Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நடுத்தர சிறிய வர்த்தகங்களுக்கு நிதி உதவி

Posted: 09 Mar 2017 12:09 PM PST

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு உதவும் வகையிலான வர்த்தக வளர்ச்சி நிதித் திட்டம் ஒன்று குறித்த அறிவிப்பினை இன்று மத்திய நிதி அமைச்சரும், வங்கிகளும் இணைந்து வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய, மத்திய தர வணிக நிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு உதவும் வகையிலான பங்களிப்பினை வழங்கும் இந்த நிதித் திட்டம் குறித்த அறிவிப்பினை, நிதி அமைச்சர் பில் மோர்னியோவும், கனடாவின் ஐந்து மிகப்பெரிய வங்கிகளும் இணைந்து இன்று வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் […]

The post நடுத்தர சிறிய வர்த்தகங்களுக்கு நிதி உதவி appeared first on TamilStar.com.

மகிந்தவின் பாதுகாப்பு! ரணிலின் பதில்?

Posted: 09 Mar 2017 12:03 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நாம் குறைக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றிற்குப் பதில் அளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசிய பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க மாட்டோம். மாறாக அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துவோம். இதேவேளை, விசேட கொடுப்பனவ பயற்சி பெற்ற பாதுகாப்பு […]

The post மகிந்தவின் பாதுகாப்பு! ரணிலின் பதில்? appeared first on TamilStar.com.

கூட்டமைப்பின் நோக்கத்திற்காக செயற்படும் அரசாங்கம்! சமஷ்டியை அடைய சம்பந்தன் எடுத்த அந்த முடிவு?

Posted: 09 Mar 2017 12:00 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகிறது. அதனை அடைந்துகொள்வதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்துரைத்த அவர், இலங்கையின் பாராளுமன்ற […]

The post கூட்டமைப்பின் நோக்கத்திற்காக செயற்படும் அரசாங்கம்! சமஷ்டியை அடைய சம்பந்தன் எடுத்த அந்த முடிவு? appeared first on TamilStar.com.

தாம் விருது வழங்கிய நபர் காடழிப்பை செய்தவர் என்பதை முதலமைச்சர் அறிவாரா? ரவிகரன் கேள்வி

Posted: 09 Mar 2017 11:56 AM PST

மிகப்பெரும் காடழிப்பை செய்த பிரதான சூத்திரதாரிக்கு வடமாகாண முதலமைச்சரின் கைகளாலேயே "சிறந்த விவசாயி" விருது வழங்கப்பட்டதா? தாம் விருது வழங்கி கௌரவித்த நபர் காடழிப்பை செய்த சூத்திரதாரி என்பதை முதலமைச்சர் அறிவாரா? என மாகாண விவசாய அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பபட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற வடமாகாண சபையின் 86ம் அமர்விலேயே மேற்படி கேள்வி எழுப்பபட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி கேள்வியை எழுப்பியிருந்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், சிறந்த விவசாயி தெரிவு எப்படி […]

The post தாம் விருது வழங்கிய நபர் காடழிப்பை செய்தவர் என்பதை முதலமைச்சர் அறிவாரா? ரவிகரன் கேள்வி appeared first on TamilStar.com.

கூட்டமைப்புக்குள் முறுகல் உச்சம் : சுயநல காரணங்களுக்காக காட்டிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

Posted: 09 Mar 2017 11:17 AM PST

சுயநல காரணங்களை முன்னிட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதையும் காட்டிக்கொடுப்பதையும் தமிழரசுக்கட்சி கைவிடவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்து தெரிவித்து தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் பருத்தித்துறையில் நடந்த தமிழரசுக்கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கான அரசியல் கருத்தரங்கு ஒன்றில் சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவும் நீண்ட உரையாற்றியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் […]

The post கூட்டமைப்புக்குள் முறுகல் உச்சம் : சுயநல காரணங்களுக்காக காட்டிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் appeared first on TamilStar.com.

‘ஆம் நான் பொய் கூறினேன்’ குற்றத்தை ஒப்புக்கொண்டார் பந்துல

Posted: 09 Mar 2017 11:09 AM PST

"பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியதாக" ஊடக சந்திப்பொன்றில் தான் பொய் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் ஒன்றை வழங்க வந்த சந்தர்ப்பத்தில் அவர் அதனை ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் செயல் குறித்து கடுமையாக சாடிய ஜனாதிபதி ஆணைக்குழு ஊடக சந்திப்புகளில் பொய்களை கூற வேண்டும் என எச்சரித்துள்ளது. பிணை முறிப்பத்திர விவகாரம் […]

The post ‘ஆம் நான் பொய் கூறினேன்’ குற்றத்தை ஒப்புக்கொண்டார் பந்துல appeared first on TamilStar.com.

மஹிந்தவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் உடைத்தெறிப்பு

Posted: 09 Mar 2017 06:48 AM PST

கொழும்பு – தெஹிவளையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் மேம்பாலம் திறந்து வைத்தமைக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களின் பின்னர் தற்போது குறித்த நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் மேம்பாலத்தினை கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மஹிந்தவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் உடைத்தெறிப்பு appeared first on TamilStar.com.

பெண்கள் நேர்மையானவர்கள் என்கிறார் ஜனாதிபதி

Posted: 09 Mar 2017 06:45 AM PST

அரச சேவையில் பெண்களின் நேர்மையானது வெளிப்படையாக தெரிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பெண்களின் நேர்மையானது வெளிப்படையாக தெரியவந்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க […]

The post பெண்கள் நேர்மையானவர்கள் என்கிறார் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

ஐ.நா அறிக்கை இலங்கையைக் கட்டுப்படுத்தாது! – ஹர்ஷ டி சில்வா

Posted: 09 Mar 2017 06:42 AM PST

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கடந்த மார்ச் 3ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார். ’30/1 தீர்மானத்துக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது.ஐ.நா […]

The post ஐ.நா அறிக்கை இலங்கையைக் கட்டுப்படுத்தாது! – ஹர்ஷ டி சில்வா appeared first on TamilStar.com.

சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு

Posted: 09 Mar 2017 06:37 AM PST

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை உட்பட 2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய போது அதனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை […]

The post சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™