Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிறிய தரப்பினர் மக்களை பணயம் வைத்து ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கின்றனர்

Posted: 24 Jun 2017 09:08 AM PDT

சிறிய தரப்பினரான அடிப்படைவாதிகள் நாட்டு மக்களை பணயமாக வைத்து ஜனநாயகத்திற்கு சவால் விடுத்து வரும் நிலையில், மக்கள் சார்பான அரசாங்கத்தினால் அமைதியாக இருக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் சுதந்திரத்தை பயன்படுத்தி எந்த நபராவது அல்லது குழுக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் நிதியமைச்சரான ரொனி டி மெலை நேற்று சந்தித்து அவரது நலன் குறித்து விசாரித்த பின்னர் […]

The post சிறிய தரப்பினர் மக்களை பணயம் வைத்து ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கின்றனர் appeared first on TamilStar.com.

அதிகாரங்களை விக்னேஸ்வரன் பயன்படுத்தவில்லை! – ஜயம்பதி விக்கிரமரட்ண

Posted: 24 Jun 2017 09:05 AM PDT

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நவ சமசமாஜக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ண, தெரிவித்துள்ளார். கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. நவ சமசமாஜக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரட்ணவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். "சிவாஜிலிங்கம் போன்றோர் சில […]

The post அதிகாரங்களை விக்னேஸ்வரன் பயன்படுத்தவில்லை! – ஜயம்பதி விக்கிரமரட்ண appeared first on TamilStar.com.

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted: 24 Jun 2017 09:02 AM PDT

நாட்டில் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சக்திகள் செயற்படுவதாகவும் டொலர்களை நம்பி வாழும் இவர்கள் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்து வருவதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், விகாரைகளை பாதுகாப்பது மற்றும் புத்தசாசனத்தின் முன்னேற்றம் குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினேன். பல்வேறு சக்திகள் உருவாகி மத நல்லிணக்கத்தை […]

The post மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on TamilStar.com.

கூட்டுப்படைத் தளபதி பதவியை நிராகரித்தார் இராணுவத் தளபதி!

Posted: 24 Jun 2017 08:58 AM PDT

கூட்டுப் படைகளின் தளபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை அவர் நிராகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த எயர்சீப் மார்ஷல் கோலித குணதிலக்க ஜுன் மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார். அந்த பதவி இன்னும் வெற்றிடமாக உள்ளமைக்கு இராணுவ தளபதியின் நிராகரிப்பே காரணம் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் கூட்டுப் படைகளின் தளபதி அலுவலகத்தை மூடி […]

The post கூட்டுப்படைத் தளபதி பதவியை நிராகரித்தார் இராணுவத் தளபதி! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™