Cinema.tamil.com |
- பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையில் அக் ஷய் குமார்!
- திரைப்படமாகிறது என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு!
- அமீர்கானிடம் அனுஷ்காவுக்கு பிடிக்காதது இது தானாம்
- மதம் மாறிய மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல்
- காஜல் அகர்வாலுக்கு அறுவை சிகிச்சை!
- கவர்ச்சி கோதாவில் கீர்த்திசுரேஷ்!
- மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற, ஜோக்கர்!
- “திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல”; நடிகர் சீனிவாசன்..!
- நடிகர்சங்க முடிவை மீற தயாராகும் பிருத்விராஜ்..!
- ஹீரோவானார் அனந்த் ராம்
- 32 வருடங்களுக்கு பிறகும் அதே கெத்து: அர்ஜுனின் 150வது படம் இன்று ரிலீஸ்
- தரமணி தங்க மீன்கள் அல்ல: ராம்
- அங்கீகாரத்திற்காக 12 வருடம் போராடியிருக்கிறேன்: பிரேம்
- அப்துல் கலாம் மணி மண்டபத்தில் தயாரிப்பாளரின் ஓவியம்
- நடிகை கடத்தல் விவகாரம்: பாடகியிடம் போலீஸ் விசாரணை
- பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு விவசாய நிகழ்ச்சி
- ஹேப்பி பர்த்டே ட்டூ துல்கர் சல்மான்..!
- கருத்து படங்களில் நடிக்கவே ஆசை : புமி பட்னேகர்
- பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம் யார் இவர்கள்?
- பெப்சிக்கு கிடுக்கிபிடி போட்டது தயாரிப்பாளர் சங்கம்: புதிய விதிமுறைகளை அறிவித்தது
பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையில் அக் ஷய் குமார்! Posted: ரஜினியுடன், 2.0 படத்தில், வில்லனாக நடித்து வருபவர் இந்தி நடிகர், அக் ஷய்குமார். இவர், பிரதமர் நரேந்திர மோடியின், 'தூய்மை இந்தியா' திட்டத்தை, ஆதரிக்கும் வகையில், தற்போது, இந்தியில், டாய்லெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில், ஒரு படம் உருவாகிறது; அப்படத்தில், பிரதமர் நரேந்திர ... |
திரைப்படமாகிறது என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு! Posted: டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் இயக்குனர், ராம்கோபால் வர்மா, கடைசியாக, இந்தியில், அமிதாப்பச்சனை வைத்து, சர்க்கார் - 3 என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து, மறைந்த நடிகர், என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார். அப்படத்தில், என்.டி.ஆரின் மகன், பாலகிருஷ்ணா, கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு ... |
அமீர்கானிடம் அனுஷ்காவுக்கு பிடிக்காதது இது தானாம் Posted: நடிகை அனுஷ்கா சர்மா நடித்துள்ள ஜப் ஹாரி மெட் சீஜல் படம் வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார் அனுஷ்கா. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அனுஷ்கா, தனக்கு அமீர்கானிடம் பிடித்த விஷயம் என்ன, பிடிக்காத விஷயம் என்பது பற்றி கூறினார். அவர் ... |
மதம் மாறிய மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல் Posted: புத்த மதத்திற்கு மாறிய மகள் அக்ஷரா ஹாசனுக்கு, நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா. இவர் தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. ஆனால் அக்ஷரா அதனை ... |
காஜல் அகர்வாலுக்கு அறுவை சிகிச்சை! Posted: காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க வந்து, பத்தாண்டுகளாகி விட்டது. தற்போது, 32 வயதாகும் அவரது முகத்திலும், உடம்பிலும் லைட்டாக முதிர்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது. ஆனால், சினிமாவில் இன்னும் நீண்ட காலம் பயணிக்க விரும்பும் காஜல்அகர்வால், முதிர்ச்சியை காரணம் காட்டி, தன்னை ஓரங்கட்டி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, ... |
கவர்ச்சி கோதாவில் கீர்த்திசுரேஷ்! Posted: தமிழில், விஜயுடன் நடித்த, பைரவா படம் தன்னை உச்ச நடிகையாக்கும் என்று, எதிர்பார்த்த கீர்த்தி சுரேஷ்க்கு அப்படம் தோல்வியடைந்து விட்டதால், தற்போது, தெலுங்கு சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அத்துடன், அங்குள்ள ராகுல் பிரீத் சிங் உட்பட, சில நடிகைகள் கவர்ச்சியை முன் வைத்தே மார்க்கெட்டில் நிற்பதால், தமிழில் அடக்கி வாசிக்கும் ... |
மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற, ஜோக்கர்! Posted: ராஜூ முருகன் இயக்கிய படம், ஜோக்கர்; தேசிய விருது பெற்ற இப்படம், ஆகஸ்ட், 10லிருந்து, 22ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடக்கும், இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும், எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி, சுல்தான், ஏ தில் ஹை மற்றும் பிங்க் போன்ற இந்தி படங்களும், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. |
“திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல”; நடிகர் சீனிவாசன்..! Posted: மலையாள நடிகர் திலீப் கைதானதும் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துபோனதென்னவோ உண்மை தான். அதனால் தான் மம்முட்டி, மோகன்லால் உட்பட சீனியர் நடிகர்கள் கூட, நடிகர் சங்க பொதுக்குழு என்கிற பெயரில் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நின்றுவிட்டார்கள்.. திலீப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.. ஒருசில ... |
நடிகர்சங்க முடிவை மீற தயாராகும் பிருத்விராஜ்..! Posted: நடிகை கடத்தல் விவகாரத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, பூதாகரமாக்கியத்தில் கேரள மீடியாக்களும் நிறைய பங்கு உண்டு.. ஆனால் மீடியாக்களின் இந்த அதிரடியை மலையாள நடிகர் சங்கம் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.. குறிப்பாக திலீப் பக்கம் தவறு இல்லாதது போல கருத்து கோரிய நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட்டை அதிரடி கேள்விகளால் தடுமாற ... |
Posted: சமீபத்தில் வெளியான மீசையமுறுக்கு படத்தில் ஹிப்ஆப் தமிழா ஆதியின் தம்பியாக நடித்திருந்தவர் அனந்த் ராம். அண்ணனுக்காக அடிதடியில் இறங்கும் ஆக்ஷன் தம்பியாக நடித்திருந்தார். இப்போது அனந்த் ராமுக்கு தம்பிக்கள் நிறையபேர் ரசிகர்களாகியிருக்கிறார்கள், இது ஒரு புறம் இருக்க ஒரு தெலுங்கு படத்திலும் ஹீரோவாக நடிக்க ... |
32 வருடங்களுக்கு பிறகும் அதே கெத்து: அர்ஜுனின் 150வது படம் இன்று ரிலீஸ் Posted: ஆக்ஷன் கிங் அஜீத்து மற்ற ஹீரோக்களிலிருந்து 3 விதங்களில் வித்தியாசமானவர். ஒன்று அவர் தேசப்பற்று மிக்கவர். தேசப்பற்றை வலியுறுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். மற்றொன்று ஆக்ஷன் ஹீரோ. இன்றைக்கு இருக்கிற நவீன வசதிகள் இல்லாத காலத்திலேயே சண்டை காட்சிகளில் பிரமிப்பு காட்டியவர். அடுத்து அவர் அதிகம் நடித்திருப்பது போலீஸ் ... |
Posted: தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி. ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்த படம் இப்போது வருகிற ஆகஸ்ட் 11ந் தேதி வெளிவருகிறது. வசந்த்ரவி என்ற புதுமுகத்துடன் ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சார்பில் சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ... |
அங்கீகாரத்திற்காக 12 வருடம் போராடியிருக்கிறேன்: பிரேம் Posted: சினிமாவில் நல்ல நடிகன் என்கிற ஒரு அங்கீகாரத்திற்காக 12 வருடங்கள் போராடியிருக்கிறேன் என்கிறார் பிரேம். விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய்சேதுபதிக்கு அடுத்ததாக சைமன் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிப்புதான் என் உலகம். சினிமாதான் என் லட்சியம். சினிமா ... |
அப்துல் கலாம் மணி மண்டபத்தில் தயாரிப்பாளரின் ஓவியம் Posted: தமிழில் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ராமேஸ்வரம் பேய்கருப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்தில் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த 95 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவரது சிலிக்கான் சிலையையும் ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்துள்ளார். இந்த பணியில் 15 பேர் கொண்ட ... |
நடிகை கடத்தல் விவகாரம்: பாடகியிடம் போலீஸ் விசாரணை Posted: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில், நடிகையின் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பலரும் போலீஸ் விசாரணை ... |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு விவசாய நிகழ்ச்சி Posted: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு தமிழ் சேனல்களில் நம்பர் ஒண் நிகழ்ச்சி. தினமும் 2 கோடி பேரும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக சொல்கிறார்கள். 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் ... |
ஹேப்பி பர்த்டே ட்டூ துல்கர் சல்மான்..! Posted: மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட துல்கர்சல்மானுக்கு இன்று பிறந்தநாள்.. மலையாளத்தில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இன்று அவருக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ உருவாகும் விதமாக இந்த ஐந்து ... |
கருத்து படங்களில் நடிக்கவே ஆசை : புமி பட்னேகர் Posted: நடிகர் அக்ஷை குமார், நடிகை புமி பட்ஜேகர் இணைந்து நடித்துள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இதனால் இப்படத்தில் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் புமி. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய புமி, தான் கருத்து படங்களிலேயே தொடர்ந்து நடிக்க ... |
பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம் யார் இவர்கள்? Posted: வழக்கு எண் 18/9 படத்திற்கு பிறகு பாலாஜி சக்திவேல் ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கினார். இதனை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்தார். சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதையும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் லிங்குசாமி. ரா ரா ராஜசேகர் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு அடுத்த படத்தை இயக்க ... |
பெப்சிக்கு கிடுக்கிபிடி போட்டது தயாரிப்பாளர் சங்கம்: புதிய விதிமுறைகளை அறிவித்தது Posted: பெப்சி தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஆங்காங்கே படப்பிடிப்புகளுக்கு தடை செய்தது தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோபத்தை தூண்டியது. இதனால் இனி தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதற்கு பதில் அளித்த பெப்சி எங்கள் சம்பளத்தை குறைக்க நினைக்கிறவர்கள் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-07-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |