Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை

Posted: 05 Mar 2017 08:29 AM PST

பீஜிங்: சீனாவின் தேசிய நாளிதழான, 'குளோபல் டைம்ஸ்' அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி: இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில், இந்தியா, சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 42 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாடுகளின், 7,000 கோடி டாலர் பரஸ்பர வர்த்தகத்தில், திடீரென்று, இந்தியாவின் பங்களிப்பு, 4,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதை, சீன பொருளாதார ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு அலட்சியமாக இருப்பது, உள்நாட்டு தயாரிப்புத் ...

பேலன்ஸ் இருக்குற வரைக்கும்தான் நல்லா பேசுவாரு…!!

Posted: 05 Mar 2017 07:42 AM PST


-

அரசியல் உத்தமர்களுக்கு: ஏமாந்த சோனகிரியா தமிழக மக்கள்!

Posted: 05 Mar 2017 07:19 AM PST

- சமூகத்தின் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு நுண் அரசியல் மறைந்திருப்பதை உற்று நோக்கும் யாவரும் உணர முடியும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை தொடங்கி, மக்களுக்கான அரசு திட்டங்கள் வரைக்கும் ஒவ்வொன்றிலும் அரசியல் பின்னோட்டம் இழையோடி இருக்கிறது. - இதையெல்லாம் மாண்புமிகு மகாஜனம் புரிந்து வைத்துள்ளதா அதற்கெல்லாம் அவர்களுக்கு கால நேர அவகாசம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். - அலுவல் அல்லல்களுக்கிடையில் சிக்கி அன்றாட தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் சாமானியன் எல்லா நிகழ்வுகளையும் ...

இந்த வக்கீல் கோர்ட்டுல பயங்கரமா வாதம் செய்வாரு…!

Posted: 05 Mar 2017 06:00 AM PST

உங்க பையன ஏன் அஞ்சல்வழிக் கல்வியில சேரக்கல..?

கொரியர் வழிக் கல்வியில சேர்ந்து தான் படிப்பேன்னு
அடம் பிடிக்கிறான்…!!

கருணைவள்ளல்


————————————–

இந்த வக்கீல் கோர்ட்டுல பயங்கரமா வாதம்
செய்வாரு…!

அதுக்காக இவரை 'பயங்கரவாதி'ன்னு சொல்றது
நல்ல இல்லே…!


கே.ஜெகதீசன்

—————————————

தொடரும்....

ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Posted: 05 Mar 2017 04:06 AM PST

- நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. ...

இந்த வார திரைப்பட செய்திகள்...

Posted: 05 Mar 2017 01:07 AM PST

வில்லன் வேடத்தில் அர்ஜூன்! - - நடிகர் அர்ஜுனுக்கு, கதாநாயகன் மார்க்கெட் இறங்கி விட்டதால், தன் மகள், ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து காதலின் பொன்வீதியில் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். மேலும், சில படங்களில், குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், விஷால் நடிக்கும், இரும்புத்திரை படத்தில், வில்லனாக நடிக்கயிருந்த ஆர்யா, விலகி விட்டதை அடுத்து, அப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். — சினிமா பொன்னையா

உணவுகளின் போட்டோகள் ! :) - கச்சோடி !

Posted: 05 Mar 2017 12:30 AM PST

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

வட இந்திய சமையல்கள் - இராஜஸ்தானி கச்சோடி !

Posted: 04 Mar 2017 11:10 PM PST

முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ...

முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்

Posted: 04 Mar 2017 09:38 PM PST

ஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதாரபாத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸின் மகன்கள் செய்யது பயாசுதீன், மற்றும் உஸ்மான் குரைசி ஆகியோர் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவிகள் பாத்திமா மற்றும் பக்ரைன் நூர் ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு இந்தியாவில் அப்துல் ஹபீஸின் குடும்பத்துடன் இருக்கின்றனர். வாட்ஸ் அப்-பில் ‛தலாக்': இந்நிலையில் இவர்கள் ...

இறங்கும்போது பத்திரம் !

Posted: 04 Mar 2017 09:35 PM PST

வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்குக் கடினமான உழைப்பு வேண்டும் . உச்சத்தைத் தொடுவது எவ்வளவு கடினமோ , அவ்வளவு கடினம் , அந்த உச்சத்தை நிலை நிறுத்திக் கொள்வதாகும் . வாழ்க்கை என்பது ஒரு வண்டிச் சக்கரம் போல . கீழது மேலா , மேலது கீழா என்று சுழன்றுகொண்டே இருக்கும் . வறியவன் ஒருவன் செல்வந்தன் ஆவதும் , செல்வந்தன் ஒருவன் வறியவன் ஆவதும் இயற்கையின் நியதி . வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்களுக்கு வறுமை வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . உச்சத்தைத் தொட்டபோது எந்தெந்த குணங்கள் இருந்ததோ ...

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்

Posted: 04 Mar 2017 08:12 PM PST


-


சென்னை:
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள்
அமைச்சர் தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில்
பொதுபணித் துறை அமைச்சராக இருந்தார்.
-
--------------

என்னுடைய தொலைபேசி உரையாடலை ஒபாமா ஒட்டுகேட்டார்: டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டு

Posted: 04 Mar 2017 08:10 PM PST

வாஷிங்டன்: ‛அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்டார். அவர் கெட்டவர்' என அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மீது குற்றம்சாட்டியுள்ளார். இது நியாயமா? இதுதொடர்பாக, அதிபர் டொனல்ட் டிரம்ப் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " பயங்கரம்! அமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றிக்கு முன்பாக, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதை கண்டுபிடித்துள்ளேன். அவர் அதிபராக இருந்துகொண்டு இப்படி ஒட்டு கேட்டது சட்டப்படி ...

ரூ.3.5 கோடி தருவோம்னு சொன்னீங்க என்னாச்சு?: சாக்ஷி ஆவேசம்

Posted: 04 Mar 2017 08:08 PM PST

- புதுடில்லி, : ரூ. 3.5 கோடி பரிசு தருவோம் என சொன்னீங்களே என்னாச்சு என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை அரியானா அரசை கேள்வி கேட்டுள்ளார். இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், 24. கடந்த ரியோ (2016) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இவரின் சாதனையை கவுரவிக்கும் முறையில், சொந்த மாநிலமான அரியானா அரசு ரூ. 3.5 கோடி தரப்படும் என அறிவித்தது. தற்போது வரை இந்த பணம் ...

டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கானா

Posted: 04 Mar 2017 08:02 PM PST

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை டிஜிட்டல் மாநிலமாக மாற்ற கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது அம்மாநில அரசு. தெலுங்கான மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முன்னிலையில் தெலுங்கான அரசுக்கு கூகுள் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள்: இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசின் அனைத்து இணைய தளங்களையும் மொபைலில் பார்த்து கொள்ளும் வசதி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் ஆன்லைன் மூலம் ...

தொலை தொடர்பு துறை­யில் அறி­மு­கம் புதிய நிறு­வ­னம் ‘ஏரோ­வாய்ஸ்’

Posted: 04 Mar 2017 08:00 PM PST

- தொலை தொடர்பு சேவையில், புதிதாக,' ஏரோவாய்ஸ்' எனும் நிறுவனம் அறிமுகமாக உள்ளது. இந்நிறுவனம், ஆட்பே எனும் மொபைல் பேமென்ட் துறை சார்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது குறித்து, ஆட்பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவகுமார் குப்புசாமி கூறியதாவது: இந்தியாவில், பல நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள், தங்களின் அலைக்கற்றைகளை முழுமையாக பயன் படுத்தாமல் உள்ளன. அவற்றை, புதிய நிறுவனங்கள் பயன்படுத்தி, தொலை தொடர்பு சேவை வழங்க, மத்திய தொலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™