Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தயாரிப்பாளர்கள் கையேந்தி விடக்கூடாது என்பதற்காகவே போட்டி - விஷால்

Posted:

தயாரிப்பாளர்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு வரக்கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல் ஏப்.,2ம் தேதி நடக்கிறது. இதில் விஷால் உள்ளிட்ட 5 அணியினர் போட்டியிடுகின்றனர். ...

சுசித்ராவை கைது செய்ய கோரி கமிஷனரிடம் புகார்

Posted:

சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசித்ரா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டரிலிருந்து திரைப்பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களும், வீடியோக்களும் வௌியாகின. மேலும் இன்னும் பலரது லீலைகள் வௌியாகும் என்று தெரிவித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு ...

மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியாவதில் சிக்கல்!

Posted:

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சனா படம் வெளியானது. அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா என மூன்று, நான்கு படங்களுக்கு பூஜை போட்டார் ராகவா லாரன்ஸ். இவற்றில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் தவிர மற்ற படங்கள் எல்லாமே ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டன.

நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த மொட்ட சிவா ...

கலாபவன் மணிக்கு நினைவுச்சிலை உருவாக்கிய நண்பர்..!

Posted:

மலையாள நடிகர் கலாபவன் மணி காலமாகி இன்றுடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் முடியப்போகிறது. ஆனால் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏற்பட்ட அவரது மரணம் குறித்த மர்மம் மட்டும் இன்னும் விலகாமலேயே இருக்கிறது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கேரளா போலீசார் இந்த வழக்கை கைவிடும் எண்ணத்தில் இருக்கின்றனர்.. ஒருவேளை ...

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு

Posted:

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த 'கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்' கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளிவிட்டு அவர் பேசியதாவது.
அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை இலக்கியம்தான் இதயங்களை இணைக்கிறது. ஆகவே ...

பைரவாவுக்கு வரிச்சலுகை மறுப்பதா? புதுச்சேரி அரசு மீது விநியோகஸ்தர் வழக்கு

Posted:

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் சமீபத்தில் வெளிவந்தது. பரதன் இயக்கி இருந்தார். விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்திருந்தார். இந்த படத்தின் தலைப்பு தமிழ்தான் என்றும் தமிழ் கலச்சாரத்தை தாங்கிபிடிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது என்றும் அறிவித்து தமிழக அரசு பைரவா படத்திற்கு வரிவிலக்கு ...

புலி முகத்துடன் புதிய பட தேதியை அறிவித்த மோகன்லால்..!

Posted:

மோகன்லால் நடித்த சூப்பர்ஹிட் படமான புளிமுருகன் படம் 150 கோடி ரூபா வசூலித்ததையும் வெற்றிகரமாக 150 நாட்கள் ஓடியதையும் கொண்டாடும் விதமாக நேற்று புலி முருகன் 150வது நாள் விழா கொண்டாடப்பட்டது.. மோகன்லால் உட்பட படத்தில் இடம்பெற்ற படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட மோகன்லால் இந்தப்படத்தின் ...

மாணவர் அமைப்புகளுக்குள் சண்டையை மூட்டிவிட்ட 'ஒரு மெக்ஸிகன் அபராதா'..!

Posted:

சில சினிமாக்கள் மாணவர்களை போராட்ட காலத்திற்கு இழுத்து வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அப்படி போராட கிளம்பிய மாணவர்கள் ஒன்றுகூடி ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து போராடுவதுதான் வழக்கம்.. ஆனால் கேரளாவில் நேற்றும் முன் வெளியான ஒரு படம் இரண்டு மாணவர் அமைப்புகளுக்குள்ளேயே சண்டையை மூட்டிவிட்டுள்ளது.. வளர்ந்துவரும் நடிகரான ...

அபிஷேக்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு?

Posted:

நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பாலிவுட்டில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

தற்போது அபிஷேக் - ஐஸ்வர்யா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம் அவர்களது மகள், ஆராதானா தானாம். தனது மகளை படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய வேண்டும் என ...

மகளை தடயவியல் நிபுணராக்க விரும்பும் சஞ்சய் தத்

Posted:

நடிகர் சஞ்சய் தத், தற்போது அடுத்த படமான பூமி படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை டைரக்டர் ஓமங் குமார் இயக்க உள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், தனது மகள் நடிகையாகும் கனவில் இருப்பதாகவும், ஆனால் தான் அவளை தடயவியல் நிபுணராக ஆக்கி விரும்புவதாகவும் ...

மீண்டும் வருகிறது து சீசு படி ஹை மஸ்து மஸ்து பாடல்

Posted:

நடிகர் முஸ்தபா, கியாரா அத்வானி நடிக்கும் படம் மிஷின். இப்படம் மார்ச் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில், மோக்ரா படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான து சீச படி ஹை மஸ்து மஸ்து பாடலை ரீமேக் செய்து பயன்படுத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டைரக்டர் அப்பாஸ் மஸ்தான் உறுதி செய்தார். ...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வன்முறை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்ரல் 2ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 5 அணிகள் போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் பரபரப்பாக நடக்கும் என்று தெரிகிறது. 5 அணியினரும் தற்போது ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் அதிகாரியும், ஓய்வுபெற்ற ...

சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்: கார்த்திக்

Posted:

பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தனது டுவிட்டரில் சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை விமர்சித்து வருகிறார். தான் தாக்கப்படதாவும், பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் தெரிவித்து வந்தார். தற்போது அந்த படங்களை நான் பதிவிடவில்லை என் டுவிட்டர் அக்கவுண்டை யாரோ தவறாக ...

வீட்டு முன் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்: மன்னிப்பு கேட்டார் ராதாரவி

Posted:

நடிகர் ராதாரவி சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய ராதாரவி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தார். இது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையட்டி ராதாரவியின் பேச்சை கண்டித்து மாற்றுத் திறனானிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ...

ஜீ தமிழில் மகளிர் தின சிறப்பு திரைப்படம் அம்மணி

Posted:

வருகிற 8ந் தேதி உலக மகளிர் தினம். இதையட்டி சின்னத்திரை சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சாதனை மகளிர் பேட்டிகள், பட்டிமன்றம், விவாத அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இவற்றுக்கு சிகரம் வைத்தது போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி மகளிர் தின சிறப்பு திரைப்படமாக அம்மணி என்ற புத்தம் புதிய திரைப்படத்தை ...

சான்றிதழ் கொடுத்து மறுப்பு கேட்கும் சென்சார் போர்டு

Posted:

நடிகர் வருண் தவான், நடிகை ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ள படம் பத்ரிநாத் கி துல்கனியா. இப்படம் மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. புறநகர் பகுதியில் நடக்கும் காதலை மையாக கொண்டது தான் பத்ரிநாத் கி துல்கனியா படத்தின் கதை. இப்படத்தில், நாட்டின் பெரும் பகுதிகளில் சட்ட விரோதமாக இருக்கும் வரதட்சணை முறை பற்றி காட்டப்பட்டுள்ளது. வரதட்சணை ...

முதல் மும்பை ஹீரோயின்

Posted:

தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் நடித்ததை விட பிறமொழி நடிகைகள் நடித்ததுதான் அதிகம். குறிப்பாக மலையாளம், இந்தி நடிகைகள். தமிழ் சினிமாவுக்கு பாலிவுட்டிலிருந்து வந்த முதல் நடிகை சாந்தா ஆப்தே. 1930ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இந்தி மற்றும் மராட்டிய படங்களில் நடித்து வந்த இவர் 1941ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சாவித்ரி படத்தின் மூலம் ...

நடிகை சோனு வாலியாவுக்கு பாலியல் தொல்லை

Posted:

கடந்த 2008 ம் ஆண்டு வெளியான ஜெய் மா ஷிராவாலி என்ற படத்தில் நடித்தவர், நடிகை சோனு வாலியா. இந்த படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் சோனு. முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான சோனு வாலியா, தனக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர் ஒருவர் சோனு ...

கமலின் வழக்கறிஞர்கள் சந்திப்பில் அரசியல் சாயம் இல்லை

Posted:

நடிகர் கமல் ரசிகர் மன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தினார் . ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது . இதற்காக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

எதற்காக கமல், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என கோலிவுட்டில் பல்வேறு விதமாக செய்திகள் ...

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தந்தை கொடுத்த இடத்தை தாரை வார்க்கிறாரா விஷால்....

Posted:

நடிகர் சங்கத்தை போலவே ஏப்ரல் 2ல் நடக்கும்.உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலும் சூடுபிடித்துள்ளது. கலைப்புலிசேகரன். ராதாகிருஷ்ணன். கேயார். டி.சிவா இவர்களோடு தலைவர் பதவிக்கு விஷால் போட்டி யிடுகிறார்.

தயாரிப்பாளர்கள் சங்க பதவிக்கு போட்டியிடுபவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். இதுவரை கேயார் அணி மற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™