Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்தியாவில் ரிக்‌ஷா ஓட்டும் ஜாக் ஸ்பேரோவின் நகல்

Posted: 23 Jul 2015 11:41 PM PDT

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படத்தின் கதாநாயகன் ஜாக் ஸ்பேரோ போன்ற உருவ அமைப்புடைய ஒருவரின் புகைப்படம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியைப் போன்ற உருவ அமைப்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது புகைப்படம் அண்மையில் வெளியானது. பிரபல சமூக வலைதளமான

எதிர்க்கட்சிகள் நான்காவது நாளாக போராட்டம்: பாராளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

Posted: 23 Jul 2015 11:15 PM PDT

லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் மற்றும் வியாபம் ஊழலை மையமாக வைத்து தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கியதால் வரும் திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று நான்காவது நாளாக அவை கூடியபோது இதே கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்

Posted: 23 Jul 2015 11:04 PM PDT

எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது. பெங்களூரில் உள்ள பிரபல கிளினிக்கில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு

கோதாவரி புஷ்கரம் அசம்பாவித சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடுதான் பொறுப்பு: ரோஜா பேட்டி

Posted: 23 Jul 2015 10:44 PM PDT

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தனது ஆதரவாளர்களுடன் நேற்று சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் சித்தார்த்ஜெயினை நேரில் சந்தித்து அவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்போது அவர் நகரி தொகுதி வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசினார்.

டெல்லியில் 15 சிறுமிகள் கொலை: கற்பழிப்பு குற்றவாளியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்

Posted: 23 Jul 2015 10:38 PM PDT

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி மாயமானாள். அவள் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் பிணமாக கிடந்தார். சிறுமியை யாரோ கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து ரவீந்தர்சிங் என்பவனை கைது செய்தனர். அவன் 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதுடன் இதுபோல் 15 சிறுமிகள், இளம்பெண்களை கற்பழித்து

சித்தூர் அருகே ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்திய 22 தமிழர்கள் கைது: 2 கார் - பைக் பறிமுதல்

Posted: 23 Jul 2015 10:36 PM PDT

சித்தூர் அருகே உள்ள பாகாலா கொண்டகாராபல்லி வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பாகாலா போலீசாருக்கு இன்று காலை 9 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்தது. சப்–இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் கொண்டகாராபல்லியில்

உம்மன்சாண்டி ஜீப் மீது செருப்பு வீச்சு: போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமா?

Posted: 23 Jul 2015 10:31 PM PDT

திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தில் நீச்சல் குள திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி, நிதி மந்திரி மாணி, முனிர் உள்பட பலர் வந்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற ஆசிரியை கைது

Posted: 23 Jul 2015 10:30 PM PDT

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்த சமீர் பிம்பில்(36) என்பவர் கடந்த 9-ம் தேதி தனது வீட்டு குளியறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற பால்கர் நகர போலீசார்,

வேனில் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டிரைவர்–உதவியாளர் கைது

Posted: 23 Jul 2015 10:25 PM PDT

மேற்கு டெல்லியில் ஒரு பள்ளியில் படிக்கும் சிறுமிகள் தினமும் வீட்டில் இருந்து வாடகை வேனில் சென்று வந்தனர். இந்த வேனில் டிரைவராக சரண்ஜீத் சிங் (32), உதவியாளராக குல்விந்தர் (30) என்பவனும் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் சிறுமிகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும் திரும்பும் போது வேனில் வைத்தே அவர்களிடம் பாலியல் குறும்பு

மோடியின் ஓராண்டு ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை: உத்தவ் தாக்கரே தாக்கு

Posted: 23 Jul 2015 10:16 PM PDT

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே, அவரது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:– முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியால் சீர்கேடு ஏற்பட்டது. 50 ஆண்டுகள் ஆனாலும் அதை சரி செய்ய முடியாது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இன்றைய அரசு நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது.

யாகூப் மேமனுக்கு 30–ந்தேதி தூக்கு: கருணை மனுவை நிராகரிக்க கவர்னருக்கு மராட்டிய அரசு சிபாரிசு

Posted: 23 Jul 2015 09:56 PM PDT

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி மக்கள் பலியானார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்பீல் மனுக்கள், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் வருகிற 30–ந்தேதி யாகூப் மேமனை தூக்கில் போட மும்பை தடா கோர்ட்டு நாள் குறித்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய அரசு யாகூப் மேமனை

முழங்காலிட வைத்து தண்டித்த ஆசிரியை: 10 வயது மாணவி பலி - பள்ளி சூறை

Posted: 23 Jul 2015 09:50 PM PDT

ஆந்திர மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை முழங்காலிட வைத்து தண்டித்ததால் 10 வயது மாணவி பரிதாபமாக பலியானதையடுத்து அந்தப் பள்ளியை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 97 லட்சம்

Posted: 23 Jul 2015 09:25 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 15 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து திருமலைக்கு சென்றனர்.

கர்நாடகத்தில் பாடம் கற்க வந்த சிறுத்தை வகுப்பறைக்குள் சிறைபிடிப்பு

Posted: 23 Jul 2015 09:00 PM PDT

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் கிராம மக்களை தாக்கிவிட்டு வகுப்பறைக்குள் புகுந்த சிறுத்தை சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூர் நகரில் உள்ள பிரபல மனமகிழ் மன்றத்தின் அருகே மூன்று

அவதூறு வழக்குக்கு எதிரான விசாரணையை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்: மத்திய அரசு கோரிக்கை

Posted: 23 Jul 2015 07:04 PM PDT

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசின் சார்பில் 5 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவதூறு தொடர்பான சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றை நீக்கவேண்டும் என்றும்

காஷ்மீரில் பலத்த மழை: ராணுவ மந்திரி கார்கில் பயணம் ரத்து

Posted: 23 Jul 2015 04:49 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்த இந்த மழையால் காஷ்மீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் சிறை வைப்பதை விட மரண தண்டனை விதிப்பது நல்லது: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 23 Jul 2015 03:37 PM PDT

எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிப்பதை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் நேற்று கடுமையாக விமர்சித்தது. அதுதொடர்பாக அந்த பெஞ்ச் நீதிபதிகள் கூறியதாவது:- நாம் எல்லாம் ஒரு நம்பிக்கையுடன்தான் வாழ்கிறோம். ஆனால், வாழ்நாள்

பாராளுமன்ற முடக்கத்தால் மத்திய அரசுக்கு ரூ.25 கோடி இழப்பு

Posted: 23 Jul 2015 02:49 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. லலித்மோடி விவகாரம் மற்றும் 'வியாபம்' ஊழல் போன்ற சர்ச்சைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 3-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கின.

இமாச்சல் பார்வதி ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 6 பேர் பலி, 29 பேர் மாயம்

Posted: 23 Jul 2015 09:22 AM PDT

பஞ்சாப்பிலிருந்து இமாச்சல பிரதேசத்திற்குச் சென்ற தனியார் பேருந்து, இமாச்சலத்தின் குல்லு மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையிலிருந்து சரிந்து, அருகிலுள்ள பார்வதி ஆற்றுக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான பேருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பேருந்தில் பயணித்த 51 பேரில், 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கூடுதல் கமிஷனர் ராகேஷ் கன்வர் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பச்சோரி டெரி தலைமை இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம்

Posted: 23 Jul 2015 08:24 AM PDT

பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, தன்னிடம் பணியாற்றிய ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனால் அவர் தனது பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அரசு சாரா எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TERI ) தலைமை இயக்குனராக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™