Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விபத்துக்குள்ளான எஜிப்ட் எயர் விமானத்தில் கனேடியர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்

Posted: 19 May 2016 07:53 AM PDT

ui

uiஇன்று விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்படும் பயணிகள் விமானத்தில் கனேடியர் ஒருவரும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி 66 பேருடன் சென்ற எஜிப்ட் எயர் பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது கிரேக்க நாட்டின் கர்பதோஸ் தீவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கெய்ரோ நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு MS804 என்ற அந்த பயணிகள் விமானம் ராடரின் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் விமானம் கோளாறு காரணமாக கிரேக்க நாட்டின் கர்பதோஸ் தீவில் விழுந்து நொறுங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களின் நிலைமை என்னவானது என்ற பதற்றம் எழுந்துள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணப்படை குழுவினர் விரைந்துள்ளனர்.ui

இந்த நிலையில் குறித்த விமானத்தில் கனேடியர் ஒருவரும் பயணம் செய்தாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் 30 எகிப்தியர்கள், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 15 பேர், ஈராக் நாட்டை சேர்ந்த இருவர், இங்கிலாந்து, பெல்ஜியம், குவைத், சவுதி அரேபியா, சூடான், சாட், போர்ச்சுகல், அல்ஜிரியா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 56 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்த்தாக எஜிப்ட் எயர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான குறித்த அந்த விமானத்தில் கனேடியர் ஒருவர் பயணித்திருக்க கூடும் என்ற தகவலை தாமும் அறிந்துள்ளதாக கனேடிய வெளியுறவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கெய்ரொவிலும், பாரீசிலும் உள்ள கனேடிய அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும், நிலைமையை தாம் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

The post விபத்துக்குள்ளான எஜிப்ட் எயர் விமானத்தில் கனேடியர் ஒருவரும் பயணம் செய்துள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமக்கு என்புமச்சையை தானமாக வழங்கியவரை சந்தித்த ஒன்ராறியோ பெண்

Posted: 19 May 2016 07:47 AM PDT

ui

uiஒன்ராறியோவைச் சேர்ந்த பதின்மவயது பெண் ஒருவர் தமக்கு என்புமச்சையை தானமாக வழங்கி உயிர்காத்த யேர்மன் நாட்டவரை முதலில் சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

நேற்று புதன் கிழமை குறித்த யேர்மன் நாட்டவரை அந்த ஒன்ராறியோ பெண் ஒட்டாவா விமானநிலையத்தில் முதல் தடவையாக சந்தித்திருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒன்ராறியோவைச் சேர்ந்த 16 வயதான Mackenzie Curran நோய்வாய்பட்டதை அடுத்து, செய்யப்பட்ட பரிசோதனைகளில் இருந்து அவரின் இரத்த உற்பத்திக்காக அவருக்கு என்புமச்சை மாற்றீடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ui

அதனை அடுத்து அவரின் உற்றார், உறவினர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து பொருத்தமான என்புமச்சை கிடைக்காமல் போகவே , யேர்மன் நாட்டில் இருந்த Alexander Türk என்பவரது என்புமச்சை அவருக்கு பொருந்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து Alexander Türk வழங்கிய என்புமச்சை Mackenzie Curran இற்கு மாற்றீடு செய்யப்பட்டது.

அதனால் உயிர்பிழைத்த  Mackenzie Curran நேற்று புதன் கிழமையே தமக்கு என்பு மச்சையை தானமாக வழங்கிய யேர்மன் நாட்டவரான Alexander Türkயை முதன் முதலில் சந்தித்ததுடன், தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தனது உயிரைக் காப்பற்ற வகைசெய்த அந்த அளப்பெரிய உதவிக்கு தனது மனமார்ந்த நன்றியையும் Mackenzie Curran தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவையும் சந்திக்க உள்ளனர் என்றும் தெரிவிக்க்பபடுகிறது.

The post தமக்கு என்புமச்சையை தானமாக வழங்கியவரை சந்தித்த ஒன்ராறியோ பெண் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™