Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சாரக்கட்டு கழன்று விழுந்ததில் மூதாட்டி படுகாயம்

Posted: 08 May 2016 06:42 PM PDT

yu

yuகட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சாரக்கட்டு கழன்று விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோசமாக காயமடைந்த மூதாட்டி உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sherbourne வீதிக்கு அருகில் உள்ள Bloor வீதியின் வடக்காக இந்த கட்டுமானப் பணி நடைபெற்ற இடம் அமைந்துள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட்ட சாரக்கட்டே கழந்து விழுந்தாகவும் கூறப்படுகிறது.yu

இந்த சம்பவம் தொடர்பில் தொழிலாளர்கள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post சாரக்கட்டு கழன்று விழுந்ததில் மூதாட்டி படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபோர்ட் மக்மெர்றி காட்டுத் தீ: கட்டுப்படுத்த காலம் எடுக்கலாம்

Posted: 08 May 2016 01:35 PM PDT

u

uஃபோர்ட் மக்மெர்றியில் பலநாட்களாக பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த எடுக்கும் காலம் நீண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு பல மாதங்கள்கூட எடுக்கலாம் என்று அல்பேட்டா மாகாண தீயணைப்புத்துறையின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

எண்ணெய் வளம் நிறைந்த இந்தப் பகுதியில் நிலைமை பயங்கரமாகவும், கணிக்க முடியாமலும் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெரும் அசுரத் தனமாக' பரவிவருவதாக அவர் கூறியுள்ள இந்தத் தீ, கடந்த 24 மணி நேரத்தில் இரட்டிப்பு மடங்காக பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.u

அருகில் உள்ள சஸ்காச்சுவான் மாகாணத்திற்குள்ளும் இந்தத் தீ பரவக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சுமார் 3000 சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலம் வெப்ப பூமியாக மாறியுள்ளது.

இந்தக் காட்டுத் தீயினால் சேதமடைந்த குடியிருப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெரியவரவில்லை. ஆனால் குடியிருப்புகளின் இழப்புக்கான காப்பீடு கிட்டதட்ட 7 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

The post ஃபோர்ட் மக்மெர்றி காட்டுத் தீ: கட்டுப்படுத்த காலம் எடுக்கலாம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இடம்பெயர்ந்த மாணவர்களை வரவேற்க அல்பேட்டா பாடசாலைகள் தயார்

Posted: 08 May 2016 12:32 PM PDT

h

hஃபோர்ட் மக்மெர்றியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் காரணமாக இடம்பெயர்ந்த மாணவர்கள், இடம்பெயர்ந்து தற்போது இருக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என அல்பேட்டா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாநிலத்தின் நகர விவகார அமைச்சர் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடுகையில், ஃபோர்ட் மக்மெர்றி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களை வரவேற்பதற்கு அல்பேர்ட்டாவில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தயாராக இருக்கும் என கூறியுள்ளார்.h

இது தொடர்பில் பாடசாலைகள் சபைகளுடன் தாம் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மாணவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவம் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

காட்டுத்தீ காரணமாக ஃபோர்ட் மக்மெர்றி பகுதியில் இருந்து இதுவரை சுமார் 12,000 மாணவர்கள் தமது பெற்றேருடன் இடம்பெயர்ந்து, பல்வேறு இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

The post இடம்பெயர்ந்த மாணவர்களை வரவேற்க அல்பேட்டா பாடசாலைகள் தயார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™