ஈகரை தமிழ் களஞ்சியம் |
- KAVIDHAI
- செப்.17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும்
- MY PROFILE
- என் இதயமா இல்ல உன் இதயமா…
- பிழைப்பு!
- ஒற்றுமையாய் இருங்கள்!
- பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை
- பக்ரீத் --பெருவிழா வாழ்த்துகள் .
- கரி உரித்த சிவன்!
- 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மந்த்ரா பேடி!
- விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம்
- தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம்
- சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி
- வாடகைத்தாய்க்கு வந்தது தடா!
- அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
- புதுப்பிக்க ....!
- அதிகமான ஏக்கம் ...!
- செய்திகள் என்ன சொல்லுது?
- கூகிளின் டேட்டா சென்டர் -சுற்றிக் காட்டுகிறார் சந்தீப்.
Posted: 12 Sep 2016 03:56 PM PDT [center]விலை மாது எழுதிக் கொண்டே இருக்கிறாள் அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை நிரம்பிய பாடில்லை அவள் வாழ்க்கை பக்கங்கள் யாதுமற்ற வெட்டவெளியில் ஏதோ ஒரு பயணத்தில் நிஜமாகாத கனவுகளுடன் வெறுமையான நினைவுகளால் தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி நகர்ந்து கொண்டு இருக்கிறாள். அவள் கண்ணீர் தடாகத்தில் ஆயிரம் முதலைகள் எடுத்து வைக்க பெட்டகம் இல்லை அத்தனை பட்டங்கள் தினம் ஒரு தெய்வம் காணாமல் போனது அவள் கருவில் ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள் ... |
செப்.17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் Posted: 12 Sep 2016 03:56 PM PDT தெலங்கானா அரசு, வரும் 17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமானபண்டாரு தத்தாத்ரேயா வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாதில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ""செப்டம்பர் 17-ஆம் தேதியை, ஹைதராபாத் விடுதலை நாளாக தெலங்கானா அரசு கொண்டாட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு'' என்றார். எனினும், அவரது கருத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஏற்கவில்லை. இதுதொடர்பாக, தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவின் ... |
Posted: 12 Sep 2016 03:30 PM PDT பெயர்:தமிழ்வேந்தன் சொந்த ஊர்:வேப்பூர் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கணினி பொழுதுபோக்கு:கதை,கவிதை படைப்பது தொழில்:வேளாண்மை படிப்பு மேலும் என்னைப் பற்றி: |
Posted: 12 Sep 2016 09:22 AM PDT ஆயிரம் நிலாக்கள் கரைத்து செய்தஒற்றை பொன் நிலா நீ… கரு மேகங்கள் கடைந்துஎடுத்த நூல்கள் உன் கூந்தல் முற்றாத இரண்டு நுங்குசுளைகள் உன் கன்னம்… தாமரைகள் பறித்துதங்கத்தில் ஊற வைத்ததுஅவள் இதழ்கள்… அவள் கறுப்புதான் ஆனால்அது கரும்பின் கறுப்புகொஞ்சம் மினுமினுக்கும்மின்னலடிக்கும்… அவள் பற்கள் செய்த மிச்சத்தில்தான் முத்துக்கள்பிறந்தன… ஓர பார்வை ஊசி குத்தும்ஓரு நிமிட சிரிப்பில்பட படக்கும்வெடி வெடிக்கும்… கொஞ்சம் பேசினாய்இடறியது என் இதயம்கொஞ்சி பேசினாய்இடம் மாறியது என் இதயம் துடிக்குது உன் நினப்புலதவிக்குது ... |
Posted: 12 Sep 2016 09:06 AM PDT - அரைநாள் புளியமரத்தடியில் அமர்ந்து, ஊதியம் பெற நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்! * மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத பண்ணையாருக்கும் பயிர் கடன் தள்ளுபடி! * அரசு வங்கியில் கல்விக் கடன் பெற்று பட்டம் வாங்கி நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் போதும் கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கும் மாணவர்கள்! * அடுக்குமாடி கட்டிக் கொடுத்தும் அதை வாடகைக்கு விட்டு விட்டு சாலையில் குடியிருக்கும் ஏழை எளியவர்கள்! * கொஞ்ச நஞ்ச வருமானத்தையும் பறித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் மதுக்கடைகள்! * ... |
Posted: 12 Sep 2016 09:03 AM PDT - செப்., 13 – ஓணம் தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்த, வாமனனாக அவதரித்தார், பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க அ ல்லவா அவர் தோன்றினார் என்று நீங்கள் எண்ணக்கூடும்; அது ஒரு காரணம் மட்டுமே! – ஆனால், அவதாரத்தின் நோக்கம், தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்தவே! – தேவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்தான், அசுர வேந்தனான மகாபலி சக்கரவர்த்தி. இதனால், கோபமடைந்த தேவர்கள், அவனைக் கொன்று விட்டனர். இறந்தவரை பிழைக்க வைக்கும் ம்ருத சஞ்சீவினி மந்திரத்தை கற்று வைத்திருந்தார், அசுர குருவான ... |
பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை Posted: 12 Sep 2016 08:57 AM PDT பெங்களூருவில் ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் கூண்டோடு தீக்கிரை- தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்!! பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் என்ற பெயரிலான கும்பல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்ததால் தமிழக லாரி ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான ... |
பக்ரீத் --பெருவிழா வாழ்த்துகள் . Posted: 12 Sep 2016 08:57 AM PDT பக்ரீத் --பெருவிழா வாழ்த்துகள் . பக்ரீத் பெருவிழா வாழ்த்துகள், கொண்டாடும் அன்பு உறவுகள் அனைவருக்கும் ! ரமணியன் |
Posted: 12 Sep 2016 08:55 AM PDT - மயிலாடுதுறைக்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் வழுவூரில் உள்ள சிவன் கோயிலுக்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள்? அப்படி சென்றிருந்தாலும் அக்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி எனும் அற்புத படிமச் சிலையை அதன் முழு வடிவ அழகுடன் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்! தினம்தினம் நடைபெறும் அர்ச்சனைகள், பூஜைகள், பூமாலைகள் மற்றும் உடை அலங்காரங்களுடன்தான் அந்த சிலையைப் பார்த்திருக்க முடியும். ஆபரணங்கள், உடை அலங்காரங்கள் களைந்து அதன் அற்புதத் திருமேனியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அந் நேரத்தில் அர்ச்சகர்கள் ... |
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மந்த்ரா பேடி! Posted: 12 Sep 2016 08:53 AM PDT - ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படமொன்றில் நடிகை மந்த்ரா பேடி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல வட இந்திய நடிகை மந்த்ரா பேடி. சிம்பு நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தவர் 12-ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை சுரபி நடிப்பில் உருவாகவுள்ள புதிய ... |
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Posted: 12 Sep 2016 08:51 AM PDT - விக்ரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. தன் வீழ்ச்சியின் சாம்பலில் இருந்து அவ்வப்போது உயிர்த்தெழுவார். அப்படி எழ பாலா, ஹரி, ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இதற்கு முன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவரது சினிமா கிராஃபை கவனித்தால் அவ்வப்போது உற்சாகமாக மேலே ஏறி மீண்டும் அவ்வப்போது பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைக் கவனிக்கலாம். இந்த ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும்போதெல்லாம் அதை டீஃப் ஃபிரை செய்ய சில இயக்குநர்கள் உற்சாகக் கத்தியுடன் தயாராக இருப்பார்கள். 2015-ல் விஜய் மில்டன் (பத்து எண்றதுக்குள்ள). இப்போது ... |
தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம் Posted: 12 Sep 2016 08:48 AM PDT - கேரளா, திருச்சூர் மாவட்டம், நெல்லுவாய் என்ற சிறிய ஊரில் "தன்வந்திரி' பகவானுக்கு தனி ஆலயம் உள்ளது. இந்த தன்வந்திரி பகவான் திருக்கரங்களில் அமிருத கலசத்தை ஏந்தியவாறு அற்புதமாய் காட்சியளிக்கிறார். அம்பிகையின் சயனக்கோலம் திருமாலின் கிடந்த கோலத்தை திருவரங்கம், திருமெய்யம், திருவனந்தபுரம் ஆகிய தலங்களில் தரிசிக்கிறோம். சிவபிரானின் கிடந்த கோலத்தை சுருட்டைப்பள்ளியில் தரிசிக்கலாம். இதேபோன்று அம்பிகை சயனகோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஆனைமலை. மந்திரபுரீஸ்வரர் நாகை மாவட்டம், அருகே முத்துப்பேட்டையில் ... |
சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி Posted: 12 Sep 2016 08:44 AM PDT - திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சியில் இலங்கை, குவைத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு சேவல் ரூ.4௨ ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல்- வத்தலக்குண்டு ரோட்டில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல் காண்காட்சி நடந்தது. இதில் மயில்கருப்பு, பொன்நிறம், சித்திரப்புள்ளி, பல புள்ளி, காகம், பூடி, வெள்ளை உட்பட பல ரகங்களில் 125 சேவல்கள் பங்கேற்றன. சேவல் விலை ரூ.4௨ ஆயிரம்: கண்காட்சியில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் கே.வி.ரெட்டி, மயில் நிறமுடைய ஒரு ... |
Posted: 12 Sep 2016 08:42 AM PDT அவன் அவள் அது என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வாடகைத்தாயை முன்வைத்து ஒரு படம் வந்தது. வாடகைத்தாய் என்ற சொல்லே அளிமுகமாகாத காலம் அது. ஆனால் தற்போதோ, பேப்பரில் விளம்பரம் கொடுத்து வாடகைத் தாயைத் தேர்ந்தெடுக்கும் நிலை. கூடவே ஏராளமான முறை கேடுகளும், – இதனை முறைப்படுத்தவே வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா – 2016 உருவாக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதுவும் போதாது என்ற கருத்து நிலவுகிறது ஏன்? – இரண்டு நேரடி உதாரணங்களை பார்த்தால், பிரச்னை புரியும். 2012இல் ... |
அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி! Posted: 12 Sep 2016 08:39 AM PDT - இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. – மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொது மக்களுக்கு செல்போன் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. – இதற்கு வசதியாக செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், ... |
Posted: 12 Sep 2016 06:06 AM PDT சதையோடு ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை பிரித்து எடுக்கும் பாதரசம் இருந்தால் கூறுங்கள் சேதாரம் செய் கூலி இல்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம் ....! |
Posted: 12 Sep 2016 03:31 AM PDT அதிகமான ஏக்கம் ஆர்ப்பரிக்கும் மனசு இடைஇடையே துள்ளி குதிக்கும் கவிதை நின்று நிதானமாய் ஏறி இறங்கும் ஞாபகம் தடபுடலாய் ஓடி ஓளியும் இதய துடிப்பு மிருகமாய் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கோபம் தனக்கு தானே சிரித்து மகிழும் புன்னகை இவைகளை தாண்டியும் தன்னலத்தோடு தேடுகிறது தலைமறைவாக பதுக்கி வைத்த முதல் காதலை.....! |
Posted: 12 Sep 2016 02:36 AM PDT 1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ... |
கூகிளின் டேட்டா சென்டர் -சுற்றிக் காட்டுகிறார் சந்தீப். Posted: 12 Sep 2016 02:19 AM PDT இணையத் தரவுகளெல்லாம் சேர்வரில் இப்படித்தான் சேமிக்கப்படுகின்றன.கூகிளின் டேட்டா சென்டர் ஒன்றை சுற்றிக் காட்டுகிறார் சண்டீப். 360 -விடியோ. |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |