Cinema.tamil.com |
- சங்கராபரணம் புகழ் கே.விஸ்வநாத்-க்கு தாதா சாகேப் பால்கே விருது
- இது தெர்மோகோல் படம் கிடையாது - கலாய்த்த கமல்
- மகனின் மதுரை வீரன் படத்தை துவக்கி வைத்த விஜயகாந்த்
- அடுத்தடுத்து இரண்டு படங்கள் தயாரிக்கும் அட்லீ
- 'ஸ்பைடர்' கிளைமாக்ஸ் மாற்றம் ?
- இயக்குனர் தனுஷூக்குக் ஷங்கர் பாராட்டு
- 'விஸ்வரூபம் 2' - கமல்ஹாசன் மீட்டதன் காரணம் ?
- 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மம்முட்டி-பிரியதர்ஷன்..!
- இனி 2 வருடங்களுக்கு படம் ஒப்புக்கொள்ள மாட்டார் மோகன்லால்..!
- மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டார் பாலிவுட் சர்ச்சை நடிகர்
- ஜெமினி கணேசன் ரோலில் துல்கர் சல்மான்..?
- கல்பனா சாவ்லா வேடத்தில் பிரியங்கா நடிப்பது உறுதியானது
- மூன்று நாளில் ரூ.5.52 கோடி மட்டுமே வசூலித்த நூர்
- ஸ்ருதிஹாசனின் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
- வில்லன் கலந்த ஓரினச்சேர்க்கையாளர் ரோலில் கோவிந்தா
- இஷா தியோல் கர்ப்பம் - பாட்டியாகும் ஹேமமாலினி
- வில்லனை வதம் செய்யும் கர்ஜனை த்ரிஷா
- சீரியல்களில் நடிகைகள்தான் ஹீரோக்கள் - திவ்யா
- தமன்னாவின் சரித்திர கனவை நனவாக்கிய ராஜமவுலி
- சாயிஷா, அடுத்த சிம்ரன்?, ஓவராகப் புகழும் கோலிவுட்
சங்கராபரணம் புகழ் கே.விஸ்வநாத்-க்கு தாதா சாகேப் பால்கே விருது Posted: பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1930-ம் ஆண்டு, பிப்., 19-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் காசிநாதுனி விஸ்வநாத் எனும் கே.விஸ்வநாத். சினிமாவில் சவுண்ட் டிசைனராக அறிமுகமாகி, இயக்குநர், நடிகர் என் பன்முகம் காட்டியவர். இவர் இயக்கிய சங்கராபரணம், ... |
இது தெர்மோகோல் படம் கிடையாது - கலாய்த்த கமல் Posted: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தெறி எனும் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். இயக்கம் தவிர, தற்போது சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள அட்லீ, தனது முதல் தயாரிப்பாக "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஜீவா, ... |
மகனின் மதுரை வீரன் படத்தை துவக்கி வைத்த விஜயகாந்த் Posted: நடிகர் விஜயகாந்த், தனது மகன் நடிக்கும் மதுரை வீரன் படத்தின் படப்பிடிப்பு முன்னின்று துவக்கி வைத்தார். நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் முதல்படமே தோல்வியை தழுவியது. அதனால் அடுத்தடுத்து நல்ல கதைக்களுக்காக காத்திருந்தவர், ... |
அடுத்தடுத்து இரண்டு படங்கள் தயாரிக்கும் அட்லீ Posted: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்து விஜய்யை வைத்து தெறி எனும் ஹிட் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே அவர் சொந்தமாக "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் ... |
'ஸ்பைடர்' கிளைமாக்ஸ் மாற்றம் ? Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் ஜுன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் படம் ஜுன் மாதம் திட்டமிட்டபடி வெளிவராது என்றும் படத்தின் வெளியீடு ஜுலை அல்லது ஆகஸ்ட் ... |
இயக்குனர் தனுஷூக்குக் ஷங்கர் பாராட்டு Posted: இயக்குனராக 'ப.பாண்டி' படம் மூலம் அறிமுகமான தனுஷுக்கு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். வழக்கமான சினிமாவாக இல்லாமல் மாறுபட்ட படமாக 'ப.பாண்டி' படம் அமைந்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என தொடர்ந்து பாராட்டி வர, அனைவருக்கும் ... |
'விஸ்வரூபம் 2' - கமல்ஹாசன் மீட்டதன் காரணம் ? Posted: 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு பல தடங்கல்களுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்றது. முதல் பாகத்தை படமாக்கும் போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் கிட்டத்தட்ட முடித்ததாக கமல் தெரிவித்திருந்தார். அடுத்த ஒரு ஆண்டுக்குள் இரண்டாம் பாகம் வெளிவந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'விஸ்வரூபம் 2' ... |
18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மம்முட்டி-பிரியதர்ஷன்..! Posted: ஆச்சர்யம் தான்.. கடந்த 35 வருடங்களில் மோகன்லாலை வைத்து 44 படங்களை இயக்கியுள்ள மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், இத்தனை வருடங்களில் மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியது வெறும் நான்கே படங்கள் மட்டும் தான். உடனே பிரியதர்ஷனுக்கும் மம்முட்டிக்கும் இடையே ஏதாவது கருத்து மோதல் இருக்குமோ என நினைத்துவிட வேண்டாம். மோகன்லாலிடம் எந்த ... |
இனி 2 வருடங்களுக்கு படம் ஒப்புக்கொள்ள மாட்டார் மோகன்லால்..! Posted: மோகன்லாலுக்கு கடந்த 2015 செப்டம்பர் முதல் 2016 ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட ஒரு படம் கூட வெளியாகவே இல்லை.. அதே சமயம் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இப்போதுவரை மோகன்லால் நடித்த 6 படங்கள் ரிலீசாகிவிட்டன.. இப்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இதை தொடர்ந்து பிருத்விராஜ் இயக்கத்தில் ... |
மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டார் பாலிவுட் சர்ச்சை நடிகர் Posted: கடந்த மூன்று நாட்களாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் பாலிவுட் நடிகர் என சொல்லிக்கொள்ளும் நடிகர் கமால் ரஷீத் கான். தி கம்ப்ளீட் ஆக்டர் என புகழப்படும் மலையாள நடிகர் மோகன்லாலை ஜோக்கர், சோட்டா பீம் என தரக்குறைவான வார்த்தைகளில் கன்னாபின்னாவென விமர்சித்து தொடர்ந்து கிட்டத்தட்ட 25 ட்வீட்டுகள் பக்கம் பதிவிட்டிருந்தார். இவற்றின் ... |
ஜெமினி கணேசன் ரோலில் துல்கர் சல்மான்..? Posted: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநதி' என்ற பெயரிலேயே படமாக்கவுள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ... |
கல்பனா சாவ்லா வேடத்தில் பிரியங்கா நடிப்பது உறுதியானது Posted: பிரபலமாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் பாலிவுட்டில் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் ஏற்கனவே தோனி, அசார், சச்சின், மாவீரர் போகத்... உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்று படங்களை தொடர்ந்து, அடுத்தப்படியாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்த வீரமங்கை மறைந்த கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. ... |
மூன்று நாளில் ரூ.5.52 கோடி மட்டுமே வசூலித்த நூர் Posted: சுனில் சிப்பி இயக்கத்தில், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெள்ளியன்று வெளியான படம் ‛நூர். இப்படத்தில், சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். சுமார் 22 கோடி பட்ஜெட்டில் உருவான நூர் படம் 1450 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான முதல்நாளில் வெறும் ரூ.1.54 கோடி தான் வசூலித்தது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் ... |
ஸ்ருதிஹாசனின் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன். தற்போது ராஜ்குமார் ராவ் உடன் ‛பேகன் ஹோகி தெறி' என்ற படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் குலாதியும் நடிக்கிறார். அஜய் கே பன்னாலால் இயக்க அமுல் விகாஷ் மோகன் தயாரிக்கிறார். ரொமான்ட்டிக் கலந்த காமெடி ... |
வில்லன் கலந்த ஓரினச்சேர்க்கையாளர் ரோலில் கோவிந்தா Posted: ஆ கயா ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் கோவிந்தா, சில படங்களில் நடிக்க கதை கேட்டார். அதில், ஒரு புதிய இயக்குநரின் படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடிக்க சம்மதம் சொல்லி, படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார். அறிமுக இயக்குநர் சத்யந்திர ராஜ் இயக்கும் படத்தை சர்வான் சர்மா மற்றும் ஜெயந்த் கோஷ் தயாரிக்கிறார்கள். இந்தப்படத்தில் ... |
இஷா தியோல் கர்ப்பம் - பாட்டியாகும் ஹேமமாலினி Posted: நட்சத்திர தம்பதியர்களான தர்மேந்திரா - ஹேமமாலினியின் மகள் இஷா தியோல். நடிகையும் கூட, பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட மணிரத்னம் இயக்கிய ‛ஆயுத எழுத்து' படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார். இவருக்கு, கடந்த 2012-ம் ஆண்டு தொழிலதிபர் பரத் தக்தானியுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ... |
வில்லனை வதம் செய்யும் கர்ஜனை த்ரிஷா Posted: பூ ஒன்று புயலானது போன்று கர்ஜனை படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை பழிவாங்கும் வேடத்தில் நடித்துள்ள த்ரிஷா, முதன் முறையாக இந்த படத்திற்காக ரோப்பில் தொங்கியபடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அந்த வகையில், தற்போது அப்படத்தின் கிளைமாக்ஸ் ... |
சீரியல்களில் நடிகைகள்தான் ஹீரோக்கள் - திவ்யா Posted: சினிமாவில் நடிகர்கள் தான் ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் சீரியல்களில் நடிகைகள் தான் ஹீரோக்களாக இருக்கிறோம். நாங்கள் தான் கதையை வழி நடத்தி செல்கிறோம். அந்த வகையில், சினிமாவில் ஹீரோக்கள் ஆல் இன் ஆல் என்றால், சீரியல்களில் நடிகைகளாகிய நாங்கள் தான் ஆல் இன் ஆல் என்கிறார் சுமங்கலி சீரியல் நாயகி திவ்யா. தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த ... |
தமன்னாவின் சரித்திர கனவை நனவாக்கிய ராஜமவுலி Posted: தமன்னா என்றாலே கவர்ச்சி நாயகி என்கிற கண்ணோட்டத்திலேயே எல்லா டைரக்டர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தநிலையில், பாகுபலியை இயக்கிய ராஜமவுலி மட்டும்தான் அவரை ஒரு புரட்சி பெண்ணாக நடிக்க வைத்தார். அதனால் தமன்னாவின் சினிமா கேரியரில் அந்த படத்தில் நடித்துள்ள அவந்திகா கேரக்டர் மறக்க முடியாததாகி விட்டது. அந்தவகையில், ... |
சாயிஷா, அடுத்த சிம்ரன்?, ஓவராகப் புகழும் கோலிவுட் Posted: தமிழ்த் திரையுலகத்தில் சிம்ரனின் இடத்தை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேறு யாராலும் நிரப்ப முடியவில்ல என்பதே உண்மை. சிம்ரன் அளவிற்கு நடிக்கவும், நடனம் ஆடவும் தெரிந்த ஹீரோயின்கள் யாரும் வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம் தான். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் சிம்ரனுக்கு நிகர் ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-04-24. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |