Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு

Posted: 03 Dec 2016 09:04 AM PST

வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு   வாழ்த்துதல் ஆதரவு/வரவேற்பு கொடுத்தல் கைதட்டி பாராட்டுத் தெரிவித்தல் மெச்சுதல் போற்றுதல் வாழ்த்துதல் குறிப்பாக கையொலி எழுப்பி ஆதரவு/வரவேற்பு / பாராட்டைத் தெரிவித்தல் ஆசீர்வதித்தல் .... வயதில் சிறியவர்களை, அவர்கள் பெரியவர்களிடம் வணங்கும் போது , வாழ்த்தி ஆசீர்வதிப்பது . நாம் நம்மையும் குழப்பிக்கொண்டு,மற்றவர்களையும் சரியாக வழி நடாத்தாது, வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறேன் என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறோம் .   ஆகவே நம் ஈகரை உறவுகள்  ஒரு மைல்கல் ...

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!

Posted: 03 Dec 2016 08:11 AM PST

- தமிழகத்தில் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், முற்போக்கு சிந்தனைவாதியுமான மக்கள் கவிஞர் இன்குலாப், சென்னையில் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது. சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய தீவிர தமிழ் உணர்வாளர். இன்குலாப்பிற்கு கமருன்னிஷா என்ற மனைவியும், செல்வம், இன்குலாப் என 2 மகன்களும், ஆமினா பர்வீன் என்ற ஒரு மகளும் உள்ளனர். - கவிஞர் இன்குலாப் தன்னுடைய ...

அறிமுகம்

Posted: 03 Dec 2016 08:06 AM PST

வணக்கம்... நான் திருமதி பிரகாஷ்.... பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வந்தது போனது எல்லாம் சீர் மிகு சென்னையில்.... கற்றது MSc அளவு... கல்லாதது உலகளவு.... வயதிலும் அனுபவத்திலும் பொடிசு....

வணக்கம்

Posted: 03 Dec 2016 08:05 AM PST

அனைவருக்கும் வணக்கம்.... நான் திருமதி பிரகாஷ்... என் புது உறவுகளுடன் அளவளாவ காத்திருக்கிறேன்....

அம்மா வரம்.. நீ என் தவம்...

Posted: 03 Dec 2016 07:23 AM PST

அம்மா காசில்லை என்று துரத்தும் போது தங்கை நீட்டும் பத்து ரூபாய் பல லட்சம்.... அம்மாவிற்கு அடங்காத  திமிர் கூட.. தங்கை சொல்லில் தலை கவிழ்ந்து நிற்கும்.. உறவில் புனிதம்  தங்கைதான். வள்ளுவன் கூட  மூன்றாம் பால்  பற்றி பேச முடியாது.. பிறக்கும் போது அழுதேன் எல்லாரும் சிரித்தார்கள்.. உன்னை பிரியும் போது அழுகிறேன் .. எல்லோரும் சிரிக்கிறார்கள்.. நான் எவ்வளவு  சுயநலவாதி என்பது தங்கையை மணம் முடித்தவனுக்கே தெரியும்... மழலையில் அழுவாய் மழை வேண்டும் என்று.. இன்று மழை பெய்யும் போதெல்லாம் ...

உதவுங்கள் நண்பர்களே.....

Posted: 03 Dec 2016 07:01 AM PST

எனது லேப்டாப்பில் விண்டோஸ் 8.1 Pro with media center ஆப்ரேட்டிங்க் (O.S) உள்ளது. லேப்டாபை ஆன் செய்தவுடன் " Your Windows Expire soon" என வருகிறது.இது வராமல் இருக்க தீர்வு சொல்லுங்கள். நண்பர்களே.

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 03 Dec 2016 06:52 AM PST

கான்பூரில் செலவிற்கு பணம் எடுக்க வந்து வரிசையில் சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - தமிழ் வெப்துனியா ------------------------ - ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் ஏர்டெல் தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டாக்டைம் கிடைக்கும். இதை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும் அழைக்கலாம். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல் முறையாக டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே. - தமிழ் ...

தினமலரில்/ கட்செவி வந்தது  

Posted: 03 Dec 2016 06:44 AM PST

1 . தினமலரில் வந்தது   2 . கட்செவியில் வந்தது. ஆளும் கட்சி அப்போலோ  வாசலில், எதிர் கட்சியோ காவேரி வாசலில், மக்களோ ATM வாசலில், என்னே சோதனை தமிழகத்திற்கு! 3 . கட்செவி --2 பிரதமரோ குஜராத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் குஜராத்தி பிஜேபி தலைவர் -குஜராத்தி அம்பானி குஜராத்தி   அதானி --குஜராத்தி ரூபா நாட்டுலேயும் குஜராத்தி இந்த எல்லா குஜராத்திகளும் சேர்ந்து இந்திய மக்கள் யாவரையும் ATM மெஷினை சுத்தி "தாண்டியா " * விளையாட வச்சுட்டாங்க . ( தாண்டியா*--குஜராத்திகள் நவராத்திரியில் ...

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)

Posted: 03 Dec 2016 04:19 AM PST

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ஆயிரம் (1000) ரூபாய் நோட்டு!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா

Posted: 03 Dec 2016 03:35 AM PST

- ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 14–ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதனை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், ...

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Posted: 03 Dec 2016 03:18 AM PST

கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ...

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை

Posted: 03 Dec 2016 02:58 AM PST

புதுடில்லி: ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை மீறிய 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், 6 பேரை இடமாற்றம் செய்துள்ளது. மத்திய அரசின் கறுப்பு பண வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து கறுப்பு பண பதுக்கல்காரர்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகள் கறுப்பு பண முதலைகளின் சட்ட விரோத முயற்சிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ரிசர்வ் நாடு முழுவதும் உள்ள ...

ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்

Posted: 02 Dec 2016 08:42 PM PST

– புதுடில்லி: வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன் படுத்த வேண்டும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொருத்த வேண்டும். வங்கிகள் – வாடிக்கையாளர்கள் இடையிலான ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 02 Dec 2016 08:13 PM PST

கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Posted: 02 Dec 2016 08:07 PM PST

கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள் இருந்தது கண்டறியப்பட்டது. - இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். - வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில் கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். - இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் ...

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது

Posted: 02 Dec 2016 07:09 PM PST

திருவண்ணாமலை: - - திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் ...

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு

Posted: 02 Dec 2016 04:14 PM PST

ஆமதாபாத்: குஜராத்தில், வருமான வரி சலுகை திட்டத்தின் கீழ் ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டிய ரியல் எஸ்டேட் அதிபர் வீடு மற்றும் அவரது சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. சோதனை: மகேஷ் ஷா என்ற அந்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சோதனை நடத்துவது தொடர்பாக தகவல் வெளியே வந்துள்ளது. கடந்த நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியில் சோதனை நடந்தது.. இந்த சோதனையை தொடர்ந்து மகேஷ் ஷா தலைமறைவாகியுள்ளார். இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™