Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களுக்கு பராமரிப்பு செலவிற்காக மாதம் பணம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ...

சேர்ந்து நடிக்க கதை கேட்கும் சூர்யா, கார்த்தி

Posted:

நட்சத்திரக் குடும்பம் என்று இப்போதைக்குச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சூர்யாவின் குடும்பத்தைச் சொல்லலாம். அவரது குடும்பத்தில்தான் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிகர்களாக இருக்கிறார்கள், மருமகள் ஜோதிகா நடிகையாக இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் சிலர் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என ...

நோட்டீஸ் அனுப்பும் முன் இளையராஜா என்னிடம் பேசியிருக்கலாம் - எஸ்பிபி., வேதனை

Posted:

காப்பிரைட்ஸ் பிரச்னை தொடர்பாக இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பாட இருந்த நேரத்தில் இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸால், இனி இளையராஜா பாடல்களை பாட போவது இல்லை என அறிவித்தார் எஸ்பிபி. இருவரையும் சமாதானம் செய்ய பலர் முயற்சித்தனர். இதை ...

கின்னஸ் சாதனை படைக்க தயாராகும் 'புலி முருகன்' 3டி..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்'. இந்தப்படம் கேரளாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சில சாதனைகளை முறியடித்ததோடு, சில புதிய சாதனைகளை படைக்கவும் செய்தது. இந்தப்படத்தின் வெற்றியை இத்துடன் நிறுத்திவிடாமல் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல ...

பிருத்விராஜ் பட இயக்குனர் மீது டிசைனர் குற்றச்சாட்டு..!

Posted:

பிருத்விரா-பாவனா இணைந்து நடித்துவரும் படம் தான் 'ஆடம் ஜான்'.. சமீபத்தில் நடந்த ஒரு கசப்பான நிகழ்வுக்குப்பின், அதிலிருந்து தேறி, பாவனா நடித்து வரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று முன் தினம் பிருத்விராஜ் வெளியிட்டார்.. கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் போஸ் கொடுத்தபடி நிற்பதும் அதன் கீழே எழுதப்பட்ட "அவர்கள் ...

10 வருடங்களுக்குப்பின் மீனா நடித்த 'மீண்டும் கத தொடரும்போல்'..!

Posted:

பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 'கத பறயும்போல்'..மம்முட்டி கெஸ்ட் ரோலில் சூப்பர்ஸ்டார் கேரக்டரில் நடிக்க, சீனிவாசன்-மீனா கணவன் மனைவியாக நடித்திருந்தனர்.. மோகனன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன் சலூன் கடை வைத்திருக்கும் பாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக ...

மிஸ் ஆன ராஜமௌலி - விஜய் கூட்டணி

Posted:

இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி உயர்ந்து நிற்கிறார். அதை பாகுபலி 2 படம் இன்னும் மாற்றி வைக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகுபலி படத்திற்கு முன்பு ராஜமௌலியும் வழக்கமான கமர்ஷியல் இயக்குனராகத்தான் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் ...

முருகதாஸ், மகேஷ் பாபு படத்தலைப்பு நாளை அறிவிப்பு

Posted:

'கத்தி' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். கடந்த வருடம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கம் உட்பட ஏறக்குறைய அனைத்து படப்பிடிப்புகளும் ...

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தில் குஷ்பு

Posted:

தமிழ்த் திரையுலகில் 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து 90களின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் ...

'வட சென்னை' படப்பிடிப்பு இன்று மீண்டும் ஆரம்பம்

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமாகி சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அமலா பால் ஒப்பந்தம் ...

ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் ஐடி., ரெய்டு

Posted:

நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, தமிழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ...

பாலிவுட்டில் களமிறங்கும் மற்றுமொரு பஞ்சாபி நடிகர்

Posted:

சமீபத்தில் வெளியான ‛பில்வுரி' படத்தில் பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தில்ஜித் அசத்தியிருந்தார். பில்வுரி கொடுத்த வெற்றி, தில்ஜித்திற்கு அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. தில்ஜித்தை போன்றே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மற்றுமொரு நடிகர் ஜிப்பி கிரேவல் என்பவர், பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.
இயக்குநர் ...

சர்கார்-3ல் கூடுதல் காட்சிகளை இணைத்த அமிதாப் பச்சன்

Posted:

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக உருவாகி இருக்கும் படம் ‛சர்கார் 3'. இந்தப்படத்திலும் அமிதாப் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சர்கார் 3 படத்தை ...

பலத்த போட்டியில் புத்தாண்டு படங்கள்

Posted:

கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. தமிழ்ப் புத்தாண்டு முதல் கோடை சினிமா கொண்டாட்டமும் ஆரம்பமாகிவிடும். இந்த வாரத்திலிருந்து மே மாதம் முடிய வெளிவரும் படங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வசூல் ரீதியாக தப்பித்து விடும். வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல முடியாதவர்கள் உள்ளூரில் திரைப்படங்களுக்குப் போக ஆரம்பித்துவிடுவார்கள். ...

வினோத் கண்ணாவுக்காக ஆண்டவனை பிரார்த்திக்கும் ஆஷா பரேஷ்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் வினோத் கண்ணா. இவர் உடல்நலம் சரியில்லாமல் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் கண்ணா, புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஆஷா பரேஷ் தனது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆஷா, ‛‛வினோத் கண்ணா உடல்நலம் சரியில்லாமல் ...

கவுர் ஜான் வாழ்க்கையை படமாக்கும் ‛மொகஞ்சதரோ' இயக்குநர்

Posted:

ஹிருத்திக் ரோஷனை வைத்து ‛மொகஞ்சதரோ' என்ற வரலாற்று தோல்வி படத்தை கொடுத்தவர் இயக்குநர் அசுதோஸ் கெளரிகர். இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இவர் இயக்க இருக்கும் படம் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபல ...

நான் சுயசரிதை எழுத மாட்டேன் - சல்மான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான். நேற்று இவர் பழம்பெரும் நடிகை ஆஷா பரேஷின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவரின் சுயசரிதையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான், ‛தங்களின் சுயசரிதையை எழுதுவதற்கும் மிகுந்த மன தைரியம் வேண்டும். எனக்கு அந்த தைரியம் இல்லை, நிச்சயம் நான் எனது சுயசரிதையை எழுத மாட்டேன்'' ...

கமல் - பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

Posted:

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அவ்வப்போது திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவே, தமிழகத்தை உற்று நோக்கி கவனிக்க தொடங்கியுள்ளது. அரசியல் மாற்றம் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் ...

பிரபுதேவாவை பாடலாசிரியராக்கியது ஏன்.?

Posted:

பிரபுதேவா தற்போது நடித்து வரும் படம் எங் மங் சங். வாசன்ஸ் விஷூவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். எம்.எஸ்.அர்ஜுன் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
இதில் லட்சுமி மேனன், தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் ...

நெருப்புடா தலைப்பு ஏன்.? - விக்ரம் பிரபு

Posted:

விக்ரம் பிரபு தனது பர்ஸ்ட் ஆர்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படம் நெருப்புடா. இதில் அவருடன் நிக்கி கல்ராணி, வருண், நான் கடவுள் ராஜேந்திரன், நாகிநீடு, ஆடுகளம் நரேன், மதுசூதனராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி விக்ரம் பிரபு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™