையே சுவாசிக்க முடியவில்லை...' என, ஏக்கத்தில் தவிப்போருக்கு தீர்வு வந்து விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது, ஒரு நிறுவனம். 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்று, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, அரை லிட்டர் பாட்டிலிலும் கிடைக்கிறது. அதிகமாக வாங்குவோருக்கு, விலையில் தள்ளுபடி உண்டாம். |
உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்) Posted: 07 Oct 2017 08:20 AM PDT உணர்ச்சிகளைச் சொல்லத் துணிவில்லை ! (கஸக்ஸ்தான் மொழிப் பாடல்) யார் நீ? ஒவ்வொரு நாளும்- துயரமுள்ளதாகக் கழிகிறது ! எனது- உணர்ச்சிகளைச் சொல்ல- எனக்குத் துணிவில்லை! நட்சத்திரங்களிடையே மின்னும் நீ- என் தலைவிதி- யார்தான் நீ? அருகில் வா- என் அழகே! நீ – எனது ஆன்மாவைத் தொட்டுவிட்டாய் ! சொர்க்கத்தின் ஒளிபோன்ற நீ- யார்? நீ- எனக்கு மகிழ்ச்சியைத் தா! உனது கையை இப்படிக்கொடுப்பாய்! எனது பூவே!- உன்னால்தான் – இந்த உலகம் நல்ல இடமாக இருக்கிறது ! எனது பூவே!- உன்னால்தான் – இந்த உலகம் ... |
நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா Posted: 07 Oct 2017 06:20 AM PDT - படப்பிடிப்பின்போது நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் என் கிறார் நடிகை இனியா. பரத், இனியா இணைந்து நடிக்கும் படம் 'பொட்டு'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் வடி வுடையான். "இப்படம் மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் பேய்ப் படமாக உருவாகி வருகிறது. நாயகனாக நடிக்கும் பரத் பல தோற்றங்களில் நடித்திருக்கிறார். என்னைத் தவிர சிருஷ்டி டாங்கேவும் இன்னொரு கதாநாயகியாக வருகிறார். நமீதாவுக்கு அகோரி வேடம். "இதில் எனக்கு மலைவாழ் இனப் பெண், நாகரிகப் பெண் என இரண்டு கதாபாத்திரங்கள். மலைவாழ் ... |
எனது 20 வருடக் கனவு நிஜமாகியிருக்கிறது” – நீலிமா ராணி Posted: 07 Oct 2017 06:19 AM PDT - தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா ராணி. அதைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80 -க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார். தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு ... |
ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு Posted: 07 Oct 2017 01:56 AM PDT ரஷியாவின் மேற்கு பகுதி நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இருந்து மாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள நிஜ்னி நோவ்கொராட் என்ற இடத்துக்கு ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அக்டோபர் 07, 2017, 05:15 AM மாஸ்கோ, இந்த ரெயில், நேற்று உள்ளூர் நேரப்படி, அதிகாலை 3.29 மணிக்கு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ள விளாடிமிர் நகரம் அருகே சென்று கொண்டிருந்தது. ஒரு லெவல் கிராசிங் பகுதியை இந்த ரெயில் கடந்தபோது, குறுக்கே வந்துவிட்ட பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் ... |
Posted: 07 Oct 2017 01:55 AM PDT ஒண்ணும் பண்ணாது! அதிகாரி - இந்தாங்க ! நிலவேம்புக் கஷாயம் ! வந்தவர் - ???..... அதிகாரி - ஒண்ணும் பண்ணாதுங்க! சும்மா குடிங்க! மக்கள் - ஏய்யா! நல்ல மருந்துன்னு பார்த்தா! இது ஒண்ணும் பண்ணாதா? போய்யா தூக்கிக்கிட்டு ! அதிகாரி - ?!...?!...?!... |
விதித் தேவதை! (கேட்டலான் மொழிப் பாடல்) Posted: 07 Oct 2017 01:46 AM PDT விதித் தேவதை! (கேட்டலான் மொழிப் பாடல்) புரியாத புதிர் விதித் தேவதை! ! சிலந்தி வலை பின்னுவது போல- அவள்- நேரம் கிடைக்கும்போதெல்லாம்! வலை பின்னுவதற்கு நூலை - உற்பத்தி செய்கிறாள்- - நம் வாழ்க்கைக்காக! ஒரு விதிக் கடவுள் போல- நாளைய வலையைப் பின்ன- அவள் ஆழ்ந்து யோசிக்கிறாள்! விதித் தேவதை!- பின்னுகிறாள்! பின்னுகிறாள்! பின்னிக்கொண்டே இருப்பாள்! அவள் திரும்பிப் பார்க்கிறாள்! கடந்த காலத்தின் நிழலுக்குள் தேடுகிறாள்- அடுத்த வசந்த காலத்தின் விதை – எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது என்று! ... |
Posted: 07 Oct 2017 01:16 AM PDT "சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக வரம்புக்குள் கொண்டுவரும் போது, அவற்றின் கட்டணங்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் அளவுக்குக் குறைக்க வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் ... |
Posted: 07 Oct 2017 01:11 AM PDT இந்த வார அவள் விகடன் " பருமனும் அழகே " கட்டுரை சூப்பர் mediafire.com file/1qojaijtnw3a2u5/aval_NEW.pdf |
Posted: 07 Oct 2017 01:08 AM PDT ருத்ராட்சம் அணியும் முறை ! ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி ... |
பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள் Posted: 07 Oct 2017 12:46 AM PDT http://media.webdunia.com/_media/ta/img/article/2017-10/06/full/1507294395-4204.jpg -- பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் மட்டுமல்லாமல் வாழ்வியல் அறம், மனிதனின் நடத்தை, சமூக நன்னெறிகள் என நமக்கு கீதை தரும் பாடங்கள் ஏராளம். - * மனிதன் சினத்தால், அதாவது கோபத்தால், மயக்கம் அடைகிறான். மயக்கத்தால் நினைவு தவறுகின்றான். நினைவு தவறுதலால் புத்தி நாசம் அடைகின்றான். புத்தி நாசத்தால் அழிகின்றான். * தன்னைத்தான் வென்றவனே ... |
ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன் Posted: 07 Oct 2017 12:40 AM PDT - கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன், தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'ரா ரா ராஜசேகர்' படத்தில் நடித்து வருகிறார். - இப்படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக கன்னடத்தில் தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார் படுத்திவருகிறேன். எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் 7 தோற்றங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட சுருதி ஹரிஹரன் திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது கலாத்மிகா ... |
கண்ணதாசன் எழுதிய "ஸ்ரீ கிருஷ்ண கவசம் " தமிழில் Posted: 06 Oct 2017 11:30 PM PDT கண்ணதாசன் எழுதிய "ஸ்ரீ கிருஷ்ண கவசம் " தமிழில் http://www.mediafire.com/file/nfbbcdn4tubwfew/KRISHNA_KAVASAM.pdf |
Posted: 06 Oct 2017 10:52 PM PDT |
ஆஸி.க்கு எதிரான முதல் டி20: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா? Posted: 06 Oct 2017 06:50 PM PDT இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் 7-10-17-ல் (சனிக்கிழமை) நடக்கிறது. இது 3 போட்டிகள் கொண்ட தொடராகும். - ராஞ்சியில் நேற்று மழை பெய்தது. இதனால் இந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இன்று நடைபெற உள்ள டி 20 ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும். அணி விவரம் இந்தியா: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ... |
'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட் Posted: 06 Oct 2017 05:53 PM PDT புதுடில்லி: 'கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், பாதிக்கப்பட்டவரும், குற்றஞ் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குஜராத்தில், நில அபகரிப்பு தொடர்பாக, நான்கு பேர் மீதான வழக்கில், சமரசம் செய்து கொண்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டதை, குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விசாரணை தொடரும் என, அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை விசாரித்த, தலைமை நீதிபதி, ... |
வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு Posted: 06 Oct 2017 05:50 PM PDT இரு மாதங்களில், 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை ஆய்வு செய்யுமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்குகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு வழங்குகிறது. மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் சில ஊழியர்கள், வீட்டு உரிமையாளர்களுடன் சேர்ந்து, மின் பயன்பாட்டை, குறைத்து கணக்கு எடுப்பதாக, மின் வாரியத்திற்கு புகார்கள் ... |
ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல் Posted: 06 Oct 2017 05:47 PM PDT புதுடில்லி: ரயில் பயணியரிடம், எம்.டி.ஆர்., கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறையை கைவிட, மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தை பயன்படுத்தி, ஆன் - லைனில், ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, எம்.டி.ஆர்., எனப்படும், 'மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தற்போதைய நடைமுறைகளின்படி, ... |
புதிய தளம் மின்னூல்களுக்காக .. Posted: 06 Oct 2017 05:12 PM PDT http://readershunt.com/ ரெஜிஸ்டர் செய்து மின்நூல்களை தரவிறக்கலாம் . இங்கே வந்து பார்க்கவும் . http://readershunt.com/viewforum.php?f=31&sid=4af86343db70900cd19551e823205673 |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |