Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் தாங்க...! - ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு

Posted:

அரசியலில் இறங்குவது குறித்து தனக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ஆர்வம் குறித்து, ரசிகர்களை தொடர்ச்சியாக சந்திக்கத் துவங்கி இருக்கும் நடிகர் ரஜினி, தமிழகத்தின் தேவைகள் குறித்து நிறைய விஷயங்களை சேகரித்து தருமாறு, தன்னை சந்தித்த ரசிகர்களிடம் கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ரசிகர்களை ...

வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த சச்சின்

Posted:

கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின், இப்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். சச்சினின் வாழ்க்கை, 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகி உள்ளது. இதில் சச்சின் ரோலில் அவரே நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் ...

102 நாட்-அவுட்-ல் அசத்தும் அமிதாப்-ரிஷி கபூர்

Posted:

குஜராத்தி மொழியில் வெளியான படம் 102 நாட் அவுட். இந்தப்படத்தை தழுவி பாலிவுட்டில் 102 நாட் அவுட் படம் உருவாகிறது. இதில் 102 வயது முதியவராக அமிதாப் நடிக்க, அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்க இருக்கிறார். 102 வயதான அப்பாவுக்கும், 75 வயதான மகனுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. உமேஷ் சுக்லா இயக்குகிறார்.
இப்படத்தில் ...

சீதா வேடத்தில் நடிக்க விரும்பும் ஆலியா பட்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவர், அமிஷ் திரிபாதி எழுதியுள்ள சீதா - வாரியர் ஆப் மிதிலா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆலியா பட், தனக்கு சீதா வேடத்தில் நடிக்க ஆசை என்றார்.
இதுகுறித்து ஆலியா பட் மேலும் கூறியிருப்பதாவது... "இந்த புத்தகத்தை யாராவது படமாக ...

குரோர்பதி சீசன்-9 : மாமனாருக்கு பதில் மருமகள்.?

Posted:

வட இந்திய சேனல்களில் பிரபலமான நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிக் பி-ஆன அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இதே நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் அந்தந்த மொழி ஸ்டார்கள் நடத்தினார்கள். இருந்தாலும் அமிதாப் நடத்திய அளவுக்கு பெரிய அளவில் ரீச்சாகவில்லை. தற்போது குரோர்பதி சீசன்-9 நிகழ்ச்சி உருவாக ...

ஆகஸ்ட் முதல் வீரே தி வெட்டிங் ஆரம்பம்

Posted:

ரேகா கபூர் தயாரிப்பில், சாஷாங்கா கோஷ் இயக்கத்தில் கரீனா கபூர், சோனம் கபூர் மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கும் படம் வீரே தி வெட்டிங். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதமே ஆரம்பமாக வேண்டியது. ஆனால் கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தது, குழந்தை பிறந்தது போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ...

படத்தையை கடத்திவிட்டார் - கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர்

Posted:

அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை கங்கனா ரணாவத். சிம்ரன் பட கதையை தனதாக்கி சொந்தம் கொண்டாடுகிறார் என்று கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி குற்றம் சாட்டி வரும் வேளையில், அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் கேத்தன் மேத்தா, கங்கனா மீது கதை திருட்டு புகார் கூறியுள்ளார்.
கங்கனாவும், கேத்தன் மேத்தா இணைந்து ராணி லக்ஷ்மி ...

ரஜினியின் அரசியல் போர் பேச்சு...! - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்.?

Posted:

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில், அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம். நான் பச்சைத்தமிழன் என்று சஸ்பென்ஸ் வைத்து பேச்சை முடித்தார். ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ...

'பாகுபலி 2'-வில் பாட மறுத்த பாலிவுட் பாட(கி)கர்

Posted:

'பாகுபலி 2' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்று வருகிறது என்பதைப் பற்றி இதற்குமேல் சொல்லித்தான் மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதில்லை. 'பாகுபலி' படத்தின் முதல் பாகமும் பெரிய வெற்றியைப் பெற்று 700 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது. இரண்டு பாகங்களிலும் பல விஷயங்கள் பிரமாதமாகப் பேசப்பட்டன. அவற்றில் படத்தின் இசையும் ...

கன்னடர்களை வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா

Posted:

டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நேற்று கன்னடர்களை வம்புக்கு இழுத்து சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மா இயக்கி கடந்த வாரம் வெளிவந்த 'சர்க்கார் 3' படம் தோல்வியடைந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கிலிருந்து ...

ரூ.1500 கோடியைக் கடந்தது பாகுபலி 2 வசூல்

Posted:

பாகுபலி 2 படம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்தது. படம் வெளியான நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல புதுப்புது சாதனைகளை இந்தப் படம் படைத்துக் கொண்டே வந்தது.
நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார நாட்களில் இப்படம் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக ...

ராம்சரண் படத்தில் வயதான வேடத்தில் பிரகாஷ்ராஜ்

Posted:

தனது தந்தை சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ராம்சரண் தேஜா, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் இரவு பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம் ராம்சரண். இப்படத்தில் அவருடன் சமந்தா, அனுபமா ...

கிளாமர் ஹீரோயினாக விரும்பவில்லை - ரெஜினா

Posted:

சரவணன் இருக்க பயமேன் படத்தைத் தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுரளிராஜனும், ராஜதந்திரம்-2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. இதுவரை கிளாமர் காட்சிகளில் அடக்கி வாசித்த ரெஜினா, சரவணன் இருக்க பயமேன் படத்தில் ஓரளவு தாராளம் காட்டி நடித்திருந்தார். அதோடு, அடுத்தபடியாக தமிழில் முன்னணி நடிகையாவதே எனது நோக்கம் ...

கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் பாலகிருஷ்ணா!

Posted:

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 100வது படம் கெளதமிபுத்ரா சட்டகர்னி. கிரீஷ் இயக்கிய அந்த படத்தைத் தொடர்ந்து பூரி ஜகன்னாத் இயக்கும் 101-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்ததை அடுத்து தற்போது பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்காக ...

மலேசியாவில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்

Posted:

பல வருடங்களாக ரசிகர்களை சந்திக்காத ரஜினி, கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தார். இந்த நிலையில், ரெமோ படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ ...

இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் - ராய்லட்சுமி

Posted:

சுமார் 12 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார் ராய்லட்சுமி. இன்னும் முன்னணி நடிகை பட்டியலில் சேரவில்லை என்றாலும், தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை நடித்து விட்டார். சிரஞ்சீவியின் கைதி எண் 150 மற்றும் லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடினர். இந்தியில் அவர் நாயகியாக நடித்த ஜூலி-2 ...

இத்தனை படங்களில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை - ஸ்ரீதிவ்யா

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜீவா, காக்கி சட்டை, வெள்ளைக்காரதுரை, இஞ்சி இடுப்பழகி, பென்சில், மருது உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, இன்று திரைக்கு வந்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். நடித்த சில படங்களின் தோல்வி காரணமாக ...

ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்: நண்பர் ராஜ்பகதூர் சொல்கிறார்.

Posted:

ரஜினி தற்போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். முதல் நாள் அவர்களிடையே பேசிய ரஜினி நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. அப்படி வந்தால் இதய சுத்தியுடன் இருப்பேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவங்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார். இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ரஜினி ...

ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு: பிரதமருக்கு விஷால் கடிதம்

Posted:

மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி வரி கொண்டு வர இருக்கிறது. இந்த வரிவிதிப்பு வரும்போது தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வரிச்சலுகை கிடைக்காது, இதனால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றம் தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ...

குழந்தையை கடத்திச் சென்று விட்டார்: வனிதா மீது மாஜி கணவர் புகார்

Posted:

நடிகை வனிதா எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். சொந்த அப்பா-அம்மாவை பற்றிய பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர். வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™