Cinema.tamil.com |
- அஜித்துடன் ஜோடி, ஸ்ரீதிவ்யாவின் ஆசை
- பிரபல மலையாள கதாசிரியர் தற்கொலை..!
- 23 வருடம் கழித்து டைரக்டர் பாசில் உடைத்த ரகசியம்..!
- சரத்குமாருடன் நடிக்கத் தயார்: விஷால் பேட்டி!
- மூன்றாம் உலகப்போர் 22ந் தேதி வெளிவருகிறது
- ஹீரோயின் ஆன சிவில் என்ஜினியர்
- சில சின்னத்திரை சீக்ரட்கள்....!
- பிச்சைக்காரனில் அழகிகளுடன் விஜய் ஆண்டனி குத்தாட்டம்
- நடன கலைஞர்களுக்கு பிரபுதேவா, ஷோபி 10 லட்சம் நிவாரணம்
- ராஜிவ் கொலையாளிகளை சந்தித்த இயக்குநர் சங்க நிர்வாகிகள்
- நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் நிறைவு
- பிப்.25-ல் சஞ்சய் தத் விடுதலையாகிறார்
- ரஜினியிடம் அடி வாங்குவதும் பெருமை தான்” - அக்ஷய் குமார்!
- சூப்பர்மேனுக்கு ரத்தம் வர வைத்த பேட்மேன்?
- ரேகாவை 'அம்மா' என்று அழைத்த ஐஸ்வர்யா
- அரசியல் - மதம் சார்ந்த கேள்விக்கு இடமில்லை - ஷாரூக்!
- 'மொகஞ்சதரோ' படத்தில் நடிப்பது பெருமை - ஹிருத்திக்
- சர்ச்சையை கிளப்புமா 'கி கா' முதல் பார்வை
- பொங்கல் படங்கள் வசூல், எதிர்பார்ப்பு என்ன ?
- அஞ்சலியைச் சுற்றும் அடுத்த காதல் வதந்தி ?
அஜித்துடன் ஜோடி, ஸ்ரீதிவ்யாவின் ஆசை Posted: ![]() தமிழ்த் திரையுலகத்தில் வரும் புதுமுகமாக இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் பழைய முகமாக இருந்தாலும் சரி அனைவருமே அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றால் அஜித் வருடத்திற்கு ஐந்து படத்தில் நடித்தால் கூட முடியாது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ... |
பிரபல மலையாள கதாசிரியர் தற்கொலை..! Posted: ![]() மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு பாலக்காட்டில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் என மூன்று ஏரியாவிலும் மாறி மாறி தனது ... |
23 வருடம் கழித்து டைரக்டர் பாசில் உடைத்த ரகசியம்..! Posted: ![]() போகிறபோக்கில் சில தகவல்களை சிலர் சொல்லிவிட்டு போவார்கள்.. ஆனால் அது மூடியிருக்கும் பல திரைகளை தன்னையறியாமல் விலக்கிவிட்டு போகும்.. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் மலையாள இயக்குனர் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது 23 வருடங்களுக்கு முன் தான் இயக்கிய 'மணிச்சித்திரதாழ்' படம் பற்றிய நினைவுகளை ... |
சரத்குமாருடன் நடிக்கத் தயார்: விஷால் பேட்டி! Posted: ![]() நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிக்களி ஆடிய விஷால், பொங்கலுக்கு கதகளி ஆடுகிறார். தேர்தல் வெற்றி திரையிலும் தொடருமா.? என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அவரின் சிறப்பு பேட்டி இதோ... கதகளியும் உங்களின் வழக்கமான ஆக்ஷன் படம் மாதிரி தெரியுதே? டிரைலர் பார்த்தா அப்படித் தோணும். ஆனால் இந்த கதை களமே வேற. சும்மா ஜாலியா ஊர் ... |
மூன்றாம் உலகப்போர் 22ந் தேதி வெளிவருகிறது Posted: ![]() தமிழில் தயாராகி உள்ள முழுமையான போர் படம் மூன்றாம் உலகப்போர். டி.ஆர்.எஸ்.ஸ்டூடியோ ட்ரீம் பேக்டரி என்ற புதிய நிறுவனம் சார்பில் டி.ஆர்.எஸ்.அன்பு மற்றும் வி.சுரேஷ் நாராயணன் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். சுகன் கார்த்தி இயக்கி உள்ளார், சுனில் குமார், அகிலா கிஷோர் நடித்துள்ளனர். வேத் சங்கர் இசை அமைத்துள்ளார், தேவா ... |
Posted: ![]() ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்து வரும் தேஜஸ்வினி ஒரு சிவில் என்ஜினியர். சிவில் என்ஜினியரிங் படித்து விட்டு இண்ட்டீரியர் டெக்கரேட் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபல சினிமா கம்பெனிகளுக்கு இண்டீரியர் வேலை செய்யும் போது சினிமா பிரபலங்கள் அறிமுகம். அதன் மூலம் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு ... |
சில சின்னத்திரை சீக்ரட்கள்....! Posted: ![]() *கணவரை பிரிந்து விட்ட ரம்மியமான தொகுப்பாளினி நடிப்பு, மாடலிங், காலண்டருக்கு கிளாமரான போஸ் என களம் இறங்கியிருப்பதில் அவரது குடும்பத்தினர் ரொம்பவே அப்செட். மீடியா ஏரியாவே வேண்டாம் வந்துவிடு என்று நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். *தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த சேனல் மீது வழக்கு தொடுக்க ... |
பிச்சைக்காரனில் அழகிகளுடன் விஜய் ஆண்டனி குத்தாட்டம் Posted: ![]() இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள படம் பிச்சைக்காரன். சசி இயக்கி உள்ளார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோசனுக்காக பிச்சைக்காரன் கிளாமர் சாங் என்ற ஒரு பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். "பாழாப்போன உலகத்துல காசு பணம் தான் பெருசு. அந்த காசு பணம் இல்லைன்னா காறித் துப்பும் ... |
நடன கலைஞர்களுக்கு பிரபுதேவா, ஷோபி 10 லட்சம் நிவாரணம் Posted: ![]() கடந்த மாதம் பெய்த பேய் மழை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரைப்பட நடன கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று சங்கத்தில் முறையிட்டு வந்தனர். நடன கலைஞர்களில் பெரும்பாலானோர் வளசரவாக்கம் பகுதியில் தான் குடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது கோரிக்கையை ஏற்று பிரபுதேவா குடும்பத்தின் சார்பிலும், ... |
ராஜிவ் கொலையாளிகளை சந்தித்த இயக்குநர் சங்க நிர்வாகிகள் Posted: ![]() தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனித நேய அடைப்படையில் கருணையோடு தமிழக அரசு விடுதலை செய்ய ... |
நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் நிறைவு Posted: ![]() தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சனை திட்டம், கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார். தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன், குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து ... |
பிப்.25-ல் சஞ்சய் தத் விடுதலையாகிறார் Posted: ![]() மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கில் சிறையில் இருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை அடிப்படையில் பிப்.25ம் தேதி ரிலீஸாக உள்ளார். இதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத். கடந்த, 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக, ஏ.கே.56 ரக ... |
ரஜினியிடம் அடி வாங்குவதும் பெருமை தான்” - அக்ஷய் குமார்! Posted: ![]() பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.ஓ' திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது நாம் எல்லோரும் அறிந்ததது தான். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி சாரோட எந்திரன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ... |
சூப்பர்மேனுக்கு ரத்தம் வர வைத்த பேட்மேன்? Posted: ![]() மேன் ஆப் ஸ்டீல் உடம்பு கொண்ட சூப்பர்மேனுக்கு ரத்தம் வந்ததா, பேட்மேன் அவருக்கு ரத்தம் வர வைத்தாரா? என்று ஆச்சர்யத்துடன் ரசிகர்களை துடிக்க வைத்துள்ளார் பேட்மேன்(வி)சூப்பர்மேன் படத்தின் இயக்குனர் ஜேக் ஸ்னைடர். சமீபத்தில் படத்தின் டீசர் ஒன்றை ரிலீஸ் செய்து பேட்மேன் மாஸ்க்கை கழட்டும் சூப்பர்மேன் காட்சியை டீசரில் ... |
ரேகாவை 'அம்மா' என்று அழைத்த ஐஸ்வர்யா Posted: ![]() உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில காலம் முழுக்க போட்ட ஐஸ்வர்யா ராய், கடந்தாண்டு வெளியான ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜாஸ்பா படத்தில் சிறப்பாக ... |
அரசியல் - மதம் சார்ந்த கேள்விக்கு இடமில்லை - ஷாரூக்! Posted: ![]() பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். சமீபத்தில், சகிப்புத்தன்மை தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் ஷாரூக்கான். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாரூக்கானிடம், பிரபல பாகிஸ்தானின் கசல் புகழ் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து அவரிடத்தில் கேட்டபோது... அதற்கு ... |
'மொகஞ்சதரோ' படத்தில் நடிப்பது பெருமை - ஹிருத்திக் Posted: ![]() இருதினங்களுக்கு முன்னர் ஹிருத்திக் ரோஷன் தனது பிறந்தநாளை பாலிவுட் திரைநட்சத்திரங்கள் உடன் சிறப்பாக கொண்டாடினார். தற்போது அவர் மொகஞ்சதரோ எனும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளதாவது... மொகஞ்சதரோ படத்தின் கதை அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நான் ... |
சர்ச்சையை கிளப்புமா 'கி கா' முதல் பார்வை Posted: ![]() 'சீனிகம், பா, ஷமிதாப்' படங்களுக்குப் பிறகு பால்கி இயக்கி வரும் படம் 'கி கா'. இளையராஜா இசையமைக்கம் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், கரீனா கபூர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அர்ஜுன் கபூர் கழுத்தில், கரீனா தாலி கட்டுவது போன்ற மோஷன் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. ... |
பொங்கல் படங்கள் வசூல், எதிர்பார்ப்பு என்ன ? Posted: ![]() தமிழ் சினிமா வெளியீடுகளில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று பொங்கல். பொங்கல் விடுமுறை என்பது எப்படியும் மூன்று நாட்களுக்கு இருக்கும். சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் சேர்ந்து வந்தால் எப்படியும் ஐந்து நாட்களுக்கு இருக்கும். சென்னையைத் தவிர பிற ஊர்களில் அந்த நாட்களில் தினமும் ஐந்து காட்சிகள் வரை புதுப் படங்களைத் திரையிடுவார்கள். ... |
அஞ்சலியைச் சுற்றும் அடுத்த காதல் வதந்தி ? Posted: ![]() அஞ்சலியையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தில் அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் அடைக்கலமானார். அதன்பின் அவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களும் சில மாதங்களுக்கு வெளியாகவில்லை. தமிழ்ப் படங்களில் ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |