ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மூப்பே ஓடிப்போ
- சினி துளிகள்!
- ஆசானே... ஆயுள் முழுவதும் வணங்குகிறேன்!
- ஆணிவேர்! – கவிதை
- இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம்.
- எதிர்பார்ப்பு என்ன?
- உலகம் உன் கையில்!
- இனியேனும் போராடு
- ஓஷோவின் குட்டிக் கதைகள..
- காற்றில் கரைந்த கனவு
Posted: 04 Sep 2017 04:31 PM PDT மூப்பே ஓடிப்போ உங்களை எப்போதும் மூப்பு நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க 15 குறிப்புகள்!! நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பது உண்மை. அதனை ஏதாவது உடல் பாதிப்பு வந்தால்தான் நாம் உணர்வோம். எந்த வித நோயும் உங்களிய அணுகாமல் 100 வயது வரை வாழ்வதற்கான குறிப்புகள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள். 1.மகிழம்பூக்களை நீரில் கொதிக்கவைத்து, பாலில் கலந்து சாப்பிட, தளர்ந்த உடலும், தசைகள் வலுவாகி, உடல் முறுக்கேறி, பொலிவாகும். உடலில் தெம்பும், முகத்தில் தெளிவும் உண்டாகும். 2.வெந்தயம்,ஓமம்,கருஞ்சீரகம் ... |
Posted: 04 Sep 2017 12:13 PM PDT - சினி துளிகள்! - * ஈட்டி படத்தை தொடர்ந்து, அதர்வாவுடன், ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. - * காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் படங்களை இயக்கிய, பாலாஜி சக்திவேல், தற்போது, யார் இவர்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். - * கஞ்சா போதை வழக்கில், தன் மேனேஜர் கைது செய்யபட்டதால், இப்போது தனக்கு தானே மேனேஜர் ஆகி விட்டார், காஜல் அகர்வால். - * ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, செம படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. - ---------------------------------- வாரமலர் |
ஆசானே... ஆயுள் முழுவதும் வணங்குகிறேன்! Posted: 04 Sep 2017 12:08 PM PDT - அறிவு வெளிச்சத்தை எனக்குள் விதைத்த ஞானப் பகலவனே... வாழ்நாள் முழுவதும் வணங்கி நிற்கிறேன்! - வெற்றியின் திசைகளை விழிகளால் காட்டிய அறிவுச்சுடரே... நெஞ்சில் சுமந்து வணங்கி நிற்கிறேன்! - புதுமைகள் படைத்திட பாரதியையும் புரட்சிக்கவியையும் வகுப்புக்கு அழைத்து வந்து வாழ்வாங்கு வாழ வள்ளுவம் சொன்ன ஆசானே இதயத்தில் வைத்து வணங்கி நிற்கிறேன்! - அறநெறியும் அன்புவழியும் ஆரோக்கிய வாழ்வியலும் சொல்லித்தந்த ஆசானே! எண்ணத்தில் கோவில்கட்டி வணங்கி நிற்கிறேன்! - தாயும் தந்தையும் தொழுவென பிஞ்சு ... |
Posted: 04 Sep 2017 12:05 PM PDT விழுதுகளை தாங்கும் வேர்கள் ஆசிரியர்கள்! - சமுதாயம் என்ற - ஆலமரத்தின் ஆணிவேர் ஆசிரியர்கள்! - வேர்கள் வெளியே தெரிவதில்லை சுதந்திரமாய் விருட்சப்பூக்கள்! - அடித்தளம் தன்னை வெளிக்காட்ட விரும்புவதில்லை! விரும்பினால்... ஆபத்து கட்டடத்திற்குத்தான்! - இவர்களுக்கு தேசியவிருதெல்லாம் ஒரு பொருட்டல்ல மாணவனின் மதிப்பெண் பட்டியலே மாசற்ற விருது! - மாதா, பிதா, குரு, தெய்வம் பட்டியலில் கடவுளுக்கே கடைசி இடம் தான்! - ஆசிரியர்கள் ஏற்றிவிட மட்டுமே தெரிந்த ஏணிப்படிகள்... தூக்கிவிட மட்டுமே ... |
இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம். Posted: 04 Sep 2017 09:17 AM PDT இருப்பதை கிடைப்பதை பகிர்ந்து உண்போம். |
Posted: 04 Sep 2017 09:16 AM PDT எதிர்பார்ப்பு என்ன? சிலர் விரும்பி இருக்கலாம் சிலர் விரும்பாதிருந்திருக்கலாம் . எது எப்பிடியோ நாளை முதல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் . தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்ற , அவரிடம் பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன . எதை செய்தால், அவர் நீடிக்க முடியும் . மக்கள் இடத்தில் /தேசிய அளவில் தமிழ்நாட்டை பற்றி உயர்வாகப் பேசவைக்க முடியும் . ஈகரை உறவுகளே ,உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன ? ஆரம்பிக்க , இரெண்டொரு எதிர்பார்ப்புகள் என்னிடமிருந்து . மேலும் தொடரும் . உங்கள் எதிர்பார்ப்புகளை எழுதுங்கள் ... |
Posted: 04 Sep 2017 09:10 AM PDT உலகம் உன் கையில்! உன்மீது நம்பிக்கை கொள் உலகம் உன் கையில் உன்மீது தன்நம்பிக்கை கொள் உலகம் உன் கையில் முடியுமென்று முயற்சி செய் உலகம் உன் கையில் விடியுமென்று விடாமுயற்சி செய் உலகம் உன் கையில் விடாமுயற்சியை விடாமல் செய் உலகம் உன் கையில் |
Posted: 04 Sep 2017 09:08 AM PDT ---- படித்ததில் பிடித்தது |
Posted: 04 Sep 2017 07:57 AM PDT திருடன். ஒரு திருடன் ஒருமுறை அகப்பட்டுக் கொண்டான். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு வியப்பாகிவி்ட்டது. " நீ அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓரே இரவில் ஒன்பது தடவை நுழைந்தாயாமே. அது ஏன்? என்று காரணம் கேட்டார். " எஜமான், வேற என்ன செய்யறது? பெரிய கடையாச்சே. நான் ஒண்டியாளே சுற்றி – சுற்றி கொள்ளயடிக்க வேண்டியிருந்தது. " என்று திருடன் அப்பாவியாகப் பதில் சொன்னான். " ஏன், உனக்கு கூட்டாளி யாரும் கிடைக்கலியா? " " எசமான், காலம் ரொம்ப கெட்டப் போச்சுங்க. யாரை கூட்டாளியா ... |
Posted: 04 Sep 2017 07:56 AM PDT காற்றில் கரைந்த கனவு ஏழை எம்பதியே எமன் கூட போனவளே மூச்சு முட்ட மூட்டைத்தூக்கி முக்காத்துட்டு சேத்த தகப்பன் முன்னே மூச்சுக்காத்த தொலைச்சவளே நெஞ்சு பதறுதே கண்முழி ரெண்டும் நெலகுத்தி நிக்குதே நீ மாண்டு போனனு சொன்ன சொல்ல மனசு கேக்க மறுக்குதே எந்திருச்சி வந்திரு தாயி எம் மகளே ராசாத்தி என் மூச்சிக்காத்தில் பொறந்த மக மூச்சத் தொலைச்சிப் போனேயே பொம்ளையா பொறந்திருந்தா பொரண்டு அழுதிருப்பேன் ஒப்பாாி சொல்லி அழுது ஓச்சும் போயிருப்பேன் ஆம்பளயா பொறந்திட்டேனே மகளே ஆருட்ட நான் சொல்லி ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |