ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- உணவுகளின் போட்டோகள் ! :) - பிரட் டோஸ்டர் இல் செய்த சப்பாத்தி !
- வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
- வரலாற்றுப் பார்வை
- பாலத்தின் மேல் மோதிய கப்பல்: அதிர்ச்சி வீடியோ!!
- கோடையில் நம்மை தாக்கும் சரும நோய்கள் !
- கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை
- நாளை பந்த்: எது இயங்கும்; எது இயங்காது?
- சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
- நல்ல தங்காள்
- அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
- ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
- இந்த ஆண்டின் இறுதிக்குள் 'விஸ்வரூபம் 2' வெளியாகும்: கமல்
- கேட்பாரற்ற ரூ.11 லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீஸில் ஒப்படைத்தார்
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- அரிய புத்தகங்கள்
- ஐ.பி.எல் டி20 : பெங்களூரு அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டியது கொல்கத்தா ரைடர்ஸ்
- ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
- முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!
- அனைத்து உலகம்…
- ஏமாந்த பேய்
- ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் Posted: 24 Apr 2017 03:45 PM PDT சென்னை, ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும். சாலை ... |
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 24 Apr 2017 02:20 PM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
உணவுகளின் போட்டோகள் ! :) - பிரட் டோஸ்டர் இல் செய்த சப்பாத்தி ! Posted: 24 Apr 2017 01:05 PM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை |
வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட Posted: 24 Apr 2017 09:51 AM PDT நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையத்தில் சுலபமாக பதிவேற்றம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Create New Account கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் புகைபப்டம் பெயர்.விவரம்.தேதி மற்றும் முக்கிய குறிப்புகள் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும். புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும். இதில் உள்ள ... |
Posted: 24 Apr 2017 08:20 AM PDT வரலாற்றுப் பார்வை -1 திருலோக்கியும் கங்கைகொண்ட சோழபுரமும் -அண்ணாமலை சுகுமாரன் அண்மையில் முனைவர் திருமதி பத்மாவதி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நீண்ட வருடங்களுக்குப்பின் நடையேற இருக்கும் குடமுழுக்குப்பற்றி ஒரு கட்டுரை , தமிழ் ஹிந்துவில் வெளிவந்த செய்தியுடன்முக நூல் பக்கத்தில் எழுதியிருந்தார் . அதில் கங்கையில் இருந்து புனித நீர் குடங்களில் திருலோக்கி எனும் ஊருக்கு வந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் . கங்கையில் ... |
பாலத்தின் மேல் மோதிய கப்பல்: அதிர்ச்சி வீடியோ!! Posted: 24 Apr 2017 08:05 AM PDT ஸ்பெயின் நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. The Naviera Armas என்ற கப்பல் பல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பயணிகள் பயணம் செய்துள்ளனர். துறைமுகத்தை விட்டு சில மைல்கள் தூரம் சென்றதும் திடீரென கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் கப்பலை அதிகாரிகள் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளனர். ஆனால், கப்பலின் செயல்பாடு நின்றுபோனதால் கப்பலை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை. ... |
கோடையில் நம்மை தாக்கும் சரும நோய்கள் ! Posted: 24 Apr 2017 08:03 AM PDT கோடையில் நம்மை தாக்கும் சரும நோய்கள் - கோடையே போ! போ! கோடை என்பதும் இயற்கையின் கொடைகளில் ஒன்றுதான் என்றாலும் கோடையை நாம் வெறுக்கத்தான் செய்கிறோம், காரணம் கோடையின் தாக்கம் நம்மை அத்தனை பாடாய் படுத்துகிறது. இப்படிப்பட்ட கோடையின் கொடுமைகள் என்னதான் செய்யும் என்பதையும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் நாம் பார்க்கலாம். கோடையில் பல நோய்கள் நம்மை தாக்கக்கூடும் அவற்றில் முதன்மையானது தோல் சரும நோய்கள் ! * வேர்க்குரு * வறண்ட சருமம் * வியர்வை * முடி உதிர்தல் * அம்மை மேற்கூறிய ... |
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை Posted: 24 Apr 2017 07:29 AM PDT - நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட். இங்குள்ள பங்களாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்திவந்தார். இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காவலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார். 10 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா, "இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச் ... |
நாளை பந்த்: எது இயங்கும்; எது இயங்காது? Posted: 24 Apr 2017 07:25 AM PDT சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. யாரெல்லாம் ஆதரவு : திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்திற்கு காங்., இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாமக., தமிழ் மாநில காங்., பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார். வணிகர் சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. இதனால் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும். சினிமா ... |
சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு Posted: 24 Apr 2017 07:21 AM PDT ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 26 பேர் பலியாயினர். சுக்மா மாவட்டத்தில் சிந்த்தாகுபா பகுதியில் , இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ராமன்சிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 300 நக்சல்கள் தாக்குதல் பாதுகாப்பு படையினர் மீது 300 நக்சல்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக ... |
Posted: 24 Apr 2017 07:07 AM PDT அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி. அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி. நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். ... |
அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் Posted: 24 Apr 2017 06:54 AM PDT நூலின் பெயர் :அறம் ஆசிரியர் பெயர் :ஜெயமோகன் இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் ஜெயமோகனின் ... |
ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது Posted: 24 Apr 2017 01:23 AM PDT ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது, யாரவது உதவவும். நன்றி! |
இந்த ஆண்டின் இறுதிக்குள் 'விஸ்வரூபம் 2' வெளியாகும்: கமல் Posted: 23 Apr 2017 11:14 PM PDT -- இந்த ஆண்டின் இறுதிக்குள் 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 'விஸ்வரூபம் 2' படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது. தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் ... |
கேட்பாரற்ற ரூ.11 லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீஸில் ஒப்படைத்தார் Posted: 23 Apr 2017 11:10 PM PDT பெசன்ட் நகர் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் இலங்கை பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெசன்ட் நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்தார். அங்கு உள்ள போலீஸ் பூத் அருகே உள்ள குப்பை தொட்டி அருகே கேட்பாரற்ற நிலையில் கைப்பை ஒன்று கிடந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது ... |
நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 23 Apr 2017 10:01 PM PDT |
Posted: 23 Apr 2017 07:09 PM PDT இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
ஐ.பி.எல் டி20 : பெங்களூரு அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டியது கொல்கத்தா ரைடர்ஸ் Posted: 23 Apr 2017 06:00 PM PDT கொல்கத்தா: ஐபிஎல் டி20 சீசன் 10 தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமறிங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.3 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை எடுத்தது. பின்னா் 132 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி, 9.4 ஓவா்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ரன்களை ட்டுமே எடுத்து ... |
ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப் Posted: 23 Apr 2017 05:56 PM PDT புதுடெல்லி: தற்போதுள்ள ரயில் தொடர்பான அனைத்து ஆப்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த புதிய ஆப் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய ஆப்பின் பெயர் 'ஹிந்து ரயில்'. வரும் ஜூன் மாதம் இந்த ஆப் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப் செயல்பாட்டு வரும்போது, பயணிகள் தங்களது ரயில் எத்தனை மணிக்கு எந்த நடைமேடையில் இருந்து கிளம்பும், சேரும் நேரம், தாமதம், டிக்கெட் ரத்து, இருக்கை வசதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், டாக்சி முன்பதிவு, ஓட்டல் ... |
முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா! Posted: 23 Apr 2017 05:27 PM PDT - சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த ராஜ்கிரணின் காதலும் வாழ்வுமே 'ப.பாண்டி'. ராஜ்கிரண மகன் வீட்டில் பேரக் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கிறார். காதலுக்கு உதவுவது, காரைத் தள்ளிவிடுவது, கஞ்சா வியாபாரத்தைத் தடுப்பது என உதவி செய்யப் போய் அது எல்லாம் மகன் பிரசன்னாவுக்கு தொந்தரவாகவே அமைகிறது. அந்த எரிச்சலில் ராஜ்கிரணிடம் கோப முகம் காட்டுகிறார் பிரசன்னா. இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறார் ராஜ்கிரண். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது, ராஜ்கிரண் என்ன ஆகிறார் ... |
Posted: 23 Apr 2017 05:00 PM PDT - - ஆர்.எஸ்.ஜேக்கப் நகைமொழிக்கதைகள் நானூறு – புத்தகத்தலிலிருந்து படம்- இணையம் |
Posted: 23 Apr 2017 04:40 PM PDT |
ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம் Posted: 23 Apr 2017 04:21 PM PDT ஒரு நாள் ஆப்ரஹாம் லிங்கனும் பலரும் பேசிக் கொண்டிருக்கையில் குதிரை வியாபாரம் பற்றி பேச்சு திசை திரும்பியது - அங்கே ஒரு நீதிபதியும் இருந்தார். உரையாடலில் நகைச்சுவையும், சவால்களும் இடம்பெற்றன. லிங்கன், ஒரு நீதிபதியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். - லிங்கன் சொன்னார்:- - நீதிபதி அவர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள். நானும் நீங்களும் குதிரை வியாபாரம் செய்வோம். ஆனால் ஒரு நிபந்தனையை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். - குதிரை பேரம் நடக்கும் ஹோட்டலுக்கு வரும் வரை, என் குதிரையை நீங்கள் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |