Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணைய்

Posted: 14 Jul 2016 07:48 PM PDT

download

downloadநல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம்.

நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் .

The post கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணைய் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிங்கப்பூர் வங்கி கொள்ளை: கனேடியர் தாய்லாந்தில் கைது

Posted: 14 Jul 2016 07:16 AM PDT

oi

oiசிங்கப்பூரில் வங்கி ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கனேடியர் ஒருவர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

David James Roach என்ற அந்த கனேடியர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் தலைநகராக பாங்கொக்கிற்கு சென்றிருந்த நிலையிலேயே அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்று ஒரு குறிப்பு எழுதப்பட்ட சீட்டு ஒன்றை கொடுத்ததுடன், தாம் துப்பாக்கி வைத்திருப்பதாக அச்சுறுத்தி பணத்தையும் கோரியுள்ளார்.

பின்னர் கிட்டத்தட்ட 29,000 டொலர் பணத்தை அந்த நபர் குறித்த வங்கியில் இருந்து கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சிறுது நேரங்களிலேயே குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டு தாய்லாந்திற்கு சென்றிருந்ததாகவும், அவரைப் பின்தொடர்ந்த தாய்லாந்து காவல்த்துறையினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைது செய்துள்ளதுடன், இன்று புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட கனேடியர் தொடர்பிலான உதவிகளை தாய்லாந்தில் உள்ள கனேடியத் தூதரக அதிகாரிகள் வழங்கிவருவதாகவும், இது தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கனடாவின் வெளிவிவகார பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post சிங்கப்பூர் வங்கி கொள்ளை: கனேடியர் தாய்லாந்தில் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோ தொடருந்துப்பாதை விரிவுபடுத்தும் திட்டம்: நகரசபை ஆதரவு

Posted: 14 Jul 2016 07:12 AM PDT

yu

yuஸ்காபரோ தொடருந்துப்பாதை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு நகரசபையின் ஆதரவு கிடைத்துள்ளது.

நேற்று நீண்ட நேரம் தொடர்ந்த நகரசபைக் கூட்டத்தில் ஸ்காபரோ தொடருந்துப்பாதை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு இரவு 7.30 மணியளவில் நடாத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 28 உறுப்பினர்களில் 15 பேர் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், திட்டத்தை முன்னெடுப்பதற்கான நகரசபையின் ஆதரவு கிடைத்துள்ளது.yu

தரிப்பிடம் ஒன்றை விரிவுபடுத்துவது உள்ளிட்ட சுமார் 3.1 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்டுள்ள இந்த பாரிய திட்டத்திற்கு நகரசபையில் நேற்றைய நாள் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், இந்த திட்டத்திற்கு இன்னொரு சாரார் எதிர்ப்புத் தொரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் குறித்த அந்த திட்டத்தை தவிர்த்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட 7 நிறுத்தங்களைக் கொண்ட LRT திட்த்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post ஸ்காபரோ தொடருந்துப்பாதை விரிவுபடுத்தும் திட்டம்: நகரசபை ஆதரவு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™