Tamil Star |
- பிரம்டனில் தீ சம்பவம்: ஆறு வீடுகள் தீக்கிரை
- றிவர்சைட் பகுதியில் துப்பாக்கிச் சூடு
- மேலும் சிரிய அகதிகளை கனடாவினுள் அழைத்து வர நடவடிக்கை
பிரம்டனில் தீ சம்பவம்: ஆறு வீடுகள் தீக்கிரை Posted: 05 May 2016 08:14 PM PDT வடகிழக்கு பிரம்டனில் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ சம்பவம் ஒன்றில் ஆறு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பீல் பிராந்தி தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். McVean மற்றும் Countryside drives பகுதியில் பல வீடுகள் தீப்பற்றியுள்ளதாக தமக்கு அறிவிக்க்பபட்டு பிற்பகல் 3 மணியளவில் தாம் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். தாம் அங்கு சென்றிருந்த போது கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற வீடுகளில் தீ பற்றியிருந்ததைக் காணமுடிந்ததாகவும், தீயை அணைக்கும் நடவடிக்கையில் விரைந்து செயற்பட்ட வீரர்கள் 4.30 மணியளவில் தீயை தமது கட்டுப்பாட்டினுள் கெண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அங்கிருந்த தீயணைப்புக்கா நீர் விநியோகக் குழாய் செயலிழந்து காணப்பட்டமையால்,நீர் காவு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் ஒருவரும் காயமடையவில்லை என்றும், எனினும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் தீயணைப்புப் படையினர் கூறியுள்ளனர். The post பிரம்டனில் தீ சம்பவம்: ஆறு வீடுகள் தீக்கிரை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
றிவர்சைட் பகுதியில் துப்பாக்கிச் சூடு Posted: 05 May 2016 08:10 AM PDT றிவர்சைட் பகுதியில் இன்று அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டண்டாஸ் வீதி மற்றும் புரோட்வியூ அவினியூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதான முறைப்பாட்டை அடுத்து அந்த இடத்திற்கு சென்றிருந்தாக கவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு ஒன்றின் கதவுகளைத் துளைத்துக்கொண்டு துப்பாக்கிச் சன்னங்கள் வீட்டினுள் பாய்ந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த துப்பாக்கிச் சூட்டுச் சன்னங்களி்ல் இருந்து தாமும் தமது மகளும் தப்பிக்கொண்டுள்ளதாக அந்த வீட்டில் வசிக்கும் நபர் தெரிவித்துள்ளார். அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். The post றிவர்சைட் பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
மேலும் சிரிய அகதிகளை கனடாவினுள் அழைத்து வர நடவடிக்கை Posted: 05 May 2016 07:06 AM PDT சிரிய அகதிகளை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிக அளவிலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார். கனடாவின் லிபரல் அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாத இறுதிக்குள் 25,000 சிரிய அகதிகளை நாட்டுக்குள் அழைத்து வந்திருந்தது. எனினும் தனிநபர்களின் அனுசரனையுடன் மேலும் அகதிளை எடுப்பதை அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையிலேயே தற்போது தனியார் அனுசரணையில் கனடாவிற்க வருவதற்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சிரியர்களை அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலம் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு மேலதிக பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், அதற்கு இராணுவத்தின் உதவியினைப் பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுளளார். ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிக்காக குடிவரவுத் திணைக்கள பணியாளர்களும், ஓய்வுபெற்ற பணியாளர்களும் இந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The post மேலும் சிரிய அகதிகளை கனடாவினுள் அழைத்து வர நடவடிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |