Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: சிம்மம்

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


Read more ...

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்:வெங்கைய நாயுடு

Posted:

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

நேபாள நாட்டையும் தாக்கிய ஹூட் ஹூட் புயல் : 29 பேர் பலி

Posted:

ஆந்திரா மற்றும் ஒடிசாவைத் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தாக்கிய ஹூட் ஹூட் புயல் நேபாளம் நாட்டிலும் தாக்கியதால், கடும் பனிப்புயல் ஏற்பட்டு 29 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

ஜெயலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரும் வழக்கு விசாரணையும் ஒத்திவைப்பு

Posted:

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யக் கோரும் மனு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
தத்து கூறியுள்ளார். 


Read more ...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஆளுனர் பாராட்டுவதா : கருணாநிதி கடும் கண்டனம்

Posted:

தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று கவர்னர் பாராட்டுவதா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

சகல தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்: அனந்தி சசிதரன்

Posted:


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளையும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

சென்னை மற்றும் புறநகர்களில் இயங்கிவந்த தானியங்கி ஆவின்பால் விற்பனை முடக்கம்!

Posted:

சென்னை மற்றும் புறநகர்களில் இதுநாள்வரை இயங்கிவந்த தானியங்கி ஆவின்பால் விற்பனை நிலையம் இன்று முதல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

குறிப்பிட்ட காலவரையறைக்குள் கறுப்புப் பணம் குறித்த தகவலை அளிக்கிறோம் : சுவிற்சர்லாந்து

Posted:

குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவலை அளிக்கிறோம் என்று சுவிற்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

குழந்தைக்கு தந்தை தாம்தானா என்று உறுதி பெற குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துக்கொள்வதில் தவறில்லை! : உச்ச ...

Posted:

குழந்தைக்கு தந்தை தாம்தானா என்பதை உறுதி செய்துகொள்ள குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துக்கொள்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று
தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டு இருந்த நிலையில் மனைவிக்கு குழந்தை உருவாகி அது பிறந்தும் உள்ளது.


Read more ...

சாம்சங்க் கேலக்ஸி நோட் 4 வீடியோ ரிவியூ

Posted:

சாம்சங்க் கேலக்ஸி நோட் வகை ஸ்மார்ட் தொலைபேசிகளின் வரிசையை விற்பனை செய்வதில் வெற்றி கண்டுள்ளது அந்நிறுவனம்.


Read more ...

ஜீவா பதுங்கியது ஏன்?

Posted:

ஒரு ஹீரோ தன் படம் ரிலீஸ் ஆகும் நாளில் சென்னையில் இருப்பதையே அதிகம் விரும்புவார்.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலுக்காக 20 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் குழுவை ஐ.தே.க நியமித்தது!

Posted:

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பிரச்சாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 20 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் குழுவை நியமித்துள்ளது. 


Read more ...

ஜெயலலிதா ஜாமீன் தம்மிடமும் கருத்துக் கேட்க வேண்டும்: சுப்ரமணியசாமி

Posted:

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுத் தொடர்பாக தம்மிடமும் உச்ச நீதிமன்றம் கருத்துக் கேட்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியசாமி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்!

Posted:

உள்நாடு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாளை முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மும்பை குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதி ஏழாவது முறையாக மாற்றம்!

Posted:

மும்பை குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதி ஏழாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

ஜிஎஸ்எல்வி -சி 26 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

Posted:

ஜிஎஸ்எல்வி -சி 26 ராக்கெட் இன்று அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.


Read more ...

டக்ளஸ் தேவானந்தா தென்னிந்தியச் சிறையில் இருக்க வேண்டியவர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தென்னிந்தியாவில் பாதுகாப்பான சிறையொன்றில் இருக்க வேண்டியவர். அவர், இலங்கை அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் தப்பி வருகின்றார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வைக்கோல் பட்டறை நாய்களிடம் மஹிந்த ராஜபக்ஷ கவனமாக இருக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாண மக்கள் வைக்கோல்களாகவும், அதனைப் பாதுகாக்கும் நாய்களாக மாகாண சபையும் இருப்பதனால், வைக்கோல் பட்டறை நாய்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கைதிகளுக்கு தொலைபேசி வசதி!

Posted:


இலங்கையில் சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கான திட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளதாக இலங்கைச் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரசிறி பல்லேகம தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களை எடுப்பார் கைப்பிள்ளை என ஜனாதிபதி எண்ணக்கூடாது: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பாகவும், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாகவும் உள்ளது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களோ எடுப்பார் கைப்பிள்ளையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எண்ணக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

டுவிட்டரில் எபோலா வியக்கவைக்கும் தரவுகள்

Posted:

உலகைத் தற்போது அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பத்திரிகைத் தலையங்கங்களையும் இணையத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன.


Read more ...

செவ்வாய்க் கிரகத்தின் சந்திரன் போபோஸ் இன் புகைப்படங்களை அனுப்பியது மங்கல்யான்

Posted:

நமது பூமியைப் போலன்றி செவ்வாய்க் கிரகத்துக்கு டெய்மோஸ் மற்றும் போபோஸ் என இரு நிலவுகள் உள்ளன.


Read more ...

ஈராக்கின் ஹீத் நகரைக் கைப்பற்றிய ISIS:கொபானே அருகே 18 முறை அமெரிக்க விமானத் தாக்குதல்!

Posted:

சிரியாவின் கொபானே நகருக்கு அண்மையில் ISIS இன் கடுமையான முற்றுகைப் போரை எதிர்கொண்டு வரும் குர்து படைகளுக்குத் துணையாக செவ்வாய் முதல் தொடர்ந்து இரு நாட்களுக்கு அமெரிக்க யுத்த விமானங்கள் 18 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளன என மத்திய கட்டளைத் துறை தெரிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீட்டு வழக்கில் பால்.எஸ்.நாரிம்மன் ஆஜராவதிலும் சிக்கல்?

Posted:

ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீட்டு வழக்கில் பால்.எஸ்.நாரிம்மன் ஆஜராவதிலும் சிக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று முதல்வரை சந்தித்தனர்!

Posted:

தொடர்ந்து நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னர் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இன்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர்.


Read more ...

கோவா அணியை வீழ்த்தியது சென்னையின் எஃசி : இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து தொடரில் சென்னைக்கு முதல் வெற்றி

Posted:

சென்னையின் எஃப்.சி - எஃப்.சி கோவா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதலவர் படத்தை வைக்க வேண்டும்:தமிழிசை

Posted:

தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

How Old Are You: கனவுகளுக்கு வயது தடையில்லை!

Posted:

கடவுள் தேசத்து திரைப்படங்கள் சிலவற்றை அண்மைய நாட்களில் தொடர்ச்சியாகப் பார்க்க முடித்தது. அவற்றில் த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ், ஹவ் ஓல்ட் ஆர் யூ உள்ளிட்ட மூன்று படங்களும் வேறு வேறு தளங்களில் பயணிக்கும் அழகான சினிமாக்கள். 


Read more ...

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜெயசிம்மா ஊடகங்களுக்கு தகவல் அளிக்கத் தடை விதிக்க வேண்டும் : அதிமுக

Posted:

ஜெயலிதாவின் உடல்நிலைக் குறித்து பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை அதிகாரி, ஜெயலலிதாவின் உடல்நிலைக் குறித்து அவ்வப்போது ஊடகங்களுக்கு தகவல் தருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி பாராளுமன்றத்தினை வலுவுள்ளதாக்க வேண்டும்: அத்துரலிய ரத்ன தேரர்

Posted:


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் பிரதமர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 


Read more ...

வெளிநாட்டவர்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை: ருவான் வணிகசூரிய

Posted:


வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பணிப்பாளருமான ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™