Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அனைத்துலக சிரிய ஆதரவுக் குழுவில் இணைந்துகொண்டது கனடா

Posted: 18 May 2016 01:25 PM PDT

hj

hjஅனைத்துலக சிரிய ஆதரவுக் குழுவில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளதான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் டியோன் வெளியிட்டுள்ளார்.

வியன்னாவிற்கு சென்றிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர், பேச்சுவாரத்தைகள் மூலமான தீர்வுகள் மூலமே இந்த போருக்கு முடிவுகாண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் அமைதி நடவடிக்கைகள் அனைத்து உலகத்திற்குமே மிகவும் முக்கியமான தேவையாக உள்ள நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பினை நிச்சயம் கனடா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சிரிய போருக்கு தீர்வு காணும் நோக்குடன் போர் நிறுத்தம், சுதந்திரமான தேர்தல் உள்ளிட்ட மேலும் சில தீர்வு யோசனைகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்மொழிந்துள்ள யோசனைகளை கனடாவும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதன் போது அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நீண்டகாலமாக நிலவிவரும் உள்நாடடு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் இணைத் தலைமையில் 26 நாடுகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அனைத்துலக சிரிய ஆதரவுக் குழுவில் இணைந்துகொண்டது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

றெக்ஸ்டேல் பகுதியில் தீ சம்பவம்

Posted: 18 May 2016 12:19 PM PDT

po

poறெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காவல்த்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தீக்கிரையான பகுதியில் சுயநினைவற்ற நிலையில் குறித்த பெண் காணப்பட்டதுடன், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த காவல்த்துறை உத்தியோகத்தரும் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகாலை 1.40 மணியளவில் இந்த தீ பற்றிக்கொண்டதாகவும், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சுமார் 45 தீயணைப்பு படை வீரர்கள் கடுமையான போராட்டத்தின் பின்னர் தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.po

இந்த தீப் பரவல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒன்ராறியோ தீயணைப்பு விசாரணையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

The post றெக்ஸ்டேல் பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™